புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சம்மர் ஸ்பெஷல் சினிமா டிராவல்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சம்மர் விடுமுறையின் கடைசி பவர் ப்ளே இது. குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் ஹாய் சொல்ல பல மொழிப் படங்கள் வந்திருக்கின்றன. இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம்... என ஒரு மினி சினி டிராவல்!
கிட்ஸ் முதல் டீன்ஸ் வரை எக்ஸ் மென் கிளை பரப்பியிருக்கும் ஏரியா மிகப் பெரியது. மார்வெல் காமிக்ஸின் இன்னொரு சூப்பர் ஹீரோ சீரிஸ்தான் `எக்ஸ் மென்’. இப்போது வெளிவந்திருக்கும் `எக்ஸ் மென் - அபோகலிப்ஸ்’ இந்த வரிசையில் ஏழாவது படம்.
ஏழாவது பாகம் என்றாலும் இதில் ஒரு குழப்பம் உண்டு. மூன்றாவது பாகத்திலே இதன் முக்கிய கேரக்டர் சார்லஸ் இறந்துவிடுவார். அதன் பின்னர் கதை 1970, 80 என, பின்னோக்கிப் போனது. அதனால் இறந்த கேரக்டர்கள் உயிர்பெறுவது, வயதானவர்கள் இளமையாவது என ரகளையாக மாறியது `எக்ஸ் மென்’. இந்தப் பாகம் நடப்பது 1983-ம் ஆண்டில்.
பல நூறு வருடங்களுக்கு முன்னர் எகிப்தை ஆளும் என் சபா நூர், கூடவே இருந்து கும்மி அடிக்கும் சிலரால் உயிரோடு புதைந்துவிடுகிறான். 1983-ம் ஆண்டில் உயிர்த்தெழும் சபாவுக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை. `என்னப்பா... அதுக்குள்ள உலகத்தை இப்படி மாத்திட்டீங்க. நான் எல்லாத்தையும் சரிசெய்றேன்’ எனக் கிளம்புகிறான். அவனுக்கு ஆதரவாக சில சூப்பர் ஹீரோக்கள், அவனிடம் இருந்து உலகைக் காக்க சில சூப்பர் ஹீரோக்கள். எல்லாருக்கும் சில சூப்பர் பவர்கள். அந்த பவர் என்ன... என்ன என்பதை மெதுவாகச் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் அதகளம் ஆரம்பிக்கிறது.
மேக்னெட்டோ - இவன் நினைத்தால் எல்லா இரும்பும் இவன் சொல்படி சுற்றும். கல்லாப்பெட்டியில் இருந்து கன்டெயினர் வரை எல்லாமே காற்றில் பறக்கும். ஸ்காட், எப்போதும் கூலர்ஸோடுதான் இருப்பான். கண்ணாடியைக் கழற்றினால் எரிமலைக் குழம்பு, கண்களில் இருந்து தெறிக்கும். க்விக்சில்வரால் காலத்தை நிறுத்திவைக்க முடியும். `Freeze’ என்றால் இருப்பவை அதே இடத்தில் நிற்கும். இவன் மட்டும் நகர்ந்து, `24’ சூர்யாபோல தனக்கு வேண்டியதைச் செய்துவிட்டு வந்துவிடுவான். தியேட்டரில் அதிக விசில் சத்தம் கேட்பது மிஸ்டிக்குக்குத்தான். உருவ மாற்றம்தான் இவரது பவர். ஆனால், அடங்காத விசில் சத்தத்துக்குக் காரணம் மிஸ்டிக்காக நடிக்கும் ஜெனிஃபர் லாரன்ஸ். இன்னும் சில சூப்பர் ஹீரோக்களும் உண்டு.
இந்தப் பாகத்தின் பலமே இதுவரை `எக்ஸ் மென்’ தொடரில் வந்த எல்லா சூப்பர் ஹீரோக்களையும் ஏதாவது ஒரு காட்சியில் தலைகாட்டவைத்ததுதான். ஆனால், எல்லோருக்கும் முன்கதைசொல்ல நேரம் இல்லை. அதனால் முதல்முறை பார்ப்பவர்கள் `யார்ரா இந்த ஈட்டி கையன்?’ எனத் தலையைச் சொறியவேண்டிய நிலை. ஆனால், `எக்ஸ் மென்’ படங்களை ஏற்கெனவே ரசித்தவர்களுக்கு `எக்ஸ் மென் - அபோகலிப்ஸ்’ ஒரு ஃபுல் மீல்ஸ். `ஒரே படத்தில் எல்லோரையும் பார்த்தாச்சுப்பா’ என்ற திருப்தியுடன் வெளியே வருகிறது ரசிகர் படை.
`அபோகலிப்ஸி’ன் ட்ரெய்லர் வெளியானபோது, இந்தியாவில் சர்ச்சை கிளம்பியது. வில்லன் சபா நூர், ‘ராம், கிருஷ்ணா, யாஹுவே எனப் பலமுறை பூமியில் அவதரித்திருக்கிறேன்’ என வசனம் பேச, நெட்டிசன்ஸ் பொங்கினார்கள். வில்லன் நீலக் கலரில் வேறு இருக்க, சென்சார் பதறியது. வெளியாகியிருக்கும் வெர்ஷனில் அந்த வசனம் இடம்பெறவில்லை.
கேரள டைரக்டர் சேட்டன்கள் தனி ரகம். திடீரென சாதாரண மனிதன் வாழ்க்கையை எடுத்து அசத்துவார்கள். அரதப்பழைய கதையை புது ட்ரீட்மென்டில் கொடுத்துப் பிரமிக்கவைப்பார்கள். இதில் `கம்மட்டிப்பாடம்' எந்த ரகம்?
கேங்ஸ்டர் கதைதான். ஆனால், ரத்தம் தெறிக்க, ஸ்கார்ப்பியோ பறக்க, இரண்டு கைகளிலும் துப்பாக்கி இருக்க, தோட்டாக்கள் எகிற, அரை இருளில் கேமரா சுற்ற... இப்படி எதுவும் இல்லாமல், வெறும் நிஜங்களோடு சொல்கிறது `கம்மட்டிப்பாடம்’. இவை எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி கேங்ஸ்டர் படம் தந்ததற்கு வாழ்த்துகள் இயக்குநர் ராஜீவ் ரவி.
மும்பையில் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைசெய்கிறான் கிருஷ்ணன். ஒருநாள் இரவு அவனது பால்ய நண்பன் கங்கா மொபைலில் அழைத்து, தன்னை யாரோ கொல்லத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னவுடன், எதிர்முனையில் பலத்த சத்தத்துடன் மொபைல் கீழே விழுகிறது. நண்பனைத் தேடி சொந்த ஊரான கம்மட்டிப்பாடத்துக்குக் கிளம்புகிறான் கிருஷ்ணன். என்ன ஆனது கங்காவுக்கு?
கம்மட்டிப்பாடத்தின் பெரிய மனிதர் ஆசான். அப்படித்தான் பாலன் அவரை அழைப்பான். அவருக்காக பாலன் எதையும் செய்வான். சாராயம் கடத்துவது, இடத்தைக் காலிசெய்ய வைப்பது, சமயத்தில் கொலைகூட. பாலன், ஆசானின் மாஸ்டர்மைண்ட். பாலனுக்குக் கீழ் அவனின் தம்பி கங்கா, கங்காவின் நண்பன் கிருஷ்ணன், அவர்களது நண்பர்கள் என சில பதின்வயதுக்காரர்கள். இவர்களின் வாழ்க்கை 30 வருடங்களில் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைச் சொல்கிறது `கம்மட்டிப்பாடம்’.
படத்தில் குறிப்பிடவேண்டியது பாலச்சந்திரனின் கதையும் திரைக்கதையும்தான். ஒரு பெரிய கூட்டத்தின் கதையை மூன்று கிளை திரைக்கதைகளாக நகர்த்தியிருக்கும் விதம் கச்சிதம். சற்றுத் துருத்திக்கொண்டிருந்தாலும் நரைத்த முடி, கனமான மீசையில் கிருஷ்ணனாக துல்கர் அசத்துகிறார். துல்கரை மீறி படத்தில் கவனிக்கவைப்பது கங்காவாக நடித்திருக்கும் விநாயகன்தான். துடுக்குத்தனமாக சண்டைகள் போடுவதும், தன் முறைப்பெண் மீது துல்கர் வைத்திருக்கும் காதலை மறக்கச் சொல்வதும், அவளைத் தன்னால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியவில்லை எனத் தெரிந்ததும் `நீ கிருஷ்ணனோடயே போய் வாழு' என சொல்லிவிட்டுக் கிளம்புவதுமாகப் பின்னுகிறார். அடி பொலி.
முதலில் கெத்துக்காக அடிதடியில் இறங்குவது, பிறகு காசுக்காக எதையும்செய்வது, திடீர் இறப்பு எனக் குலைந்துபோகும் அவர்களின் வாழ்க்கையின் அதிர்ச்சி நம்மையும் பயமுறுத்துகிறது. குறுகலான சந்துக்குள் பிணத்தை எடுத்துச்செல்லும் காட்சியில் நில ஆக்கிரமிப்பைப் பதிவு செய்திருக்கும் டீட்டெய்லிங் ஆச்சர்யம். சற்று நீளமாக இருந்தாலும் பொறுமையாகப் பார்த்து முடித்தால் ராஜீவ் ரவியின் முந்தைய படங்களான `அன்னாயும் ரசூலும்', `ஞான் ஸ்டீவன் லூபஸ்' போல படம் நிறைவான உணர்வைத் தரும். அதுதான் மலையாள சேட்டன்கள் ஸ்பெஷல்.
குத்துச்சண்டை வீரர் மேரி கோமின் கதையைப் படமாக்கி ஹிட் அடித்த ஓமங் குமாரின் அடுத்த பயோபிக் ‘சர்ப்ஜித்’.
சர்ப்ஜித் சிங்... பஞ்சாப் மாநிலத்தின் ஓர் எளிய விவசாயி. 1991-ம் ஆண்டில் குடிபோதையில் இந்திய எல்லையைத் தெரியாமல் கடந்துவிடும் இவரை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்து, ஃபைசலாபாத் நகரில் 1990-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதி எனப் பழியையும் சுமத்தியது. 23 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் இருந்தவரை வெளியில் கொண்டுவர அவருடைய சகோதரி தல்பீர் கௌர் மற்றும் மனைவி சுக்பீரித் சிங்கும் நடத்திய தொடர் போராட்டங்கள்தான் ‘சர்ப்ஜித்’ படம்.
படத்தில் சர்ப்ஜித்தாக நடித்திருக்கும் ரன்தீப் ஹூடாவும் அவரது சகோதரியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும் இப்போதே தங்கள் ஷெல்ஃபில் விருதுக்காக இடம் ஒதுக்கிவைக்கலாம். சகோதரருடன் மழையில் ஆடுவதில் இருந்து, போராட்டக்களத்தில் குரல்வற்றக் கதறுவது வரை ஐஸ்வர்யா நடிப்பில் அத்தனை ஆச்சர்யங்கள். படம் பாதி கடந்த பிறகு, ஐஸ்வர்யா என்கிற பிம்பம் விலகி, தல்பீர் கௌர்தான் திரையில் தெரிகிறார். மேடையில் ‘சர்ப்ஜித் உங்கள் சகோதரன்’ என முழங்குவது, பாகிஸ்தானில் தடுக்கும் காவலரை உச்சத் தொனியில் மிரட்டுவது என படம் முழுவதும் நடிப்பால் நிறைந்திருக்கிறார் ஐஸ்.
அந்த அழுக்கு மனிதன் கதாபாத்திரத்தை, அற்புதமாக தன் தோளில் சுமந்துகொள்கிறார் ரன்தீப் ஹூடா. மனைவியுடனான கொஞ்சல் தருணங்களிலும், பாகிஸ்தான் சிறையில் கெஞ்சல் தருணங்களிலும் மனிதரின் நடிப்பு கச்சிதம். பல்லாண்டுகளுக்குப் பிறகு தன்னைச் சந்திக்கவரும் குடும்பத்தினருக்காக, தான் இருக்கும் ‘செல்’லைச் சுத்தம்செய்யும் காட்சியில் ரசிகர்களை உறையவைக்கிறார்.
இவர்கள் இருவரையும் தாண்டிய ஆச்சர்யம் சர்ப்ஜித் மனைவியாக நடித்திருந்த ரிச்சா சட்டா. போராடி, நம்பிக்கை இழந்து வாடி தற்கொலைக்கு முயன்ற ஐஸ்வர்யா ராயிடம் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிய அதேசமயம் உடைந்த குரலில் அவர் பேசும் வசனங்களும், அப்போது அவர் வெளிப்படுத்தும் உடல்மொழியும் வேற லெவல். கணவரின் உடைமைகள் திரும்பிவந்த பின்பு, சர்ப்ஜித் பயன்படுத்திய போர்வையைக் கட்டிப்பிடித்து அத்தனை வருடம் தேக்கிவைத்த அத்தனை கண்ணீரையும் கொட்டித்தீர்க்கும் போது... ப்ச்.
மனரீதியாக நம்மைப் பாதிக்கிற காட்சிகள் அதிகம். ஆந்திரா போலீஸ் ‘ஒப்புக்கொன்னாரா’ என்றால், பாகிஸ்தான் போலீஸ் ‘நீதான் ரஞ்சித் சிங்கா?’ என்கிறது. போலீஸ் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியான போலீஸாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. இரண்டடி உயரமே உள்ள மரக்கூண்டுக்குள் சர்ப்ஜித்தை அடைப்பது, தலைகீழாகத் தொங்கவிட்டு அடிப்பது என அதே ட்ரீட்மென்ட்தான். `சர்ப்ஜித் நிஜத்தில் சந்தித்த வன்முறையைப் பதிவுசெய்யாமல்போனால், அவர் கதையைப் படமாக்கியதில் அர்த்தமே இல்லை' என்கிறார் இயக்குநர் ஓமங் குமார்.
வீடு முழுக்க சொந்தங்கள்... கலர்கலர் லைட் மின்னும் பாடல்கள்... வாழ்க்கைங்கிறது, காதல்ங்கிறது, உறவுங்கிறது, ஊறுகாய்ங்கிறது என மெர்சல் சென்டிமென்ட் வசனங்கள், மகேஷ்பாபுவுக்கு என எக்ஸ்க்ளூசிவ் ஃபைட் என ஸ்ரீகாந்த் அடாலாவின் அக்மார்க் ஃபேமிலி டிராமா... `பிரம்மோத்சவம்’.
விஜயவாடாவின் `பெத்த’ தொழிலதிபர் சத்யராஜ். அவரது மகன் மகேஷ் பாபு. மனைவியின் தம்பிகள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் என ஒரு மெகா சீரியலாகவே வாழ்கிறது சத்யராஜ் குடும்பம். சந்தோஷமான குடும்பத்துக்குள் ராவ் ரமேஷ் மூலமாக ஒரு சங்கடம் வர, அவர் குடும்பத்தைவிட்டுப் பிரிகிறார். குடும்பம் உடைந்த சோகத்தில் சத்யராஜ் இறந்துவிடுகிறார். தந்தையின் இழப்பை சொந்தபந்தங்கள் மூலமே நிரப்ப, தன் ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி பயணம் ஆரம்பிக்கிறார் மகேஷ். டைம் டிராவல் சீஸனில் தலைமுறைத் தேடல் என்பது ஆந்திர ரகசியம்.
‘நாலாவது ஸீட்ல இருக்கிற தம்முடு...’ என திரைக்குள் இருந்து யாராவது உங்களை அழைத்தாலும் ஆச்சர்யம் இல்லை. அந்த அளவுக்கு மகனே, அண்ணனே, மருமகனே என யாராவது யாரையாவது கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ‘ஒண்ணு லேதண்டி... மூணு காவாலண்டி’ என்ற சமீபத்திய தெலுங்குப் படங்களின் ஃபார்முலாபடி காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா என கலர்ஃபுல் வீட்டை இன்னும் ஜொலிக்கவைக்கிறது மூவர் அணி. ஆனால், அவர்களும் `மன நாணா... மன இன்ட்டி...’ எனப் பேசிக்கோண்டே இருப்பதுதான் சோகம். ரேவதி, ஜெயசுதா, துளசி, சரண்யா, ஷயாஜிஷிண்டே, தனிக்கெல்லா, நாசர் என் காஸ்ட்லி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட் பக்கத்து ஸ்கிரீன் வரைக்கும் போடலாம்போல அத்தனை பெரிது.
சிம்பிள் கதை, சீனியர் நடிகர்கள், சீனுக்கு சீன் சென்டிமென்ட் என ‘சீத்தம்மா வாகிட்லோ செரிமல்லே செட்டு’ படத்தின் மணம் இதிலும் கமழ்கிறது. ஆனால், அதில் இருந்த எமோஷன் மிஸ் ஆனதால் காஸ்ட்லி சீரியலாகிவிட்டது. இரண்டாம் பாதியில் வரும் அந்தப் பயணம் நச் ஐடியா. ஆனால், ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதை, அதை அப்படியே காலிசெய்து அலுப்பூட்டுகிறது.
மகேஷ் பாபுவுக்கு எங்க வீட்டுப் பிள்ளை இமேஜ் எப்போதும் உண்டு. இப்படி அவர் மெனக்கெடத் தேவை இல்லை என்கிறார்கள் ஆந்திர பிரின்ஸின் தீவிர ரசிகர்கள்.
நன்றி-ஆனந்த விகடன்
கிட்ஸ் முதல் டீன்ஸ் வரை எக்ஸ் மென் கிளை பரப்பியிருக்கும் ஏரியா மிகப் பெரியது. மார்வெல் காமிக்ஸின் இன்னொரு சூப்பர் ஹீரோ சீரிஸ்தான் `எக்ஸ் மென்’. இப்போது வெளிவந்திருக்கும் `எக்ஸ் மென் - அபோகலிப்ஸ்’ இந்த வரிசையில் ஏழாவது படம்.
ஏழாவது பாகம் என்றாலும் இதில் ஒரு குழப்பம் உண்டு. மூன்றாவது பாகத்திலே இதன் முக்கிய கேரக்டர் சார்லஸ் இறந்துவிடுவார். அதன் பின்னர் கதை 1970, 80 என, பின்னோக்கிப் போனது. அதனால் இறந்த கேரக்டர்கள் உயிர்பெறுவது, வயதானவர்கள் இளமையாவது என ரகளையாக மாறியது `எக்ஸ் மென்’. இந்தப் பாகம் நடப்பது 1983-ம் ஆண்டில்.
பல நூறு வருடங்களுக்கு முன்னர் எகிப்தை ஆளும் என் சபா நூர், கூடவே இருந்து கும்மி அடிக்கும் சிலரால் உயிரோடு புதைந்துவிடுகிறான். 1983-ம் ஆண்டில் உயிர்த்தெழும் சபாவுக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை. `என்னப்பா... அதுக்குள்ள உலகத்தை இப்படி மாத்திட்டீங்க. நான் எல்லாத்தையும் சரிசெய்றேன்’ எனக் கிளம்புகிறான். அவனுக்கு ஆதரவாக சில சூப்பர் ஹீரோக்கள், அவனிடம் இருந்து உலகைக் காக்க சில சூப்பர் ஹீரோக்கள். எல்லாருக்கும் சில சூப்பர் பவர்கள். அந்த பவர் என்ன... என்ன என்பதை மெதுவாகச் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் அதகளம் ஆரம்பிக்கிறது.
மேக்னெட்டோ - இவன் நினைத்தால் எல்லா இரும்பும் இவன் சொல்படி சுற்றும். கல்லாப்பெட்டியில் இருந்து கன்டெயினர் வரை எல்லாமே காற்றில் பறக்கும். ஸ்காட், எப்போதும் கூலர்ஸோடுதான் இருப்பான். கண்ணாடியைக் கழற்றினால் எரிமலைக் குழம்பு, கண்களில் இருந்து தெறிக்கும். க்விக்சில்வரால் காலத்தை நிறுத்திவைக்க முடியும். `Freeze’ என்றால் இருப்பவை அதே இடத்தில் நிற்கும். இவன் மட்டும் நகர்ந்து, `24’ சூர்யாபோல தனக்கு வேண்டியதைச் செய்துவிட்டு வந்துவிடுவான். தியேட்டரில் அதிக விசில் சத்தம் கேட்பது மிஸ்டிக்குக்குத்தான். உருவ மாற்றம்தான் இவரது பவர். ஆனால், அடங்காத விசில் சத்தத்துக்குக் காரணம் மிஸ்டிக்காக நடிக்கும் ஜெனிஃபர் லாரன்ஸ். இன்னும் சில சூப்பர் ஹீரோக்களும் உண்டு.
இந்தப் பாகத்தின் பலமே இதுவரை `எக்ஸ் மென்’ தொடரில் வந்த எல்லா சூப்பர் ஹீரோக்களையும் ஏதாவது ஒரு காட்சியில் தலைகாட்டவைத்ததுதான். ஆனால், எல்லோருக்கும் முன்கதைசொல்ல நேரம் இல்லை. அதனால் முதல்முறை பார்ப்பவர்கள் `யார்ரா இந்த ஈட்டி கையன்?’ எனத் தலையைச் சொறியவேண்டிய நிலை. ஆனால், `எக்ஸ் மென்’ படங்களை ஏற்கெனவே ரசித்தவர்களுக்கு `எக்ஸ் மென் - அபோகலிப்ஸ்’ ஒரு ஃபுல் மீல்ஸ். `ஒரே படத்தில் எல்லோரையும் பார்த்தாச்சுப்பா’ என்ற திருப்தியுடன் வெளியே வருகிறது ரசிகர் படை.
`அபோகலிப்ஸி’ன் ட்ரெய்லர் வெளியானபோது, இந்தியாவில் சர்ச்சை கிளம்பியது. வில்லன் சபா நூர், ‘ராம், கிருஷ்ணா, யாஹுவே எனப் பலமுறை பூமியில் அவதரித்திருக்கிறேன்’ என வசனம் பேச, நெட்டிசன்ஸ் பொங்கினார்கள். வில்லன் நீலக் கலரில் வேறு இருக்க, சென்சார் பதறியது. வெளியாகியிருக்கும் வெர்ஷனில் அந்த வசனம் இடம்பெறவில்லை.
கேரள டைரக்டர் சேட்டன்கள் தனி ரகம். திடீரென சாதாரண மனிதன் வாழ்க்கையை எடுத்து அசத்துவார்கள். அரதப்பழைய கதையை புது ட்ரீட்மென்டில் கொடுத்துப் பிரமிக்கவைப்பார்கள். இதில் `கம்மட்டிப்பாடம்' எந்த ரகம்?
கேங்ஸ்டர் கதைதான். ஆனால், ரத்தம் தெறிக்க, ஸ்கார்ப்பியோ பறக்க, இரண்டு கைகளிலும் துப்பாக்கி இருக்க, தோட்டாக்கள் எகிற, அரை இருளில் கேமரா சுற்ற... இப்படி எதுவும் இல்லாமல், வெறும் நிஜங்களோடு சொல்கிறது `கம்மட்டிப்பாடம்’. இவை எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி கேங்ஸ்டர் படம் தந்ததற்கு வாழ்த்துகள் இயக்குநர் ராஜீவ் ரவி.
மும்பையில் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைசெய்கிறான் கிருஷ்ணன். ஒருநாள் இரவு அவனது பால்ய நண்பன் கங்கா மொபைலில் அழைத்து, தன்னை யாரோ கொல்லத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னவுடன், எதிர்முனையில் பலத்த சத்தத்துடன் மொபைல் கீழே விழுகிறது. நண்பனைத் தேடி சொந்த ஊரான கம்மட்டிப்பாடத்துக்குக் கிளம்புகிறான் கிருஷ்ணன். என்ன ஆனது கங்காவுக்கு?
கம்மட்டிப்பாடத்தின் பெரிய மனிதர் ஆசான். அப்படித்தான் பாலன் அவரை அழைப்பான். அவருக்காக பாலன் எதையும் செய்வான். சாராயம் கடத்துவது, இடத்தைக் காலிசெய்ய வைப்பது, சமயத்தில் கொலைகூட. பாலன், ஆசானின் மாஸ்டர்மைண்ட். பாலனுக்குக் கீழ் அவனின் தம்பி கங்கா, கங்காவின் நண்பன் கிருஷ்ணன், அவர்களது நண்பர்கள் என சில பதின்வயதுக்காரர்கள். இவர்களின் வாழ்க்கை 30 வருடங்களில் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைச் சொல்கிறது `கம்மட்டிப்பாடம்’.
படத்தில் குறிப்பிடவேண்டியது பாலச்சந்திரனின் கதையும் திரைக்கதையும்தான். ஒரு பெரிய கூட்டத்தின் கதையை மூன்று கிளை திரைக்கதைகளாக நகர்த்தியிருக்கும் விதம் கச்சிதம். சற்றுத் துருத்திக்கொண்டிருந்தாலும் நரைத்த முடி, கனமான மீசையில் கிருஷ்ணனாக துல்கர் அசத்துகிறார். துல்கரை மீறி படத்தில் கவனிக்கவைப்பது கங்காவாக நடித்திருக்கும் விநாயகன்தான். துடுக்குத்தனமாக சண்டைகள் போடுவதும், தன் முறைப்பெண் மீது துல்கர் வைத்திருக்கும் காதலை மறக்கச் சொல்வதும், அவளைத் தன்னால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியவில்லை எனத் தெரிந்ததும் `நீ கிருஷ்ணனோடயே போய் வாழு' என சொல்லிவிட்டுக் கிளம்புவதுமாகப் பின்னுகிறார். அடி பொலி.
முதலில் கெத்துக்காக அடிதடியில் இறங்குவது, பிறகு காசுக்காக எதையும்செய்வது, திடீர் இறப்பு எனக் குலைந்துபோகும் அவர்களின் வாழ்க்கையின் அதிர்ச்சி நம்மையும் பயமுறுத்துகிறது. குறுகலான சந்துக்குள் பிணத்தை எடுத்துச்செல்லும் காட்சியில் நில ஆக்கிரமிப்பைப் பதிவு செய்திருக்கும் டீட்டெய்லிங் ஆச்சர்யம். சற்று நீளமாக இருந்தாலும் பொறுமையாகப் பார்த்து முடித்தால் ராஜீவ் ரவியின் முந்தைய படங்களான `அன்னாயும் ரசூலும்', `ஞான் ஸ்டீவன் லூபஸ்' போல படம் நிறைவான உணர்வைத் தரும். அதுதான் மலையாள சேட்டன்கள் ஸ்பெஷல்.
குத்துச்சண்டை வீரர் மேரி கோமின் கதையைப் படமாக்கி ஹிட் அடித்த ஓமங் குமாரின் அடுத்த பயோபிக் ‘சர்ப்ஜித்’.
சர்ப்ஜித் சிங்... பஞ்சாப் மாநிலத்தின் ஓர் எளிய விவசாயி. 1991-ம் ஆண்டில் குடிபோதையில் இந்திய எல்லையைத் தெரியாமல் கடந்துவிடும் இவரை பாகிஸ்தான் ராணுவம் கைதுசெய்து, ஃபைசலாபாத் நகரில் 1990-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதி எனப் பழியையும் சுமத்தியது. 23 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் இருந்தவரை வெளியில் கொண்டுவர அவருடைய சகோதரி தல்பீர் கௌர் மற்றும் மனைவி சுக்பீரித் சிங்கும் நடத்திய தொடர் போராட்டங்கள்தான் ‘சர்ப்ஜித்’ படம்.
படத்தில் சர்ப்ஜித்தாக நடித்திருக்கும் ரன்தீப் ஹூடாவும் அவரது சகோதரியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராயும் இப்போதே தங்கள் ஷெல்ஃபில் விருதுக்காக இடம் ஒதுக்கிவைக்கலாம். சகோதரருடன் மழையில் ஆடுவதில் இருந்து, போராட்டக்களத்தில் குரல்வற்றக் கதறுவது வரை ஐஸ்வர்யா நடிப்பில் அத்தனை ஆச்சர்யங்கள். படம் பாதி கடந்த பிறகு, ஐஸ்வர்யா என்கிற பிம்பம் விலகி, தல்பீர் கௌர்தான் திரையில் தெரிகிறார். மேடையில் ‘சர்ப்ஜித் உங்கள் சகோதரன்’ என முழங்குவது, பாகிஸ்தானில் தடுக்கும் காவலரை உச்சத் தொனியில் மிரட்டுவது என படம் முழுவதும் நடிப்பால் நிறைந்திருக்கிறார் ஐஸ்.
அந்த அழுக்கு மனிதன் கதாபாத்திரத்தை, அற்புதமாக தன் தோளில் சுமந்துகொள்கிறார் ரன்தீப் ஹூடா. மனைவியுடனான கொஞ்சல் தருணங்களிலும், பாகிஸ்தான் சிறையில் கெஞ்சல் தருணங்களிலும் மனிதரின் நடிப்பு கச்சிதம். பல்லாண்டுகளுக்குப் பிறகு தன்னைச் சந்திக்கவரும் குடும்பத்தினருக்காக, தான் இருக்கும் ‘செல்’லைச் சுத்தம்செய்யும் காட்சியில் ரசிகர்களை உறையவைக்கிறார்.
இவர்கள் இருவரையும் தாண்டிய ஆச்சர்யம் சர்ப்ஜித் மனைவியாக நடித்திருந்த ரிச்சா சட்டா. போராடி, நம்பிக்கை இழந்து வாடி தற்கொலைக்கு முயன்ற ஐஸ்வர்யா ராயிடம் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிய அதேசமயம் உடைந்த குரலில் அவர் பேசும் வசனங்களும், அப்போது அவர் வெளிப்படுத்தும் உடல்மொழியும் வேற லெவல். கணவரின் உடைமைகள் திரும்பிவந்த பின்பு, சர்ப்ஜித் பயன்படுத்திய போர்வையைக் கட்டிப்பிடித்து அத்தனை வருடம் தேக்கிவைத்த அத்தனை கண்ணீரையும் கொட்டித்தீர்க்கும் போது... ப்ச்.
மனரீதியாக நம்மைப் பாதிக்கிற காட்சிகள் அதிகம். ஆந்திரா போலீஸ் ‘ஒப்புக்கொன்னாரா’ என்றால், பாகிஸ்தான் போலீஸ் ‘நீதான் ரஞ்சித் சிங்கா?’ என்கிறது. போலீஸ் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியான போலீஸாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. இரண்டடி உயரமே உள்ள மரக்கூண்டுக்குள் சர்ப்ஜித்தை அடைப்பது, தலைகீழாகத் தொங்கவிட்டு அடிப்பது என அதே ட்ரீட்மென்ட்தான். `சர்ப்ஜித் நிஜத்தில் சந்தித்த வன்முறையைப் பதிவுசெய்யாமல்போனால், அவர் கதையைப் படமாக்கியதில் அர்த்தமே இல்லை' என்கிறார் இயக்குநர் ஓமங் குமார்.
வீடு முழுக்க சொந்தங்கள்... கலர்கலர் லைட் மின்னும் பாடல்கள்... வாழ்க்கைங்கிறது, காதல்ங்கிறது, உறவுங்கிறது, ஊறுகாய்ங்கிறது என மெர்சல் சென்டிமென்ட் வசனங்கள், மகேஷ்பாபுவுக்கு என எக்ஸ்க்ளூசிவ் ஃபைட் என ஸ்ரீகாந்த் அடாலாவின் அக்மார்க் ஃபேமிலி டிராமா... `பிரம்மோத்சவம்’.
விஜயவாடாவின் `பெத்த’ தொழிலதிபர் சத்யராஜ். அவரது மகன் மகேஷ் பாபு. மனைவியின் தம்பிகள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் என ஒரு மெகா சீரியலாகவே வாழ்கிறது சத்யராஜ் குடும்பம். சந்தோஷமான குடும்பத்துக்குள் ராவ் ரமேஷ் மூலமாக ஒரு சங்கடம் வர, அவர் குடும்பத்தைவிட்டுப் பிரிகிறார். குடும்பம் உடைந்த சோகத்தில் சத்யராஜ் இறந்துவிடுகிறார். தந்தையின் இழப்பை சொந்தபந்தங்கள் மூலமே நிரப்ப, தன் ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி பயணம் ஆரம்பிக்கிறார் மகேஷ். டைம் டிராவல் சீஸனில் தலைமுறைத் தேடல் என்பது ஆந்திர ரகசியம்.
‘நாலாவது ஸீட்ல இருக்கிற தம்முடு...’ என திரைக்குள் இருந்து யாராவது உங்களை அழைத்தாலும் ஆச்சர்யம் இல்லை. அந்த அளவுக்கு மகனே, அண்ணனே, மருமகனே என யாராவது யாரையாவது கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ‘ஒண்ணு லேதண்டி... மூணு காவாலண்டி’ என்ற சமீபத்திய தெலுங்குப் படங்களின் ஃபார்முலாபடி காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா என கலர்ஃபுல் வீட்டை இன்னும் ஜொலிக்கவைக்கிறது மூவர் அணி. ஆனால், அவர்களும் `மன நாணா... மன இன்ட்டி...’ எனப் பேசிக்கோண்டே இருப்பதுதான் சோகம். ரேவதி, ஜெயசுதா, துளசி, சரண்யா, ஷயாஜிஷிண்டே, தனிக்கெல்லா, நாசர் என் காஸ்ட்லி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் லிஸ்ட் பக்கத்து ஸ்கிரீன் வரைக்கும் போடலாம்போல அத்தனை பெரிது.
சிம்பிள் கதை, சீனியர் நடிகர்கள், சீனுக்கு சீன் சென்டிமென்ட் என ‘சீத்தம்மா வாகிட்லோ செரிமல்லே செட்டு’ படத்தின் மணம் இதிலும் கமழ்கிறது. ஆனால், அதில் இருந்த எமோஷன் மிஸ் ஆனதால் காஸ்ட்லி சீரியலாகிவிட்டது. இரண்டாம் பாதியில் வரும் அந்தப் பயணம் நச் ஐடியா. ஆனால், ஒரு சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதை, அதை அப்படியே காலிசெய்து அலுப்பூட்டுகிறது.
மகேஷ் பாபுவுக்கு எங்க வீட்டுப் பிள்ளை இமேஜ் எப்போதும் உண்டு. இப்படி அவர் மெனக்கெடத் தேவை இல்லை என்கிறார்கள் ஆந்திர பிரின்ஸின் தீவிர ரசிகர்கள்.
நன்றி-ஆனந்த விகடன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல அலசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு
மகேஷ் பாபுவுக்கு எங்க வீட்டுப் பிள்ளை இமேஜ் எப்போதும் உண்டு. இப்படி அவர் மெனக்கெடத் தேவை இல்லை என்கிறார்கள் ஆந்திர பிரின்ஸின் தீவிர ரசிகர்கள்.
எனக்கும் மகேஷ் பாபுவை ரொம்ப பிடிக்கும்
மகேஷ் பாபுவுக்கு எங்க வீட்டுப் பிள்ளை இமேஜ் எப்போதும் உண்டு. இப்படி அவர் மெனக்கெடத் தேவை இல்லை என்கிறார்கள் ஆந்திர பிரின்ஸின் தீவிர ரசிகர்கள்.
எனக்கும் மகேஷ் பாபுவை ரொம்ப பிடிக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|