புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
32 Posts - 55%
heezulia
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
32 Posts - 55%
heezulia
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_m10வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 10:57 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! UhDygTmeTiCvxtf7prpt+Tamil_News_large_1529065_318_219

'சிரிப்பு இதன் சிறப்பை சீர்துாக்கிபார்ப்பதே நமது பொறுப்பு - மனம்கருப்பா வெளுப்பா என்பதைக்காட்டும் கண்ணாடி சிரிப்பு!

சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கேசொந்தமான கையிருப்பு!வேறு ஜீவராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்தச் சிரிப்பு!''


என்ற நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், சிரிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.சுவைபட நகைத்தலே நகைச்சுவை. நல்ல கருத்து+சிரிப்பு= நகைச்சுவை என்றால் வரவேற்பிற்குரியது. எதிராளியின் மனதைப் புண்படுத்தாத வேடிக்கை, விளையாட்டு, தமாஷ், ஹாஸ்யம், கேலி என எல்லாமே நகைச்சுவை வகையைச் சார்ந்தவையே.

இன்றைய மாற்று மருத்துவ முறைகளில் சிரிப்பும் ஒரு சிகிச்சை முறையாக ஏற்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல, 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அனுபவ உண்மைதானே. 'சிரிப்பும் சந்தோஷமும் நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்தும்' என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள்.

நகைச்சுவையில் எத்தனையோ பயன்கள் உண்டு. எனினும், 'நல்ல நகைச்சுவை
சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கிவிடும்' என்பது சிறப்பு.

யோகாவில் 'நகைப்புக்கிரியை' என்று ஒருவித அற்புதக் கிரியை உண்டு. அத்துடன் 'சிரிப்புத் தியானம்' என்ற ஒருவகைத் தியானமும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

ஜப்பானில் 'சிரிக்கும் புத்தர்' என்ற ஒருவர் இருந்தார். அவரது உண்மையான பெயர் 'ஹோட்டே' என்பதாகும். அவர் எப்பொழுதும் வாய்திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படித் தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார்.

அவர் சிரிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். அதைப் பார்ப்பவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவர். சிரிப்பின் பயன்கள் வாய் விட்டுச் சிரிப்பதன் மூலம், முகத்தில் பொலிவும், கண்களில் ஒளியும் கூடும்.

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! DLiO66qPRfCmh6Un8QIa+SmileyLaughing2Tears

மேலும் கண்களில் சாந்தமும், தெளிவும் உண்டாகும். நுரையீரல் முழுமையாக விரிந்து, பிராண சக்தியை முழுவதும் கிடைக்கச் செய்கிறது. இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்கிறது. வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறுகிறது. சிறுநீரக செயற்பாடும் நன்கு அமைகிறது. நரம்பு மண்டலமே ஒருவிதப் புத்துணர்ச்சியை பெறுகின்றது. தொண்டைப் பிரச்னைகள், வாய்வு தொந்தரவுகள், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து விடுபட முடிகிறது.

சிரிக்கச் சிரிக்க மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், நன்கு துரிதமாகச் செல்கிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாய் கிடைக்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைவதுடன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. நகைச்சுவை உணர்வானது, மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்று விடும். அந்தக் காலங்களில், அரசர்கள் மன இறுக்கங்களுக்குள்ளாகி விடுவார்கள் என்பதால், அரசவையில் விதுாஷகன் என்னும் விகடகவிகள் தங்களது நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜநிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்தனர்.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:03 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! W89gYkzQDyDZWpzMqJdD+laughing-smiley-face-gif-gif-smiley-laugh

சிரிப்பு, உற்சாகம், மலர்ச்சி, மகிழ்ச்சி, ஆளுமை போன்றவற்றை உள்ளடக்கியதே நகைச்சுவை உணர்வு ஆகும். நல்ல நகைச் சுவை உணர்வு கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான் என்கின்றனர் சமூகவியலார்.

“நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திருப்பேன்” என்று மகாத்மா காந்தி கூறியுள்ள கருத்து இதனை மெய்ப்பிக்கிறது.

இறுக்கம் தளரும் 'ஹியூமர் தெரபி' என்று அழைக்கப்படும் சிரிப்பு மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க, 'இம்மியூனோ குளோபுலின் ஏ' என்ற நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் தேவை. சிரிக்கும் போது உமிழ்நீரில் இதன் அளவு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. வலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! M245JWBTtyS7LHZXKMfq+laughing-smiley-face

சிரிக்கும் போது, உடலில் 'எண்டோர்பின்' என்கிற இயற்கையான 'வலிகுறைப்பிகள்' உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்த நோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு என்பது நிரூபணமாகிஉள்ளது.

தலைவர்களும் நகைச்சுவை உணர்வும் பெரும்பாலான தலைவர்களிடம், நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருந்தது. அவர்கள் எதிராளியின் குறைகளை ஆவேச வார்த்தைகளில் கண்டிப்பதை விட, நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் காட்டும் போது நல்ல பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள்.

பால கங்காதர திலகரை உளவு பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசு, ரகசிய போலீஸ்காரர் ஒருவரை சமையல்காரனாக அனுப்பியது. அவனும் ஆறுமாதமாக அவரிடம் வேலை பார்த்தான். அந்த ஆசாமி திலகரிடம், “எசமான், சம்பளம் போதவில்லை, கொஞ்சம் உயர்த்த வேண்டும்” என்றான்.

திலகர் சிரித்துக் கொண்டே, 'என்னப்பா இது, நான் மாதம் ஆறு ரூபாய் தருகிறேன், சர்க்கார் இருபத்தெட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். இன்னும் திருப்தி இல்லையா உனக்கு?' என்று கேட்டார். பிறகு அவனைக் காணவேயில்லை.

ஆங்கிலேயர் ஒருவர் மிகுந்த ஆணவத்துடன் “சூரியன் ஒரு போதும் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று பெருமையடித்தார்.

உடனே சுபாஷ்சந்திர போஸ் “ஆமாம், பிரிட்டிஷ்காரனை இருட்டிலே விட்டு வைக்க, கடவுளுக்குக் கூட நம்பிக்கை இல்லை” என்று நகைச்சுவையாகக் கூறி மடக்கினார்.

தொடரும்...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:06 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! PsbQ3YdnTjC9SMOzeGGY+Laugh

காமராஜரிடம் கிராம மக்கள் வந்து “ஐயா, எங்களுக்குச் சுடுகாட்டுப் பாதை சரியாயில்லை. நாங்கள் சுடுகாட்டுக்குச் செல்ல வசதியாய் ஒரு பாதை வேண்டும்,” என்றனர்.

அதற்கு அவர், “சரிதான், நீங்க வாழறதுக்குப் பாதை போட நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா, செத்தவனுக்குப் பாதை போடச் சொல்றீங்க” என்றார் நகைச்சுவையாக.

நேருவின் நகைச்சுவை ஜவஹர்லால் நேருவின் காரை வழிமறித்து, அவரை இறங்கவைத்து, “சுதந்திரம் சுதந்திரம் என்று பேசுகிறீர்களே, சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன கிடைத்தது?” என்று ஆவேசமாகக் கேட்டார் ஒருவர்.

நேரு அவருடைய தோளைத் தட்டித் கொடுத்து, “உனக்கு என்ன கிடைக்கவில்லை என்று நினைக்கிறாய்? ஒரு நாட்டின் பிரதம மந்திரியை வழி மறித்து உன் கருத்தை நீ சொல்ல முடிகிறதே, அது தானப்பா சுதந்திரம்” என்றார் நகைச்சுவை இழையோட.

மகாத்மா காந்தியிடம் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் கிண்டலாக, “உங்க நாட்டு மக்கள் உங்களைப் போய் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே, உங்களை விட திறமையான தலைவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா'' என்று கேட்டார். அதற்கு காந்தி, “உங்களைப் போன்ற பிரிட்டிஷ்காரர்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்” என்று சிரித்தபடி கூறினார்.

ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறதாம். ஆனால் பெரியவர்களோ, 15 முறை தான் சிரிக்கிறார்களாம். தினமும் குறைந்தபட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆகவே, அனைவரும் சிரியுங்கள்…… சிரியுங்கள்… வாய்விட்டுச் சிரியுங்கள்!

சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு  சிப்பு வருது  சிரிப்பு

பா. பனிமலர்
தமிழ்த்துறைத் தலைவர்,
இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லூரி,
மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 11:18 am

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834 வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834
-
என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
-
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!
-
-----------------
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:19 am

என்ன.............. Guest , கட்டுரையை படித்ததும் சிரிக்க ஆரம்பித்து விட்டீர்களா?.............நீங்கள் சிரிப்பது எனக்குத் தெரியும் படிக்கு , ஒரு SMILEY போடுங்கோ பார்க்கலாம் .....என்ன பாக்கறீங்க?............எப்படி என்றா?...............பின்னுட்டமாகத்தான் .............ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:20 am

ayyasamy ram wrote:வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834 வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834
-
என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
-
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!
-
-----------------
மேற்கோள் செய்த பதிவு: 1208622

ஹா...ஹா...ஹா..... சூப்பர் அண்ணா புன்னகை....................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 26, 2016 11:20 am

ayyasamy ram wrote:வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834 வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! 3838410834
-
என்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
-
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!
-
-----------------
மேற்கோள் செய்த பதிவு: 1208622

ஹா...ஹா...ஹா..... சூப்பர் அண்ணா புன்னகை....................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 26, 2016 1:10 pm

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து! AZMsSrLQ7yf889aZCGfD+ifamily

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக