புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்வில் அவசியம் பின்பற்ற வேண்டியவை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:51 am

நம்  அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய சில நெறிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். விஞ்ஞானப் பூர்வமாக அவற்றிற்குரிய காரணங்களையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். கால ஓட்டத்தில் அந்த நெறிமுறைகள் படிப்படியாக மறைந்து வருகின்றன. அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.

விரத நாட்களில் எண்ணெய்க் குளியல் கூடாது

விரதம் என்பது உண்பதை, தூங்குவதை முறைப்படுத்துவதாகும். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நன்கு பசி ஏற்படும். பகலில் உறக்கம் வரும். இதனைத் தவிர்க்கும் பொருட்டே விரதத்திற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு விரத நாட்களில் வெறும் தலைக்கக் குளிக்கலாம் என்றனர். எண்ணெய்க் குளியல் நம்மைச் சுற்றிலும் ஓர் புகை வளையத்தை ஏற்படுத்துவதாக சமீபகால அறிவியல் தெரிவிக்கின்றது. இதை நமது முன்னோர்கள் பழங்காலந்தொட்டே அறிந்துள்ளனர்.

குளித்ததும் முதலில் முதுகைத் துடைப்பது ஏன்?

குளிக்கும்போது உடலின் எல்லாப் பாகங்களிலும் குளிர் பரவினாலும் மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில்தான். முதுகெலும்பில் ஆழ்உணர்வு பாதிக்குமளவு குளிர் பரவி விட்டால் நோய்வாய்ப்பட நேரும். குளத்திலோ, ஆற்றிலோ குளிப்பவர்கள் முதலில் முதுகு குளிர்வதை உணர்வர். எனவே நம் பெரியவர்கள், 'முதுகில் மூதேவி வருவதற்குள் முதலில் துடை' என்ற மரபினை வைத்தனர்.

குங்குமப் பொட்டின் மங்கலம்

நெற்றியில் இரு புருவங்களுக்கிடையே உள்ள மத்திய பாகம் ஆக்கினை (ஆக்ஞா சக்கரம்) முக்கியமான நரம்பு புள்ளியாகும். இது மனித உடலின் ஐந்தாவது திறன் மையம். இங்கே குங்குமப் பொட்டு வைப்பதால் உடலிலிருந்து சக்தி வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மனம் ஒருநிலைப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைத்தவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது. நமது சமயச் சின்னங்களான விபூதி, திருமண், சந்தனம், குங்குமம் இவற்றை நெற்றியில் தரித்து நாம் நலம் பெறுவோம்.

ஆலயமணி


ஆக விதிகளின்படி மணி ஓசை கெட்ட சக்திகளை விரட்டுவதாகும். கடவுளின் பூஜைக்கான நேரம் என அறிவுறுத்துவதாகும். விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் பல்வேறு மன ஓட்டத்தில் இருந்து நம்மை விடுவித்து இறைசிந்தனையில் ஆழ்த்துகிறது மணியோசை. மேலும் மணியோசை நமது வலது மற்றும் இடதுபக்க மூளைக்குச் சமமாகச் செல்கிறது. மணியை அடித்த பின் அதன் ரீங்காரம் ஏழு நொடிகளில் உடலிலுள்ள சப்தநாடிகளையும் சென்றடைந்து அவைகளை விழித்தெழச் செய்கிறது.

வடக்கே தலை வைத்துப் படுத்தல் கூடாது ஏன்?

வாராத வாழ்வு வந்தாலும் வடக்கே
தலைவைத்துப் படுக்காதே
என்பது பழமொழி.

அறிவியல் காரணம் நமது உடலில் ஒரு காந்த சக்தி இருக்கிறது. வடக்கு தெற்காக பூமியின் காந்தப்புலம் உள்ளது. நாம் வடக்கே தலைவைத்துப் படுக்கும் போது, நமது காந்த சக்தியும், பூமியின் காந்த சக்தியும் சம அமைப்போடு இருப்பதில்லை. மாறுபாடு ஏற்படுவதால் உடல்நிலை பாதிப்படைகிறது. உடலில் உள்ள இரும்புச் சத்து காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மூளைக்குச் செல்வதால் தலைவலி, ஞாபகமறதி, மூளைச் சிதைவு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 12:52 am

சுமங்கலிகள் மெட்டி அணிவது

திருமணமான பெண்கள் காலில் வௌ்ளியிலான மெட்டி அணிவது நம் பண்பாடு. இதன் பின்னுள்ள அறிவியல் விளக்கம் யாதெனில், கட்டை விரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமடைகிறது. இதயம் பலமடைகிறது. மாதவிலக்குச் சீராகிறது. வௌ்ளி ஒரு மின்கடத்தி என்பதால் பூமியிலிருந்து சக்தியை எடுத்து உடலுக்குக் கடத்துகிறது.

சுமங்கலிகள் தங்கத்தாலி அணிதல்

பெண்கள் தம் மனம்கவர் மணாளன் கட்டிய தாலியை இதயத்திற்கு அருகிலேயே வைத்திருப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

வணக்கம் கூறும் முறை

தெய்வங்களை வணங்கும்போது தலைக்கு மேலே கைகூப்பி வணங்க வேண்டும். பின்னர் இதயத்திற்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும். குருவை வணங்கும்போது நெற்றிக்கு நேரே கைகூப்பி வணங்க வேண்டும். அன்னையை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். நமக்குச் சமமானவர்களை, கூப்பிய கைகளின் விரல்களை அவர்களுக்கெதிரே நீட்டி வணங்க சொல்ல வேண்டும்.

கடவுளை வணங்கும்போது இரு கரங்களை இணைத்துக் குவித்து வணங்குவதால் விரல்நுனிகள் ஒன்றோடொன்று இணைகின்றன. இந்த அழுத்தம் கண்கள், காது மற்றும் மூளைக்குச் செல்கிறது. தீபாராதனையின் போது கடவுள் சிலையிலிருந்து வெளிப்படும் பஞ்சபூத சக்தி நம் ஐந்து விரல்கள் வழியாக நம் உடலுக்குள் ஊடுருவி ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் நமக்கத் தருகிறது.

துளசி இலையைக் காதுக்குப் பின் வைத்துக் கொள்வது

மனித உடலில் மிகக் கூடுதல் உறிஞ்சும் சக்தியுடைய பகுதி காதுக்குப் பின்புறம்தான். துளசியைக் காதுக்குப் பின்புறம் வைக்கும்பொழுது துளசி இலையில் உள்ள மருத்துவக் குணங்கள் முழுமையாக உறிஞ்சப்பட்டு உள் செல்வதால், தலையில் நீர் கோர்க்காமல் துளசியின் இதமான சூடு நம்மைக் காக்கிறது. இதனால் மூளை மண்டலமும் பலம் பெறுகிறது.

தாலி கட்டும்போது மூன்று முடிச்சு ஏன்?

திருமாங்கல்யக் கயிற்றில் மூன்று முடிச்சு இடுவதுதான் தாலி கட்டுதல் என்று போற்றப்படும் மாங்கல்யதாரணம். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மைமிக்கவளாகத் திகழ வேண்டும். தெய்வ பக்தி, குடும்பப் பெரியவர்களிடம் மதிப்பு, கணவரிடம் அன்பு ஆகிவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதே மூன்று முடிச்சின் தாத்பர்யம்.

பிரவீணா அருண்
மங்கையர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக