உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றலாம் வாங்க!
3 posters
சுற்றலாம் வாங்க!

கோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா?' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா? இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் வெளியாகியுள்ளன.
ஏலகிரி!
வேலூரிலிருந்து, திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்து, அங்கிருந்து, 15 கி.மீ., மலைப் பாதையில் பயணித்தால், ஏலகிரியை அடையலாம். ரயில் மார்க்கம் எனில், ஜோலார்பேட்டை வந்து, அங்கிருந்து பஸ்சில் ஏலகிரி வரலாம். இங்கு, நீரூற்று மற்றும் சிறுவர் பூங்காவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கானூர் ஏரி, அரசு மூலிகைப் பண்ணை பழப்பண்ணை, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம் மற்றும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்.
மேலும், ஏலகிரியிலிருந்து, 25 கி.மீ., தூரத்தில், காவனூரில், இந்தியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி உள்ளது. இதை, குழந்தைகளுடன் கண்டு மகிழலாம். சாகசப் பிரியர்களுக்கான பாரா கிளைடிங், பைக்கிங், டிரெக்கிங் போன்ற விளையாட்டுகள், உள்ளூர் விளையாட்டு கழகத்தினரால் நடத்தப்படுகிறது. இங்கு, அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.
டாப்ஸ்லிப், வால்பாறை!
சுற்றுலாவை, காட்டு விலங்குகள், பறவைகள் என மறக்க முடியாத நினைவுகளால் நிறைக்க வேண்டுமா? பொள்ளாச்சிக்கு வாருங்கள்.
பொள்ளாச்சியில் தங்கினால், 37 கி.மீ., தூரத்தில் ஆனைமலை சரணாலயமும், 30 கி.மீ., தூரத்தில் டாப்ஸ்லிப் மற்றும் 64 கி.மீ., தூரத்தில் வால்பாறையும் உள்ளது.
ஆனைமலை சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி மற்றும் பெயர் தெரியா பறவையினங்களை அருகிலேயே பார்த்து, ரசிக்கலாம். காட்டெருமைகள், விதவிதமான மான்கள் மற்றும் யானைகள் டாப்ஸ்லிப்பின் ஸ்பெஷல்!
மரகதப் பச்சை போல விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறையின் சிறப்பு, அருகில் உள்ள ஆழியாறு அணை, மங்கி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை மற்றும் நம்பர் பாறை போன்ற இடங்களையும் கண்டு களிக்கலாம்.
ஆரஞ்சு கவுன்ட்டி!
காவிரி ஊற்றெடுக்கும் கர்நாடக மாநிலம் குடகு மலையின் மடியில் அமைந்திருக்கிறது, 'ஆரஞ்சு கவுன்ட்டி!' நம்மூரில், 'கார்ப்பரேஷன் வார்டு' என்று சொல்வதைப் போல, அமெரிக்காவில், 'கவுன்ட்டி' என்று சொல்வர். சும்மா ஸ்டைலுக்காக தன் பெயருடன், 'கவுன்ட்டி'யை சேர்த்துள்ள ஆரஞ்சு கவுன்ட்டி அமைந்திருப்பது, காபி தோட்டத்தில்!
இங்கு பணிபுரியும் பெண்கள், குடகு மலைப் பெண்கள் அணிவதைப் போன்று, பாரம்பரிய உடைகளையே அணிகின்றனர். இங்கிருக்கும் ஒவ்வொரு காட்டேஜுமே, தனித் தனி பங்களா போன்று, அகன்ற தாழ்வாரம், விசாலமான பெட்ரூம், அதில் தேக்குமர கட்டில், ஈஸி சேர், வாசல், திண்ணை, வீட்டுக்குப் பின் தோட்டம், நீச்சல் குளம், அதற்கு பின் மரங்கள் மற்றும் ஏரி சூழ்ந்து காணப்படுகிறது. 'வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும்...' என்ற எண்ணம் இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.
இவ்வீடுகளில், கீசர் துவங்கி, 'டிவி' வரை அத்தனை நவீன வசதிகளும் உண்டு. அத்துடன், நாக்கின் சுவை அறிந்து, விதம் விதமான சுவைகளில் பரிமாறும் ஓட்டல்களுக்கும் பஞ்சமில்லை; பாதுகாப்புக்கும் குறைவில்லை. காடும், காபி தோட்டமுமாக இருப்பதால், சீசனுக்கு தகுந்த மாதிரி பறவை இனங்கள் வந்து போகின்றன. இந்த ஆரஞ்சு கவுன்ட்டிக்கு அருகில், திபெத் மக்கள் வசிக்கும் குடியிருப்பும் உள்ளது.
ஏற்காடு!
சேலத்தில் இருந்து, 36 கி.மீ., தூரத்தில் இருக்கிறது ஏற்காடு. ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, மலையை அடையலாம். நடுவில் நீரூற்றுடன் அமைந்துள்ள ஏரி தான், ஏற்காட்டின் மையக் கவர்ச்சி. கண்கவர் பூங்காவில், ஜப்பான் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரங்களை வளர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மே மாதம் இங்கே நடக்கும் மலர் கண்காட்சி தான் ஹைலைட்! தவிர, தொலை நோக்கியுடன் கூடிய, 'லேடீஸ் ஸீட்' மற்றும் தொலை நோக்கி இல்லாமலேயே ரசிக்க வைக்கும், 'பகோடா பாயின்ட்' கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, திகிலூட்டும் கரடி குகை, பக்தி மணம் கமழும் சேர்வராயன் மற்றும் ராஜேஸ்வரி அம்மன் கோவில்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கலாம்.
கொல்லிமலை!
சில ஆண்டுகளுக்கு முன் வரை மர்மம், அமானுஷ்யம், சித்தர்கள் என்றே வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொல்லி மலை, இன்று வெகு ஜனங்களை ஈர்க்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதற்கு காரணம், அதன் தூய்மை மற்றும் கையைக் கடிக்காத செலவுகள் தான். 'எகோ டூரிசம்' எனப்படும் சுற்றுச்சூழலுக்கான, சிறப்பு சுற்றுலாத்தலமாக, கொல்லிமலையை அங்கீகரித்துள்ளது மாநில அரசு.
நாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு தனிப்பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன. 26 கி.மீ., தூர மலைப்பாதையில் பயணித்தால், கொல்லிமலை உங்களை வரவேற்கும்.
இங்கு, 600 அடி உயரத்தில் இருந்து கொட்டும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மற்றும் கொல்லி பால்ஸ் உள்ளன. வாசலூர்பட்டி படகுத் துறையில், 'போட்டிங்' போகலாம். சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில், அருமையான, 'வியூ' பாயின்ட்டுகள் உள்ளன. அரப்பளீஸ்வரர் மற்றும் சமணர் கோவில்கள் என, ஆன்மிகமும் விரிந்திருக்கிறது.
கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.
நன்றி வாரமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201845ayyasamy ram wrote:![]()
-
-
ஆழியாறு நீர்த்தேக்கம்
-
ரொம்ப அழகாய் இருக்கு ராம் அண்ணா


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201851balakarthik wrote:கையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.
வயித்தை கடிக்குமோ ?????
ஹா..ஹா..ஹா அவங்க அப்படி போட்டிருக்கங்களே தவிர, அந்த கூர்க், அது தான் ஆரஞ்சு கவுன்ட்டி! இல் பார்த்தால் ஒரு நாளைக்கான வாடகை குறைந்தது 50,000/= என்று போட்டிருக்காங்க...............அவங்க சொன்ன வசதிகளுடன் கூடிய பங்களாவுக்கான தொகை அது


krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுற்றலாம் வாங்க!
சீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201858balakarthik wrote:சீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ
இது கர்நாடகா வில் இருக்கு பாலா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுற்றலாம் வாங்க!
krishnaamma wrote:இது கர்நாடகா வில் இருக்கு பாலா![]()
கூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்
Re: சுற்றலாம் வாங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1201861balakarthik wrote:krishnaamma wrote:இது கர்நாடகா வில் இருக்கு பாலா![]()
கூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்
ஆமாம் எல்லா இடங்களிலும் அப்படித்தான் இருக்கு, நாம் தான் நல்லா விசாரித்துவிட்டு , புக் செய்து விட்டு போகணும் இல்லை என்றால், திடீரென்று விலை ஏற்றி சொன்னால் நமக்கு ரொம்ப கஷ்டமாய் போகும்


அதாவது, நாம் கால் டாக்ஸி புக் செய்கிறோம் இல்லையா, இங்கு டிராபிக் ரொம்ப அதிகம் என்பதால், சில சமையங்களில் வண்டிக்கு போன் செய்து புக் செய்து விட்டு காத்திருக்கும்போது, அவர்களே எங்களால் குறித்த நேரத்துக்கு வரமுடியாது என்று கான்ஸல் செய்து விடுகிறார்கள்.............



flight அல்லது வண்டி பிடிக்கணும் என்று கிளம்புபவர்களுக்கு இது பெரும் தொல்லையாக இருக்கு.......வண்டி வரும் வரை நிச்சையம் இல்லை என்றால் ...........என்ன செய்வது?.......மற்றும் ஒன்று இதைவிட கொடுமை.............
வாரக் கடைசிகளில் அல்லது பண்டிகை தினங்களில் வண்டியை காண தொகையை X 2. X 3, X 4 என்று ஏற்றி வாங்குகிறார்கள்..............



krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுற்றலாம் வாங்க!

பிச்சாவரம்!: சிதம்பரத்தில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ளது, பிச்சாவரம். உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளை கொண்டது. இங்கு, சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளும் படகு சவாரி தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பராமரிப்பு விடுதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
லே!: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, 'லடாக்' மாவட்டத்தின் தலைநகரம் லே! 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்நகரில், லே அரண்மனை, உயரமான சாந்தி ஸ்தூபி, யுத்த அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இங்கு ட்ரெக்கிங் பாதைகளும் நிறைய உண்டு. மேலும், சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம் மற்றும் முஸ்லிம்களுக்கு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் உள்ளன.
தவாங்!: அருணாசலப் பிரதேசத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது, தவாங். இங்கு, உலகின் மிகப் பெரிய புத்த மடாலயம் உள்ளது. ஆறாம் தலாய்லாமா பிறந்த இடம் என்பதால், இது, புத்த மதத்தினருக்கு புனிதத் தலமும் கூட! தேஜ்பூரிலிருந்து, 16 மணி நேரம் சாலை வழி பயணமாக இங்கு செல்லலாம். மாநில அரசு, கவுகாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதி செய்து தருகிறது.
தேக்கடி!: முல்லை - பெரியாறு அணையின் நீர்பரப்பு தான் தேக்கடி! இங்கு, படகுப் பயணம் மற்றும் யானை சவாரி போன்றவை சிறப்பு. தமிழகம் மற்றும் கேரளா மக்கள் வணங்கும் மங்கலதேவி (கண்ணகி) கோவில், தேக்கடியில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது.
தொடரும்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: சுற்றலாம் வாங்க!
நந்தி ஹில்ஸ்!: கர்நாடகாவிலுள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில், பெங்களூரிலிருந்து, 50 கி.மீ., தூரத்தில் இருக்கிறது நந்தி ஹில்ஸ்! மரங்கள் சூழ்ந்தும், பார்ப்பதற்கு எருது போன்றும் காட்சியளிக்கும் இக்குன்றில் தான், பென்னாறு, பாலாறு, பொன்னையாறுகள் உற்பத்தியாகின்றன. மலைப்பாதைகளில் அதிக வளைவுகள் இல்லாமலும், மேகங்கள் நம்மை தொட்டு செல்லும் அழகையும் ரசிக்கலாம். குன்றுக்கு கீழே போதி நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
மோர்னி குன்றுகள்!: ஹரியானா மாநிலத்தில், மோர்னி என்ற கிராமம் உள்ளது. இமயமலையின் சிவாலக் தொடரின் ஒரு பகுதியான இது, 4,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இப்பகுதியை ஆண்ட ராணியின் பெயரால் அழைக்கப்படும் இக்கிராமத்தில், இமயமலையின் பல அற்புதமான இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். சின்ன சின்ன ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில், ஹரியானா அரசு, சுற்றுலாப் பயணிகளுக்காக, பெரிய பயணியர் விடுதியை அமைத்துள்ளது.
பவானி - கூடுதுறை!: ஈரோட்டிலிருந்து, 12 கி.மீ., தூரத்தில் உள்ளது, பவானி. கங்கை கரையில் காசியும், வங்கக் கடலோரத்தில் ராமேஸ்வரமும் இருப்பது போல், காவிரி மற்றும் பவானி ஆறுகளுடன், கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதியும் கலக்கும் இடத்தில் உள்ளது பவானி கூடுதுறை. இதை, 'முக்கூடல்' என்றும் சொல்வர். இந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில், ஒரு தீவுப் போல் காட்சி அளிக்கிறது, சங்கமேஸ்வரர் கோவில். பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நதிக்கரையோரம் சிவலிங்கம் அமைந்திருப்பதால், இதை, 'ருத்ரபூமி' என்பர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், கூடுதுறையில் குளித்து, ஈரத் துணியோடு சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அமிர்தலிங்கேஸ்வரர் லிங்கத்தை, தங்கள் கையால் எடுத்து, கர்ப்பக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ஆம்பிவேலி!: நமக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்று, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வர்களுக்கு லோனாவாலா! குளிர், நீர்நிலைகள், பரப்பளவு, பசுமை மற்றும் விவசாயம் என்று எல்லா விஷயங்களிலும் ஊட்டியை விட, லோனாவாலா பல படிகள் கீழே இருந்தாலும். இதன் உச்சியில் இருக்கும், 'ஆம்பிவேலி' எனும் பள்ளத்தாக்கு அருமை! மும்பை விமான நிலையத்திலிருந்து, 122 கி.மீ., தூரத்தில் இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில், சிறிய அளவிலான விமான நிலையம் கூட உண்டு.
தினமலர்
மோர்னி குன்றுகள்!: ஹரியானா மாநிலத்தில், மோர்னி என்ற கிராமம் உள்ளது. இமயமலையின் சிவாலக் தொடரின் ஒரு பகுதியான இது, 4,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இப்பகுதியை ஆண்ட ராணியின் பெயரால் அழைக்கப்படும் இக்கிராமத்தில், இமயமலையின் பல அற்புதமான இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். சின்ன சின்ன ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில், ஹரியானா அரசு, சுற்றுலாப் பயணிகளுக்காக, பெரிய பயணியர் விடுதியை அமைத்துள்ளது.
பவானி - கூடுதுறை!: ஈரோட்டிலிருந்து, 12 கி.மீ., தூரத்தில் உள்ளது, பவானி. கங்கை கரையில் காசியும், வங்கக் கடலோரத்தில் ராமேஸ்வரமும் இருப்பது போல், காவிரி மற்றும் பவானி ஆறுகளுடன், கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதியும் கலக்கும் இடத்தில் உள்ளது பவானி கூடுதுறை. இதை, 'முக்கூடல்' என்றும் சொல்வர். இந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில், ஒரு தீவுப் போல் காட்சி அளிக்கிறது, சங்கமேஸ்வரர் கோவில். பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நதிக்கரையோரம் சிவலிங்கம் அமைந்திருப்பதால், இதை, 'ருத்ரபூமி' என்பர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், கூடுதுறையில் குளித்து, ஈரத் துணியோடு சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அமிர்தலிங்கேஸ்வரர் லிங்கத்தை, தங்கள் கையால் எடுத்து, கர்ப்பக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
ஆம்பிவேலி!: நமக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்று, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வர்களுக்கு லோனாவாலா! குளிர், நீர்நிலைகள், பரப்பளவு, பசுமை மற்றும் விவசாயம் என்று எல்லா விஷயங்களிலும் ஊட்டியை விட, லோனாவாலா பல படிகள் கீழே இருந்தாலும். இதன் உச்சியில் இருக்கும், 'ஆம்பிவேலி' எனும் பள்ளத்தாக்கு அருமை! மும்பை விமான நிலையத்திலிருந்து, 122 கி.மீ., தூரத்தில் இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில், சிறிய அளவிலான விமான நிலையம் கூட உண்டு.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|