புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_m10ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 09, 2016 1:43 am

First topic message reminder :

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 7JtYtOrLRVam1ZL9Gc1Q+1460032422-8715

ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.




ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.

சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.

தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.

சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.

மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.

ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.

நன்றி : வெப் துனியாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2016 3:58 pm

அப்பிடியா , ஈஷாவில் , பாதரச லிங்கம் அமைத்து , நீரில் வைத்துள்ளார்களே அது போலா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 4:23 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ரசமணி என்பது என்ன பாலா கார்த்திக் ?
@balakarthik

ரமணியன்
பாதரசத்தை சில தல
சித்தமருத்துவ முறையின் படி கெட்டியான உருண்டையாக மாற்றுவார்கள் அது தான் ரசமணி ஐயா


சரியான பதில் பாதரசத்தை மணி யாக கட்டுவதே ரசமணி ஆகும்

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 1476129_643805245677893_528810096_n
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 Rasamani

இதை நமால் செய்ய முடியாது சிதர்கலாலேயே 100% உண்மையான ரசமணியை செய்யமுடியும் இன்று கடைகளில் விர்க்கபடுவது 100% உண்மையானது அல்ல

நம்முடைய சித்தர்கள் தாமிர சத்தும் மற்றும் உப்பு சத்தும் கொண்ட மூலிகை சாறுகள் கொண்டு ரசத்தை மணியாக கட்டினார்கள்.இந்த ரசமணியை       ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தினால் 100% உண்மைத்தன்மை கிடைக்கும்.இப்படி கிடைத்த மணியை உடம்பில் படும்படி அணிதால் எண்ணில் அடங்காத நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

ஏறக்குறைய நம்முடை சித்தர்கள் அனைவருமே பாதரசத்தின் சிறப்பையும்,இதன் பல்வேறு பெயர்களையும் ,ரசத்தை தூய்மை படுத்தும் முறைகளையும் (தோஷம் & சட்டை போன்றவற்றை நீக்குவது) அதை மணியாக எப்படி செய்வது,செய்த மணிக்கு எவ்வாறு குறிப்பிட்ட சக்திகளை அளிப்பது,இதை கொண்டு எவ்வாறு தாழ்ந்த உலோகங்களை(இரும்பு ,செம்பு,ஈயம்,வெள்ளி போன்றவற்றை ) தங்கமக்குவது ,இதனை கொண்டு உடம்பை எவ்வாறு காய கல்பமாக மாற்றுவது,மேலும் தீராத நோய்களை தீர்ப்பது என்பதை சில சித்தர்கள் வெளிப்படியாகவும் ,சில சித்தர்கள் உவமையோடும் பல்வேறு பாடல்களில் பாடிவைத்து உள்ளனர்,

பாதரசத்தின் சிறப்பு பெயர்கள்:                            காரம்,சூதம்,புண்ணியம்,கற்பம்,,சாமம்,சத்து,சூரியபகை,சாதி,சூத்திரன்,துள்ளி,ஈசன், வீரியம்,சூழ்ச்சி,நீர்,விண்நீர்,விண்மருந்து,இரசம்,சுக்கிலம்,போகம்,ஞானம்,சுயம்பு,வண்டு,நாகம்,இக்கியம்,விஜயம்,வேத மூல செந்தூரம்,பக்கிரம்,பதினெண்பந்தி ,பாரதம்,கணல்,பூதம்,இன்னும் பலவாறு அழைக்கப்படுகிறது.

பாதரசத்தின் வகைகள்:                      
     ஆறியே சூதமஃ தை ந்துவித் மாகும்                               அதன் விவர மேதென்னிலறையக்கேளு                  
     ஊறியரசமென்றும்இரசேநதிரமென்றும்                                          உற்றபா ரதமென்றுஞ் சூதமென்றும்                                        மீறியே மிசர கமென் றைந் மாச்சு  
                                       -போகர் 7000

1.இரசம் :சுத்தமானது,குற்றம்மில்லாதது ,லேசான சிகப்புநிறமுடையது.
2.இரசேந்திரன்: சுத்தமானது,குற்றம்மில்லாதது,கருநிறமுடையது.
3.பாரதம்:வெள்ளி நிறமுடையது ,குற்றமுடையது.சுத்தி செய்ய வேண்டும்
4.சூதம் : குற்றமுடையது,தோஷம்முடையது சுத்தி செய்ய வேண்டும்  ,லேசான வெளிர்மஞ்சள் நிறமுடையது.
5.மிரசம்:பாதரசத்தில் கடைசி தரம்,ஏழு வித சட்டையையும் ,தோஷத்தையிம் நீக்கி சுத்தி செய்ய வேண்டும்.

ரசத்தை மணியாக கட்டும் முறை:
விந்துவென்ற சூதத்தில் மந்திரமோ சித்தி                            மேகத்திலோடுகின்ற குளிகை சித்தி                                                   அந்து மென்ற யோகமுதல் ஞான சித்தி                                          அப்பனே காயசித்தி லோகசித்தி                                             சாஸ்திரத்தில் சொல்லாத கருவோசித்தி                                                 விந்து கொண்ட வாதத்திலட்டாங்க சித்தி                                           பாரப்பா சூதத்தைக் கட்டினோர்க்கே
                                           - சட்டமுனி வாத காவியம் 1000

விளக்கம்:என்று சொல்லும் சூதத்தினால் மந்திரம், குளிகை, ஞானம், யோகம், காயம், அட்டாங்க சித்திகள் எல்லாம் இந்த சூதமாகிய விந்தினைக் கட்டினவர்க்கு என்று கூறுகிறார்.

பாதரசத்தை மணியாக  ஏறகுறைய எல்லா சித்தர்களுமே விராலி என்ற மூலிகையின் இலையை கூறி உள்ளனர் ,இந்த இலை சாறு வராத வகையை சார்ந்தது ஆகும் ,மேலும் இதில் இருந்து சாறு எடுக்க துருசு சுண்ணத்தை ,இந்த மூலிகை இலை மீது போட்டு பிழியும் போது நிறைய சாறு வரும்.இதனை கொண்டு ரசத்தை கட்டலாம் .
இதுபோல


கருவஊமத்தை,ஊமத்தை,கல்தாமரை,குப்பைமேனி,பிரண்டை,கொரக்கர்மமூலி,நத்தைசூரி,அழுகண்ணி,தொழுகண்ணி,நாயுருவி இன்னும் சில மூலிகைகள் உள்ளன மேலும்,மலைகளில் உள்ள ரோமவிருச்சம் ,கணை எருமை விருச்சம்,ஜோதிவிருச்சம் போன்ற பல மூலிகைகள் ரசத்தை கட்டலாம்,

இதே போன்று உயிர்அற்ற மூலிகையின் சாறுகளை கொண்டு கட்டப்படும் ரசமணி மற்றும் ரசமணிக்கு சக்திகள் ஏற்றுவதால் எந்த ஒருபயனும் இல்லை.மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்து அதன் உயிரும்,தெய்விக சக்தியும் கொண்டே செய்யும் ரசமணியே 100% பலன் தரும் என்பதுதான் உண்மை.    

இவ்வாறு கட்டிய மணியை புடம் போட்டு எடுத்து ,நூலில் கோர்த்து உடம்பில் படும்படி அணிந்து கொள்ளலாம்.

இப்படி அணியும் மணியானது,

1.நம் உடம்பில் உள்ள வாத,பித்த,கபத்தை ஒழுங்குபடுத்தி,உடலை சீராக வைக்க உதவும்

2.உடல் எப்பொழுதும் களைப்பு இன்றி சுறுசுறுப்பாக இருக்கும் .

3.இரத்தைத்தை சுத்திகரித்து ,இரத்த ஓட்டத்தை சீராக்கும் ,இதன் மூலம் இரத்த அழுத்தம் என்ற பேச்சிக்கெ இடம் இல்லை.

4.ஞாபக சக்தியை தூண்டி,சிந்தனையை ஒருநிலைபடுத்துகிறது,

5.விந்துவை கட்டிபடுதும் ,இதன்னால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடலாம்.

6.சப்த தாதூக்களையும் சரிவர இயங்க செய்யும்,இதன் மூலம் மனிதனுக்கு நோய் அணுக்காது ,உடலில் நோய் இருந்தாலும் இதை ரசமணி உண்டுவிடும்.

7.உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்தும்,தோற்ற பொழிவை கொடுக்கும் ,வயதனாலும் இளமைதன்மையை அப்படியே வைத்து இருக்கும்.

8.எளிமையாக சொல்வது என்றால் எந்த நோயையும் வரவிடாது,இருக்கும் நோயையும் தங்கவிடாது.

இது முதல்படிதான்,மேலும் இவ்வாறு தயாரிக்கப்பட ரசமணிக்கு (சக்தி தருவது) சாரணை என்று சொல்லப்படும் மூலிகை சறுக்களை ஊட்டுவதன் மூலம் எண்ணில் அடங்கா சக்திகளை பெறலாம்,


அதாவது சித்தர்கள் வானில் பறந்தார்கள் ,நீரில் நடந்தார்கள் ,கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள்,நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் சென்று வந்தார்கள்,தாழ்ந்த உலோகத்தை தங்கமாக்கினார்கள் ,தீராத நோய்களை தீர்த்தார்கள் மேலும் அஷ்டமா சித்துக்களை பெற்றார்கள்,யோகத்தில் முழுமையடைந்தர்கள் என்றால் இதற்கு இரசமணியின் பங்கும் மகத்தானது என்பதில் மாற்று கருத்து இல்லை (ஆதாரம் போகர் 700) ,இதற்க்கு இவர்கள் ரசத்தை கட்டியவிதம் புடம் போட்ட முறை கண்டிப்பாக வேறுபாடும்.

கல்லான காயசித்தி கற்பமொடுரசவாதம்                                       அஞ்சான குளிகை கல்லான கெளனமாங்குளிகையோடு                             கனமான சர்வநோய் எல்லாம் மைந்தா                                          சொல்லான சூதத்தை விட்டால் வேறு                                      சொல்லுக்கும் வல்லவரார் சொல்லக்கேளு                                 சொல்லவே சித்தர்கள் தான் பதிநென்பேரும்                                 சிவவிந்தை கட்டியல்லோ திறமானாரே
                                                              - போகர் 700

விளக்கம்:காயசித்திக்கான கற்பம், தங்க்ம்செய்வதர்க்கான இரசவாத முறைக்கும் கெளனமார்க்கத்தில் செல்வதற்கான மணி உடலில் தோன்றும் நோய்கள் எல்லாம் தீர வென்றால் சூதத்தை விட்டால் வேறு இல்லை இதற்கு மாற்றுக் கூற வல்லார்கள் யார் உள்ளார் என்று கூறி அடுத்துக் கூறுகிறார் 18- சித்தர்களும் சிவவிந்தைக் கட்டியல்லோ சித்தி பெற்றனர் என்று கூறுகிறார். மேற்கண்ட சூதத்திற்கு சிவம் என்ற பெயரும் உள்ளதால் சிவன் விந்து என்றும் அதைக் கட்டி திறம் பெற்றனர் என்றும் பொருள் படுகிறது.


மேலும் சித்தர்கள் சாதாரண மனிதர்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ரசமணி மற்றும் அதற்க்கு சக்தி ஏற்றும் முறைகளை கூறி உள்ளனர்
       
இவ்வகை மணியின் மூலம் அடையும் பயன்கள்
கண்டு கொள்ளு நினைத்த தெல்லாம் கைகொடுக்கும்                        கதியாகும் விதியாகும் சித்தியாகும்              
                     பண்டுமுன்னே இருந்த தெல்லாம் பாகமாகும்                          
    தொண்டுபடும் சகலமும்தான் பாரிலோர்க்கு                                தொல்லுலகில் விந்திறுகும் தொன்மைபாரு                    
            உண்மேல் ஸ்திரிகளுந்தான் வசியமாகும்                                  உற்றுனர்ந்து பார்த்தாக்கால் சித்தியாமே
                                              - யாகோப்பு சுண்ணம் - 300

விளக்கம்: நினைத்த தெல்லாம் சித்தியாகும் இதுவே விதியாகும் முன்பு தெரியாதது எல்லாம் தெரியும் சகலமும் சித்தியாகும் இதனால் சுக்கிலாமானது இறுகும் இதனால் பெண்கள் வசியப்படுவர் என்று கூறியவர் உற்று சிந்தையில் உணர்ந்து பார்த்தல் எல்லாம் சித்தியாமே என்று சொல்லுகிறார்

மேலும் கீழ்கண்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் ரசமணியை கொண்டே சரிசெய்யலாம்:

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும்.  செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.                      
8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

          இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும்.

மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது ,மேலும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர்கள்,தற்போது ரசமணி உபயோகப்படுத்தும் நண்பர்கள் ,ரசமணி செய்வதில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் கூறிய தகவல்களில் இருந்து அரை சதவிதம் அதிலும் குறைந்த அளவு மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது.காரணம் தக்க குரு மூலம் சரியான வழியில் செய்யவும்,நல்ல எண்ணங்களும் வேண்டும் குறிப்பாக குரு அருளும் திரு அருளும் இல்லாமல் ரசமணியை செய்யவோ உபயோகிக்கவோ முடியாது.
.உங்களுக்கு உண்மையாக என்னென்ன தேவையோ அதை தெரிவித்து சரியான உண்மையான ரசமணியை வாங்கி பயன் அடையுங்கள்.

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:


1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.

2.கீழே போட்டால் உடையாது ,

3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட கரண்ட் ஷாக் போல அடிக்கும்(வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )        

                “விதியாளி காண்வான் பாரு”
       என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

விளக்கம் உதவி சதுரகிரி ப்ளாக்ஸ்பாட்



ஈகரை தமிழ் களஞ்சியம் ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 10, 2016 4:37 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடியா , ஈஷாவில் , பாதரச லிங்கம் அமைத்து , நீரில் வைத்துள்ளார்களே அது போலா ?

ரமணியன்
அதே போல தான் ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 10:31 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:நன்றி நன்றி தகவலுக்கு இன்னொன்று இதை கழட்டும்போழுது தண்ணீரில் போட்டுவைக்கலாமா இல்லை பாலில் போட்டுவைக்கலாமா
மேற்கோள் செய்த பதிவு: 1201891

இரண்டும் அவசியம் இல்லை பாலா, பெருமாள் மேடை இல் வைக்கலாம், அதாவது நாம் ஸ்வாமி எங்கு வைத்து இருக்கோமோ அங்கு வைத்து விடலாம். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1201894

அது எப்பிடி ?
கொடியில்  /மரத்தில் இருந்து பறிக்கின்ற  வெற்றிலை பழம் கூட ,பெருமாள் மேடையில் வைக்கும் முன் , நீரால் சுத்தி  செய்தே வைக்கிறோம் .அப்பிடி இருக்கும் போது ,நீரிலும் பாலிலும் சுத்திகரிக்கபடாமல் ருத்த்ராக்ஷத்தை  மேடையில் வைக்கலாமா ?
குறைந்த பட்ஷம் நீரில் சுத்தம் செய்து வைக்கலாம் என்பது எந்தன் கருத்து .

ரமணியன்

அவர் கேட்டது தண்ணிரில் போட்டு வைக்கணுமா அல்லது பாலில் போட்டு வைக்கணுமா என்று தானே ஐயா?..............அதுக்குத் தான் நான் பதில் சொன்னேன்,..அலம்பித்தான் வைக்கணும், ........... நீங்கள் சொல்வது போல , நாம் எதை அங்கு வைத்தாலும் சுத்தி செய்து/ அலம்பி துடைத்துத் தானே வைப்போம், அதனால் அதைத் தனியாக குறிப்பிடணும் என்று எனக்கு தோன்றவில்லை..........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 10:33 pm

அருமையான பகிர்வு பாலா, இன்று தான் இது பற்றி தெரிந்து கொண்டேன்.........படமும் பார்த்தேன்.......மிக்க நன்றி ! ....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Apr 10, 2016 11:10 pm

நல்ல பகிர்வு அம்மா.நிறைய விளக்கங்கள் தெரிந்து கொண்டேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:21 pm

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.நிறைய விளக்கங்கள் தெரிந்து கொண்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1202019

நன்றி சசி புன்னகை .எனக்குத் தெரிந்ததை இங்கு பகிர்ந்து கொண்டேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 14, 2016 8:44 pm

நன்றி பாலா கார்த்திக் ,
இன்றுதான் நிதானமாகப் படிக்க முடிந்தது .
இன்னும் 2/3 முறை படித்தால்தான் மண்டையில் சிறிதாவது ஏறும் .
அப்பப்பா எவ்வளவு விஷயங்கள் /முறைகள் ./பயன்கள் .
நம்ம ஊர் அரசியவாதிகள் எக்கச்சக்கமாக வாங்கிப் போட்டு இருப்பார்களோ !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 15, 2016 12:31 am

அடேயப்பா ரசமணியில் இவ்வளவு விஷயங்களா..? நானும் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், உங்கள் பதிவு மிக தெளிவாக விளக்கியிருக்கிறது. நன்றி பாலா.



ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 15, 2016 12:50 am

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம்

எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும்,எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன்மூலம் தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு மறுபிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான்.

ருத்ராட்சத்தை அணிபவனும்,வழிபடுபவனும் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,தொடரவிருக்கும் அனேக கோடி பிறப்புகளிலிருந்தும் விடுபடுகிறான்.

ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும்,உடையும் தருபவனும்,ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவனும் அனைத்துப்பாவங்களிலிருந்தும் விடுபட்டு,சிவலோகத்தை அடைகிறான்.

நம்பிக்கையோடும்,நம்பிக்கையில்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்துகொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான்.
ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
அனைத்துவித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன்  மூலமும்,விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை,ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான்.

ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில்,அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களிலிருந்து விடுபட்டு ருத்ரலோகத்தை அடைவார்கள்.
சண்டாளனாகப் பிறந்தவனும்,ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின் அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடிவிடும்.
கள் உண்பவனும்,மாமிசம் உண்பவனுமாகிய பாவியின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால் அவனது பாவங்கள் அனைத்தும் விலகும்.

ருத்ராட்சமாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும்,சாஸ்திரங்களையும்,உபநிடதங்களையும் கற்றறிந்தவனைவிட சிறப்பு பெறுவான்.அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன.பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில்,அவன் இறந்தபின் ருத்ர லோகத்தை அடைகிறான்.

பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக்கூடாததை உண்பவனோ யாராகிலும் அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில் அவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.

ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான்.காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கழுத்தில் அணிபவன் நூறுகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்;கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

ருத்ராட்சத்தை அணிந்தவாறு , வேத நியமங்களை ஒருவன் கடைபிடிப்பானாகில் அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது;
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத்தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெருமானைப் போலவே முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.
ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில்,ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின்,அது கங்கையில் நீராடியதைவிட அதிகப்புண்ணியப்பலன்களைத் தரும்.

மனிதன் மட்டுமல்ல;ஓரறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால்,அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.பல்வேறு யுகங்களில் நாயும்,கழுதையும்,கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால் அவை சிவலோகம் சென்றடைந்தன.மறு ஜன்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன.

நன்றி: omnamashivaayaa.blogspot.com



ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக