புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_m10'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 1:55 am

First topic message reminder :

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? புன்னகை

கூடுதல் தகவல் : திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் | by Dr.G.Sadakopan M.A., Ph.D | Publisher: Alliance

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 11:21 am

தேகத்தை விட்டேனா ரிஷி பத்தினியைப் போலே..!
---
கண்ணன் பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதில்
விருப்பம் கொண்டவன். ஆயச் சிறுவர்களுடன் அவனும்
செல்வான்.

ஒருநாள், ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த
சிறுவர்கள் கண்ணனிடம் வந்து, ""கண்ணா, எங்களுக்குப்
பசிக்கிறது'' என்றனர். கண்ணன் அவர்களைப் பார்த்து,
-
"இங்கு யாகம் செய்யும் அந்தணர்களிடம் சென்று என்
பெயரைச் சொல்லி உணவு பெற்று வாருங்கள்'' என்றான்.
-

சிறுவர்கள் அந்தணர்களிடம் சென்று கண்ணன் பெயரைச்
சொல்லி உணவு கேட்டனர். அவர்கள் கம்சனுக்குப் பயந்து
உணவு கொடுக்கவில்லை. கண்ணனிடம் சென்று இதைக்
கூறியபோது, ""ஊருக்குள் சென்று முனிபத்தினிகளிடம்
நான் சொன்னதாகச் சொல்லி உணவு கேளுங்கள்'' என்று
கூறி அனுப்பினான்.

முனிபத்தினிகளிடம் சென்று கேட்டபோது அவர்கள் மிகுந்த
மகிழ்ச்சியுடன் சிறுவர்களுக்கும் உணவு கொடுத்து கண்ணன்
மற்றும் அங்கிருந்தோர் அனைவருக்கும் உணவளித்து
பாகவதத் தொண்டு செய்து மகிழ்ந்தனர்.
-

அவர்களை மீண்டும் ஆசிரமத்துக்குச் செல்லும்படி கண்ணன்
கூறியபோது கண்ணனைப் பிரிய மனமின்றியும் தங்கள் க
ணவருக்குப் பயந்தும் விருப்பமின்றிச் சென்றனர்.

ஒரு பெண்மணி மட்டும் கண்ணனைப் பிரிய மனமின்றி
கண்ணனை நினைத்து உயிர்விட்டாள்.

"கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப்
போல்தானும் உயிரை விடவில்லையே' என்று மனமுருகிக்
கூறினாள் அந்தப் பெண்பிள்ளை.
-

- கே. சுவர்ணா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 11:36 am

ayyasamy ram wrote:
அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப்போலே..!

-
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 HFVJNxH8SH6UNUPX82W8+anmega-palan-76
---
வட மதுரையை ஆண்ட கம்சன் தன் தங்கை
தேவகியின் மகன் கிருஷ்ணன் தன்னைக் கொல்லப்
பிறந்தவன் என்றறிந்து அவனைக் கொல்வதற்குப்
பலவிதங்களிலும் முயன்று தோல்வியுற்றான்.

கிருஷ்ணனை வஞ்சகமாகக் கொல்ல எண்ணிய கம்சன்
வில்விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதில் தனது பட்டத்து
யானை குவலாயாபீடம் மற்றும் மல்லர்கள் மூலம்
கிருஷ்ணனைக் கொன்றுவிட முடிவு செய்தான்.

கிருஷ்ணனை அழைத்து வர நந்தகோபனின் நண்பரும்
தனது அமைச்சருமான அக்ரூரரை கம்சன் அனுப்பினான்.
உற்றார், உறவினர் கிருஷ்ணனை கம்சனிடம் அனுப்ப
மறுத்தனர். ஆனால் கிருஷ்ணர் வடமதுரை செல்ல ஒப்புக்
கொண்டார்.

அன்று மாலை யமுனையில் அக்ரூரர் சந்தியா வந்தனம்
செய்து கொண்டிருந்தபோது கிருஷ்ணர் மாயா ஜாலங்கள்
புரிந்து, அக்ரூரருக்குக் காட்சி கொடுத்தருளினார்.

அக்ரூரருடன் வடமதுரை சென்று கிருஷ்ணர் பட்டத்து
யானையையும் மல்லர்களையும் வீழ்த்தி கம்சனையும் கொன்றார்.
மக்கள் அனைவரும் காக்கப்பட்டனர். இவ்வாறு

அக்ரூரர் கிருஷ்ணனை அழைத்து வந்ததால் தீயவர்கள்
அழிந்து நல்லோர் காக்கப்பட்டனர்.

இதைப்போல் நல்லாரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும்
"அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலோ'
என்று அந்தப் பெண்மணி வருந்திக் கூறுகிறார்.
-
-
படம்- இணையம்

நீங்கள் சக்தி விகடன் வாங்கரீங்களா ராம் அண்ணா?.......இது போல எல்லா வாக்கியங்களுக்கும் இருக்கா அண்ணா?.......இருந்தால் போடுங்களேன்...தனி பதிவாகவே போடுங்கள்...ரொம்ப புண்ணியம் உங்களுக்கும், படிப்பவர்களுக்கும் புன்னகை ........ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 12:20 pm

அன்புள்ள தங்கைக்கு..
-
இங்கு நான் பதிவிட்ட மூன்று வாக்கியங்களுக்கான
விளக்கங்கள், தினமணி இதழில் கே.சுவர்ணா
எழுதியவை...
-
ஆனால் இணையத்தில் பரவலாக அனைத்து
வாக்கியங்களுக்கும் விளக்கம் கிடைக்க கூடும்
-
அவ்வப்போது கிடைக்கும் தகவல்கள் இந்த திரியிலேயே
போடுகிறேன்...பின்னர் வாக்கியங்கள் வரிசைப்படுத்தி
தனித் திரியாக போட்டுக் கொள்ளலாம்
-
மற்றவர்களும் பதிவிடலாம்...
-
'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 X5nNz1GHT1G7JyuEgyFY+ShriLordPerumal

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 12:30 pm

அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே ?


'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 2aPWdj2CTa2GWfeSzvDC+Ram-sita-wedding
-

இதற்கான பொருள்:
--
புத்திர பாசம் காரணமாக அடிக்கடி வாக்கு மாறும்
தன்மையுள்ள தசரதன் விசுவாமித்திரருடன் அரக்கவதம்
செய்ய இராமனை அனுப்ப மறுக்கிறான்.

விசுவாமித்திரர் கோபம் கொண்டு கிளம்ப எத்தனிக்கிறார்.
வசிஷ்டருக்கு நடக்கப் போகும் மகா சம்பவங்களின்
கோர்வை ஞானதிருஷ்டியில் வந்து போகிறது. இராவணன்
அழிந்தால் என்ன அழியாவிட்டால் என்ன இராமனுக்கும்
பிராட்டிக்கும் திருமணம் நடக்கவேண்டியது கட்டாயமல்லவா?
-
சட்டென்று தசரதனைப் பார்த்து “உன் பிள்ளைகளுக்கு
ஒரு நல்லது நடந்தால் அதனை மன்னனே நீ தடுப்பாயோ ?
என்று கேட்கிறார். இதனை கம்பன் தனது வரிகளில்
அழகாகக் கூறுகிறான்.

கறுத்த மா முனி கருத்தை உன்னி.

‘நீ பொறுத்தி’ என்று அவற் புகன்று.

‘நின் மகற்கு உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் மறுத்தியோ?’
எனா. வசிட்டன் கூறினான்.

அத்துடன் நில்லாமல் “ வெள்ளம் பெருகி ஒரு நாட்டிற்கு
வளம் சேர்வதைப் போல உன் பிள்ளைகளுக்கு நிறைய
நல்லவைகள் பெருகி வரப் போகின்றது. அதனை தடுக்கப்
போகிறாயா? “ என்று கேட்கிறார். இதனையும் கம்பர் தனது
கவித் திறத்தால்,

‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே.

இதன்பிறகே தசரதன் மனம் மாறி தனது புதல்வர்களான
ஸ்ரீராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரருடன்
அனுப்ப சம்மதிக்கிறான்.

சீதாபிராட்டிக்கும், ஸ்ரீராமனுக்கும் திருமணவைபவத்தை நடத்தி
வைக்கும் பொருட்டு ஸ்ரீராமனை விசுவாமித்திரருடன் அனுப்பி
வையும் என்று தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னதைப் போன்ற
எந்த நல்ல செயலையும் நான் எங்கள் வைத்தநிதி பெருமானுக்கு
செய்யவில்லையே பிறகு எதற்கு இந்த ஊரில் இருக்கவேண்டும்
என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கேட்டபடி கிளம்புகிறாள்.

——————

சத்தியப்பிரியன், ஓவியம்:ஸ்யாம்

நன்றி- சக்தி விகடன்

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Wed Apr 06, 2016 12:58 pm

அம்மா, சக்தி விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் தொடரில், 38 வாக்கியங்களுக்கு விளக்க கதைகள் வந்துள்ளன. கடைசி இதழ் வரை. வந்துள்ள விளக்கங்கள் வரை என்னிடம் இமெயிலில் உள்ளது. அதை வோர்ட் அல்லது பிடிஎப் ஆக அளிக்க முயல்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 06, 2016 1:03 pm

'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்' என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே ? :)  - Page 2 W0Kxps8ZSpeapyvFKaca+maxresdefault
-
38. அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே ?
---
காவிரியின் தென்கரையில் காற்று இதமாக வீசிக்
கொண்டிருந்தது.
திருப்பாணர் தமது தோளில் தொங்கவிட்ட உரையிலிருந்து
யாழ் எனப்படும் தந்தி இசைக் கருவியை வெளியில் எடுத்தார்.
திருவரங்கன் இருக்கும் திசை நோக்கி சேவித்தார். யாழுக்கு
சுருதி சேர்த்தார்.

கல்லும் கரைந்துருகும் வண்ணம் அரங்கன் மேல் பாக்களைப்
பாடத் தொடங்கினார்.

“ ஆஹா என்ன ஒரு கானம். கேட்பவர்களை மதி மயங்க
வைக்கும் இசை” என்றார் ஒரு பக்தர்.

“ எதற்காக இவர் இப்படி கோயிலுக்கு வெகுதொலைவில்
நின்றுகொண்டு பாட வேண்டும்? அரங்கன் சன்னதியில்
பாடலாமே? “ என்றார் உடன் வந்த வேறொரு பக்தர்.

“ என்ன ஓய் புரியாத மாதிரி பேசறீர்? இவர் நான்காவது
வர்ணத்தைச் சேர்ந்தவர். தீண்டத்தகாதவர்.”

“ திருவரங்கனுக்கு அடிமைப்பட்ட ஆத்மாவுக்கு ஏதுங்காணம்
குலமும் ஜாதியும்? “

“ இது உமக்கு எமக்கு தெரியும். கோயிலைச் சேர்ந்தவாளுக்குத்
தெரிய வேண்டாமோ?”

‘ஜீயர் வர்றார் ஜீயர் வர்றார் நான்காம் வருணத்தினர் எதிரில்
நிற்க வேண்டாம். ஒதுங்கி போங்கள்‘ என்ற ஒலி எழுந்தது.

அந்த பக்தர்கள் திரும்பிப் பார்த்தனர். திருவரங்கன் கோயிலைச்
சேர்ந்த லோகசாரங்கர் என்ற ஜீயர் தனது தொண்டர் கூட்டம்
புடை சூழ காவிரியில் குளிப்பதற்கு வந்து கொண்டிருந்தார்.

திருப்பாணரின் செவிகளில் எம்பெருமானுடன் சுருதி சேர்ந்த
பண்ணின் ஒலியைத் தவிர வேறு ஒலி எதுவும் விழவில்லை.
ஜீயருடன் வந்தவர்கள் அவரை விலகிப்போகச் சொன்னர்.
கேட்காமல் போகவே ஜீயரைப் பார்த்தனர்.

ஜீயருக்கு திருமஞ்சனத்துக்கு பொற்குடத்தில் நீர்கொண்டு
போகவேண்டிய அவசரம். “ஏதாவது பண்ணி அவனை
அப்புறப்படுத்துங்கோ“ என்று உத்தரவிட்டார். உடன் வந்த
தொண்டர் கூட்டம் திருப்பாணரை கல்லால் அடிக்கத் தொடங்கினர்.
-
தனது சுயநினைவுக்கு வந்த திருப்பாணர்
ஜீயருக்கு இப்படி ஒரு அபச்சாரம் செய்து விட்டோமே என்று
மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார்.
-
இவரைக் கண்ணுற்ற அந்த இரண்டு பக்தர்களும் “இது என்ன
இப்படி ஒரு அக்கிரமம்“ என்றபடி ஜீயர் கூட்டத்துடன் உள்ளே
சென்றனர்.

தனது பாகத்தன் மேனியில் கல்லால் அடித்து இரத்த
காயமாக்கியதால் கோபாவேசமான திருவரங்கன் தனது
அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தான்.
-
ஜீயருக்கு கைகால் நடுங்கிவிட்டது. வெளியில் நின்று தரிசித்த
அந்த பக்தர்களுக்கும் மெய் சிலிர்த்தது. நாளை அவசியம்
இங்கு வருவோம் என்று கூறிவிட்டு அகன்றனர்.

திருவரங்கச் செல்வன் சிலை மேனியில் இரத்தம் வழிந்ததன்
அர்த்தம் புரியாமல் லோக சாரங்க முனிவர் கலங்கியபடி கண்
துயின்றார். கனவில் அரங்கன் தோன்றினான்.

“என் பரமபாகவதனை கல்லால் அடித்து பெரும்பழி தேடிக்
கொண்டு விட்டீர். நாளை அந்த திருப்பானரை உமது தோளில்
சுமந்து எம் சன்னதிக்குள் வாரும். அப்போதுதான் உமது
பாவமும் எமது குருதியும் வடியும்“ என்றார்.

மறுநாள் லோகசாரங்கர் திருப்பாணர் வரும்வரை காத்திருந்தார்.
திருப்பாணர் வந்ததும் அவரிடம் தனது தோளில் ஏறிக்கொள்ளச்
சொன்னார்.

திருப்பாணர் தீயை மிதித்தவர் போல பதறினார்.

“இது அரங்கனின் கட்டளை. எம்முடைய விருப்பமும் இதுவே.
ஒரு பாகவதனின் நெஞ்சம் நோகும்படி நடந்துகொள்வது
மற்றொரு பாவதோத்தமனுக்கு அழகில்லை“ என்றார் ஜீயர்.

“ஜீயருக்கு இது நேற்று ஏன் தெரியாமல் போனது?“ என்று
நேற்று வந்த அதே பக்தர்கள் நினைத்துக் கொண்டனர்.

லோகசாரங்கர் தோள்களில் ஏறிக்கொண்டு பிரகார வீதிகளின்
வழியாக திருப்பாணர் அரங்கன் சன்னதிக்குள் நுழைகிறார்
என்ற செய்தி காட்டுத்தீ போல் காவேரிக் கரையில் பரவத்
தொடங்கியது. நாற்புரத்திலிருந்தும் பக்தர்கள் திரண்டனர்.
ஒரு திருவிழா உற்சவம் போல திருப்பாணர் அரங்கன்
சன்னதிக்குள் நுழைந்தார்.

ஊரே கொண்டாடும் ஒருவனை அதுவரை நேரில் காணாமல்
திடீரென்று இப்படி ஒருநாள் இப்படி ஒருவிதமாக பார்த்ததும்
திருப்பாணருக்கு வாய் அடைத்துவிட்டது என்றுதான் சொல்ல
வேண்டும்.

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்

கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு

வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.

என்று கதறி பண்ணிசைத்தார்.
அமலனாதிபிரான் என்று தொடங்கி மொத்தமே பத்த
பாசுரங்கள்தான் மங்கள சாசனம் செய்திருப்பார்.

கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.

என்ற பாசுரம் பாடிமுடித்தவுடனேயே அரங்கன் அவரை
தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொண்டான்.

வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பக்தர்களும்
கண்களில் நீர் மல்க“ பக்தி என்றால் இதுதான் பக்தியாக
இருக்க முடியும்” என்றனர்.

அப்படி ஒரு பக்தியுடன் பண்ணிசைத்து அவன் மேனியுடன்
கலந்து ஐக்கியமான, திருப்பாணரைப் போல தான் பாக்கியம்
செய்யவில்லையே என்று அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை
வெளியேறுகிறாள்.
-
--------------------------------------
சத்தியப்பிரியன்,
நன்றி- சக்தி விகடன்
படம் - இணையம்

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Wed Apr 06, 2016 2:06 pm

இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
http://www.mediafire.com/download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf

badri2003
badri2003
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Postbadri2003 Wed Apr 06, 2016 2:17 pm

மேலும் சில புத்தக தகவல்கள்.
http://www.noolulagam.com/product/?pid=23696
http://haristore.com/index.php/books/thirukkolur-penpillai-ragasiyam.html

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Apr 06, 2016 7:46 pm

badri2003 wrote:இதோ தங்களுக்காக. இதுவரை சக்தி விகடனில் வந்த விளக்கங்களின் தொகுப்பு. நன்றி சக்தி விகடன்.
http://www.mediafire.com/download/61720vv527kh61i/ThirukkolurPenPillaiRahasiyamm_Part1_Tamil.pdf
மேற்கோள் செய்த பதிவு: 1201092
மிக்க நன்றி பத்ரி அவர்களே .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 06, 2016 8:08 pm

badri2003 wrote:அம்மா,  சக்தி விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் தொடரில், 38 வாக்கியங்களுக்கு விளக்க கதைகள் வந்துள்ளன. கடைசி இதழ் வரை.  வந்துள்ள விளக்கங்கள் வரை என்னிடம் இமெயிலில் உள்ளது. அதை வோர்ட் அல்லது பிடிஎப் ஆக அளிக்க முயல்கிறேன்.  

வாவ் ! மிக்க நன்றி பத்ரி புன்னகை..உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும் ........ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக