புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_m10ஞானப் பறவை!-சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானப் பறவை!-சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 03, 2016 11:02 am

ஞானப் பறவை!-சிறுவர் கதை EbyuurpZTcqzceDl3hCQ+y4
-
ஒரு கிராமத்தில் சோமு என்று ஒருவன் இருந்தான்.
அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது!
ஆனால் அவன் மிகவும் சோம்பேறி! வேலைக்குச்
செல்ல அவனுக்கு விருப்பமே கிடயாது!

கிராமத்தில் உள்ளோர் அனைவரும் பரபரப்பாக
வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்
கொண்டிருப்பான். உழைப்பின்றி சுகமாக வாழ்வதே
குறியாக இருந்தான்.

ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த
போது ஒரு சிறிய அழகான பறவையைக் கண்டான்!
மிகவும் அழகாக இருந்த அந்தப் பறவையைத் தன்
வீட்டிற்கு எடுத்துச் சென்று அதனுடன் விளையாடிப்
பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்தான்.

எனவே அந்தப் பறவையைத் தன் வீட்டிற்கு எடுத்துச்
சென்றான்.

அழகிய அந்த சிறிய பறவைக்குச் சிறிது உணவு
அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு
ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம்
போல் அவனுக்குத் தூக்கம் வந்தது! அயர்ந்து தூங்கினான்.
விடிந்து விட்டது!

கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்!
அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம்
வளர்ந்திருந்தது!

“”இது எப்படி? நான் சிறிய பறவையைத்தானே எடுத்து
வந்தேன்…!”

“”நீ எடுத்துவந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன்.
எனக்குப் பசிக்கிறது…,ஏதாவது சாப்பிடக் கொடு” என்றது
பறவை.

பறவை பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் அவன்!
அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். ஆனால்
பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டம் பசிக்கிறது என்றது.

சோமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு
அளித்து விட்டான். பறவை,””இன்னும் கொடு …, இன்னும்
கொடு” என்றது. சோமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லை.
பயந்துபோன அவன் வீட்டைவிட்டு வெளியே ஒடினான்.
பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு
திரும்பிய அவனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது!

ஆம்! அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது!
வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது!
அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!
வெளியில் குளிர் தாங்க முடியவில்லை. போர்வையோ
பாயோ அவனால் வீட்டிற்குள் சென்று எடுத்து வர
முடியவில்லை! அதான் பறவை வீட்டை அடைத்துக்
கொண்டிருக்கிறதே! தன் தலையை மட்டும் பறவை
வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது.

சோமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் அயர்வும் ஏற்பட்டது.
வெளியில் குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது!
பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டிலும் உணவில்லை.
கையிலும் காசு இல்லை. அப்போது அவ்வழியே
மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு
வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் சோமுவைப் பார்த்து,
“”தம்பீ…,மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப்
பணம் தருகிறேன்” என்றார்.

“”எனக்கு உணவு கிடைக்குமா?”

“”வாங்கித் தருகிறேன்”என்றார் பெரியவர்.

பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித் தந்த உணவு
அமிர்தமாக இருந்தது. வயிறார உண்டான். வீட்டை
நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஆனால் பறவையை நினைத்த அவனுக்கு மிகவும்
பயமாயிருந்தது. இன்று அதை எப்படியாவது வீட்டை
விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான்.

வீட்டிற்குச் சென்று பறவையைப் பார்த்தவனுக்கு ஆச்சரியம்!
பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது!

“”எப்படி இது”

“”உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா?
அதனால்தான்” என்றது.

மறுநாள் அவன் வேலை தேடிச் சென்றான். அவனுக்குக்
கூலி வேலை கிடைத்தது. செய்தான். நன்றாகப் பசித்தது!
கிடைத்த கூலியில் வயிறார உண்டான். பறவையை
நினைத்தான். அது பசியோடு இருக்குமே என்று சிறிது
உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு
சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும்
என்று தீர்மானித்துக் கொண்டான்.

பறவைக்கு வாங்கிய உணவுடன் வீட்டிற்குத் திரும்பினான்!
பறவையைப் பார்த்த அவனுக்கு பேராச்சரியமாக இருந்தது!
தான் முதலில் கொண்டுவந்தபோது இருந்தது போலவே
மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்!

“”இது எப்படி?”என்று பறவையைக் கேட்டான்.

“”உன் சோம்பேறித்தனம்தான் எனக்குள் நிரம்பி இருந்தது.
நீ உழைக்க ஆரம்பித்தவுடன் அது குறைய ஆரம்பித்தது.
இப்போது நீ தினமும் உழைக்க வேண்டும் என்று நினைக்க
ஆரம்பித்துவிட்டாய்! நானும் முன்பு போலவே ஆகிவிட்டேன்.
நான் வந்த வேலை முடிந்தது.”

“”எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு”

“”என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு
வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு
நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன்” என்று
கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்
கொண்டிருந்த சோமுவிற்கு ஏனோ கண்களில் நீர் பனித்தது!
இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை
போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்!

—————————

By -வை.தியாகராஜன்
சிறுவர் மணி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 03, 2016 9:46 pm

நல்ல கதை!




ஞானப் பறவை!-சிறுவர் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஞானப் பறவை!-சிறுவர் கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஞானப் பறவை!-சிறுவர் கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:29 am

ம்ம்... நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக