புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கீதையில் மனித மனம் Poll_c10கீதையில் மனித மனம் Poll_m10கீதையில் மனித மனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் மனித மனம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 19, 2009 12:25 pm

கீதையில் மனித மனம்




‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலிலிருந்து
அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.
மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.
கண்ணன் சொல்கிறான் :
“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப – துன்பங்கள்
இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”
அர்ஜுனன் கேட்கிறான் :
“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின்
ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.”
“கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,”
பகவான் கூறுகிறான் :
“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில்
ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்.”
இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :
“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல
திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால்
வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”
- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி
பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.
சகல காரியங்களுக்கும் – இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும்
தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும்,
புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.
மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.
பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.
கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.
அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.
எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.
இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.
உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.
என்ன இந்த மனது?
காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
“இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்.” என்றிருக்க
மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.
எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.
கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?
“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Nov 19, 2009 4:10 pm

வணக்கம்
ந்ல்ல பதிவினைத் தந்த சகோதரிக்கு நன்றி. நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலை எனது பேராசிரியர் கூறியதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாரதப் போர் முடிவடைந்து விட்டது. தர்ம புத்திரனின் வேள்வியும் முற்றுப் பெற்று விட்டது. துவராபதியில் கண்ணன் ஒரு சோலையில் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கிறான். கண்ணனுடைய உயிர்த்தோழர் உத்தவர் வருகிறார். அவர் ஒரு பிறவிக் குருடர்.

அவருக்கும் கண்ணனுக்கும் நடந்த உரையாடல்

உத்தவர்: கண்ணா! எவ்வளவு துயர் மிக்க சம்பவம் நடந்து விட்டது! துரோணர்,பீஷ்மர்,கர்ணன்,அபிமன்யு,கடோத்கஜன் போன்ற மாவீரர்கள் மாண்டுவிட்டனரே. இதைத் தடுத்து நிறுத்தி இருக்கக் கூடாதா கண்ணா ?

கண்ணன்: என்னால் முடியவில்லையே உத்தவா? நான் என்ன செய்வது?

உத்தவர்: என்ன? உன்னால் முடியவில்லையா?

கண்ணன்: ஆம். என்னால் முடியாமல் போய் விட்டது.

உத்தவர்: கண்ணா! விளக்கமாகச் சொல்வாயா?

கண்ணன்: உத்தவா! கவனமாகக்கேள்! நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் இது பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த போர் என்று. அது உண்மையன்று. இது எனக்கும் சகுனிக்கும் நடந்த
போர்.

எல்லாம் சூதாட்டத்திலே தானே ஆரம்பமாயிற்று? துரியோதனன் தனக்குப் பதிலாகத் தன் மாமன் சகுனி ஆடுவான் என்று சொன்ன பொழுது தருமன் என்ன செய்திருக்க வேண்டும். தனக்குப் பதிலாகக் கண்ணன் ஆடுவான் என்று சொல்லி இருக்க வேண்டாமா? செய்ய வில்லையே? கண்ணா காப்பாற்று என்றாவது கேட்டிருக்கலாமல்லவா? திரெளபதிக்கு உதவவில்லையா? அக்ஞாத வாசத்தின் போது வந்த துர்வாசர் கோபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்ற எச்சிற் சோற்றினை நான் உண்ண வில்லையா? அவை போகட்டும். தம்பிகளை வைத்து ஆடினான். தாரத்தை வைத்து ஆடினான். நாட்டை வைத்து ஆடினான், அப்பொழுது கூட என் நினைவு வரவில்லையே. கண்ணனை வைத்து ஆடுகிறேன் என்று ஒரு சொல் சொல்லி இருந்தாலும் கூட அந்தச் சதுரங்கக் காயகளுக்குள் புகுந்து காப்பாற்றி இருப்பேனே. செய்ய வில்லையே. இப்பொழ்து கூறு உத்தவா! என் மேலென்ன தவறு?

இது என்னுடைய பேராசிரியர் கூறியது. ஆதார பூர்வம் உள்ளதோ இல்லையோ தெரியாது. ஆனால் நல்லதொரு உண்மை உள்ளே புதைந்து இருக்கிறது அதனால் பதிவு செய்தேன்.
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 4:53 pm

அபி நல்ல தகவல்... நந்திதா அக்கா நல்ல விளக்கம்.... [You must be registered and logged in to see this image.]

நன்றி அபி, அக்கா.... [You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 19, 2009 4:57 pm

மிகவும் உண்மையான கருத்து உண்மையில் எந்த ஒரு செயலையும் செய்யும் பொழுது ஒரு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் நன்றி அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக