புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டது. இப்போதே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது.
வியர்க்குரு
கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கை யிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை நாளங்கள் பாதிக்கப் பட்டு வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இருவேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர், காலமைன் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம்.
................
ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டது. இப்போதே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது.
வியர்க்குரு
கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கை யிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை நாளங்கள் பாதிக்கப் பட்டு வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இருவேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர், காலமைன் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம்.
................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெப்ப மயக்கத்துக்கு முதலுதவி
வெப்பமயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரைக் குளிர்ச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள்.
அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் (Intra Venous Fluids) செலுத்த வேண்டியதும் முக்கியம். ஆகையால் உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.
.....................
வெப்பமயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரைக் குளிர்ச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள்.
அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் (Intra Venous Fluids) செலுத்த வேண்டியதும் முக்கியம். ஆகையால் உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.
.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மணல்வாரி அம்மை
கோடைகால வெப்ப நோய்கள் பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கும். மணல்வாரி அம்மை அவற்றில் குறிப்பிடத்தக்கது. மீசில்ஸ் எனும் வைரஸ் கிருமிகளால் இது வருகிறது. இந்தக் கிருமிகள் கோடை காலத்தில் அதிக வீரியத்துடன் செயலாற்றும். முதலில் காய்ச்சல், வறட்டு இருமலில் தொடங்கும்.மூக்கில் நீர் வடியும். தொடர்ந்து குழந்தையின் முகமும் கண்களும் சிவந்துவிடும். முகம், மார்பு, வயிறு, முதுகு, தொடை ஆகிய பகுதிகளில் மணலை அள்ளித் தெளித்ததுபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன தடிப்புகள் தோன்றும்.
இவற்றின் மீது காலமைன் லோஷனை தடவி வர, 10 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இந்தக் குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, வெல்லத்தில் தயாரித்த ஜவ்வரிசிக் கஞ்சி, பால், மோர், தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் உள்ளிட்ட நீராகாரங்களை நிறைய தர வேண்டும். வீட்டைச் சுத்தமாகப் பராமரித்துக் குழந்தைக்கு நிமோனியா எனும் நுரையீரல் தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
..........................
கோடைகால வெப்ப நோய்கள் பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கும். மணல்வாரி அம்மை அவற்றில் குறிப்பிடத்தக்கது. மீசில்ஸ் எனும் வைரஸ் கிருமிகளால் இது வருகிறது. இந்தக் கிருமிகள் கோடை காலத்தில் அதிக வீரியத்துடன் செயலாற்றும். முதலில் காய்ச்சல், வறட்டு இருமலில் தொடங்கும்.மூக்கில் நீர் வடியும். தொடர்ந்து குழந்தையின் முகமும் கண்களும் சிவந்துவிடும். முகம், மார்பு, வயிறு, முதுகு, தொடை ஆகிய பகுதிகளில் மணலை அள்ளித் தெளித்ததுபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன தடிப்புகள் தோன்றும்.
இவற்றின் மீது காலமைன் லோஷனை தடவி வர, 10 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இந்தக் குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, வெல்லத்தில் தயாரித்த ஜவ்வரிசிக் கஞ்சி, பால், மோர், தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் உள்ளிட்ட நீராகாரங்களை நிறைய தர வேண்டும். வீட்டைச் சுத்தமாகப் பராமரித்துக் குழந்தைக்கு நிமோனியா எனும் நுரையீரல் தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
..........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சின்னம்மை
இது வேரிசெல்லா ஜாஸ்டர் (Varicella zoster) எனும் வைரஸ் கிருமியால் வருகிறது. கோடையில் இந்தக் கிருமி அதிக ஆற்றலுடன் செயல்படுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக் கொள்ளும். முதலில் கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் ஏற்படும்.
உடல் முழுவதும் அரிக்கும், அதன் பிறகு நீர் கோர்த்த கொப்புளங்கள் தோன்றும். இது குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரையும் தாக்கும். நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம். இதன் வீரியத்தைக் குறைக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன.
வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்துவிட்டால், மற்றவர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. இந்த நோயுள்ளவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் தர வேண்டும்.
..............
இது வேரிசெல்லா ஜாஸ்டர் (Varicella zoster) எனும் வைரஸ் கிருமியால் வருகிறது. கோடையில் இந்தக் கிருமி அதிக ஆற்றலுடன் செயல்படுகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக் கொள்ளும். முதலில் கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் ஏற்படும்.
உடல் முழுவதும் அரிக்கும், அதன் பிறகு நீர் கோர்த்த கொப்புளங்கள் தோன்றும். இது குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரையும் தாக்கும். நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம். இதன் வீரியத்தைக் குறைக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன.
வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்துவிட்டால், மற்றவர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. இந்த நோயுள்ளவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் தர வேண்டும்.
..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வயிற்றுப்போக்கும் சீதபேதியும்
கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் விரைவில் வளரும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்குக் கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.
ஆகையால் கோடை காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விடவும். தண்ணீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையிலேயே எலெக்ட்ரால் போன்ற பவுடர்களை தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.
..............
கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் விரைவில் வளரும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்குக் கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.
ஆகையால் கோடை காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விடவும். தண்ணீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையிலேயே எலெக்ட்ரால் போன்ற பவுடர்களை தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.
..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோடையை வெல்வது எப்படி?
3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் மற்றும் வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதைவிட இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்ஸி ஆகிய இயற்கைப் பானங்களைக் குடிக்கவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
தர்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள்.
கோடையில் வெளியில் செல்லும்போது குடையோடுதான் செல்ல வேண்டும்.
குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். கண்களுக்கு சூரியக் கண்ணாடியை (Sun glass) அணியலாம் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங் கள்.
இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், வெங்காயப் பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக் கீரை, பீட்ரூட், கேரட், முள்ளங்கி, பாகல், தக்காளி ஆகியவை சிறந்த கோடை உணவுகள். இவற்றை அதிகப்படுத்துங்கள்.
நன்றி : தினகரன்
3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் மற்றும் வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதைவிட இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்ஸி ஆகிய இயற்கைப் பானங்களைக் குடிக்கவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
தர்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள்.
கோடையில் வெளியில் செல்லும்போது குடையோடுதான் செல்ல வேண்டும்.
குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். கண்களுக்கு சூரியக் கண்ணாடியை (Sun glass) அணியலாம் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங் கள்.
இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், வெங்காயப் பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக் கீரை, பீட்ரூட், கேரட், முள்ளங்கி, பாகல், தக்காளி ஆகியவை சிறந்த கோடை உணவுகள். இவற்றை அதிகப்படுத்துங்கள்.
நன்றி : தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199991krishnaamma wrote:நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது முக்கிய காரணம். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப் பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும்.
நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னை சரியாகும். அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்றோ, சிறுநீரகக்கல்லோ இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.
......................
இதுக்கு பெஸ்ட் வழி ஒன்று இருக்கு, நாங்கள் செய்வது .......ஒரு மிளகு அளவு சுண்ணாம்பை ( வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு ) எடுத்து தண்ணிரில் கரைத்து குடித்து விடவேண்டும்............உடனே சரியாகிவிடும்.....பயமாய் இருந்தால், அல்லது குழந்தைகளுக்கு இப்படி வந்தால், கால் கட்டைவிரலில் சுண்ணாம்பை பூசி விடணும் .......கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோடை நோய்களிலிருந்து தப்பிக்க....
வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, எண்ணெய்ப் பசையான உடம்பு என்றால், பருக்கள் எளிதாக தோன்றும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது; அப்படிச் செய்தால், பருக்கள் அதிகமாகும்.
* நாம் பயன்படுத்தும் படுக்கை, தூய்மையான காட்டன் தயாரிப்பாக இருக்க வேண்டும். உடலுக்கு சூடு ஏற்படுத்தக்கூடிய பொருட்களாலான படுக்கையில் தூங்குவதை தவிருங்கள்.
* கோடையில், கண்சோர்வு மற்றும் கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை அலசுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.
* வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழந்து, சருமம் வறட்சி அடையும். இதனால், வியர்க்குரு, சிறு சிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னையை தவிர்க்க, சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்லலாம்.
* வெயிலில் வெளியே செல்லும் போது, கையில் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக் கொள்வது அவசியம். இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேனை, தண்ணீரில் கலந்து வைத்தும் குடிக்கலாம்.
* கோடை காலத்தில், தலைசுற்றல், வாந்தி மற்றும் உடல் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே உஷாராகி விடுங்கள். இவையெல்லாம், அதீத வெயில் காரணமாக, உங்கள் உடல், அபாய எல்லையை நோக்கி நகர்கிறது என்பதற்கான அறிகுறி. இதைக் தடுக்க, நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
* பிறந்த குழந்தைகளுக்கு உடம்பு அதிகம் சூடாகி விடும். உடல் உஷ்ணத்தை குறைக்க, துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, உடம்பை துடைத்து, காற்றோட்டத்தில் படுக்க வைக்கலாம். சூடு மிகவும் அதிகமானால், 'பிட்ஸ்' வரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நேர்ந்தால், உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள், வெளியில் சென்றால், கையில் குடை, தொப்பி, தண்ணீர் பாட்டில் மற்றும் உப்பு கலந்த மோர் எடுத்துச் செல்ல வேண்டும். இளநீர் மற்றும் பிரஷ் ஜூஸ் குடிக்கலாம்.
* தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், சிறுநீர் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
* தலைக்கு குளித்தவுடன் நன்றாக துவட்ட வேண்டும்.
* உள் பாவாடை, ஜட்டி மற்றும் எலாஸ்டிக் வைத்த பிரா இவற்றை இறுக்கமாக அணிவதால், அந்த இடத்தில் வியர்வை உறிஞ்சப்படாமல், 'பங்கஸ் மற்றும் இன்பெக் ஷன்' ஏற்படும். அதனால், தரமான பருத்தியாலான உள்ளாடைகளை அணியுங்கள். சாதாரண சோப்பு போட்டே குளிக்கலாம். தினமும், இரு வேளை குளித்தாலே, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.
* கோடைக் காலத்தில், வயதான சிலருக்கு பசி, ருசி, தாக உணர்ச்சி குறைந்து விடுவதால், தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவர். இது, சிறுநீர் பிரச்னை, நீர் இழப்பு என, அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லாமல், காலை முதல் இரவு வரை, இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
* வயதானவர்கள் சிலர், பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மனக்குழப்பத்திற்கு ஆளாகி, பேச்சு எங்கோ திசை திரும்பிவிடும். தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், உப்பு கலந்த மோர் இரண்டு டம்ளர் கொடுத்தாலே, சரியாகி விடுவர்.
* கையில் எப்போதும் ஒரு எலுமிச்சை பழம் வைத்திருங்கள். தர்பூசணி, ஆரஞ்சு ஜூஸ், கிர்ணி மற்றும் இளநீர் தினமும் எடுத்துக் கொள்வது அவசியம்.
* காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வெளியில் போவதை தவிர்ப்பது நல்லது.
இவற்றை பின்பற்றினால் வெயில் காலமும் சுகமே!
வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, எண்ணெய்ப் பசையான உடம்பு என்றால், பருக்கள் எளிதாக தோன்றும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது; அப்படிச் செய்தால், பருக்கள் அதிகமாகும்.
* நாம் பயன்படுத்தும் படுக்கை, தூய்மையான காட்டன் தயாரிப்பாக இருக்க வேண்டும். உடலுக்கு சூடு ஏற்படுத்தக்கூடிய பொருட்களாலான படுக்கையில் தூங்குவதை தவிருங்கள்.
* கோடையில், கண்சோர்வு மற்றும் கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை அலசுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.
* வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழந்து, சருமம் வறட்சி அடையும். இதனால், வியர்க்குரு, சிறு சிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னையை தவிர்க்க, சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்லலாம்.
* வெயிலில் வெளியே செல்லும் போது, கையில் ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக் கொள்வது அவசியம். இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேனை, தண்ணீரில் கலந்து வைத்தும் குடிக்கலாம்.
* கோடை காலத்தில், தலைசுற்றல், வாந்தி மற்றும் உடல் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே உஷாராகி விடுங்கள். இவையெல்லாம், அதீத வெயில் காரணமாக, உங்கள் உடல், அபாய எல்லையை நோக்கி நகர்கிறது என்பதற்கான அறிகுறி. இதைக் தடுக்க, நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
* பிறந்த குழந்தைகளுக்கு உடம்பு அதிகம் சூடாகி விடும். உடல் உஷ்ணத்தை குறைக்க, துணியை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, உடம்பை துடைத்து, காற்றோட்டத்தில் படுக்க வைக்கலாம். சூடு மிகவும் அதிகமானால், 'பிட்ஸ்' வரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நேர்ந்தால், உடனே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள், வெளியில் சென்றால், கையில் குடை, தொப்பி, தண்ணீர் பாட்டில் மற்றும் உப்பு கலந்த மோர் எடுத்துச் செல்ல வேண்டும். இளநீர் மற்றும் பிரஷ் ஜூஸ் குடிக்கலாம்.
* தினமும், மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். இதனால், சிறுநீர் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
* தலைக்கு குளித்தவுடன் நன்றாக துவட்ட வேண்டும்.
* உள் பாவாடை, ஜட்டி மற்றும் எலாஸ்டிக் வைத்த பிரா இவற்றை இறுக்கமாக அணிவதால், அந்த இடத்தில் வியர்வை உறிஞ்சப்படாமல், 'பங்கஸ் மற்றும் இன்பெக் ஷன்' ஏற்படும். அதனால், தரமான பருத்தியாலான உள்ளாடைகளை அணியுங்கள். சாதாரண சோப்பு போட்டே குளிக்கலாம். தினமும், இரு வேளை குளித்தாலே, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.
* கோடைக் காலத்தில், வயதான சிலருக்கு பசி, ருசி, தாக உணர்ச்சி குறைந்து விடுவதால், தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவர். இது, சிறுநீர் பிரச்னை, நீர் இழப்பு என, அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லாமல், காலை முதல் இரவு வரை, இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
* வயதானவர்கள் சிலர், பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மனக்குழப்பத்திற்கு ஆளாகி, பேச்சு எங்கோ திசை திரும்பிவிடும். தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், உப்பு கலந்த மோர் இரண்டு டம்ளர் கொடுத்தாலே, சரியாகி விடுவர்.
* கையில் எப்போதும் ஒரு எலுமிச்சை பழம் வைத்திருங்கள். தர்பூசணி, ஆரஞ்சு ஜூஸ், கிர்ணி மற்றும் இளநீர் தினமும் எடுத்துக் கொள்வது அவசியம்.
* காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வெளியில் போவதை தவிர்ப்பது நல்லது.
இவற்றை பின்பற்றினால் வெயில் காலமும் சுகமே!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|