புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
2 Posts - 18%
heezulia
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
372 Posts - 49%
heezulia
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
25 Posts - 3%
prajai
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_m10காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 22, 2016 11:27 am

காதல் மன்னன்’ என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார். ‘மனம்போல மாங்கல்யம்’, ‘கல்யாணப்பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்திபன் கனவு’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கற்பகம்’, ‘புன்னகை’ போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகப் போற்றப்பட்டது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த ஜெமினி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 17, 1920

பிறப்பிடம்: புதுக்கோட்டை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: தமிழ் திரைப்பட நடிகர்

இறப்பு: மார்ச் 22, 2005

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

ஜெமினி கணேசன் அவர்கள், 1922 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “புதுக்கோட்டை” என்ற இடத்தில் ‘ராமசாமி’, என்பவருக்கும், ‘கங்கம்மாவிற்க்கும்’ மகனாக ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

சிறுவயதில் தன்னுடைய தாத்தா நாராயண சாமி ஐயர் வீட்டில் வளர்ந்த ஜெமினி கணேசன் அவர்கள், அதன் பிறகு புதுக்கோட்டையிலுள்ள குலமது பாலையா பிரைமரி ஸ்கூல் மற்றும் சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியிலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட சிறந்த மாணவனாக வளர்ந்தார்.

திரைத்துறையில் ஜெமினி கணேசனின் பயணம்

தன்னுடைய கல்லூரிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த ஜெமினி கணேசன் அவர்கள், ஆரம்ப காலத்தில் தான் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பின்னர், ஜெமினி பட நிறுவனத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்த அவர், 1947 ஆம் ஆண்டு, தான் பணிபுரியும் நிறுவனமான ஜெமினி தயாரிப்பில் ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம் தாங்கி நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952 ஆம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். இத்திரைப்படம், பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் கூட, விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர் அவர்கள், பிற்காலத்தில் வில்லன் வேடத்துக்கு மாறினார், வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் அவர்கள் கதாநாயகனாக மாறி, ‘காதல் மன்னன்’ எனப் பெயர்பெற்றார்.

வெற்றிப் பயணம்

தொடக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த ஜெமினி கணேசன் அவர்கள், அதற்கு அடுத்த ஆண்டே ‘பெண்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார். 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மனம்போல மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தில், அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைபடத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த, பின்னாளில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்திய ஜெமினி கணேசன் அவர்கள், இயக்குனர்களின் நாயகனாகவும், திரைக்கதாநாயகிகளின் நாயகனாகவும், சினிமா ரசிகர்களின் நாயகனாகவும் விளங்கி, தமிழ் திரைப்படத்துறையில் ‘காதல் மன்னன்’ என அனைவராலும் அழைக்கப்பட்டார். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றி, தனக்கென தனி பாணியில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ‘கற்பகம்’, ‘சித்தி’, ‘பணமா?, பாசமா?’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘கல்யாணப் பரிசு’, ‘பூவா தலையா’, ‘இரு கோடுகள்’, ‘வெள்ளி விழா’, ‘புன்னகை’, ‘கண்ணா நலமா’, ‘நான் அவனில்லை’ போன்ற படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமல்லாமல், அவர் ஒரு முன்னணி கதாநாயகனாக இருந்தபொழுதும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம். ராஜன் போன்ற பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை. 1947 ஆம் ஆண்டு தன்னுடைய திரைவாழ்க்கையினைத் தொடங்கி, 1953-க்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக முத்திரைப்பதித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜெமினிகணேசன் அவர்கள், 1970 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘லலிதா’ என்ற திரைப்படமே அவர் கதாநாயகனாக நடித்த கடைசி படமாக அமைந்தது. அதன் பிறகு, தன்னுடைய இறுதிக்காலம் வரை கமல்ஹாசன், சிரஞ்சீவி, சத்தியராஜ், விக்ரம், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

ஜெமினி கணேசன் நடித்த சிறந்த படங்கள்

‘மளாணனே மங்கையின் பாக்கியம்’, ‘மிஸ் மாலினி’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘மாமன் மகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கல்யாணப்பரிசு’, ‘சுமைதாங்கி’, ‘பாசமலர்’, ‘தேன் நிலவு’, ‘பாதகாணிக்கை’, ‘கற்பகம்’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘இரு கோடுகள்’, ‘புன்னகை’, ‘தாமரை நெஞ்சம்’, ‘நான் அவனில்லை’, ‘அவ்வை சண்முகி’, ‘பத்தினி தெய்வம்’, ‘வாழவைத்த தெய்வம்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘காத்திருந்த கண்கள்’, ‘ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘வீர அபிமன்யு’, ‘சரஸ்வதி சபதம்’, ‘பணமா? பாசமா?’, ‘பூவா? தலையா?’, ‘காவியத் தலைவன்’, ‘பொன்மனச் செல்வன்’, ‘மேட்டுக்குடி’ என இன்னும் பல திரைப்படங்கள் ஜெமினி கணேசனின் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்றவைகள் ஆகும்.

இல்லற வாழ்க்கை

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய இருபது வயதில் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவள்ளியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர்.

விருதுகளும், மரியாதைகளும்

‘கலைமாமணி விருது’
1970 – ‘காவியத் தலைவி’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’.
1971 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
எம்.ஜி.ஆர் தங்கப்பதக்கம்.
1974 – ‘நான் அவனில்லை’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்பேர் விருது’.
1993 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘சவுத் ஃபிலிம்பேர் விருது’.
‘ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது’.
இறப்பு

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன் அவர்கள், இறுதி காலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.

1947 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையினைத் தொடங்கி. தான் இறக்கும் வரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்து. தமிழ் சினிமாவை ஆட்சிசெய்தார் என்று சொன்னால் யாராலும் மறுக்க இயலாது. தனக்குக் கிடைத்த அத்தனைக் கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று அனைவராலும் ‘காதல் மன்னன்’ எனப் புகழப்பட்டவர்.

நன்றி இசை தமிழ்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 11:41 am

முதல் திருமணத்தோடு நின்றிருந்தால் , நம் மதிப்பில் இன்னும் உயர்ந்திருப்பார் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 12:56 pm

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய இருபது வயதில் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவல்லியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமூண்டிசுவரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர்.

இதெல்லாம் போறாமல் தன்னுடைய கடைசி காலத்தில் யாரோ பெங்களூர் பெண்ண ஓருத்தி, (Julianna )அவளை வேற கல்யாணம் பண்ணிக்கொண்டாரே புன்னகை.....நிஜமாகவே அவர் காதல் மன்னன் தான் ! .ஆமாம் புஷ்பவல்லி, ஹிந்தி நடியையா? ........ கூடாது கூடாது கூடாது தெலுங்கு நடிகை அவங்க புன்னகை.இவங்க பெண் ரேகா தான் ஹிந்தி நடிகை !

காதல் மன்னர் ஜெமினி கணேசன் நினைவு தினம் இன்று VZ6Ty2kNTZS4RhbCEnb0+rekha-jan30-7



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 5:34 pm

கடைசியில் சாவித்திரியின் முடிவு சோகமாகத்தானே முடிந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2016 10:21 pm

M.Jagadeesan wrote:கடைசியில் சாவித்திரியின் முடிவு சோகமாகத்தானே முடிந்தது .
மேற்கோள் செய்த பதிவு: 1198770

சிறந்த குண நட்சத்திர நடிகை.
முடிவு சோகமானதற்கு காரணம் அவரே .
குடியில் இருந்து விடுபட பலமுறை ஜெமினி வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை . 
சந்திரபாபுவும் அதற்கு ஒரு காரணம் என்று கூறுவர்  .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக