உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது இலங்கைப் பயணம் .
+8
ஜாஹீதாபானு
சசி
பாலாஜி
ChitraGanesan
T.N.Balasubramanian
krishnaamma
krissrini
M.Jagadeesan
12 posters
Page 1 of 31 • 1, 2, 3 ... 16 ... 31 

எனது இலங்கைப் பயணம் .
எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .
என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்
பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக , வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .
23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .
கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .




]" />
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .
என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்
பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக , வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .
23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .
கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .




M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: எனது இலங்கைப் பயணம் .
கட்டுரை அருமை
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105
Re: எனது இலங்கைப் பயணம் .
வாவ் ! நேத்துதான் கேட்டேன், இன்னைக்கு ஆரம்பித்து விட்டீர்கள்............மிக்க நன்றி ஐயா ......இதோ படிக்கிறேன் !...அருமை அருமை அருமை ஐயா !................போட்டோக்களும் மிக அருமை !...............
அதில் இருப்பது தான் நீங்களா ஐயா?......மாமி, மகள், மற்றும் சுட்டிப் பேரன் எல்லோருமே அழகாய் இருக்கீங்க !..............
அனைவருக்கும் சுற்றிப் போட சொல்லுங்கோ ஐயா
.
.
.
ஐயா, ஒரு வேண்டுகோள், போடோக்களை ஒவ்வொன்றாக போடுங்கள், நெட் slow வாக இருப்பவர்களுக்கு down load ஆக நேரம் எடுக்கும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அதில் இருப்பது தான் நீங்களா ஐயா?......மாமி, மகள், மற்றும் சுட்டிப் பேரன் எல்லோருமே அழகாய் இருக்கீங்க !..............






அனைவருக்கும் சுற்றிப் போட சொல்லுங்கோ ஐயா

.
.
.
ஐயா, ஒரு வேண்டுகோள், போடோக்களை ஒவ்வொன்றாக போடுங்கள், நெட் slow வாக இருப்பவர்களுக்கு down load ஆக நேரம் எடுக்கும்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 11:24 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: எனது இலங்கைப் பயணம் .
!!
வாழ்த்துகள் Jagadeesan .
எங்கள் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பயணக் கட்டுரை ஆரம்பித்ததற்கு .
படத்தில் மகள் . பேரன், மனைவி மற்றும் நீங்கள் சரியா .
உங்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும் . அதிர வைத்த
நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளவும் .
ரமணியன்

வாழ்த்துகள் Jagadeesan .
எங்கள் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை பயணக் கட்டுரை ஆரம்பித்ததற்கு .
படத்தில் மகள் . பேரன், மனைவி மற்றும் நீங்கள் சரியா .
உங்களுக்கு ஏற்பட்ட இன்ப அதிர்வுகளையும் பகிர்ந்து கொள்ளவும் . அதிர வைத்த
நிகழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளவும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: எனது இலங்கைப் பயணம் .
நன்றி கிருஷ்ணம்மா !
படத்தில் இருப்பது நான் , என் துணைவியார் ரேவதி , மகள் மகாலட்சுமி , பேரன் பிரணவ் ஆகியோர் .
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணியன் ஐயா !
அங்கு அதிரவைத்த நிகழ்வு என்று எதுவும் நடக்கவில்லை ! சிக்ரியா என்று ஒரு சிறிய குன்று . அதன்மீது ஏறும்போதுதான் மிகவும் சவாலாக இருந்தது . அதுபற்றி பின்னர் விளக்குகிறேன் .
சித்ரா கணேஷன் அவர்களுக்கு ,
நீங்கள் நினைப்பதுபோல் " இலங்கை " என்றாலே ஓடவேண்டிய அவசியமில்லை . ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்த அந்த நாடு , தற்போது யுத்தம் நடந்த சுவடே தெரியாமல் அங்கு அமைதி நிலவுகிறது . தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் . மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் .
கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .
Krissrini அவர்களின் பாராட்டுக்கும் நன்றி !
படத்தில் இருப்பது நான் , என் துணைவியார் ரேவதி , மகள் மகாலட்சுமி , பேரன் பிரணவ் ஆகியோர் .
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணியன் ஐயா !
அங்கு அதிரவைத்த நிகழ்வு என்று எதுவும் நடக்கவில்லை ! சிக்ரியா என்று ஒரு சிறிய குன்று . அதன்மீது ஏறும்போதுதான் மிகவும் சவாலாக இருந்தது . அதுபற்றி பின்னர் விளக்குகிறேன் .
சித்ரா கணேஷன் அவர்களுக்கு ,
நீங்கள் நினைப்பதுபோல் " இலங்கை " என்றாலே ஓடவேண்டிய அவசியமில்லை . ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்த அந்த நாடு , தற்போது யுத்தம் நடந்த சுவடே தெரியாமல் அங்கு அமைதி நிலவுகிறது . தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் . மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் .
கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .
Krissrini அவர்களின் பாராட்டுக்கும் நன்றி !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: எனது இலங்கைப் பயணம் .
//நீங்கள் நினைப்பதுபோல் " இலங்கை " என்றாலே ஓடவேண்டிய அவசியமில்லை . ஒரு காலத்தில் யுத்த பூமியாக இருந்த அந்த நாடு , தற்போது யுத்தம் நடந்த சுவடே தெரியாமல் அங்கு அமைதி நிலவுகிறது . தமிழர்களும் ,சிங்களவர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள் . மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் .
கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .//
எனக்கு கூட நீங்க இலங்கை போனேன் என்று சொன்னபோது மனதில் கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது........நீங்கள் சொல்வதை பார்த்ததும் இப்போ பயம் 'போயே போச்'

கருணாமூர்த்தி புத்த பகவானின் காலடி பட்ட மண்ணிலே , யுத்தம் நடந்தது வேதனைக்குரிய விஷயம்தான் .//
எனக்கு கூட நீங்க இலங்கை போனேன் என்று சொன்னபோது மனதில் கொஞ்சம் பயமாய்த்தான் இருந்தது........நீங்கள் சொல்வதை பார்த்ததும் இப்போ பயம் 'போயே போச்'



krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: எனது இலங்கைப் பயணம் .
ஐயா , இந்த கட்டுரையை சுற்றுலா பகுதிக்கு மாற்றுகிறேன் 

Last edited by krishnaamma on Tue Mar 22, 2016 1:17 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: எனது இலங்கைப் பயணம் .
பகிர்வுக்கு நன்றி ..
மனதில் உள்ள பயம் விலகியது . நிச்சயம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் .
தொடர்ந்து படிக்க மிக்க ஆவலாக உள்ளேன் ...
மனதில் உள்ள பயம் விலகியது . நிச்சயம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் .
தொடர்ந்து படிக்க மிக்க ஆவலாக உள்ளேன் ...
Re: எனது இலங்கைப் பயணம் .
அவசியம் போய் வாருங்கள் பாலாஜி !
பயம் என்பது தேவையில்லை ! " War begins in the minds of men " என்று சொல்வார்கள் . அதற்கு நாடு என்ன செய்யும் ? இயற்கை வளம் கொழிக்கும் நாடு . குறைந்தது ஒரு மாதம் தங்கியிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் .
தொலைதூர நாடுகளுக்கு நம்மால் போய்வர இயலாது; பொருளாதார நிலையும்இலங்கைக்குப் இடம் கொடுக்காது. ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கைக்குப் போய்வரலாமே !
ஒரு மணிநேரப் பயணம் ! போய்வர ஆளுக்கு ரூ 12500 / =
பயம் என்பது தேவையில்லை ! " War begins in the minds of men " என்று சொல்வார்கள் . அதற்கு நாடு என்ன செய்யும் ? இயற்கை வளம் கொழிக்கும் நாடு . குறைந்தது ஒரு மாதம் தங்கியிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் .
தொலைதூர நாடுகளுக்கு நம்மால் போய்வர இயலாது; பொருளாதார நிலையும்இலங்கைக்குப் இடம் கொடுக்காது. ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கைக்குப் போய்வரலாமே !
ஒரு மணிநேரப் பயணம் ! போய்வர ஆளுக்கு ரூ 12500 / =
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: எனது இலங்கைப் பயணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1198735M.Jagadeesan wrote:அவசியம் போய் வாருங்கள் பாலாஜி !
பயம் என்பது தேவையில்லை ! " War begins in the minds of men " என்று சொல்வார்கள் . அதற்கு நாடு என்ன செய்யும் ? இயற்கை வளம் கொழிக்கும் நாடு . குறைந்தது ஒரு மாதம் தங்கியிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் .
தொலைதூர நாடுகளுக்கு நம்மால் போய்வர இயலாது; பொருளாதார நிலையும்இலங்கைக்குப் இடம் கொடுக்காது. ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கைக்குப் போய்வரலாமே !
ஒரு மணிநேரப் பயணம் ! போய்வர ஆளுக்கு ரூ 12500 / =
நீங்கள் சொல்லவதை பார்த்தல் எனக்கும் ஆசையாக இருக்கு ஐயா, பொன்னி இன் செல்வனில் வந்தியத்தேவன் , பொன்னி இன் செல்வரை பார்க்க போகும்போது இலங்கைக்குத் தானே பயணிப்பார்........சின்ன வயதில் அதைப் படித்தது முதற்கொண்டு இலங்கையைப் பார்க்க, யாழ்பாணம் பார்க்க ஆசை...
எங்கள் வீட்டுத் தென்னை மரம் ஒன்று மட்டும் மிகப் பெரிய காய்கள் காய்க்கும், அம்மா அதை யாழ்பாணம் காய்கள் என்று சொல்வார்கள்....தேங்காயை கைகளில் பிடித்துக்கொண்டு துருஉலகாய் இல் துருவ முடியாது கஷ்டப் படுவோம் அவ்வளவு பெரிசாக இருக்கும் தேங்காய் மூடி...
அந்த ஒருமரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கும்............அப்படி இருக்கும் போது, இதே போல நிறைய மரங்கள் காய்த்து இருப்பதைக் காண ஆசை....
மேலும் அவர்கள் ஒவ்வொரு மரமாய் இறங்கி காய் பறிக்க மாட்டர்களாமே, நிறைய மரங்கள் இருப்பதால் நேரத்ததை மிச்சப் படுத்த, மரத்தை வளைத்து வளைத்து அடுத்த மரத்துக்கு தாவு வாங்களாமே, கேவிப்பட்டிருக்கேன். அது நிஜமா ஐயா?...நீங்க அதை பார்த்தீங்களா? .............

விசா எப்படி ஐயா?....கிடைப்பது சுலபமா?....உங்களுக்கு உறவுக்காரர்கள் இருந்ததால் சுலபமானதா?.........கொஞ்சம் சொல்லுங்களேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: எனது இலங்கைப் பயணம் .
M.Jagadeesan wrote:அவசியம் போய் வாருங்கள் பாலாஜி !
பயம் என்பது தேவையில்லை ! " War begins in the minds of men " என்று சொல்வார்கள் . அதற்கு நாடு என்ன செய்யும் ? இயற்கை வளம் கொழிக்கும் நாடு . குறைந்தது ஒரு மாதம் தங்கியிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் .
தொலைதூர நாடுகளுக்கு நம்மால் போய்வர இயலாது; பொருளாதார நிலையும்இலங்கைக்குப் இடம் கொடுக்காது. ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கைக்குப் போய்வரலாமே !
ஒரு மணிநேரப் பயணம் ! போய்வர ஆளுக்கு ரூ 12500 / =
நான் இப்பொழுது உள்ள நாட்டில் இருந்து இந்தியா வர இலங்கையும் ஒரு மார்க்கம் .... எனவே விமான செலவு அதிகம் இருக்காது .
கதிர்காமம் செல்ல வேண்டும்
Re: எனது இலங்கைப் பயணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1198746பாலாஜி wrote:M.Jagadeesan wrote:அவசியம் போய் வாருங்கள் பாலாஜி !
பயம் என்பது தேவையில்லை ! " War begins in the minds of men " என்று சொல்வார்கள் . அதற்கு நாடு என்ன செய்யும் ? இயற்கை வளம் கொழிக்கும் நாடு . குறைந்தது ஒரு மாதம் தங்கியிருந்தால் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம் .
தொலைதூர நாடுகளுக்கு நம்மால் போய்வர இயலாது; பொருளாதார நிலையும்இலங்கைக்குப் இடம் கொடுக்காது. ஆனால் கூப்பிடு தூரத்தில் உள்ள இலங்கைக்குப் போய்வரலாமே !
ஒரு மணிநேரப் பயணம் ! போய்வர ஆளுக்கு ரூ 12500 / =
நான் இப்பொழுது உள்ள நாட்டில் இருந்து இந்தியா வர இலங்கையும் ஒரு மார்க்கம் .... எனவே விமான செலவு அதிகம் இருக்காது .
கதிர்காமம் செல்ல வேண்டும்
கொழும்புவிலிருந்து கதிர்காமம் சுமார் 260 கி .மீ . தூரத்தில் உள்ளது . பஸ் வசதியும் உள்ளது . வாடகைக் காரிலும் செல்லலாம் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: எனது இலங்கைப் பயணம் .
நன்றி ஐயா நல்ல பகிர்வு... தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்....
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: எனது இலங்கைப் பயணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1198766சசி wrote:நன்றி ஐயா நல்ல பகிர்வு... தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்....
தொடர்ந்து எழுதுகிறேன் .
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Page 1 of 31 • 1, 2, 3 ... 16 ... 31 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|