புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_m10 தூக்கி அடிச்சுருவேன் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கி அடிச்சுருவேன் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 9:11 am

கோயம்பேடு என்னும் ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் . எனவே திருமண புரோக்கர் பொன்னம்பலத்திடம் , தனக்கு  ஒரு நல்ல அழகான , வசதியானப் பெண்ணைப் பார்க்கும்படிச் சொன்னார் . பொன்னம்பலமும் சரியென்று சொன்னார் .

ஒரு நல்ல நாளில் புரோக்கர் பொன்னம்பலம் , மூன்று பெண் ஜாதகங்களுடன் கோயம்பேடு செல்வந்தரை அணுகினார் .

" வாங்க ! பொன்னம்பலம் ! என்ன ஜாதகம் கொண்டு வந்திருக்கீங்களா ? "

" ஐயா ! ஒன்றல்ல , மூணு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன் ! பொண்ணப் பாருங்க ; உங்களுக்குப் பிடிச்சிருந்தா அடுத்த முகூர்த்தத்துலேயே முடிச்சிடலாம் ! மே மாதம் 16 நல்ல முகூர்த்த நாள்.

" சரி ! நான் போட்ட கண்டிஷன் எல்லாம் சொல்லிட்டீங்களா ?"

" சொல்லிட்டேன் ஐயா ! "

" சரி ! முதல் ஜாதகத்தைக் காட்டுங்க ! "

" ஐயா ! இந்த ஜாதகம் உள்ளூர் ஜாதகம் ! ஊர் கோபாலபுரம் ; ரொம்ப செல்வாக்கு உள்ள குடும்பம் . ஒரு வேலையும் செய்யாம உக்காந்து தின்னாக் கூட , ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம் ;அவ்வளவு சொத்து சேத்து வச்சிருக்காங்க !

55 பவுன் நகை போடத் தயாராய் இருக்காங்க ; கொஞ்சம் அடிச்சிப் பேசுனா 60 பவுன் வரைக்கும் தேத்தலாம் . அப்புறம் மாப்பிள பேர்ல  5 பங்களா எழுதி வைக்கவும் ரெடின்னு  சொல்லிட்டாங்க ; ஆனா........

என்னய்யா ஆனான்னு இழுக்குறீங்க ?

அதாவது வீட்டோட மாப்பிளாய் வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க . நான் எவ்வளவோ கெஞ்சிப் பாத்தேன் . முடியாதுன்னு சொல்லிட்டாங்க ! வேணும்னா தீபாவளிக்கு 50 பவுன் நகை போடறதா சொல்றாங்க ! சம்மதமான்னு கேட்டு வரச் சொன்னாங்க !

அது கிடக்கட்டும் ; அடுத்த ஜாதகத்தைக் காட்டு.

ஐயா ! இது டெல்லி ஜாதகம் ! பொண்ணோட அப்பா ரொம்ப செல்வாக்கு உள்ளவர்; ரொம்பவும் பிஸி மேன். வீட்லயே தங்க மாட்டாரு ; உலகம் பூரா சுத்திகிட்டே இருப்பாரு ! 100 பவுனுக்கு மேல போடறதா சொல்லியிருக்காங்க ;கல்யாண செலவெல்லாம் அவங்களே ஏத்துக்குவாங்க ; மேலும் ரொக்கமா நீங்க எவ்வளவு கேட்டாலும் தருவாங்க ! இன்னும் நீங்க கேட்டதெல்லாம் செய்யத் தயாரா இருக்காங்க !ஆனா...

என்னய்யா ஆனா....

இவிங்களும் உங்களை வீட்டோட மாப்பிளையா வச்சிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க ..

சரி ! மூணாவது ஜாதகத்தைக் காட்டு !

ஐயா ! இதுவும் உள்ளூர் ஜாதகம்தான் ; நாலு குடும்பம் சேர்ந்த கூட்டுக் குடும்பம் ; பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பம் ; எப்ப அடிச்சிகிட்டு பிரிஞ்சி போவாங்கன்னு சொல்லமுடியாது ; நீங்க எவ்வளவு பவுன் நகை கேட்டாலும் போடுவாங்க ...

அதுசரி ! என்னை வீட்டோட மாப்பிள்ளையாய் ஏத்துக்குவாங்களா ?

ஏத்துக்குவாங்க ; ஆனா அந்த இடம் வேணாமுங்க ; ஏன்னா அவங்களுக்குள்ள குடுமிப்பிடி சண்டை எந்தநேரமும் நடக்கலாம் ;  உங்களுக்கு நிம்மதி இருக்காது ; அதனால முதல்ல சொன்ன ரெண்டு இடத்துல ஒன்னு பாருங்க !

சரி ! டெல்லி வீட்டுக்காரங்களை என்னை வந்து பாக்கச் சொல்லுங்க !

நாளைக்கே வரச் சொல்லவா ?

வரச் சொல்லுங்க !

( மறுநாள் டெல்லியிலிருந்து கரகோஷ் வடஜேகர் என்பவர் கோயம்பேடு சென்று மாப்பிள்ளையைப் பார்க்கிறார்; மாப்பிள்ளை பிடி  கொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டார்  )

இரண்டுநாள் கழித்து புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடு செல்கிறார் .

வாங்க புரோக்கர் !

என்ன ஐயா ! டெல்லிகாரங்க வந்தாங்களா ?

வந்தாங்க !

என்ன பேசுனிங்க ? அவிங்க என்ன சொன்னாங்க ?

கல்யாணத்தப் பத்திப் பேசல !

கல்யாணத்தைப் பத்தி பேசலையா ? பின்ன எதுக்கு வந்தாங்க ?

சும்மா மரியாதை நிமித்தமா சந்திச்சுப் பேசவந்தாங்க !

என்னய்யா சொல்றீங்க ! மரியாதை நிமித்தமா பேசவா இவ்வளவு செலவு பண்ணிக்கிட்டு டெல்லியிலிருந்து வந்தாங்க ? அவங்க என்ன லூசா ? ஒருவேளை நீங்க பேசுறது அவிங்களுக்குப் புரியலையா ?

என்னய்யா சொல்றே ? மரியாதையா  பேசு ; இல்லன்னா தூக்கி அடிச்சுருவேன் ; ஜாக்கிரதை !

ஐயா !  மன்னிச்சுடுங்க ; ஏதோ அவசரத்துல வார்த்தைய விட்டுட்டேன் !

மன்னிப்பா ! தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை அது !

சரிங்க ! மறுபடி நான் எப்ப வரட்டும் ?

நீ ஒன்னும் வரவேண்டாம் ; ரெண்டுநாள் கழிச்சு எனக்குப் போன் பண்ணு ; என் முடிவைச் சொல்றேன் !

சரிங்க ஐயா !

ரெண்டுநாள் கழித்துப் புரோக்கர் பொன்னம்பலம் கோயம்பேடுக்கு போன் செய்கிறார் .

ஐயா ! வணக்கமுங்க !

யாரு ? புரோக்கர் பொன்னம்பலமா ?

ஆமாங்கய்யா ! நான்தான் பேசறேன் !

சொல்லய்யா !

நேத்து கோபாலபுரம் போயிருந்தேன் . அவிங்க ரொம்ப நம்பிக்கையோட இருக்காங்க !

என்ன சொன்னாங்க !

பழம் கனிஞ்சி போச்சி ; நிச்சயம் அது பாலில் விழும்னு சொன்னாங்க !

அவங்க "பால் "ன்னு சொன்னாங்களா ?

ஆமாய்யா ! நீங்க பழம்னா அவிங்க பால்தானே ?

" த்தூ ! "

என்னய்யா காறித் துப்புறீங்க ?

அது பால் இல்லை ; ஆலகால விஷம் ! இந்தப் பழம் சாக்கடையில விழுந்தாலும் விழுமே தவிர , அந்த ஆலகால விஷத்தில் விழாது ! ஏய் பொன்னம்பலம் !

ஐயா ! சொல்லுங்க !

என் முடிவைச் சொல்றேன் ; எழுதி வச்சுக்க ! எனக்குக் கல்யாணமும் வேணாம் ;கருமாந்திரமும் வேணாம் !
ஒண்டிக்கட்டையா வாழ்நாள் பூரா இருக்குறதா தீர்மானம் பண்ணிட்டேன் ! தனியாவே இருக்கப் போறேன் !

ஐயா! என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டிங்களே ! என்று சொல்லி பொன்னம்பல புரோக்கர் கீழே சாய்கிறார் .







இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 9:24 am

 தூக்கி அடிச்சுருவேன் ! GmA2c4xGTAepd0jwOpMK+Tamil_News_large_1476786
-
கடைசியா, அந்த செல்வந்தர் இவர் பேச்சைக் கேட்டுதான்
முடிவெடுத்தாராம்...!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 1:47 pm

ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .

எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !

" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !

இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .

ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 13, 2016 2:41 pm

M.Jagadeesan wrote:ட்ராபிக் ராமசாமி சொல்லித்தான் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்தார் என்பது " குருவி உட்கார பனம்பழம்
விழுந்த " கதைதான் .

எந்த இடத்திலும் பேரம் படியவில்லை என்பதே உண்மை ! இல்லையென்றால் இந்த முடிவை மூன்று மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கலாமே !

" நான் தனியாகத்தான் நிற்கப் போகிறேன்; கூட்டணிக்காக யாரும் என்னை அணுகவேண்டாம் ! " என்று முன்பே சொல்லியிருந்தால் அவரது நேர்மையை பாராட்டியிருக்கலாம் !

இந்த விஷயத்தில் PMK தெளிவாகத் தன் முடிவை முன்பே சொல்லிவிட்டார்கள் .அவர்களிடம் எந்தக் குழப்பமும் இல்லை .

ஆனால் இவரோ தானும் குழம்பி , மற்றவர்களையும் குழப்பி தெளிவில்லாத அரசியலை நடத்தி வருகிறார் .
 தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834  தூக்கி அடிச்சுருவேன் ! 3838410834 , தங்கள் பின்னூட்டத்தை நானும் வழிமொழிகிறேன் ஐயா ...

தமிழக அரசியலில் கருணாநிதி , ஜெயலலிதா , ராமதாஸ் இவர்களை பிடிக்காத ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் ஓட்டு போட்ட மக்களால் வளர்ந்த கட்சி இந்த தேமுதிக , மற்றபடி இவர்களுக்கோ அல்லது இவர்களின் தலைமைக்கோ எந்த வித கொள்கைகளோ அல்லது தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறையோ கிடையாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 13, 2016 3:36 pm

அழகான கதை உருவில் தேமுதிக அரசியலை இல்லைஇல்லை விஜயகாந்தின் அரசியலை
புட்டு புட்டு வச்சு இருக்கீங்க , Jagadeesan . அருமை .
Traffic Ramasamy ஒரு செவத்துக் கோழி .
வேண்டாத விஷயத்திற்கு எல்லாம் PIL போடுபவர் .
இவர் உண்மையிலேயே ஜனசேவை செய்ய நினைத்தால் , சென்னையில் கண்ட மேனிக்கு மீட்டர் போடாமல்
ஓட்டும் ஆடோக்களுக்கு ஒரு தீர்வு காண சொல்லுங்கள்

ரமணியன்

பிகு ;நல்லத் தலைப்பு



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 4:05 pm

ராஜா, ரமணியன் ஆகியோர் பாராட்டுக்கு நன்றி ! ஐயாசாமிராம் அவர்களின் பின்னூட்டத்திற்கும் நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக