புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
107 Posts - 49%
heezulia
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
9 Posts - 4%
prajai
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
234 Posts - 52%
heezulia
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
18 Posts - 4%
prajai
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
5 Posts - 1%
Barushree
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_m10விதியை விதியால்தான் வெல்ல முடியும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியை விதியால்தான் வெல்ல முடியும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 10, 2016 5:10 pm

நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். பாதையில் கிடந்த கல்லில் காலிடறிக் காயம் ஏற்பட்டு விட்டது. இரத்தம் சிந்தியது.

உடனே நாம், ’எல்லாம் தலைவிதி. எனக்கு இப்படி நடக்க வேண்டும் என்று இறைவன் என் தலையில் எழுதிவைத்துவிட்டான்’ என்கிறோம்.

இதைவிடப் பெரிய மூடநம்பிக்கை வேறொன்றில்லை.

எவன் தலையிலும் இறைவன் எதையும் எழுதுவதில்லை.

அப்படியென்றால் விதி என்று ஒன்று இல்லையா?

இருக்கிறது. மேலே காட்டிய எடுத்துக் காட்டிலேயே விதி இருக்கிறது.

கல் கடினமானது; கால் மென்மையானது. கடின மானதின் மேல் மென்மையானது மோதினால் மென்மையானது சேதமடையும் என்பது விதி.

இது இயற்கை விதி (Law of Nature). இதைத்தான் இறைவன் எழுதி வைத்திருக்கிறான்.

இது பொதுவிதி. யாருக்கும் பொருந்தும். கல்லில் யார் கால் மோதினாலும் காயம் உண்டாகத்தான் செய்யும்.

பார்த்து நடந்தால் கல்லில் இடறாமல் சென்றிருக்கலாம்.

எனவே இடறுவதும் இடறாமல் இருப்பதும் நம் கையில் இருக்கிறது. நம் நெற்றியில் இல்லை.

எந்த ஒரு காரியம் நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

காரணமின்றிக் காரியமில்லை.

துவரம் பருப்பு விலையேறியிருக்கிறதென் றால், விளைச்சல் இல்லை அல்லது பதுக்கி விட்டார்கள் அல்லது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன என்பவை காரணங்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்விளைவு உண்டு.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிட்டதா? தவறான உணவை உண்டிருக்கிறோம் என்று பொருள்.

இவை எல்லாமே இயற்கை விதிகளே. இறைவன் சும்மா இஷ்டத்துக்கு எழுதுவதில்லை.

கலீஃபா உமர் காலத்தில் அரசுப் படை ஒரு சிற்றூரில் முகாமிட்டிருந்தது. அந்த ஊரில் கொள்ளை நோய் பரவிக் கொண்டிருந்தது.

படைத் தளபதி படையைப் பாதுகாப்பதற்கு நோயில்லா இடத்திற்குக் கொண்டு செல்ல கலீஃபாவிடம் அனுமதி கேட்டார். கலீஃபா அனுமதித்தார்.

அவையில் இருந்த ஒரு பெரியவர், ‘கலீஃபா! நீங்கள் இறைவன் விதிக்கு (கதர்) எதிராக நடக்கிறீர்கள்’ என்று குற்றம் சுமத்தினார்.

கலீஃபா உமர், ‘‘இல்லை பெரியவரே! நான் இறைவனுடைய விதியிலிருந்து தப்பி ஓட வில்லை. ஆனால் நான் வேறெங்கும் செல்ல வில்லை. இறைவனுடைய மற்றொரு விதியிடமே செல்கிறேன்” என்றார்.

அதாவது ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவுகிறதென்றால் அவ்வூரின் சுகாதார மற்ற சூழலே காரணம். சூழல் அசுத்தமாக இருந்தால் நோய்கள் உண்டாகும் என்பது விதி. சுத்தமான சூழல் இருந்தால் நோய் உண்டாகாது என்பதும் விதி.

ஆபத்தான சூழலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்வது நம் பொறுப்பு. அதாவது நமக்கு நடப்பதை விதியென்று நொந்து உட்காரக்கூடாது அந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெற முயற்சி செய்ய வேண்டும்.

நாமிருக்கும் இடத்தில் தீப்பற்றிக் கொண்டால், ‘சரி, இது நம் விதி’ என்று நினைத்து அங்கேயே நாம் இருப்போமா?

நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வெளியே ஓடுவோமல்லவா?

நோய் வந்துவிட்டால் விதியென்று சும்மா இருக்கிறோமா? மருத்துவரைத் தேடி ஓடுகிறோமல்லவா?

நோய் எப்படி விதியோ; அப்படியே மருந்து என்பதும் விதியே.

உங்களுக்குத் துன்பம் நேர்ந்தால் விதியே என்று நொந்து கொண்டு சும்மா இருக்காதீர்கள். அதிலிருந்து வெளியேறுவதற்கென்று ஒரு விதி இருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.

அதாவது விதியை விதியால்தான் வெல்ல முடியும்.

முற்பிறவியில் செய்த வினைகளே இப்பிறவியில் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்று சில மதங்கள் கூறுகின்றன.

இதன்படியும் நம் இன்ப துன்பங்களுக்கு நாம் செய்த வினைகளே காரணமன்றி இறைவனுடைய எழுத்தல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நாம் பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகளே நம் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். சுற்றுப்புறச் சூழலும் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறுகிறார்கள்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறந்த இருவரில் ஒருவர் நச்சுப் புகை கக்கும் ஆலைகள் இருக்கும் ஊரில் வசிக்கிறார். மற்றொருவர் சுவிட்ஸர்லாந்து போன்ற ஆரோக்கியமான சூழலில் வசிக்கிறார். இவர்கள் இருவருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது.

ஒரு விமானம் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிடுகின்ற னர். அத்தனை பேருடைய ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் அவை ஒரே மாதிரி இரா.

இங்கே விபத்துக்குக் காரணமான விதி அத்தனை பேருடைய தனி விதிகளையும் அழித்துவிடுகிறது.

பொறியியல் அறிஞர் ஒருவர் ஒரு கட்டிடம் கட்டுகிறார். இந்தக் கட்டிடம் நூறாண்டுக் காலம் இருக்கும் என்கிறார். அந்தக் கட்டிடம் கட்டப்பட்ட இடம், அதைக் கட்டுவதற்காகப் பயன் படுத்தப்பட்ட இரும்பு, சிமெண்ட், மணல் இவற்றின் தரம், கலவைச் சதவீதம் இவற்றையெல்லாம் கணக்கிட்டே அப்பொறியியல் அறிஞர் கட்டிடத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறார்.

இதன் பொருள் நூறாவது ஆண்டில் அந்தக் கட்டிடம் அப்படியே சட்டென்று உடைந்து விழுந்துவிடும் என்பதல்ல.

அதை நன்கு பராமரித்து வந்தால் அது நூறாண்டுக்கும் மேல் இருக்கும். சரியாகப் பராமரிக்காவிட்டால் நூறாண்டுக்குள்ளேயே சிதிலமாகிவிடும்.

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட அடுத்த நாளே ஒருவன் கட்டிடத்திற்கு அடியில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கட்டிடம் அந்தக் கணமே உடைந்து பொடிப் பொடியாய் சிதறிவிடும்.

நாம் அதைக் கட்டிய பொறியியல் அறிஞனிடம் போய், ‘‘இந்தக் கட்டிடத்தின் ஆயுள் நூறாண்டு என்றாயே, இப்போது என்ன சொல்கிறாய்?’’ என்று கேட்க முடியாது.

இங்கு வெடிகுண்டு என்ற சக்திவாய்ந்த விதி நூறாண்டு இருந்திருக்க வேண்டிய கட்டிடத்தைத் தகர்த்துவிட்டது. நம்முடைய ஆயுளின் நிலையும் இப்படித்தான்.

பாரம்பரிய உடல்வலிமை, பெற்றோர் உடல் வலிமை, பெற்றோர் புணர்ந்த நேரம், கருப்பை யில் இருந்தபோது தாய் உண்ட உணவு இவையெல்லாம் சேர்ந்து நம் உடலின் வலிமையையும் ஆயுளையும் நிர்ணயிக்கின்றனர். உடலை நன்கு பராமரித்தால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளை விட நீண்ட நாள் நாம் வாழலாம்.

புகைத்தல், குடித்தல் போன்ற தீய பழக்கங்களால் உடலைக் கெடுத்துக் கொண்டால் சீக்கிரம் போய்ச் சேர வேண்டியதுதான்.

தற்கொலை செய்துகொள்வது, விபத்தில் இறப்பது போன்றவை கட்டிடத்திற்கு வெடி குண்டு வைத்ததைப் போன்றதுதான்.

விதியென்றாலே கெட்டது, துன்பம் தருவது என்று பலர் நினைக்கின்றனர். இது தவறு.

நெருப்புக்குச் சுடுவதும் ஒளி தருவதும் விதி.

நெருப்பினால் பயனடைந்துகொள்வதும், பாதிப்பை அடைவதும் நம் பொறுப்பு.

குயிலின் பாடல், மயிலின் ஆடல், ஆண் பெண் கூடல், பெளர்ணமி நிலா, இளவேனிற்காலப் பூங்கா, அறுசுவை உணவு, இதமான தென்றல் இவையும் விதியின் விளைவுகளே. இவையெல்லாம் துன்பம் தருபவையா?

இறைவன் வகுத்த இயற்கை விதி நம் நன்மைக்கே அன்றி, தீமைக்கல்ல.

சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்கள். முடியாது.

நெருப்பு சுடும். அதை எவன் மதியாலும் வெல்ல முடியாது.

‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்’

என்பார் வள்ளுவர்.

மேலும், நெருப்பைச் சுடாமல் செய்ய வேண்டிய அவசியமென்ன?

சமைப்பது எப்படி? குளிர் காய்வது எப்படி? விளக்கேற்றுவது எப்படி?

விதியைப் பற்றிய தவறான கருத்துதான் நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம்.


நன்றி தமிழ் ஹிந்து.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Mar 10, 2016 9:07 pm

விதியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் , திருக்குறளில் " ஊழ் ' என்ற அதிகாரத்தைப் படிக்கவேண்டும் .

விதிக்கு பல பெயர்கள் உண்டு . அதில் ," இயற்கை " என்ற பெயரும் ஒன்று . பூமியின் இயல்பு மேலே எறிந்த கல்லை , கீழ்நோக்கி இழுப்பதாகும் . நீரின் இயல்பு மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாய்வதாகும் . மனிதன் தன் மதியால் பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராகச் செல்லும் விமானத்தைக் கண்டுபிடித்தான். நீரைப் பள்ளத்திலிருந்து மேட்டிற்குக் கொண்டுவர மோட்டார் பம்ப் கண்டறிந்தான் .

விதியை , மதியால் வெல்லமுடியும் என்பதற்கு இவை சான்றுகள் . வள்ளுவரே

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர். ( ஆள்வினையுடைமை - 620 )

என்று சொல்லவில்லையா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக