புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
jairam
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_m10ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹலோ!!!... உங்களுக்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்...'தொடர் பதிவு' !


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Feb 27, 2016 2:51 pm

First topic message reminder :

விரைவில் தொலைந்த மன அமைதி ...

இயந்திரங்கள் இதயமாகி விட்டதால் இதயம் இயந்திரமாகி விட்ட காலம் இது!!!.
எங்கும் விரைவு!!!...எதிலும் விரைவு!!!...விரைவு...விரைவு...விரைவு...
தண்ணீரைக் கூட சுவைத்து பொறுமையாக பருகினால் இதயக் கோளாறுகளை சரி செய்யலாம் என்கிறது நவீன மருத்துவ உலகம்.ஆனால் ஒரு தேனீரைக் கூட திருப்தியாக சுவைத்து அருந்த நேரமில்லை நம்மில் பலருக்கு...! சுவை அரும்புகள் கூட சோர்ந்து விட்டன...நம்முடைய விரைவில்...!
நகர வாழ்க்கைக் கடிகாரத்தில் நொடிமுள் கூட வேகமாகவே நகரும் என்றால் அது மிகையில்லை என்றே தோன்றுகிறது.ஏன் இந்த விரைவு? எப்படி வந்தது ? என்று நாம் சற்றே எண்ணிப் பார்ப்போம். காலம்தான் பதில் கூற வேண்டும். காலத்தை சற்று பின்னோக்கிப் புரட்டினாலும் கூட பதில் கிடைக்கக்கூடும்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவசாயமே பிரதானமாக இருந்தது. கிராமங்கள் கிராமங்களாக இருந்தன.நாட்கள் மெதுவாக நகர்ந்தன. மக்களின் வாழ்வியல் இயற்கையை ஒட்டி இயல்பாக இருந்தது.
மன அமைதிக்கு யாரும் மருந்து தேடவில்லை. வாழ்க்கை முறையே மன அமைதியை வாரி வழங்குவதாக இருந்தது. உதாரணமாக, அன்று  விறகு அடுப்பில் தான் சமைத்தார்கள். விறகு அடுப்பு எரிவதைப் பார்ப்பது கூட நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித அமைதியை ஏற்படுத்தி விடும். சமையலும் சுவையாக இருக்கும் ; ஆரோக்கியமும் கூட.
ஆனால் இன்றோ இயற்கையான தீயைத் தவிர மற்ற அனைத்திலும் சமையல் நடக்கிறது. அறிவியலின் கொடைகள் இன்று நேரத்தைக் குறைத்தாலும் நோய்களை அதிகரித்து விட்டன.ஆம். மனித குலம் இன்று ஆட்படும் பெரும்பாலான நோய்களுக்கு மனதின் விரைவே காரணம். மலச்சிக்கலில் தொடங்கி மனச்சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது இந்த விரைவு.


நகரங்களில் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அரைகுறையாக சாப்பிட்டு தண்ணீர் கூட குடிக்காமல் அலுவலகம் செல்வோர் எத்தனையோ பேர் உள்ளனர்.இந்த நிலை ஏன் என்று விளங்கவில்லை. ஐந்து நிமிடங்களாவது உண்ட உணவிற்கு தண்ணீர் சேர்க்க அரை நிமிடம் கூட ஆகாதுதானே?!

கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால்...
சிந்தித்ததைச் செயல்படுத்தினால்...
விரைவு தரும் விரையங்களை விரைவில் குறைக்கலாம்தானே?!!!


.                                                                                                - பா.வெ.



எண்ணம் போல் வாழ்வு

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Feb 28, 2016 6:33 pm

அன்றாட வாழ்வில் ...

நம் வாழ்வில் அனேகமாக அனைவருமே இந்த நிகழ்வை சந்தித்திருப்போம்.கண்ணாடி மாளிகையில் அமைந்த பகட்டான கடைகளில் கெளரவத்திற்காக கேட்ட விலை கொடுத்து பொருள் வாங்குவோம்.ஆனால் வெயில் மழை என்று பாராமல் தெருத்தெருவாக அலைந்து நம் வீடு தேடி வந்து பொருள் விற்கும் சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசி நம் திறமையைக் காட்டுவோம்.

கொஞ்சம் அதிக பணம் கொடுத்து பொருள் வாங்கி அவர்களை ஆதரிக்காவிட்டலும் கூட, குறைந்த பட்சம் பேரம் பேசாமல் வாங்கி அந்த தொழில் மீதான அவர்களின் நம்பிக்கையைக் குறைக்காமலாவது இருக்கலாமே!!! ஏனென்றால் அவர்களுக்கு தெரிந்ததே அந்த தொழில் மட்டும் தான்!!!

எப்போதும் நம்மை நாம் பிறருடன் ஒப்பிட்டு வருந்துவதிலேயே அல்லது மகிழ்வதிலேயே காலத்தைக் கடத்துகிறோம்.பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கினால் நாமும் அதே போல் கார் வாங்க வேண்டும்.அது நமக்கு அவசியமோ இல்லையோ அதை வாங்கினால்தான் நமக்கு தூக்கமே வரும்.பிறர் முன்னேறினால்தான் நாமும் முன்னேற வேண்டுமா என்ன?

இந்த மனநிலையோடுதான் நம் பிள்ளைகளை வளர்க்கும் போதும் பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளோடு ஒப்பிட்டு நம் பிள்ளைகளைப் பாடாய் படுத்துகிறோம்.இவ்வாறு நம்மை பிறரோடு ஒப்பிட்டே வாழ்ந்தால் பிறர் முன்னேரும்போதுதான் நாமும் வாழ்வில் முன்னேறுவோம்.நமக்கென்று தனித்தன்மை ஏதும் இருக்காது.




எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Feb 28, 2016 6:36 pm

இவ்வாறு பின்னூட்ட பகுதியிலேயே பதிவிடலாமா?



எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 7:00 pm

உங்கள் # 9 பதிவுக்கான கேள்விக்கு  # 8 தான் உதாரணம் என்றால் பண்ணலாம் .
அல்லது ,
#1 ஐ திறந்து ,அதில் புதிய பதிவை க்ளிக் பண்ணியும் பண்ணலாம்  .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Feb 28, 2016 8:55 pm

மிக்க நன்றி ஐயா!!!



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Feb 28, 2016 8:58 pm

விளை(லை)நிலம்

"விளைநிலத்தின்
பொருள் தொலைந்தது...
பொருள் தேடலில்...
- விலைநிலம்."
- பா.வெ.

நம் அனைவரின் வாழ்வாதாரம் அவரவர் செய்யும் பணி அல்லது தொழில் மூலம் பணமாக இருக்கலாம். ஆனால் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவுக்கு என்றுமே ஆதாரம் வேளாண்தொழில் மட்டுமே!.

அருகி வரும் பட்டியலில் விவசாய நிலம் விரைவில் முதலிடம் பிடித்துவிடும் போல் தெரிகிறது. அந்த அளவுக்கு விவசாய நிலங்களில் வீடுகள் விதைக்கப்படுகின்றன. பெருகி வரும் மக்கள் தொகையால் வீடு வாசல் இல்லாதவர்கள் இவ்வாறு விளைநில மனைகள் அல்லது வீடுகளை வாங்குவதை ஏதோ தர்மசங்கட நிலையில் கூட ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இதையே ஒரு முதலீடாகக் கருதி பணத்தைப் பெருக்கும் பணமோகத்தை என்னவென்று சொல்வது ?

இது தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் உணவுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைதான் வரும். இவ்வாறு விளைநிலங்களை அழித்து வீடு கட்டுவது என்பது மரக்கிளையின் நுனியில் அமர்ந்து அடிப்பகுதியை வெட்டுவதற்கு சமமாகும்.

- பா.வெ.




எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Feb 28, 2016 9:04 pm

நகரத்துக் குழந்தைகள் – நரகத்தில் !!!

இந்த உலகில் எந்தவித கவலையும் கபடமும் இன்றி மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்கும் ஒரே பருவம் குழந்தைப் பருவம்தான்.அனால் நகர வாழ்க்கையிலும் நகரமயமாதலில் சிக்கிய கிராமங்களிலும் கூட குழந்தைகள் எந்தவித குழந்தைப்பருவ மகிழ்ச்சியையும் அனுபவிப்பதே இல்லை.பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கானல் நீராகிவிட்டது.

பல குடும்பங்களில் ஆயாக்களே அன்னைபோல் இருக்கின்றனர்.அவசர அவசரமாக அலுவலகம் செல்லும் அன்னையிடமும் ஆடம்பரத்திற்காக பணம் தேடும் தந்தையிடமும் இந்த குழந்தைகள் அன்பை மட்டுமே தேடுகின்றன.அவர்களின் தேடலில் இந்த குழந்தைகளின் தேடல் தொலைந்துவிட்டது என்பதே நிதர்சனம்.

பல வகையான குழந்தைப்பருவ விளையாட்டுகள் இன்று அருகிவிட்டன; சொல்லப்போனால் அழிந்தேவிட்டன.கிராமங்களிலேயே இந்தநிலை என்றால், நகரங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

முன்பெல்லாம் கல்வி பயிலும் நேரத்திற்கு நிகராக விளையாடும் நேரம் இருக்கும்.உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.மன இறுக்கம் சிறிதும் இருக்காது.ஆனால் இப்போதோ கல்விக்காக செலவிடும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி கூட விளையாட்டிற்காக செலவிடப்படுவதில்லை.

குழந்தைகள் எப்போதும் பொதிமூட்டை புத்தக மூட்டைகளை சுமந்த வண்ணம் உள்ளனர்.முதுகு கூட விரைவில் கூன் விழுந்துவிடும்போல் இருக்கிறது.அவர்களின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள்  எல்லாம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் ஒடுங்கிவிட்டன; நான்கு சுவர்களுக்குள் நரகம் தோன்றிவிட்டது !!!

- பா.வெ.




எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 10:01 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 28, 2016 10:06 pm

B.VENKATESAN wrote:ஒரே தலைப்பின் கீழ் பல்வேறு பதிவுகள் வெளியிட விரும்புகிறேன்.ஆனால் தொடர்பதிவாக எப்படி வெளியிடுவது என்று தெரியவில்லை.உதவுங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1195738

B.VENKATESAN wrote:இவ்வாறு பின்னூட்ட பகுதியிலேயே பதிவிடலாமா?

ரொம்ப நல்லது வெங்கடேசன்..... நாங்க எதுக்கு இங்கே இருக்கோம் புன்னகை.ஒன்றும் கஷ்டம் இல்லை !.... நீங்கள் சொல்வது சரி புன்னகை

ஆமாம், நீங்கள் பின்னுட்டம் எப்படி போடுவீர்களோ அப்படியே உங்களின் புதிய பதிவை போடுங்கள், அவை தொடர்ந்து ஒரே திரியாக வந்துவிடும் புன்னகை

நீங்கள் முதலில் போட்ட பதிவுகளை நான் இங்கே இணைத்து விடுகிறேன், தலைப்பிலும் 'தொடர் பதிவு' என்று போட்டு விடுகிறேன் சரியா? புன்னகை

அப்னுடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun Feb 28, 2016 10:37 pm

மிக்க நன்றி அம்மா !!! மிக்க நன்றி !!!



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Mon Feb 29, 2016 2:31 pm

நாகரிக மோகம்

மிருக நிலையில் காட்டில் திரிந்த மனிதனை சமவெளிகளில் மனிதனாக ஒரு ஒழுங்கு முறைக்குள் வாழச்செய்ததே நாகரிகம்.ஆனால் இன்றைய சூழலில் பல இடங்களில் மனித நேயத்தைத் தொலைத்துவிட்டு நாகரிகம் என்ற போர்வையில் பலர் வாழ்கின்றனர்.

சாலையில் ஒரு விபத்து நேர்ந்தால் கூட அதில் பாதிக்கப்பட்டவர்கள் நம் உறவினர் அல்லது நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களாக இருக்கக்கூடுமோ? என்ற அளவில் கூட அதைப் பார்க்க நேரமில்லை நம்மில் பலருக்கு...அருகில் இருப்போர் பார்க்கட்டுமே என்ற அலட்சியத்தில் நம் பணிகளை / பயணத்தைத் தொடர்கிறோம்.

தாய்மொழியை மறைத்துவிட்டு/மறந்துவிட்டு அந்நிய மொழி பேசுவதையே நாகரிகம் எனக் கருதி அந்நிய மொழிக்கு அடிமையாகிவிட்டோம்.அந்நிய மொழி கற்றால்தான் வேலை என்ற நிலை நம் நாட்டில் உருவாகிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் இது நம் நாட்டில் மட்டுமே அதிகமாக உள்ளது. வெளி நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழியில்தான் கல்வி,வேலை எல்லாம்…

நாம் குறைந்தபட்சம் வேலைக்காக மட்டுமே இதை பயன்படுத்தலாம்.வாழ்க்கைக்கே அந்நிய மொழிதான் பிரதானம் என்று தொடர்ந்தால் நம் தாய்மொழிக்கு எமன் வெளியில் வேண்டாம்.நாமே பொதும்.தாய்மொழிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டாம்.குறைந்தபட்சம் கல்லறை கட்டாமல் இருக்கலாமே?!



எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக