புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
1 Post - 2%
prajai
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
383 Posts - 49%
heezulia
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
26 Posts - 3%
prajai
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் இடித்தது


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 6:26 am

. "ஆமை புகுந்த  வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு.
அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் .

ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் ' என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

ஆம்பி பூத்த வீடு என்பதுதான் " ஆமை புகுந்த வீடு " என்று மாறிவிட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார் . இந்தக் கருத்து மனதிலே இடிக்கிறது ; இது சரியா அல்லது தவறா என்பதை ஈகரை அன்பர்கள் அலசவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 7:04 am

நன்றி M Jagadeesan .
ஒத்துக் கொள்ள கூடியதாகவே இருக்கிறதே .

வட இந்தியாவில் அநேகர் வீட்டில் வாசல் படியில் ஆமையின் உருவத்தை பதிய  வைத்து இருப்பார்கள்  .
என்னக் காரணம் என்பது இப்போது புரிகிறது .
மேலும் Feng Shui இல் ஆமை , அதிர்ஷ்டம் தரும் பொருளாகவே கருதப்படுகிறது .

படித்ததில் பிடித்தது இது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 7:22 am

ஐயா !

அப்படியானால் " ஆமை புகுந்த வீடு உருப்படும் " என்பது தங்களின் கருத்து. ஆமை ஒரு அதிர்ஷ்டம் தரும் பொருள் என்று கூறுகிறீர்கள் . ஆனால் பழமொழியின் கருத்து அதுவல்லவே !

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழமொழி . கட்டுரை ஆசிரியர் "ஆம்பி பூத்த " என்பதுதான் " ஆமை புகுந்த " என்று மாறிவிட்டது என்று கூறுகிறார் . இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா ?
என்பதே கேள்வி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 23, 2016 8:17 am

ஐயா எனக்கும் சரியாகவே படுகிறது. ஆமை புகுந்தால் சற்று நேரத்தில் தானாகவே வெளியே சென்று விடும். அதனால் கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் காளான் வளர்ந்தால் அந்த வீட்டில் வசிக்க இயலாது. 
அறிவியல் பூர்வமாக கூட ஒத்து கொள்ள கூடியதாக இருக்கிறது. உணவு காளான் 
இதில் சேர்க்க கூடாது. நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 23, 2016 8:19 am

ஆம்பி _காளான் என்ற தமிழ் வார்த்தையை கற்றுக் கொண்டேன்.நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 8:45 am

அமீனா புகுந்த வீடு
அமீனா --நீதி மன்ற விஷயங்களை நிறைவேற்றும் ஒரு கடை நிலை ஊழியர் . வராக்கடன் , ஜப்தி செய்வது போன்ற கெட்ட தகவல்களை சேர்ப்பிக்கும் பணி செய்பவர் . ஆகவே அவர் வீட்டிற்கு வந்தால் , கஷ்டங்களில்
ஆரம்பம் எனக் கொள்ளலாம் .

ஆமை புகுந்த வீடு -- பாவம் அந்த வாயில்லா ஜீவன் . அதுக்கு என்ன ஜோசியமா தெரியும் ?. இவருக்கு கேடு / கேடு கெட்ட காலம் வரப்போகிறது .இவர் வீட்டுக்கு போகவேண்டும் என்று .
ஆகவே பழமொழியில் 50% தப்பு .

நம் மூதாதையர் மிகவும் புத்திசாலிகள் .காரணம் கருதியே பழமொழியை உருவாக்கி இருப்பார்கள் .

அவர்கள் சொன்ன ஆமை , ஒரு ஆமையாக இருக்காது . பல ஆமைகளாக இருக்கும் .
இப்பிடி இருக்குமோ ?
நம் வீடுகளில் அமைதி நிலவ வேண்டுமெனில் ,
பொறாமை , புறம் கூறாமை , பொய் சொல்லாமை , தள்ளாமை போன்ற ஆமைகள் புககூடாது !

சரிதானே ,M Jagadeesan .!
ஒன்றுமறியா உயிர் வாழ் ஆமையை விட்டு விடுவோம் .
நம்முடன் பிறந்துள்ள மற்ற ஆமைகளை தவிர்ப்போம் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2016 11:23 am

படித்ததில் இடித்தது  103459460
-
ஆனால் சில கருத்துகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன
அதிலிருந்து விடுபட முடிவதில்லை...
-
நான் சிங்கப்பூரில் இருந்த போது, எனது பேரன், பள்ளியிலிருந்து
வரும்போது, ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில்
சிறிய ஆமை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தான்...
-
மாணவர்களுக்கு மற்ற உயிர்களிடத்தில் நேசத்தை வளர்க்கும்
பொருட்டு, பள்ளியில் கொடுத்து அனுப்புகிறார்கள்...இரண்டு நாட்கள்
வீட்டி வைத்து உணவு கொடுத்து பராமரித்து விட்டு மீண்டுன்
பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...
-
ஆமையை வீட்டினுள்ளே அனுமதிக்க தர்மசங்கடம்...!
ஒரு நாள் மட்டும் வைத்திருந்து விட்டு, மீண்டும் பள்ளியில்
ஒப்படைத்து விட்டோம்...!!
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 12:09 pm

ரமணியன் ஐயா !

நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

" அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி  உதவமாட்டான் " என்பது உண்மையான பழமொழியல்ல !

" திருவடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான் " என்பதே உண்மையான பழமொழி .

திரு + அடி = திருவடி

அதாவது கூடப்பிறந்த அண்ணன் தம்பி உதவவில்லை என்றாலும் , இறைவன் திருவடிகளை நாம் வணங்கினால் அது நமக்கு உதவும் என்பதுதான் இதன் கருத்து.

இதேபோல ஆமை முன்பாக " கல் " என்ற சொல் சேர்த்தால் " கல்லாமை " என்று வரும் .

கல் + ஆமை = கல்லாமை


எனவே "கல்லாமை  புகுந்த வீடு உருப்படாது "என்பதே உண்மையான பழமொழி .

ஒருவீட்டிலே அப்பா, அம்மா,அண்ணன்,அக்காள் ,தம்பி , தங்கை எல்லோரும் கைநாட்டுப் பேர்வழிகளாக இருந்தால் அந்தவீடு உருப்படுமா ? உருப்படாதுதானே !

எனவே உண்மையான பழமொழி

" கல்லாமை புகுந்த வீடும் , அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்பதே !

இது என்னுடைய கருத்து; மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 12:26 pm

ayyasamy ram wrote:படித்ததில் இடித்தது  103459460
-
ஆனால் சில கருத்துகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன
அதிலிருந்து விடுபட முடிவதில்லை...
-
நான் சிங்கப்பூரில் இருந்த போது, எனது பேரன், பள்ளியிலிருந்து
வரும்போது, ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில்
சிறிய ஆமை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தான்...
-
மாணவர்களுக்கு மற்ற உயிர்களிடத்தில் நேசத்தை வளர்க்கும்
பொருட்டு, பள்ளியில் கொடுத்து அனுப்புகிறார்கள்...இரண்டு நாட்கள்
வீட்டி வைத்து உணவு கொடுத்து பராமரித்து விட்டு மீண்டுன்
பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...
-
ஆமையை வீட்டினுள்ளே அனுமதிக்க தர்மசங்கடம்...!
ஒரு நாள் மட்டும் வைத்திருந்து விட்டு, மீண்டும் பள்ளியில்
ஒப்படைத்து விட்டோம்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1195186

" ஆமை புகுந்த வீடு உருப்படாது " என்றால் ஆமை புகுந்த பள்ளி மட்டும் உருப்படுமா ?

கல்லாமை எங்கெல்லாம் இருக்கிறதோ , அந்த இடங்கள் எல்லாம் உருப்படாது என்பதே உண்மையாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 1:09 pm

கல்லாமை சரியாகப் படுகிறது .
ஒரு பேச்சிற்காக ,/விவாதத்திற்கு  என்று எடுத்துக் கொண்டால் ,
கற்றறிந்த அறிவிலிகளும் இருக்கின்றனரே  .
அவர்கள் செய்யும் செயல்கள் /செயல்பாடுகள் அவர்கள் கற்றவர்கள்தானா ?
என்ற குழப்பத்தையும் எழுப்புகின்றனர். அறியாமை மிக்கவராக உள்ளனரே !

படிக்காமலே , இயற்கை தந்த ஆறாம் அறிவால், நல்லது கெட்டது எது என அறிந்து,
நாட்டை முன்னேற்றியவர் ,தமிழகத்தில் உண்டே .

எதுகை மோனை கருதி ,

அமீனா புகுந்த வீடும் ,
அறியாமை புகுந்த வீடும் உருப்படாது . என்றும் கூறலாமே .

நாம்தான் ,சில திரிந்து போன பழமொழிகளை ,
நம் கையில் எடுத்துக் கொண்டு ,
அர்த்தமிகு , பழமொழிகளாக்கி
அறியாமையை  போக்கவேண்டும் .புன்னகை புன்னகை புன்னகை

இதற்கு இந்த தளம் மிகவும் உபயோககரமாக இருக்கிறது .
நன்றி நன்றி ஈகரை

சுவாரஸ்யமான பதிவு ,ஜெகதீசன் அவர்களே ! படித்ததில் இடித்தது  1571444738 படித்ததில் இடித்தது  1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக