புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
40 Posts - 63%
heezulia
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
2 Posts - 3%
viyasan
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
232 Posts - 42%
heezulia
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் இடித்தது  Poll_c10படித்ததில் இடித்தது  Poll_m10படித்ததில் இடித்தது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் இடித்தது


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 6:26 am

. "ஆமை புகுந்த  வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்ற ஒரு பழமொழி தமிழ்நாட்டில் உண்டு.
அருப்புக்கோட்டை திரு .பொன் . சரவணன் அவர்கள் இப்பழமொழி தவறு என்று கூறுகிறார் . " ஆம்பி பூத்த வீடு உருப்படாது " என்ற பழமொழிதான் காலப்போக்கில் " ஆமை புகுந்தவீடு உருப்படாது " என்று மாற்றம் பெற்றுவிட்டது என்று கூறுகிறார். " ஆம்பி " என்றால் காளான் ; அதாவது ஒருவீட்டில் காளான் வளர்ந்தால் அந்த வீடு உருப்படாது என்பது ஆசிரியரின் கருத்தாகும் .

ஆசிரியரின் வாதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் ' என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.

இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த

ஆம்பி பூத்த வீடு என்பதுதான் " ஆமை புகுந்த வீடு " என்று மாறிவிட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார் . இந்தக் கருத்து மனதிலே இடிக்கிறது ; இது சரியா அல்லது தவறா என்பதை ஈகரை அன்பர்கள் அலசவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 7:04 am

நன்றி M Jagadeesan .
ஒத்துக் கொள்ள கூடியதாகவே இருக்கிறதே .

வட இந்தியாவில் அநேகர் வீட்டில் வாசல் படியில் ஆமையின் உருவத்தை பதிய  வைத்து இருப்பார்கள்  .
என்னக் காரணம் என்பது இப்போது புரிகிறது .
மேலும் Feng Shui இல் ஆமை , அதிர்ஷ்டம் தரும் பொருளாகவே கருதப்படுகிறது .

படித்ததில் பிடித்தது இது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 7:22 am

ஐயா !

அப்படியானால் " ஆமை புகுந்த வீடு உருப்படும் " என்பது தங்களின் கருத்து. ஆமை ஒரு அதிர்ஷ்டம் தரும் பொருள் என்று கூறுகிறீர்கள் . ஆனால் பழமொழியின் கருத்து அதுவல்லவே !

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பது பழமொழி . கட்டுரை ஆசிரியர் "ஆம்பி பூத்த " என்பதுதான் " ஆமை புகுந்த " என்று மாறிவிட்டது என்று கூறுகிறார் . இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா ?
என்பதே கேள்வி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 23, 2016 8:17 am

ஐயா எனக்கும் சரியாகவே படுகிறது. ஆமை புகுந்தால் சற்று நேரத்தில் தானாகவே வெளியே சென்று விடும். அதனால் கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் காளான் வளர்ந்தால் அந்த வீட்டில் வசிக்க இயலாது. 
அறிவியல் பூர்வமாக கூட ஒத்து கொள்ள கூடியதாக இருக்கிறது. உணவு காளான் 
இதில் சேர்க்க கூடாது. நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Feb 23, 2016 8:19 am

ஆம்பி _காளான் என்ற தமிழ் வார்த்தையை கற்றுக் கொண்டேன்.நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 8:45 am

அமீனா புகுந்த வீடு
அமீனா --நீதி மன்ற விஷயங்களை நிறைவேற்றும் ஒரு கடை நிலை ஊழியர் . வராக்கடன் , ஜப்தி செய்வது போன்ற கெட்ட தகவல்களை சேர்ப்பிக்கும் பணி செய்பவர் . ஆகவே அவர் வீட்டிற்கு வந்தால் , கஷ்டங்களில்
ஆரம்பம் எனக் கொள்ளலாம் .

ஆமை புகுந்த வீடு -- பாவம் அந்த வாயில்லா ஜீவன் . அதுக்கு என்ன ஜோசியமா தெரியும் ?. இவருக்கு கேடு / கேடு கெட்ட காலம் வரப்போகிறது .இவர் வீட்டுக்கு போகவேண்டும் என்று .
ஆகவே பழமொழியில் 50% தப்பு .

நம் மூதாதையர் மிகவும் புத்திசாலிகள் .காரணம் கருதியே பழமொழியை உருவாக்கி இருப்பார்கள் .

அவர்கள் சொன்ன ஆமை , ஒரு ஆமையாக இருக்காது . பல ஆமைகளாக இருக்கும் .
இப்பிடி இருக்குமோ ?
நம் வீடுகளில் அமைதி நிலவ வேண்டுமெனில் ,
பொறாமை , புறம் கூறாமை , பொய் சொல்லாமை , தள்ளாமை போன்ற ஆமைகள் புககூடாது !

சரிதானே ,M Jagadeesan .!
ஒன்றுமறியா உயிர் வாழ் ஆமையை விட்டு விடுவோம் .
நம்முடன் பிறந்துள்ள மற்ற ஆமைகளை தவிர்ப்போம் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 23, 2016 11:23 am

படித்ததில் இடித்தது  103459460
-
ஆனால் சில கருத்துகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன
அதிலிருந்து விடுபட முடிவதில்லை...
-
நான் சிங்கப்பூரில் இருந்த போது, எனது பேரன், பள்ளியிலிருந்து
வரும்போது, ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில்
சிறிய ஆமை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தான்...
-
மாணவர்களுக்கு மற்ற உயிர்களிடத்தில் நேசத்தை வளர்க்கும்
பொருட்டு, பள்ளியில் கொடுத்து அனுப்புகிறார்கள்...இரண்டு நாட்கள்
வீட்டி வைத்து உணவு கொடுத்து பராமரித்து விட்டு மீண்டுன்
பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...
-
ஆமையை வீட்டினுள்ளே அனுமதிக்க தர்மசங்கடம்...!
ஒரு நாள் மட்டும் வைத்திருந்து விட்டு, மீண்டும் பள்ளியில்
ஒப்படைத்து விட்டோம்...!!
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 12:09 pm

ரமணியன் ஐயா !

நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

" அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி  உதவமாட்டான் " என்பது உண்மையான பழமொழியல்ல !

" திருவடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான் " என்பதே உண்மையான பழமொழி .

திரு + அடி = திருவடி

அதாவது கூடப்பிறந்த அண்ணன் தம்பி உதவவில்லை என்றாலும் , இறைவன் திருவடிகளை நாம் வணங்கினால் அது நமக்கு உதவும் என்பதுதான் இதன் கருத்து.

இதேபோல ஆமை முன்பாக " கல் " என்ற சொல் சேர்த்தால் " கல்லாமை " என்று வரும் .

கல் + ஆமை = கல்லாமை


எனவே "கல்லாமை  புகுந்த வீடு உருப்படாது "என்பதே உண்மையான பழமொழி .

ஒருவீட்டிலே அப்பா, அம்மா,அண்ணன்,அக்காள் ,தம்பி , தங்கை எல்லோரும் கைநாட்டுப் பேர்வழிகளாக இருந்தால் அந்தவீடு உருப்படுமா ? உருப்படாதுதானே !

எனவே உண்மையான பழமொழி

" கல்லாமை புகுந்த வீடும் , அமீனா புகுந்த வீடும் உருப்படாது " என்பதே !

இது என்னுடைய கருத்து; மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 23, 2016 12:26 pm

ayyasamy ram wrote:படித்ததில் இடித்தது  103459460
-
ஆனால் சில கருத்துகள் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன
அதிலிருந்து விடுபட முடிவதில்லை...
-
நான் சிங்கப்பூரில் இருந்த போது, எனது பேரன், பள்ளியிலிருந்து
வரும்போது, ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் டப்பாவில்
சிறிய ஆமை ஒன்றுடன் வீட்டுக்கு வந்தான்...
-
மாணவர்களுக்கு மற்ற உயிர்களிடத்தில் நேசத்தை வளர்க்கும்
பொருட்டு, பள்ளியில் கொடுத்து அனுப்புகிறார்கள்...இரண்டு நாட்கள்
வீட்டி வைத்து உணவு கொடுத்து பராமரித்து விட்டு மீண்டுன்
பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...
-
ஆமையை வீட்டினுள்ளே அனுமதிக்க தர்மசங்கடம்...!
ஒரு நாள் மட்டும் வைத்திருந்து விட்டு, மீண்டும் பள்ளியில்
ஒப்படைத்து விட்டோம்...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1195186

" ஆமை புகுந்த வீடு உருப்படாது " என்றால் ஆமை புகுந்த பள்ளி மட்டும் உருப்படுமா ?

கல்லாமை எங்கெல்லாம் இருக்கிறதோ , அந்த இடங்கள் எல்லாம் உருப்படாது என்பதே உண்மையாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 1:09 pm

கல்லாமை சரியாகப் படுகிறது .
ஒரு பேச்சிற்காக ,/விவாதத்திற்கு  என்று எடுத்துக் கொண்டால் ,
கற்றறிந்த அறிவிலிகளும் இருக்கின்றனரே  .
அவர்கள் செய்யும் செயல்கள் /செயல்பாடுகள் அவர்கள் கற்றவர்கள்தானா ?
என்ற குழப்பத்தையும் எழுப்புகின்றனர். அறியாமை மிக்கவராக உள்ளனரே !

படிக்காமலே , இயற்கை தந்த ஆறாம் அறிவால், நல்லது கெட்டது எது என அறிந்து,
நாட்டை முன்னேற்றியவர் ,தமிழகத்தில் உண்டே .

எதுகை மோனை கருதி ,

அமீனா புகுந்த வீடும் ,
அறியாமை புகுந்த வீடும் உருப்படாது . என்றும் கூறலாமே .

நாம்தான் ,சில திரிந்து போன பழமொழிகளை ,
நம் கையில் எடுத்துக் கொண்டு ,
அர்த்தமிகு , பழமொழிகளாக்கி
அறியாமையை  போக்கவேண்டும் .புன்னகை புன்னகை புன்னகை

இதற்கு இந்த தளம் மிகவும் உபயோககரமாக இருக்கிறது .
நன்றி நன்றி ஈகரை

சுவாரஸ்யமான பதிவு ,ஜெகதீசன் அவர்களே ! படித்ததில் இடித்தது  1571444738 படித்ததில் இடித்தது  1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக