புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm
» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
by heezulia Yesterday at 11:49 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm
» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm
» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm
» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
சுகவனேஷ் |
| |||
Rutu |
| |||
mini |
| |||
Guna.D |
| |||
Barushree |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொத்திப் பொத்தி வளர்ப்பதா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் பிறந்தவர்கள், எட்டு பேர்; என்னுடன் பிறந்தவர்கள், மூன்று பேர்; எனக்கு பிறந்தவர்கள், இரண்டு பேர். இப்படி தலைமுறைக்கு தலைமுறை, நம் சமுதாயம், இளைத்துக் கொண்டே போகிறது.
நாம் இருவர், நமக்கிருவர் என்பது கூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகி வருகிறது. இப்படி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் என்று ஆகிற போது, பிள்ளைகளின் மீதான, பெற்றோரின் பார்வைப் பதிவு அதிகமாகிறது.
இப்போதெல்லாம், குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லும் அரசு பிரசாரம், ஒலிபெருக்கிகளும் ஓய்ந்து, விளம்பரங்கள் விடைபெற்று விட்டன. முதலில் பெறப்படுகிற பிள்ளையே, இந்த வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறது; ஆம்... நம்மை பாடாய்ப்படுத்துகிறது.
தந்ததைப் பெற்று, வெந்ததைத் தின்று வாழ்ந்த எங்கள் காலம், மாறி விட்டது. பிள்ளைகளிடம் வால் தனம் அதிகமாகி, அடிக்கிற லூட்டிகளையும், செய்கிற ஆதிக்கத்தையும், முன் வைக்கிற கோரிக்கைகளையும், ஆகிற கல்விச் செலவினங்களையும் மற்றும் நடக்கிற மருத்துவச் செலவுகளையும் பார்த்த பெற்றோர், 'போதும்டா சாமி...' என்று, மேலும் பிள்ளை பெறும் ஆசையை, விட்டு விடுகின்றனர்.
ஒற்றைப்பிள்ளை என்பதால், அதற்கு ஏகமாய் முக்கியத்துவம் தரப்போக, சாப்பிடக் கூடப் பரிசு கேட்கின்றனர்.
எங்கள் காலத்திலெல்லாம், 'எங்கே போற, எப்ப வருவேங்கிற...' கேள்வி எல்லாம் கிடையாது.
அப்போதெல்லாம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., நீச்சல் குளத்தில் குளிக்க, 45 காசு கட்டணம்; அம்மா தருவார். அதை மிட்டாய் வாங்கித் தின்று விட்டு, நீச்சல் குளத்தின் பக்கத்தில் ஓடுகிற அடையாற்றில் குளித்து (உவ்வே என்கிறீர்களா... அப்போ, சுத்தமா இருக்குங்க!) வீட்டில், அம்மாவிடம் நீச்சல் குளத்தில் குளித்ததாக, போக்குக் காட்டி விடுவேன்; இக்காலத்தில் இது நடக்காது.
இன்றைக்கு, பிள்ளைகளை அக்கறையாய் வளர்க்கிறோம் பேர்வழி என்று, அவர்களது ஒவ்வொரு அசைவையும், ஏகமாய் கண்காணிக்கின்றனர் பெற்றோர். போதாக்குறைக்கு, தாத்தா - பாட்டிகள் வேறு!
ஒரு குழந்தைக்கு, மொழி புரிய ஆரம்பிக்கிற ஒரு வயதிலிருந்து, 'டீன் - ஏஜ்' எனப்படும், 19 வயது வரை, 30,000 எதிர்மறைச் சொற்களை சொல்லியே, நம் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 'அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே...' என்று ஆரம்பித்து, நட்பான விலங்குகளைக் கூட, பயங்கர விலங்குகளாக பயமுறுத்துகின்றனர்.
கடமை மிக்க காவல் துறையினரையும், மக்கள் நலன் காக்கும் மருத்துவர்களையும் கூட, பயமுறுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.
'ஊசியெல்லாம் ஒண்ணும் பண்ணாது...' என்று கூறி வளர்க்காமல், 'ஐஸ் வாட்டர் குடிச்சே, சாக்லேட் தின்னேன்னு வச்சுக்க... அப்புறம், டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போய், ஊசி போடச் சொல்வேன்...' என்று, ஊசியை கூட, பயமுறுத்தும் ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்து விட்டனர்.
'கண்ணாடி டம்ளரைத் தொட்டேன்னா உதை விழும்; எத்தனை முறை சொல்றது... எவர்சில்வர் டம்ளர்ல தண்ணி குடின்னு!' வீட்டிலேயே, தீண்டாமைகளைச் சொல்லி தருகின்றனர்.
'சுண்டு விரலை, உள்பக்கமாக மடி; அதன்மீது, கண்ணாடி டம்ளரை உட்கார வை. டம்ளர், கீழே விழுந்து உடையாது...' என்று, இயற்பியல் ஆசிரியர்களாக மாற, பெற்றோர் தயாரில்லை!
செய்ய வேண்டியதை சொல்லித் தராமலும், அதற்கு விளக்கமும் தராமலும், பிள்ளைகளை வளர்ப்பதால், பிள்ளைகளின் அறியாமைகள் வளர்வதோடு, திறமைகளும் குன்றிப் போகின்றன.
பிள்ளைகளை, சாலையைக் கடக்க, கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லலாம் தான்! ஆனால், இதற்கு வயது வரம்பு வேண்டாமா... வயதுப் பிள்ளைகளையும் பச்சைப் பிள்ளைகளை நடத்துவதை போல் நடத்தி, அவர்களை சார்ந்து வாழும் பிள்ளைகளாகவே ஆக்கி விடுகின்றனர்.
'என் கையை விடு... இரண்டு பக்கமும் பார். திடீரென்று ஓடிக் கடக்காதே! வாகனம், உன்னைக் கடக்கும் வரை காத்திரு. எதில் அவசரம் காட்டினாலும் பரவாயில்லை; சாலையில் அவசரம் வேண்டாம். நின்று நிதானித்துக் கட...' என்று இவர்களுக்கு ஒரு பாடமே நடத்தப்பட வேண்டாமா... சாலையைக் கடக்கவே, இந்தப் பெற்றோர் கற்றுத்தராத போது, வாழ்க்கைப் பாதையைக் கடக்க, எப்போது கற்றுத்தருவதாக உத்தேசம்?
திருமண மண்டபங்களில் பார்க்கிறேன்... தங்களை விட்டு, இரண்டடி கூடப் தள்ளிப் போகக் கூடாதாம்.
பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
'எது ஒன்றையும், தங்கள் கண்ணசைவைத் தாண்டி அவர்கள் செய்யக் கூடாது...' என்று கட்டுப்படுத்தும் குணம், இன்னொரு நகல் பெற்றோர் போலவே, பிள்ளைகளை ஆளாக்குகிறதே தவிர, இவர்களிடம் மேலாக, திறம்பட உருவாக வழி வகுப்பது இல்லை!
குழந்தைகள் நன்கும், சிறப்பாகவும் வளர்ந்து ஒளிர்வதை விரும்பாதவர், நம்முடைய எதிரணியினராக இருக்கலாம். இத்தவறை, பெற்றோருமா செய்வது!
லேனா தமிழ்வாணன்
நாம் இருவர், நமக்கிருவர் என்பது கூட மாறி, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என, ஆகி வருகிறது. இப்படி ஒற்றைப் பிள்ளை, மிஞ்சினால் இருவர் என்று ஆகிற போது, பிள்ளைகளின் மீதான, பெற்றோரின் பார்வைப் பதிவு அதிகமாகிறது.
இப்போதெல்லாம், குறைவாக குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லும் அரசு பிரசாரம், ஒலிபெருக்கிகளும் ஓய்ந்து, விளம்பரங்கள் விடைபெற்று விட்டன. முதலில் பெறப்படுகிற பிள்ளையே, இந்த வேலையை கச்சிதமாக முடித்து விடுகிறது; ஆம்... நம்மை பாடாய்ப்படுத்துகிறது.
தந்ததைப் பெற்று, வெந்ததைத் தின்று வாழ்ந்த எங்கள் காலம், மாறி விட்டது. பிள்ளைகளிடம் வால் தனம் அதிகமாகி, அடிக்கிற லூட்டிகளையும், செய்கிற ஆதிக்கத்தையும், முன் வைக்கிற கோரிக்கைகளையும், ஆகிற கல்விச் செலவினங்களையும் மற்றும் நடக்கிற மருத்துவச் செலவுகளையும் பார்த்த பெற்றோர், 'போதும்டா சாமி...' என்று, மேலும் பிள்ளை பெறும் ஆசையை, விட்டு விடுகின்றனர்.
ஒற்றைப்பிள்ளை என்பதால், அதற்கு ஏகமாய் முக்கியத்துவம் தரப்போக, சாப்பிடக் கூடப் பரிசு கேட்கின்றனர்.
எங்கள் காலத்திலெல்லாம், 'எங்கே போற, எப்ப வருவேங்கிற...' கேள்வி எல்லாம் கிடையாது.
அப்போதெல்லாம், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., நீச்சல் குளத்தில் குளிக்க, 45 காசு கட்டணம்; அம்மா தருவார். அதை மிட்டாய் வாங்கித் தின்று விட்டு, நீச்சல் குளத்தின் பக்கத்தில் ஓடுகிற அடையாற்றில் குளித்து (உவ்வே என்கிறீர்களா... அப்போ, சுத்தமா இருக்குங்க!) வீட்டில், அம்மாவிடம் நீச்சல் குளத்தில் குளித்ததாக, போக்குக் காட்டி விடுவேன்; இக்காலத்தில் இது நடக்காது.
இன்றைக்கு, பிள்ளைகளை அக்கறையாய் வளர்க்கிறோம் பேர்வழி என்று, அவர்களது ஒவ்வொரு அசைவையும், ஏகமாய் கண்காணிக்கின்றனர் பெற்றோர். போதாக்குறைக்கு, தாத்தா - பாட்டிகள் வேறு!
ஒரு குழந்தைக்கு, மொழி புரிய ஆரம்பிக்கிற ஒரு வயதிலிருந்து, 'டீன் - ஏஜ்' எனப்படும், 19 வயது வரை, 30,000 எதிர்மறைச் சொற்களை சொல்லியே, நம் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 'அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே...' என்று ஆரம்பித்து, நட்பான விலங்குகளைக் கூட, பயங்கர விலங்குகளாக பயமுறுத்துகின்றனர்.
கடமை மிக்க காவல் துறையினரையும், மக்கள் நலன் காக்கும் மருத்துவர்களையும் கூட, பயமுறுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.
'ஊசியெல்லாம் ஒண்ணும் பண்ணாது...' என்று கூறி வளர்க்காமல், 'ஐஸ் வாட்டர் குடிச்சே, சாக்லேட் தின்னேன்னு வச்சுக்க... அப்புறம், டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டு போய், ஊசி போடச் சொல்வேன்...' என்று, ஊசியை கூட, பயமுறுத்தும் ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்து விட்டனர்.
'கண்ணாடி டம்ளரைத் தொட்டேன்னா உதை விழும்; எத்தனை முறை சொல்றது... எவர்சில்வர் டம்ளர்ல தண்ணி குடின்னு!' வீட்டிலேயே, தீண்டாமைகளைச் சொல்லி தருகின்றனர்.
'சுண்டு விரலை, உள்பக்கமாக மடி; அதன்மீது, கண்ணாடி டம்ளரை உட்கார வை. டம்ளர், கீழே விழுந்து உடையாது...' என்று, இயற்பியல் ஆசிரியர்களாக மாற, பெற்றோர் தயாரில்லை!
செய்ய வேண்டியதை சொல்லித் தராமலும், அதற்கு விளக்கமும் தராமலும், பிள்ளைகளை வளர்ப்பதால், பிள்ளைகளின் அறியாமைகள் வளர்வதோடு, திறமைகளும் குன்றிப் போகின்றன.
பிள்ளைகளை, சாலையைக் கடக்க, கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லலாம் தான்! ஆனால், இதற்கு வயது வரம்பு வேண்டாமா... வயதுப் பிள்ளைகளையும் பச்சைப் பிள்ளைகளை நடத்துவதை போல் நடத்தி, அவர்களை சார்ந்து வாழும் பிள்ளைகளாகவே ஆக்கி விடுகின்றனர்.
'என் கையை விடு... இரண்டு பக்கமும் பார். திடீரென்று ஓடிக் கடக்காதே! வாகனம், உன்னைக் கடக்கும் வரை காத்திரு. எதில் அவசரம் காட்டினாலும் பரவாயில்லை; சாலையில் அவசரம் வேண்டாம். நின்று நிதானித்துக் கட...' என்று இவர்களுக்கு ஒரு பாடமே நடத்தப்பட வேண்டாமா... சாலையைக் கடக்கவே, இந்தப் பெற்றோர் கற்றுத்தராத போது, வாழ்க்கைப் பாதையைக் கடக்க, எப்போது கற்றுத்தருவதாக உத்தேசம்?
திருமண மண்டபங்களில் பார்க்கிறேன்... தங்களை விட்டு, இரண்டடி கூடப் தள்ளிப் போகக் கூடாதாம்.
பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
'எது ஒன்றையும், தங்கள் கண்ணசைவைத் தாண்டி அவர்கள் செய்யக் கூடாது...' என்று கட்டுப்படுத்தும் குணம், இன்னொரு நகல் பெற்றோர் போலவே, பிள்ளைகளை ஆளாக்குகிறதே தவிர, இவர்களிடம் மேலாக, திறம்பட உருவாக வழி வகுப்பது இல்லை!
குழந்தைகள் நன்கும், சிறப்பாகவும் வளர்ந்து ஒளிர்வதை விரும்பாதவர், நம்முடைய எதிரணியினராக இருக்கலாம். இத்தவறை, பெற்றோருமா செய்வது!
லேனா தமிழ்வாணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... பிள்ளைகளை இப்படி, இவர்கள் பார்வை படுகிற தூரத்தில் கூட நடமாட அனுமதிக்காமல், இந்தப் பெற்றோரின் அடைகாக்கும் குணம், போகப்போக அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் தன்மையையும் பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்...........யோசிக்க வேண்டிய கட்டுரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மிகவும் பயனுள்ள பதிவு ....
![பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பொத்திப் பொத்தி வளர்ப்பதா? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193913ayyasamy ram wrote:விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை....![]()
நிஜம் ராம் அண்ணா, நம் என்னவோ நம் குழந்தைகளை பாதுகாப்பதாக நினைக்கிறோம், ஆனால் பின் விளைவுகள் பயங்கரமாய் ஆகும் போல இருக்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
K.Senthil kumar wrote:மிகவும் பயனுள்ள பதிவு ....![]()
![]()
![]()
ஆமாம் செந்தில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|