புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
89 Posts - 38%
heezulia
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
340 Posts - 48%
heezulia
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
24 Posts - 3%
prajai
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
3 Posts - 0%
Barushree
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ச ரி க ம ப த நி! Poll_c10ச ரி க ம ப த நி! Poll_m10ச ரி க ம ப த நி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ச ரி க ம ப த நி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:07 am

புலவர் அண்ணாமலையார் அகவையில் இளையோராயினும்
பெரும்புலவர்கட்கு நிகரான புலமைத்திறன் மிக்கவர் என்பதை
ஊற்றுமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பர் அறிந்திருந்தார்.

எனவே, அவர் மீது மிக்க பற்றும் பாசமும் கொண்டு, அவருடன்
அளவளாவிக் களித்தார். இதனைக் கண்ணுற்ற ஏனைய புலவர்கள்
அண்ணாமலை மீது பொறாமை கொண்டனர்.

ஜமீன்தார், அவர்களுக்கு அண்ணாமலையின் ஒப்பற்ற அறிவுத்
திறனை உணர்த்த விரும்பினார்.

தம் அரசவைப் புலவர்களை அழைத்து, “சரிகமபதநி’ எனும்
தொடரினை யமகமாக வைத்து பாடல் ஒன்றினை இயற்றிடுக’
எனக் கூறினார். அவைப் புலவர்கள் அனைவரும் அங்ஙனம்
பாடும் வகை அறியாது திகைத்தனர்.
அண்ணாமலையோ சிறிதும் தாமதிக்காது,

“சரிகமப தநியேற்குச் சந்து சொல்என்

பாள் மதன்ஏ தைக்க மார்பில்

சரிகமப தநிசமனத் தார்க்கருள் சங்

கர எனும் அத்தத்தில் நில்லா

சரிகமப தநிதநிதம் அனையர் அருத்

திடினும் அருந்தாமல் வாடிச்

சரிகமப தநி எனப் பாடுதலைமறந்

தாள் இதயா லய சற் கோவே’


———
எனப் பாடினார். இதனை ரசித்துக்கேட்ட ஜமீன்தார் மகிழ்வுற,
ஏனைய புலவர்களோ காழ்ப்புணர்ச்சி உற்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:07 am

அந்நிலை அறிந்த அண்ணாமலை பாடலின் பொருள் விளங்குமாறு
பதம் பிரித்து விவரிக்கலானார். முதல் அடியில் அமைந்த சரிகம்
என்பதற்கு வண்டு எனப் பொருள் உண்டு. எனவே, வண்டே எனக்காகத்
தூது செல்வாயாக என விளக்கினார்.

அச்சமயம் அண்ணாமலையின் ஆசான் பெரும்புலவர் முகவூர்
இராமசாமிக் கவிராயர் அவ்வரசவைக்கு வந்தார். அவர்
அண்ணாமலையை இடைமறித்து, “சரிகம் எனும் சொல்லிற்கு
வண்டு எனும் பொருள் எங்ஙனம் பொருந்தும்? இலக்கியங்களில்
எங்கேயாகிலும் சரிகம் எனும் சொல் வண்டு என இடம்
பெற்றுள்ளதா? அங்ஙனம் இருப்பின் ஓர் இடத்தினைக்
குறிப்பிடுவாயாக’ என்றார்.

அதற்கு அண்ணாமலை, மண்டல புருடர் இயற்றிய சூடாமணி
நிகண்டில் “சரிகமே சரகமே, சஞ்சாளிகம் சுரும்பு கீடம்’ என
வந்துள்ளதே’ என்றார். இதனைக் கேட்ட ராமசாமிக் கவிராயர்,
“முழுப்பாடலையும் பாடு’ என்றார். உடனே,

“அரியளிஞிமிறு மந்தியறு பதஞ்சிலீ முகஞ்சஞ்

சரிகமே சரகமே சஞ்சாளிகஞ் சுரும்பு கீடம்

பிரமரமாவே கீதம் பிருங்கமே பிரிசம் புள்ளு

வரிகொள் புண்டரீகந் தும்பி மதுப

நாலைந்தும் வண்டாம்’
————


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:09 am


எனும் பாடலை இனிய ராகத்தோடு பாடினார். உடனே ராமசாமிக்
கவிராயர், “சரிகம்’ என்பது எங்ஙனம் வண்டு என பொருள்படும்?’
என்றார். “சஞ்சரீகம், சரகம் என்பவைதான் வண்டினைக் குறிக்கும்
சொற்களாகும். சரிகம் என்பது வண்டினைக் குறிக்கும் சொல்தான்.
எனவே, வேறு ஒரு பொருள் அமையுமாறு “சரிகமபதநி’ எனும் ஏழு
எழுத்துகள் வர மீண்டும் ஒரு யமகக் கவி பாடு’ என்றார்.

இதனைச் செவிமடுத்த மற்ற புலவர்கள் அண்ணாமலையின் பாடல்
தவறாக அமைந்துள்ளதை எண்ணி மகிழ்வுற்றனர்.
ஆனால், அவர்களது மகிழ்வு வெகுநேரம் நீடிக்கவில்லை. நுண்மாண்
நுழைபுலம் மிக்க அண்ணாமலை கிஞ்சித்தும் தயக்கமின்றி “சரிகம்’
எனும் சொல்லிற்குச் “சஞ்சரிக்கின்ற மேகம்’ எனப் பொருள்
கொள்ளலாமே… பாடலை ஏன் மாற்ற வேண்டும் என மிடுக்குடன்
கூறினார்.

“இயம்புகின்ற காலத் தெகின மயில் கிள்ளை

பயம் பெறும் கம்பூவை பாங்கி }நயந்த குயில்

பேதை நெஞ்சந் தென்றல் பிரமா மீரைந்துமே

தூதுரைத்து வாங்குந் தொடை’


எனும் இரத்தினச் சுருக்கமாக தூதுக்குரிய பொருள்களுள் மேகம்
ஒன்றுதானே! எனக் கூறினார். இவர்தம் பேராற்றலைக் கண்ட
இராமசாமிக் கவிராயரோ பூரித்து நிற்க, ஏனைய புலவர்கள்
வாயடைத்து நின்றனர். ஜமீன்தாரும் வியப்பின் மேலீட்டால்,
“இவர் புலவரில் இரட்டியல்லர்; மூவிரட்டி’ எனப் பாராட்டி
மகிழ்ந்தார்.

——————————-
-இராஜை என். நவநீதிகிருஷ்ணராஜா
நன்றி- தமிழ்மணி


பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 16/02/2016

Postபாலகிருஷ்ணன் Tue Feb 16, 2016 9:26 pm

Nandru

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:36 pm

நல்ல பதிவு ராம் அண்ணா புன்னகை.............பகிர்வுக்கு நன்றி!



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 16, 2016 9:40 pm

பாலகிருஷ்ணன் wrote:Nandru

வாருங்கள் பாலகிருஷ்ணன், முதலில் உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை.........தமிழில் அடியுங்கள் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக