புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
75 Posts - 37%
i6appar
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
1 Post - 0%
prajai
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
75 Posts - 37%
i6appar
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
1 Post - 0%
prajai
தீமையும் நன்மைக்கே! Poll_c10தீமையும் நன்மைக்கே! Poll_m10தீமையும் நன்மைக்கே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீமையும் நன்மைக்கே!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Mar 09, 2016 2:56 pm

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் நல்லதை மட்டும் படைத்திருக்கலாமே, தீயதை ஏன் படைக்க வேண்டும்?

நல்ல மனிதர்களை மட்டும் படைத்திருக் கலாமே, தீய மனிதர்களை ஏன் படைக்க வேண்டும்?

இன்பத்தை மட்டுமே படைத்திருக்கலாமே, துன்பத்தை ஏன் படைக்க வேண்டும்?

இந்தக் கேள்விகள் நம் இதயங்களில் எழாமல் இருப்பதில்லை.

நல்லதற்காகத்தான் தீயது படைக்கப் பட்டிருக்கிறது.

நல்ல மனிதர்களின் நன்மைக்காகவே தீய மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்பத்துக்காகவே துன்பம் படைக்கப்பட்டிருக்கிறது.

இப்படிச் சொன்னால் ஏற்பீர்களா?

ஆனால், இதுதான் உண்மை!

இதுதான் படைப்பின் மர்மம். இதுதான் வாழ்க்கையின் ரகசியம்.

இதற்கு இயற்கை விதி (Law of Nature) என்று பெயர்.

இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் அது சிறப்பாக இயங்குவதற்காக விதி ஒன்றை உண்டாக்கினான். அந்த விதிப்படியே அண்ட சராசரமும் இயங்குகின்றன.

இந்த விதிதான் ‘இயற்கை விதி’ எனப்படுகிறது. வேதங்களும் வேத சம்ஹிதைகளும் இதை ‘ரித’ என்கின்றன.

இமானுவேல் கான்ட் (Immanuel Kant) தம் அரசுக் கொள்கையை விளக்கும்போது, இயற்கை விதியில் அடங்கியுள்ள நுட்பமானதொரு செயற்பாட்டை உணர்த்துகிறார்.

மனிதன் இயல்பாகவே சமூகத்தோடு இசைந்து வாழும் பண்பும், சமூக எதிர்ப்புப் பண்பும் ஒருங்கே கொண்டவன் என்பது அவர் கண்டறிந்த உண்மை.

சமூக எதிர்ப்புப் பண்பும் ஒரு வகையில் நன்மைக்கே பயன்படுகிறது. இப்பண்பு இல்லை யென்றால் மனிதனுடைய ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இத்தகைய இரு வகையான முரண்பட்ட பண்புகளினால் விளையும் போராட்டமே மனித வாழ்வின் எல்லா வகையான முன்னேற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது என்று அவர் கூறுகிறார்.

பொறாமை, வீண் பெருமை, அதிகார வேட்கை, உடைமைப் பற்று போன்ற சமூக எதிர்ப்புப் பண்புகளை நன்மையைக் கருதியே இறைவன் அமைத்திருக்கிறான். இதனால் நிகழும் போராட்டத்தின் விளைவாக மனிதனின் உள்ளே அடங்கிக் கிடக்கும் ஆற்றல்கள் வெளிப்பட்டு அவனுடைய இயற்கைத் திறன்கள் மேலும் வளர்ச்சி அடைகின்றன என்பது அவர் கருத்து.

‘ஒவ்வோர் ஊரிலும் தீயவர் சிலரை நானே உண்டாக்கி வைத்திருக்கிறேன்’ என்று இறைவன் கூறியதை குர் ஆன் எடுத்துரைக்கிறது.

தத்துவஞானி கான்ட் கண்டறிந்த ‘இயற்கை விதி’ தொடர்பான இந்த நுட்பமான செயற் பாட்டைக் கம்பர் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே (ஒன்பதாம் நூற்றாண்டு) அறிந்திருந்தார் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

‘சமூக எதிர்ப்பான தீய சக்திகளும் நன்மைக் காகவே தோன்றுகின்றன’ என்ற கருத்தைக் கம்பர் தம் காப்பியத்தில் பல இடங்களில் உணர்த்துகிறார்.

அமைதியான அயோத்தியில் தங்கள் அன்பிற்குரிய இராமன் முடிசூடப் போகிறான் என்ற மிகழ்ச்சியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது கூனி தோன்றுகிறாள். அக்கொடியவளை அறிமுகப்படுத்தும்போதே,

‘இன்னல் செய் இராவணன்

இழைத்த தீமைபோல்

துன்னருங் கொடுமனக்

கூனி தோன்றினாள்’ (1445)

என்றே கம்பர் அவளை வருணிக்கிறார். இதன் வாயிலாக அக்கொடியவளும் ‘இராவண வதம்’ என்ற ஒரு நன்மைக்காகவே தோன்றினாள் என்று கம்பர் உணர்த்துகிறார்.

கூனியின் தீய சொற்களைக் கேட்டு தூயவளாகிய கைகேயியின் மனமும் மாறுகிறது. அவள் இவ்வாறு சிந்தை திரிந்ததும் ஒரு நன்மைக்கே என்று கம்பர் கூறுகிறார்.

‘தீய மந்தரை

இவ்வுரை செப்பலும், தேவி

தூய சிந்தையும்

திரிந்தது, சூழ்ச்சியின் இமையோர்

மாயையும், அவர் பெற்ற

நல்வரம் உண்மையாலும்

ஆய அந்தணர்

இயற்றிய அருந்தவத்தாலும்’ (1483)

இராவணன் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறத் தேவர்கள் பெற்ற வரமும் அந்தணர் இயற்றிய அருந்தவமும்தாம் கைகேயியின் தூய சிந்தை திரியக் காரணமாயின என்று இங்கே கம்பர் உணர்த்துவதைக் காணலாம். ‘இமையோர் மாயை’ என்பதன் மூலம் இயற்கை விதியே இவ்வாறு அவளைத் தூண்டியது என்றும் தெரிவிக்கிறார். மேலும்

‘அரக்கர் பாவமும்

அல்லவர் இயற்றிய அறமும்

துரக்க நல்லருள்

துறந்தனள் தூமொழி மடமான்’ (1484)

என்று இதை விளக்கமாகவே அவர் உணர்த்துகிறார்.

அதே பாடலில்,

‘இரக்கம் இன்மையன்றோ இன்று

இவ்வுலகங்கள் இராமன்

பரக்கும் தொல்புகழ்

அமுதினைப் பருகுகின்றதுவே’

என்று கூறுகிறார். இதன்மூலம் கைகேயியின் இரக்கமின்மை என்ற தீய பண்பினாலேயே இராமன் அளப்பரிய வீரமும் உன்னதமான பண்புகளும் வெளிப்பட்டுப் பெரும்புகழ் பெற்றான். மக்களும் அவனைப் பாராட்டி மகிழ்ந்தனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.

கொடுமனக் கூனி சூழ்ச்சி செய்யாதிருந்தால், தூய கைகேயியின் மனம் திரிந்திருக்காது. அவள் மனம் திரிந்திராவிட்டால் இராமன் காடு சென்றிருக்க மாட்டான். வனவாசம் காரணமாக வெளிப்பட்ட அவனுடைய அளப்பரிய ஆற்றலும் உன்னதமான பண்புகளும் உள்ளேயே அடங்கிக் கிடந்திருக்கும். இராவண வதமும் நிகழ்ந்திராது.

தீயையே எரித்த சீதையின் கற்பின் ஆற்றலும் வெளியுலகுக்குப் புலப்பட்டிராது. பரதனின் மகோன்னதமான பண்பு தெரியாமலே போயிருக்கும். கிட்கிந்தையிலும் இலங்கையிலும் நல்லரசுகள் ஏற்பட வழியில்லாமல் போயிருக்கும். இலக்குவன், அனுமன் ஆகியோருடைய ஒப்பற்ற ஆற்றல்கள் வெளிப்படாது வீணாகியிருக்கும். இராமன் கிட்கிந்தை, இலங்கை அடங்கிய ஒரு பேர ரசுக்குத் தலைவனாக ஆகியிருக்க மாட்டான். இவ்வளவு நன்மைகளும் கூனி, கைகேயி ஆகிய இரு தீய சக்திகளின் தோற்றத்தின் காரணமாகவே ஏற்பட்டன என்பதையே கம்பர் இங்கே காட்ட விரும்புகிறார்.

நல்லவளாயிருந்த கைகேயியே தீயவளாக மாறினாள் என்று காட்டியதன் வாயிலாக ஒரே இடத்திலேயே இவ்விரு வகை முரண்பட்ட பண்புகளும் அமைந்திருந்து, ஒரு பெரிய நண்மைக்காகத் தக்க நேரத்தில் தீய பண்பு செயற்படத் தொடங்கும் என்ற நுட்பத்தையும் கம்பர் உணர்த்துகிறார்.

நன்றி தமிழ் ஹிந்து.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Mar 09, 2016 3:48 pm

நல்ல பகிர்வு தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Mar 09, 2016 9:06 pm

நான்கு அதிதேவர்கள் நாமத்தினால் வாழ்த்துகிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக