புதிய பதிவுகள்
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
57 Posts - 68%
heezulia
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 2%
viyasan
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
234 Posts - 42%
heezulia
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
21 Posts - 4%
prajai
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்க்கை! Poll_c10வாழ்க்கை! Poll_m10வாழ்க்கை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 02, 2016 11:25 am

தலை கலைந்து, முகம் வெளிறி வந்த கணவனை பார்த்தவுடன், ராதாவின் அடி வயிற்றில் பயம், அமிலமாய் உருண்டது.
''என்னாச்சுங்க?''

''எல்லாம் முடிஞ்சு போச்சு,'' என்றவன், சோபாவில் தொப்பென்று அமர்ந்தான். கையில், பாலிதீன் பையில் ஏதோ பார்சல்!
''என்ன சொல்றீங்க...''

''இனி, சொல்றதுக்கு எதுவுமே இல்ல; பெரிய மனுஷங்க கூடிப் பேசி முடிவு செய்துட்டாங்க. கடன் தலைக்கு மேல போயிருச்சு. இனி, பணத்தை கொடுப்போங்கிற நம்பிக்கை, பணம் கொடுத்தவனுக்கு இல்ல. அதனால, கடையை அவன் பேருக்கு எழுதிக் கொடுக்கணும்ன்னு முடிவாகிடுச்சு.

''வெத்து மனுஷனா வந்திருக்கேன்; சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைமைக்கு வந்துட்டோம். இரண்டு பொம்பள புள்ளைங்கள வச்சுக்கிட்டு, இனி, நாம எப்படித்தான் வாழப் போறோமோ...'' என்றான் விரக்தியுடன்!
அவனை எப்படி ஆறுதல் படுத்துவது என தெரியாமல், செயலற்று நின்றாள் ராதா.

''நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதை செயல்படுத்திட்டா, எல்லாருக்கும் நிம்மதி; எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைச்சிடும்,'' என்றான்.

கண்களில் சிறு நம்பிக்கை வெளிச்சம் தோன்ற, அவனை சட்டேன்று நிமிர்ந்து பார்த்தாள் ராதா.
''இந்தா... இதில பூச்சி மருந்து இருக்கு, எடுத்து வை. ராத்திரி, ஏதாவது குளிர் பானத்தில் கலந்து, பசங்களுக்கும் கொடுத்துட்டு, நாமும் போய் சேரலாம். இது தான் ஒரே முடிவு. மானத்தை இழந்து வாழ முடியாது,'' என்றான்.

கடனுக்காக, தன் எலக்ட்ரானிக்ஸ் கடை கைமாறப் போகும் விரக்தியில் கணவன் எடுத்திருக்கும் முடிவைக் கேட்டு, விக்கித்துப் போனாள் ராதா.

''அக்கா... இங்கே பாரேன்... இந்த ஓவியம் நல்லாயிருக்கா...'' என்று கேட்டாள் நந்தனா.
ஓவியத்தை வாங்கிப் பார்த்த ஷோபனா, ''அழகா வரைஞ்சிருக்கியே... அப்படியே சிங்கம் எதிர்ல நிக்கிற மாதிரியே இருக்கு,'' என்றாள்.

''எங்க டீச்சரும் இதைத்தான் சொன்னாங்க. அப்பாகிட்டே சொல்லி, டிராயிங் கிளாஸ்ல சேரப் போறேன்,'' என்றாள் உற்சாகத்துடன்!

''நான் மட்டும் என்ன... பள்ளி ஆண்டு விழாவுல நல்லா டான்ஸ் ஆடினேன்னு எனக்கு பரிசு கொடுத்தாங்கல்ல... எங்க மிஸ் என்னை டான்ஸ் கிளாசில் சேர்ந்து, பரதநாட்டியம் கத்துக்கச் சொல்லியிருக்காங்க.''

''அய்... அப்ப நாம பெரியவங்களானதும், நீ பெரிய டான்சராகவும், நான் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் வரப் போறோம்...'' என்று நந்தனா சொல்ல, இருவரும் சேர்ந்து சிரிக்க, அதை மவுனமாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ராதா.
இரவு உணவின் போது, ''பிள்ளைங்க சாப்பிட்டாங்களா...'' என்று கேட்டவனுக்கு, ''ம்... சாப்பிட்டு, 'டிவி' பார்த்துட்டு இருக்காங்க; நீங்க சாப்பிடறீங்களா...'' என்று கேட்டாள் ராதா.

''சாப்பிடுவோம்; இது, கடைசி சாப்பாடு இல்லயா... திருப்தியா வயிறார சாப்பிடுவோம். போய் எடுத்து வை.''
துக்கம் தொண்டையை அடைக்க, எழுந்தவளிடம், ''அந்த பூச்சி மருந்தையும், குளிர்பான பாட்டிலோடு, நாலு டம்ளரும் கொண்டு வா,'' என்றான்.
அவன் கேட்டவற்றை கொண்டு வந்து அவனருகில் வைத்தாள்.
''வாசல் கதவை தாழ் போட வேணாம்; சும்மா சாத்தி வை,'' என்றவன், ''ராதா... இப்ப உன்கிட்ட எவ்வளவு நகை இருக்கு...'' என்று கேட்டான்.

''பிள்ளைங்க நகை அஞ்சு பவுனோடு, என் நகையையும் சேர்த்தா, 20 பவுன் தேறும்,'' என்றாள்.
''சரி... அதை என் தங்கைக்கு எழுதி வச்சுடறேன். நமக்கான ஈமக் காரியங்களை அவளே செய்யட்டும்; பேப்பர், பேனாவை எடு,'' என்றான்.

எடுத்து அவனிடம் தந்ததும், தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என எழுதி, மேஜையின் மேல் நான்காக மடித்து வைத்து, அதன் மேல் பேப்பர் வெயிட்டை வைத்தான்.

''நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்; உனக்கு வருத்தமில்லையே... போதும் கஷ்டத்தில் உழண்டு வாழ்ந்தது... போய் சேருவோம்,'' என்றவன், நான்கு டம்ளரிலும் குளிர் பானத்தை ஊத்தி, அதில் பூச்சி மருந்தை கலந்தான்.

''போய் ஷோபனாவையும், நந்தனாவையும் கூட்டிட்டு வா,'' என்றான்.
''அதுக்கு முன், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,'' என்றாள் ராதா.
என்ன என்பது போல பார்த்தான்.

''எல்லா பிரச்னைக்கும் தீர்வு, சாவுதான்னு முடிவு செய்துட்டா, இந்த உலகத்தில மனுஷனாய் பிறந்ததில் எந்த பிரயோசனமும் இல்லயே... பிசினசில் நஷ்டம்ன்னா, அதுக்காக வாழவே வழி இல்லாம போயிடுமா... கவுரவம்ங்கிறது நாம நடந்துக்கிற முறையில இருக்கு; திருடாம, பொய் சொல்லாம நேர்மையாக வாழறது தான் கவுரவம். பிசினசுல கடன் வாங்குறதும், நஷ்டப்படறதும் சகஜம். இதில், கவுரவம் பறி போக என்ன இருக்கு...

''உங்களால பிரச்னைய சமாளிச்சு வாழ முடியலங்கிறதுக்காக, நம் பிள்ளைகளோட உயிரை பறிக்க நினைக்கிறது எந்த விதத்தில் நியாயம்?

''நம்மாலே, இந்த உலகத்துக்கு வந்த ஜீவன்களை, நாம் வாழ வைக்கணுமே தவிர, அழிக்கக் கூடாது. அவங்களுக்குள் இருக்கும் ஆயிரம் கனவுகளைக் குழி தோண்டிப் புதைக்க, நமக்கு எந்த உரிமையும் இல்ல.
''கடவுள் நமக்குக் கொடுத்த உயிரை அழிக்க, நமக்கே உரிமையில்லாத போது, உங்களால வளர்த்து, ஆளாக்க முடியாதுங்கிற காரணதுக்காக, அந்த பிஞ்சு உயிர்களை அழிக்க நினைக்கறீங்களே... இது சரியா?
''ஒரு அப்பாவா உங்களால, பிரச்னைகளை சமாளிச்சு, பிள்ளைகள வாழ வைக்க முடியாம போகலாம். ஆனா, பெத்த தாயான என்னால, என் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய கொடுக்க முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

''கீழே விழறது தப்பு இல்ல; ஆனா, இனி எழுந்திருக்கவே முடியாதுன்னு நினைக்கிறோம் பாருங்க... அது தான் தவறு,'' என்று சொன்னவள், விஷம் கலந்து குளிர் பானம் ஊற்றப்பட்ட மூன்று டம்டளர்களை மட்டும் எடுத்து போய் வாஷ்பேசினில் கொட்டியவள், திரும்பி வந்து, ''இதோ... உங்க முன்னால டம்ளரில் இருக்கிற விஷத்தை குடிக்கிறதும், கீழே ஊத்தறதும் உங்க முடிவு. ஆனா, என்னால இந்த உலகத்தில பிரச்னைகளை சமாளிச்சு வாழ்ந்து, என் பெண்கள கரையேத்த முடியும். எனக்கு சாக விருப்பமில்ல; நான் போய் தூங்கறேன்,'' என்று கூறி அங்கிருந்து அகன்றாள்.

அடுத்த பத்தாவது நிமிஷம், வாஷ்பேசினில் தண்ணீர் ஊற்றும் சப்தம் கேட்டது.
தன்னருகில் வந்து படுக்கும் கணவனின் மார்பில், அவள் கைகள், ஆதரவாய் விழுந்தன.

பரிமளா ராஜேந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84089
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 02, 2016 11:56 am

'கீழே விழறது தப்பு இல்ல;
ஆனா, இனி எழுந்திருக்கவே முடியாதுன்னு நினைக்கிறோம் பாருங்க...
அது தான் தவறு,''

-
நெருக்கடியான கால கட்டங்களில் ஆண்களை விட
பெண்களே உறுதியான முடிவு எடுக்கிறார்கள்...!!
-
வாழ்க்கை! 3838410834


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 02, 2016 1:15 pm

பெண்கள் உடல் அளவில் மென்மையானவர்கள் ; ஆனால் உள்ளத்தளவில் திண்மையானவர்கள்;
ஆண்கள் உடல் அளவில் திண்மையானவர்கள் ; ஆனால் உள்ளத்தளவில் சபலம் மிக்கவர்கள் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 1:30 pm

பெண்கள் ---மெண்மை ---திண்மை ஓகே
ஆண்கள் ---திண்மை --சபலம் ....ஒதைக்குதே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 02, 2016 1:50 pm

T.N.Balasubramanian wrote:பெண்கள் ---மெண்மை ---திண்மை ஓகே
ஆண்கள் ---திண்மை --சபலம் ....ஒதைக்குதே

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191535

கைலாய மலையைத் தூக்கும் அளவுக்கு உடல் திண்மை பெற்றிருந்த இராவணனை வீழ்த்தியது , அவன் சீதை மேல் கொண்டிருந்த சபலம்தானே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 1:57 pm

ஜெமினி கணேசனை , "பல பெண்கள் ,உங்கள்பால் ஈர்க்கப் படுகின்றனரே ,என்ன ரஹசியம்" ,என ஒரு நிருபர் கேட்க ,
அவர்களின் சபலம்தான் எனக்கு பலம் என்றாராம் .

சமீப கால TV ஷோவில் ஆங்கர் ஒருவர் , பிரபல நடிகருக்கு , முத்தம் கொடுத்தது நினைவுக்கும் வருகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 02, 2016 4:25 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 02, 2016 10:03 pm

கதை அருமை அம்மா ...வாழ்க்கைக்கு தேவையான கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக