புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
4 Posts - 5%
Rutu
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
3 Posts - 3%
Jenila
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
2 Posts - 2%
prajai
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
2 Posts - 2%
viyasan
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுத்துண்ணல் அறம் :


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 16, 2018 8:57 pm

பகுத்துண்ணல் அறம் :
======================
" Charity begins at home " என்பது ஆங்கிலப் பழமொழி .

அறச்செயல்கள் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன என்பது இதன் பொருள் . குழந்தைகளைச் சிறுவயது முதற்கொண்டே அறம் செய்யப் பழக்கவேண்டும் . பக்கத்து வீட்டுக் குழந்தைப் பார்த்திருக்க , நம்வீட்டுக் குழந்தைத் தனித்துத் தின்பண்டங்களை உண்ண நாம் அனுமதிக்கக் கூடாது . " அந்தக் குழந்தைக்கும் கொஞ்சம் கொடு ; நீ மட்டும் தனித்து உண்டால் உன் வயிறு வலிக்கும் " என்று பொய் சொல்லியாவது , பகுத்துண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளின் உள்ளத்தில் வளர்க்கவேண்டும் .

குழந்தைகளால் தனித்து அறம் செய்ய இயலாது . அதற்குத் தேவையான பொருள் வசதியும் அவர்களிடம் இருக்காது . ஆகவேதான் குழைந்தைகளைப் பார்த்து

" அறம் செய்ய விரும்பு " என்றால் ஒளவைப் பாட்டி . சிறுவயதில் அந்தப் பிஞ்சு நெஞ்சில் தூவப்படும் இந்த விருப்ப விதைதான் , வருங்காலத்தில் ஈதல் அறமாகவும் , ஒப்புரவு அறமாகவும் ஓங்கி வளர உதவி செய்யும் .

பகுத்துண்ணல் அறம் பற்றி நூல் நெடுகிலும் ஐயன் வள்ளுவர் பேசுவார் . பகுத்து உண்ணலைப் " பாத்தூண் " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் . காமத்துப் பாலிலும் பகுத்துண்ணல் அறம் பேசுவார் .

தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து , தன் உழைப்பால் வந்த உணவுப் பொருளைத் தன் சுற்றத்தாரோடு பகிர்ந்துண்ணும் இன்பமே அலாதிதான் . அந்த இன்பம் எப்படிப்பட்ட இன்பம் தெரியுமா ? தன் காதலியை இறுகத் தழுவித் துய்க்கும் இன்பத்திற்கு நிகரானது என்று சொல்கிறார் .

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு . ( 1107 )

கொல்லாமை அதிகாரத்தில் ஒன்பது குறட்பாக்களும் கொல்லாமை அறம் பேச , ஒரேயொரு குறள்மட்டும் பகுத்துண்ணலைப் பற்றிப் பேசுகிறது .

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை . ( 322 )

இதிலிருந்து நாம் அறிவது என்ன ? பகுத்துண்ணாமை கொலைக்கு நிகரானது என்ற வள்ளுவனின் நெஞ்சத்தை அறிகிறோம் . பல்லுயிர் என்றதனால் , பகுத்துண்ணல் , மனிதர்களோடு மட்டுமன்றி , நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களோடும் , பறவைகளோடும் , இன்னபிற உயிரினங்களோடும் இருக்கவேண்டும் என்பது பொருளாகும் .

சங்கப் பாடல்களிலேயே பகுத்துண்ணல் அறம் பேசப்படுகிறது .

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே !

என்று ஒளவையார் அதியமானின் பகுத்துண்ணும் பண்பைப் பாராட்டுகிறார் .

கொஞ்சம் கள் கிடைத்தால் , அதை ஒளவைக்குக் கொடுத்துவிடுவானாம் . நிறைய கள் கிடைத்தால் , ஒளவையுடன் தானும் பகிர்ந்து உண்ணுவானாம் .

பகுத்துண்ணலின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் விளங்குகிறது . " விருந்து " என்னும் சொல்லுக்குப் புதிது , புதியவர் என்று பொருள் . தற்காலத்தில் இச்சொல் , தன் உண்மைப் பொருளை இழந்து உணவைக் குறித்து நின்றது .

விருந்தினர் புறத்தே இருக்க , அதாவது வீட்டின் திண்ணையிலே இருக்கத் தான்மட்டும் , வீட்டின் உள்ளே உணவருந்துதல் பகுத்துண்ணல் ஆகாது . அவரைப் பக்கலில் அமர்த்தி , அவரோடு சேர்ந்து உண்ணுதலே பகுத்துண்ணல் அறமாகும் . பகுத்துண்ணலின் மற்றோர் பகுதி சுற்றம் பேணல் ஆகும் . காக்கையைப் போல , சுற்றத்தாரோடு கூடி உண்ணும் பழக்கம் கொண்டவனுக்கே செல்வம் உண்டாகும் என்று கூறுகிறார் .

சிலருக்கு மலைபோல செல்வம் இருந்தாலும் , உற்றார் , உறவினர்களை அண்ட விடார் .
அவனுக்கு உறவில்லாத எவனோ ஒருவன் , அவனிடம் ஒட்டிக்கொண்டு , அந்த செல்வத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பான் . அத்தகைய பகுத்துண்ணல் பண்பு இல்லாதவனைப் " பேதை " என்று வள்ளுவர் அழைப்பார் .

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைப்
பெருஞ்செல்வம் உற்றக் கடை .

என்பது குறள் . அதாவது பேதையிடம் செல்வம் சேர்ந்தால் , இரத்த சொந்தங்கள் பசித்திருக்க , அயலான் உண்டு பசியாறுவான் என்பது இக்குறளின் கருத்து .

பகுத்துண்ணலின் அடுத்த பகுதி குடும்பம் ஆகும் . கணவன் , மனைவி , குழந்தைகள் , உடன் பிறந்தோர் , பெற்றோர் என்று அனைவரும் கூடி உண்ணுதலாகும் . தாய் ஓரிடத்தும் , தந்தை ஓரிடத்தும் , குழந்தைகள் ஓரிடத்தும் இருக்கின்ற இந்நாளில் , பகுத்துண்ணல் இன்பத்தைப் பெறுதல் அரிது .

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை .

நாம் ஈட்டும் செல்வத்தில் இறந்த நம் முன்னோர்களுக்கும் , தெய்வத்திற்கும் கொஞ்சம் செலவு செய்யவேண்டும் என்பது இக்குறளின் கருத்தாகும் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 16, 2018 9:01 pm

அருமை அருமை அண்ணா ... பகுத்துண்ணல் அறம் : 3838410834



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக