புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
--பெரியாரும் மகா பெரியவரும்----மஹா பெரியவா (தொடர்)V
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
மகா பெரியவா
காலுக்கு கீழே உள்ள மூலிகை!
பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.
ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”
அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான். ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.
“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”
“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”
“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”
“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.
ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?
அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !
“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள். இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை! ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.
பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.
“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.
மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……
“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.
“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!
என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!
“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.
” வலிக்கறதா?”
“இல்லை”
“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”
“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது
இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி, பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.
நன்றி மின்னஞ்சல்
ரமணியன்
மகா பெரியவா
காலுக்கு கீழே உள்ள மூலிகை!
பெரியவாளுடைய அனுக்ரஹத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது! ஜாதி, மதம், இனம், மொழி எதுவுமே, யாருக்குமே பெரியவாளிடம் வருவதற்கு ஒரு தடையாக இருந்ததில்லை.
ஒரு வைஷ்ணவ குடும்பம்பத்தை சேர்ந்தவர்கள் பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களுடைய ப்ராரப்தம், குடும்பத்தில் தொடர்ந்து ஒரே கஷ்டங்கள்.
அவர்களுக்குத் தெரிந்த ஒரு தீக்ஷதர் சொன்ன பரிஹாரத்தால், குத்துவிளக்கில் ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை ஆவாஹனம் பண்ணி நித்யம் பூஜை பண்ணிக்கொண்டு வந்தாள் அந்த வீட்டு அம்மா.
ஒருநாள் ஒரு பரதேஸி, அவர்கள் வீட்டு முன்னால் வந்து நின்றபோது, அந்த அம்மா ஏதோ சில்லறை போட்டாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,
“குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒங்கண்ணுக்கு தெரியலியே?” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அந்த அம்மா அதிர்ந்து போனாள் ! “நான் பண்ற குத்துவிளக்கு பூஜை, இவனுக்கு எப்டி தெரிஞ்சுது?…..காலுக்கு கீழ மூலிகையா?…”
அந்தப் பரதேஸியோ, ஏதோ இவளிடம் மட்டும் பேச வந்தது போல், வேறு எந்த வீட்டிலும் யாஸிக்காமல் போய் விட்டான். ஒன்றும் புரிபடாமல் பெரியவாளிடம் வந்தாள்.
“ஆத்துல ரொம்ப கஷ்டம்…..குத்துவெளக்குல துர்க்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதியை ஆவாஹனம் பண்ணி, பூஜை பண்ணிண்டிருக்கேன் பெரியவா…..ரெண்டு நாள் முன்னாடி ஒரு பிச்சைக்காரனாட்டம் ஒத்தன் வந்தான். “குத்துவெளக்கு பூஜையெல்லாம் உபயோகப்படாது…. ஒன்னோட காலுக்கு கீழே இருக்கற மூலிகை ஒன் கண்ணுக்கு தெரியலியே?”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் பெரியவா…..எனக்கு ஒண்ணுமே புரியல….பெரியவாதான் வழி காட்டணும்”
“ஒங்காத்ல கருந்துளஸி இருக்கோ?…..”
“இல்லை பெரியவா! துளஸி வெச்சாலே எப்பிடியோ பட்டுப் போய்டும் ……”
“அதான்! அவன் சொன்ன மூலிகை! கருந்துளஸி வெச்சு பூஜை பண்ணு”
பெரியவாளே, கருந்துளஸி பூஜை பண்ணு என்றதால், மறுபடி கருந்துளஸி பூஜை பண்ண தொடங்கினாள்.
ஆஸ்சர்யம்! கருந்துளஸி இப்போது கப்பும் கிளையுமா சின்ன ஆலமரம் மாதிரி வளர ஆரம்பித்தது. அது வளர வளர அவர்களுடைய துன்பங்களும் குறைய ஆரம்பித்தது.
கருந்துளஸி வருவது அபூர்வம். வந்ததை பூஜை பண்ணுவது மிகவும் ஸ்லாக்யம். பெரியவா வாக்கில் வந்த பூஜை இல்லையா?
அந்த வைஷ்ணவ பக்தையின் நாத்தனார் குழந்தைக்கு திடீரென்று கழுத்தில் பயங்கர வலி!
டாக்டர்களோ ‘நரம்புலதான் ப்ராப்ளம்! மேஜர் operation’ பண்ணித்தான் ஆகணும் !” என்று சொல்லிவிட்டார்கள் !
“நா….சொல்றதை கேளு! கொழந்தையை பெரியவாகிட்ட கூட்டிண்டு போ!……”
குழந்தையின் அம்மாவும், குழந்தையை கூட்டிக்கொண்டு முதல் முதலாக, தன் மன்னியின் நம்பிக்கைக்காக, காஞ்சிபுரம் ஓடினாள். இவர்கள் போன அன்று பெரியவா காஷ்ட மௌனம்! இவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டாலும், ஒன்றும் பதில் சொல்லவில்லை! ஆனால், தன் கழுத்தை தடவிக்கொண்டே உள்ளே போய்விட்டார்.
பையனின் பெற்றோருக்கு ஒரே ஏமாற்றம்.
“பெரியவாளை பத்தி கூடை கூடையா சொல்லுவேளே மன்னி! ஒரு ஜாடை கூட காட்டலியே! என் கொழந்தையை கைவிட்டுட்டாரே! ஒங்க பெரியவா! ”
புலம்பினார்கள்.
மறுநாள் ஆபரேஷனுக்காக ஆஸ்பத்ரியில் அட்மிட் ஆவதற்காக கிளம்பும்போது, குழந்தை சொன்னான்……
“அம்மா! எனக்குத் தொண்டை என்னவோ மாதிரி பண்றது!…..”
பையன் சொன்னதை கேட்டதும் குடும்பமே கதி கலங்கியது. ஒரே வாந்தியான வாந்தி !
வீட்டின் பின்பக்கம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையுடன் குடும்பமே நின்று கொண்டிருந்தது.
“டொடக்” ன்னு ஏதோ ஒன்று வாந்தியோடு வெளியே வந்து விழுந்தது!
என்னது?……ஒரு தேங்காய் ஓட்டின் சில்லும் சேர்ந்து வெளியே வந்தது.
அதன்பிறகு வாந்தியும் நின்றது!
“அம்மா! இப்போ செரியாப் போச்சும்மா!…”
குழந்தையின் சிரிப்பில் நிம்மதி அடைந்தனர். டாக்டரிடம் போனதும், பையனின் கழுத்தில் அழுத்தினார்.
” வலிக்கறதா?”
“இல்லை”
“x-ray ரிப்போர்ட்லயும் ஒண்ணுமில்லேன்னு வந்திருக்கு….அதுனால, operation தேவையில்லை”
“பெரியவா ஒரு ஜாடை கூட காட்டலியே?….கை விட்டுட்டாரே! ஒங்க பெரியவா…”
அன்று அப்படி அங்கலாய்த்தவர்கள்…..உடனே அந்த மஹா வைத்யநாதனை தர்ஶனம் பண்ண, குழந்தையோடு காஞ்சிபுரம் ஓடினார்கள்! பெரியவாளிடம் பக்தி பண்ணும் குடும்பங்களில் இன்னொரு குடும்பமும் சேர்ந்தது
இந்த ப்ரபஞ்சத்தில், சேதனமோ, அசேதனமோ எல்லாவற்றின் அசைவுகளும், பாதிப்பை [நல்லது, கெட்டது] உண்டாக்கும். ஸாதாரணமாக நாம் பேசுவது கூட இப்படித்தான்! அதனால்தான் அந்தக் காலங்களில், கண்ட வார்த்தைகளை சொல்லாமல், நல்லதையே பேசு என்பார்கள். வேத ஶப்தங்கள், பகவந்நாமம் மாதிரி, பெரியவாளின் ஒவ்வொரு அசைவும், அசைவின்மையும் ஆயிரமாயிரம் விஷயங்களை ப்ரபஞ்சத்தில் உண்டாக்கும்.
நன்றி மின்னஞ்சல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185729ayyasamy ram wrote:இன்று, மஹா அனுஷம்.
இது தவிர, ஸ்ரீ மஹா பெரியவாளின் நினைவு நாளும் கூட.
ஆதியும் அந்தமும் இல்லா அந்தப் பரம்பொருளின் பிறந்த
நக்ஷத்திரமும், உடலை உகுத்து மறைந்த அந்த நாளும்
ஒரே நாளாக வருவதும் மிகப் பொருத்தமாகத்தான் தோன்றுகிறது.
-
ஆமாம் ராம் அண்ணா, இன்று சங்கரமடம் கோலாகலத்தில் இருக்கும் பெரம்பூரில் ரத உத்சவம் கூட பண்ணுவா.....நாங்க அது பின்னாலேயே போவோம்..............ஹும்..........அந்த காலம் எல்லாம் இப்போ நினைவில் மட்டுமே இருக்கு.............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
க்ரிஷ்ணாம்மா
சிலையின் கண்களிலும் ஒளி!
பார்க்காமல் இருப்பேனா ?
மெழுகு சிலையா இல்லைஇல்லை அவரே உட்கார்ந்து இருப்பதே போல் தோற்றம்.
அவர் கால்கள் அதில் உள்ள நகங்கள்
கை தேர்ந்த கலைஞனுக்கு மீண்டும் ஒரு வணக்கம் .
இவர் சிலை வடிக்க என்ன தபசு செய்தானோ இவன் .
ரமணியன்
அந்த மகானின் மெழுகு சிலையை பார்த்தோம், அப்படியே அவரை சேவிப்பது போலவே இருந்தது ஐயா.............நீங்கள் பார்த்திருக்கீங்களா ? புன்னகை
சிலையின் கண்களிலும் ஒளி!
பார்க்காமல் இருப்பேனா ?
மெழுகு சிலையா இல்லைஇல்லை அவரே உட்கார்ந்து இருப்பதே போல் தோற்றம்.
அவர் கால்கள் அதில் உள்ள நகங்கள்
கை தேர்ந்த கலைஞனுக்கு மீண்டும் ஒரு வணக்கம் .
இவர் சிலை வடிக்க என்ன தபசு செய்தானோ இவன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185749T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மாஅந்த மகானின் மெழுகு சிலையை பார்த்தோம், அப்படியே அவரை சேவிப்பது போலவே இருந்தது ஐயா.............நீங்கள் பார்த்திருக்கீங்களா ? புன்னகை
சிலையின் கண்களிலும் ஒளி!
பார்க்காமல் இருப்பேனா ?
மெழுகு சிலையா இல்லைஇல்லை அவரே உட்கார்ந்து இருப்பதே போல் தோற்றம்.
அவர் கால்கள் அதில் உள்ள நகங்கள்
கை தேர்ந்த கலைஞனுக்கு மீண்டும் ஒரு வணக்கம் .
இவர் சிலை வடிக்க என்ன தபசு செய்தானோ இவன் .
ரமணியன்
ஆமாம் நாங்களும் ஒரு நிமிடம் அசந்தே போனோம் ....ஆ அவரா? என்று
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மிகவும் நன்றி ஐயா, அருமையான பதிவு ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தெய்வ மகனின் தெய்வத் தாய்
காஞ்சிப் பெரியவர் 1907ம் ஆண்டு தனது 13ம் வயதில் சந்நியாச வாழ்வை ஏற்றுக் கொண்டார் .
ஒருவர் சந்நியாச வாழ்வை ஏற்றப்பின் தாயை பார்க்கக்கூடாது என்பது விதி . அதன் படி பெரியவரும் தாயாரிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை
1932இல் ஆந்திராவில் சித்தூர் அருகிலுள்ள நகரி என்னும் ஊருக்கு பெரியவர் விஜயம் செய்து இருந்தார்.அப்போது கும்பகோணத்தில் இருந்து ஒரு தந்தி காஞ்சிபுரத்திலுள்ள மடத்து நிர்வாகிக்கு அனுப்பப்பட்டு இருந்தது . அதில் பெரியவரின் தாயாரான மகாலட்ஷுமி அம்மையார் சிவபதம் அடைந்த செய்தி இடம் பெற்றிருந்தது .
தந்தியுடன் சித்தூர் வந்த மடத்தின் நிர்வாகியை கண்டதுமே ," கும்பகோணத்திலிருந்து தந்தி வந்திருக்கிறதா? என்று கேட்டார் .
"ஆம் சுவாமி " என்ற நிர்வாகியிடம் மேற்கொண்டு பெரியவர் அதைப் பற்றி கேட்கவில்லை .
அப்போது பெரியவருடன் உரையாடிக்கொண்டு இருந்த சில பண்டிதர்கள் தந்தியைப் பற்றி அறிய முயன்றனர் . சில வினாடிகள் மவுனம் காத்த பெரியவர் அவர்களிடம் ,"தாயாரின் வியோகத்தைக் (மரணச் செய்தி ) கேட்ட சன்யாசி செய்யவேண்டியது என்ன ? என்று கேட்டார் ..
தந்தியைப் பார்க்காமலே தன் தாயார் சிவலோக பதவி அடைந்ததை பெரியவர் எப்பிடி அறிந்தார் என்று பண்டிதர்கள் ஆச்சர்யப்பட்டனர் .ஆனாலும் , அது பற்றி எதுவும் கேட்காமல்,பெரியவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.
உடனே பெரியவர் நகரியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்டுப் பகுதியை அடைந்தார் . அங்குள்ள அருவியில் நீராடினார்.பெரியவரை ஈன்றெடுத்த அந்தத்தாய் அவருக்கு மட்டுமல்ல......தங்களுக்கும் தாயே என்ற உணர்வுடன் பண்டிதர்களும், பக்தர்களும் அங்கு நீராடினார் .
காஞ்சி பெரியவரின் தாயார் மறைந்தது 1932, ஜூன் 14.அன்று ஏகாதசி திதியாக இருந்தது .
ஏகாதசி மரணமும் ,துவாதசி தகனமும் பெரும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம்
மஹா பெரியவரின் நினைவு நாளும் அதே துவாதசியில் வந்து இருக்கிறது .அந்த தெய்வமகனை பெற்ற தெய்வத்தாயை மனதார வணங்குவோம் .
நன்றி ஆன்மிக மலர்
ரமணியன்
காஞ்சிப் பெரியவர் 1907ம் ஆண்டு தனது 13ம் வயதில் சந்நியாச வாழ்வை ஏற்றுக் கொண்டார் .
ஒருவர் சந்நியாச வாழ்வை ஏற்றப்பின் தாயை பார்க்கக்கூடாது என்பது விதி . அதன் படி பெரியவரும் தாயாரிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை
1932இல் ஆந்திராவில் சித்தூர் அருகிலுள்ள நகரி என்னும் ஊருக்கு பெரியவர் விஜயம் செய்து இருந்தார்.அப்போது கும்பகோணத்தில் இருந்து ஒரு தந்தி காஞ்சிபுரத்திலுள்ள மடத்து நிர்வாகிக்கு அனுப்பப்பட்டு இருந்தது . அதில் பெரியவரின் தாயாரான மகாலட்ஷுமி அம்மையார் சிவபதம் அடைந்த செய்தி இடம் பெற்றிருந்தது .
தந்தியுடன் சித்தூர் வந்த மடத்தின் நிர்வாகியை கண்டதுமே ," கும்பகோணத்திலிருந்து தந்தி வந்திருக்கிறதா? என்று கேட்டார் .
"ஆம் சுவாமி " என்ற நிர்வாகியிடம் மேற்கொண்டு பெரியவர் அதைப் பற்றி கேட்கவில்லை .
அப்போது பெரியவருடன் உரையாடிக்கொண்டு இருந்த சில பண்டிதர்கள் தந்தியைப் பற்றி அறிய முயன்றனர் . சில வினாடிகள் மவுனம் காத்த பெரியவர் அவர்களிடம் ,"தாயாரின் வியோகத்தைக் (மரணச் செய்தி ) கேட்ட சன்யாசி செய்யவேண்டியது என்ன ? என்று கேட்டார் ..
தந்தியைப் பார்க்காமலே தன் தாயார் சிவலோக பதவி அடைந்ததை பெரியவர் எப்பிடி அறிந்தார் என்று பண்டிதர்கள் ஆச்சர்யப்பட்டனர் .ஆனாலும் , அது பற்றி எதுவும் கேட்காமல்,பெரியவர் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தனர்.
உடனே பெரியவர் நகரியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்டுப் பகுதியை அடைந்தார் . அங்குள்ள அருவியில் நீராடினார்.பெரியவரை ஈன்றெடுத்த அந்தத்தாய் அவருக்கு மட்டுமல்ல......தங்களுக்கும் தாயே என்ற உணர்வுடன் பண்டிதர்களும், பக்தர்களும் அங்கு நீராடினார் .
காஞ்சி பெரியவரின் தாயார் மறைந்தது 1932, ஜூன் 14.அன்று ஏகாதசி திதியாக இருந்தது .
ஏகாதசி மரணமும் ,துவாதசி தகனமும் பெரும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம்
மஹா பெரியவரின் நினைவு நாளும் அதே துவாதசியில் வந்து இருக்கிறது .அந்த தெய்வமகனை பெற்ற தெய்வத்தாயை மனதார வணங்குவோம் .
நன்றி ஆன்மிக மலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பதிவு ஐயா, தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189372சசி wrote:நல்ல பதிவு ஐயா, தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்.
இவரை பற்றி அறிய அறிய ஆச்சர்யம் அதிகரிக்கும் .
ஈகரை உறவுகளுக்காக எனது நெருங்கிய உறவினரின் நண்பர் விஷயத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல தொடர் ஐயா. இவரின் மகிமைகளை மேலும் பகிருங்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மகா பெரியவா III
உறவினர் கூற ......
எந்தன் உறவினர் டில்லியில் அயல் நாட்டு தூதரகத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார் .
அவருடன் அவருடைய நெருங்கிய நண்பரும் அதே தூதரகத்தில் , வேறொரு பிரிவில் , அதே மாதிரி பதவியில்
இருந்தார் . இருவரின் வீட்டிலும் பெண்களும் அதே நட்புடன் பழகி , ஒரு சிறந்த நட்பை வளர்த்து வந்தனர் .
நண்பருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் . காலை மாலை பூஜை புனஸ்காரங்கள் .குழந்தை கிடையாது .
காஞ்சி பரமாச்சார்யாள் மீது அதீத பக்தி . வருடம் ஒரு முறையாவது தம்பதி சமேதராய் வந்து தரிசித்துப் போவார்கள் .
வருடங்கள் பல கடந்த பின் , உழைத்தது போதும் என்று தோன்றியது . காஞ்சி மடத்தில் சேர்ந்து ,பக்தர்களுக்கு சேவை செய்யலாம் என்று எண்ணம் . அவரது மனைவிக்கும் சம்மதமே .ஒரு நல்ல நாள் பார்த்து , காஞ்சிபுரம் வந்தனர் .
மறுநாள் காலை குளித்து , செய்யவேண்டிய பூஜைகளை முடித்துக் கொண்டு , பெரியவா தரிசனத்துக்கு போறா.
அவர் முறை வந்த போது , பெரியவாளை பாத்து மரியாதையாக வாய் பொத்தி நிக்கறா என்ன சொல்லறது , எப்பிடி சொல்லறதுன்னு தவிக்கிறா பெரியவா கண்களை பாக்கறா ..கண்கள் கலங்குகின்றன .பேச நினைத்ததெல்லாம் மறந்து போய் அப்பிடியே நிக்கறா .
புன்சிரிப்போட பெரியவா ," என்ன மடத்துலே சேர்ந்துக்கனுமா " என்கிறார் .
கண்களில் இருந்து தாரை தாரையா கண்ணீர் .பேச முடில்லெ .தலையை ஆட்டிண்டு ஆமாம் என்கிறார் .
பெரியவா ," டில்லி போயிட்டு , முறைப்படி எல்லாத்தையும் செஞ்சுட்டு வா " என்கிறார் .
பெரியவா உத்தரவு என்று கூறி , சாஷ்டங்கமா விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு ,பிரசாதம் வாங்கிக்கொண்டு ,
சந்தோஷத்துடன் டில்லி திரும்புகின்றனர் .
மனைவி , என்னன்னா , பெரியவாள பாத்து அது கேட்கப்போறேன் இது கேட்கப்போறேன்னு சொல்லிட்டு , ஒண்ணுமே
பேசாமலே , காரியத்தை சாதித்து கொண்டேளே என்று கிண்டல் அடித்தாள் .
அவரும் ,"என்னமா ,பெரியவாளப் பாத்தா பேசவா தோணறது ? அவருக்கு தெரியாதா,நம்ம மனசுலே என்ன ஓடறதுன்னு . இனிமே டில்லிலே போய் , வேலை ரிசைன் பண்ணிட்டு , எல்லோருக்கும் பட்டுவாடா பண்ண
வேண்டியதை, பண்ணிட்டு மடத்துலே சேரனும் ,என்றார் ..
ரெண்டு மாதங்கள் ரெண்டு நிமிஷமாக தோன்றும் வண்ணம் எல்லாம் முடித்து , காஞ்சிபுரம் வந்து , பெரியவாள
தரிசனம் பண்ணினார் .
பெரியவா கண்ணசைப்புக்கு காத்து இருந்தார் போல் , ஸ்ரீகாரியம் ,வந்து இவரை அழைத்துப் போய் ,இவர் பொறுப்பில் நடக்கவேண்டிய காரியங்களை எல்லாம் விலாவரியாக சொன்னார் .
வருடங்கள் பல கடந்தன .
மனதிற்கு நிம்மதி இந்த தம்பதிகளுக்கு . வீட்டில் செய்ய வேண்டிய நித்யானுஷ்டங்களை , முடித்துக் கொண்டு நண்பர்
மடத்திற்கு வந்து அவர் கடமையை செவ்வனே செய்து கொண்டு இருப்பார் . சமயத்தே பெரியவாள தரிசித்து விபுதி பிரசாதம் வாங்கி , வீடு சென்று மதிய உணவு அருந்தி , மாலை நேரத்தில் திரும்பி மடம் வருவார் .
அவரது மனைவியோ ,வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு , அம்மனை தரிசித்து விட்டு , பெரியவாள பாத்து ஆசீர்வாதம், குங்கும பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு வருவார் .இருவரிடமும் ஒரு சாவி இருந்ததால் , முதலில் வந்தாலும் மற்றவர் வருகைக்காக காத்திருக்க வேண்டாம் என்பதால் இந்த அரேஞ்ச்மென்ட் .பெரியவாளும் அப்போதைக்கு அப்போ பிரசாதம் தருகையில் ஷேம லாபங்களை கருணையுடன் விசாரித்து பிரசாதம் தருவார் .
பக்தியுடன் வாங்கி , அவரை விட்டு விலகி , வெளி வந்து நெற்றியில் பிரசாத விபுதி /குங்குமத்தை இட்டுக் கொள்வது அவர்கள் வழக்கம் .
இப்பிடிப் பட்ட ஒரு நாளில் , நண்பரும் பெரியவா பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போறார் .
எதிர்த்தார் போல் அவருடைய மனைவி , என்னவோ ஏதோ வேலை ,இப்பதான் முடிந்தது . நீங்க ஆத்துக்கு போயிண்டே
இருங்கோ . பெரியவாள தரிசனம் பண்ணிவிட்டு வந்துடறேன் . பெரியவ இருக்களோனோ என்று கேட்டுக்கொண்டே
மடத்தை நோக்கி நடக்கிறார் . நண்பரும் , சீக்கிரம் போம்மா , நேரம் ஆயிடுத்து என்கிறார் .
மனைவியும் , வேகமாக உள்ளே நுழைகிறார் .சரியான நேரம் .
ஒரு நிமிடம் தவறி இருந்தாலும் , பெரியவா தரிசனம் கிடைத்து இருக்காது .மூடப்பட போகிற திரை , பெரியவா கண்ணசைவில் ,சிறிது நின்றது
பெரியவாள தரிசித்து கை நீட்டி அவர் கொடுக்கும் பிரசாதத்தை வாங்குகிறார் .
இவர்தான் கடைசி , பிரசாதம் கொடுக்கும் போது பெரியவா late ஆயிடுத்து என்கிறார் .
இவரும் , என்னவோ தெரில்லே, பெரியவா , மச மச ன்னு வேலை , அதான் நேரமாகி விட்டது என்கிறார்.
திரைப் போடப்படுகிறது .
இவர் பெரியவா இருந்த திசைப்பக்கம் கை தூக்கி கும்பிட்டு விட்டு ,வீடு போக வெளியே வருகிறார் .நடந்து கொண்டே
பெரியவா கொடுத்த பிரசாதம் இட்டுக்கொள்ள ,கையை திறந்து,விரலால் ,ஒத்த , ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார்.. தாழம்புமனத்துடன் மிருதுவாக இருக்கும் குங்குமம் அன்று கர கர என்று இருந்தது . பார்த்தால் , விபுதி .
ச்சே இனிமே இப்பிடி அரக்க பறக்க கடைசி நேரத்தில் வரக்கூடாது . . நமக்காகவே , பெரியவா , திரையை மூட வேண்டாம் எனக்கூறி பிரசாதம் கொடுத்தார் .பிரசாதம் மாறி விட்டது என்று தனக்கு தானே கூறிக்கொண்டு ,
வீடு திரும்பினார் ..
ஊஞ்சலில் நண்பர் படுத்து இருந்தார் எப்போதும் போல் . மனைவி கைகால் அலம்பி , வாங்கோன்னா , தட்டு வைக்கிறேன் என்று கூறி , சமையலறை சென்று , பலகை போட்டு தட்டு வைத்து , டம்ப்ளரில் நீர் எடுத்து வைத்து ,
இவரை கூப்பிட வருகிறார் .
வரேளா என்று கூப்பிட்டுக் கொண்டே ஊஞ்சல் பக்கம் வந்தார். பதில் ஒன்னும் இல்லையே என்ன ஆச்சு இவருக்கு , தூங்கிட்டாரா என்ன என்று .....யோசித்துக்கொண்டே அருகில் வருகிறார் .
நண்பரின் மேல் துண்டு , ஈரமாக இருக்கிறது . பேச்சு மூச்சு காணோம் .ஏதோ பொறி தட்ட பக்கத்து வீட்டுக்கு ஓடிப் போய் , அம்பி , சீக்கிரம் வாடா , மாமாக்கு ஏதோ போல் இருக்கு ,டாக்டரை உடனே கூட்டி வா என்று அழுதுகொண்டே கூறுகிறார் . அவர் வீட்டில் இருந்து ஓரிருவர் ஓடி வந்து , ஈரத்தை துடைத்து விசிறி , மாம்மா மாமா என்று கூப்பிடுகிறார்கள் . ஆளாளுக்கு ஒன்று கூறுகிறார்கள்
இதற்குள் டாக்டரும் வந்து சேர , கூட்டம் போடாதீங்கோ , கொஞ்சம் காத்து வரட்டும் என்கிறார் டாக்டர் .
பிறகு கை பிடித்து நாடிப் பார்த்து , டார்ச் லைட் எடுத்து கண்களில் ஒளி பாய்ச்சி ,
சிறுது பெருமூச்சு விட்டு , அங்கு இருந்த பெரியவரை தனியே அழைத்து , 20 நிமிஷத்திற்கு மேல் ஆயிருக்கும்.
மேலே ஆகவேண்டியதை பாருங்கோ. மாமிக்கு ஆறுதல் சொல்லுங்கோ . உங்காத்து மாமி வரச்சொல்லி இவாளுக்கு துணை இருக்கச் சொல்லுக்கோ என்று கூறி விட்டு ச் சென்றார் ..
.
(உறவினர் கூறிய சாராம்சம்
இன்று எழுத்துருவில் )
ரமணியன்
உறவினர் கூற ......
எந்தன் உறவினர் டில்லியில் அயல் நாட்டு தூதரகத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார் .
அவருடன் அவருடைய நெருங்கிய நண்பரும் அதே தூதரகத்தில் , வேறொரு பிரிவில் , அதே மாதிரி பதவியில்
இருந்தார் . இருவரின் வீட்டிலும் பெண்களும் அதே நட்புடன் பழகி , ஒரு சிறந்த நட்பை வளர்த்து வந்தனர் .
நண்பருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் . காலை மாலை பூஜை புனஸ்காரங்கள் .குழந்தை கிடையாது .
காஞ்சி பரமாச்சார்யாள் மீது அதீத பக்தி . வருடம் ஒரு முறையாவது தம்பதி சமேதராய் வந்து தரிசித்துப் போவார்கள் .
வருடங்கள் பல கடந்த பின் , உழைத்தது போதும் என்று தோன்றியது . காஞ்சி மடத்தில் சேர்ந்து ,பக்தர்களுக்கு சேவை செய்யலாம் என்று எண்ணம் . அவரது மனைவிக்கும் சம்மதமே .ஒரு நல்ல நாள் பார்த்து , காஞ்சிபுரம் வந்தனர் .
மறுநாள் காலை குளித்து , செய்யவேண்டிய பூஜைகளை முடித்துக் கொண்டு , பெரியவா தரிசனத்துக்கு போறா.
அவர் முறை வந்த போது , பெரியவாளை பாத்து மரியாதையாக வாய் பொத்தி நிக்கறா என்ன சொல்லறது , எப்பிடி சொல்லறதுன்னு தவிக்கிறா பெரியவா கண்களை பாக்கறா ..கண்கள் கலங்குகின்றன .பேச நினைத்ததெல்லாம் மறந்து போய் அப்பிடியே நிக்கறா .
புன்சிரிப்போட பெரியவா ," என்ன மடத்துலே சேர்ந்துக்கனுமா " என்கிறார் .
கண்களில் இருந்து தாரை தாரையா கண்ணீர் .பேச முடில்லெ .தலையை ஆட்டிண்டு ஆமாம் என்கிறார் .
பெரியவா ," டில்லி போயிட்டு , முறைப்படி எல்லாத்தையும் செஞ்சுட்டு வா " என்கிறார் .
பெரியவா உத்தரவு என்று கூறி , சாஷ்டங்கமா விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு ,பிரசாதம் வாங்கிக்கொண்டு ,
சந்தோஷத்துடன் டில்லி திரும்புகின்றனர் .
மனைவி , என்னன்னா , பெரியவாள பாத்து அது கேட்கப்போறேன் இது கேட்கப்போறேன்னு சொல்லிட்டு , ஒண்ணுமே
பேசாமலே , காரியத்தை சாதித்து கொண்டேளே என்று கிண்டல் அடித்தாள் .
அவரும் ,"என்னமா ,பெரியவாளப் பாத்தா பேசவா தோணறது ? அவருக்கு தெரியாதா,நம்ம மனசுலே என்ன ஓடறதுன்னு . இனிமே டில்லிலே போய் , வேலை ரிசைன் பண்ணிட்டு , எல்லோருக்கும் பட்டுவாடா பண்ண
வேண்டியதை, பண்ணிட்டு மடத்துலே சேரனும் ,என்றார் ..
ரெண்டு மாதங்கள் ரெண்டு நிமிஷமாக தோன்றும் வண்ணம் எல்லாம் முடித்து , காஞ்சிபுரம் வந்து , பெரியவாள
தரிசனம் பண்ணினார் .
பெரியவா கண்ணசைப்புக்கு காத்து இருந்தார் போல் , ஸ்ரீகாரியம் ,வந்து இவரை அழைத்துப் போய் ,இவர் பொறுப்பில் நடக்கவேண்டிய காரியங்களை எல்லாம் விலாவரியாக சொன்னார் .
வருடங்கள் பல கடந்தன .
மனதிற்கு நிம்மதி இந்த தம்பதிகளுக்கு . வீட்டில் செய்ய வேண்டிய நித்யானுஷ்டங்களை , முடித்துக் கொண்டு நண்பர்
மடத்திற்கு வந்து அவர் கடமையை செவ்வனே செய்து கொண்டு இருப்பார் . சமயத்தே பெரியவாள தரிசித்து விபுதி பிரசாதம் வாங்கி , வீடு சென்று மதிய உணவு அருந்தி , மாலை நேரத்தில் திரும்பி மடம் வருவார் .
அவரது மனைவியோ ,வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு , அம்மனை தரிசித்து விட்டு , பெரியவாள பாத்து ஆசீர்வாதம், குங்கும பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு வருவார் .இருவரிடமும் ஒரு சாவி இருந்ததால் , முதலில் வந்தாலும் மற்றவர் வருகைக்காக காத்திருக்க வேண்டாம் என்பதால் இந்த அரேஞ்ச்மென்ட் .பெரியவாளும் அப்போதைக்கு அப்போ பிரசாதம் தருகையில் ஷேம லாபங்களை கருணையுடன் விசாரித்து பிரசாதம் தருவார் .
பக்தியுடன் வாங்கி , அவரை விட்டு விலகி , வெளி வந்து நெற்றியில் பிரசாத விபுதி /குங்குமத்தை இட்டுக் கொள்வது அவர்கள் வழக்கம் .
இப்பிடிப் பட்ட ஒரு நாளில் , நண்பரும் பெரியவா பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போறார் .
எதிர்த்தார் போல் அவருடைய மனைவி , என்னவோ ஏதோ வேலை ,இப்பதான் முடிந்தது . நீங்க ஆத்துக்கு போயிண்டே
இருங்கோ . பெரியவாள தரிசனம் பண்ணிவிட்டு வந்துடறேன் . பெரியவ இருக்களோனோ என்று கேட்டுக்கொண்டே
மடத்தை நோக்கி நடக்கிறார் . நண்பரும் , சீக்கிரம் போம்மா , நேரம் ஆயிடுத்து என்கிறார் .
மனைவியும் , வேகமாக உள்ளே நுழைகிறார் .சரியான நேரம் .
ஒரு நிமிடம் தவறி இருந்தாலும் , பெரியவா தரிசனம் கிடைத்து இருக்காது .மூடப்பட போகிற திரை , பெரியவா கண்ணசைவில் ,சிறிது நின்றது
பெரியவாள தரிசித்து கை நீட்டி அவர் கொடுக்கும் பிரசாதத்தை வாங்குகிறார் .
இவர்தான் கடைசி , பிரசாதம் கொடுக்கும் போது பெரியவா late ஆயிடுத்து என்கிறார் .
இவரும் , என்னவோ தெரில்லே, பெரியவா , மச மச ன்னு வேலை , அதான் நேரமாகி விட்டது என்கிறார்.
திரைப் போடப்படுகிறது .
இவர் பெரியவா இருந்த திசைப்பக்கம் கை தூக்கி கும்பிட்டு விட்டு ,வீடு போக வெளியே வருகிறார் .நடந்து கொண்டே
பெரியவா கொடுத்த பிரசாதம் இட்டுக்கொள்ள ,கையை திறந்து,விரலால் ,ஒத்த , ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார்.. தாழம்புமனத்துடன் மிருதுவாக இருக்கும் குங்குமம் அன்று கர கர என்று இருந்தது . பார்த்தால் , விபுதி .
ச்சே இனிமே இப்பிடி அரக்க பறக்க கடைசி நேரத்தில் வரக்கூடாது . . நமக்காகவே , பெரியவா , திரையை மூட வேண்டாம் எனக்கூறி பிரசாதம் கொடுத்தார் .பிரசாதம் மாறி விட்டது என்று தனக்கு தானே கூறிக்கொண்டு ,
வீடு திரும்பினார் ..
ஊஞ்சலில் நண்பர் படுத்து இருந்தார் எப்போதும் போல் . மனைவி கைகால் அலம்பி , வாங்கோன்னா , தட்டு வைக்கிறேன் என்று கூறி , சமையலறை சென்று , பலகை போட்டு தட்டு வைத்து , டம்ப்ளரில் நீர் எடுத்து வைத்து ,
இவரை கூப்பிட வருகிறார் .
வரேளா என்று கூப்பிட்டுக் கொண்டே ஊஞ்சல் பக்கம் வந்தார். பதில் ஒன்னும் இல்லையே என்ன ஆச்சு இவருக்கு , தூங்கிட்டாரா என்ன என்று .....யோசித்துக்கொண்டே அருகில் வருகிறார் .
நண்பரின் மேல் துண்டு , ஈரமாக இருக்கிறது . பேச்சு மூச்சு காணோம் .ஏதோ பொறி தட்ட பக்கத்து வீட்டுக்கு ஓடிப் போய் , அம்பி , சீக்கிரம் வாடா , மாமாக்கு ஏதோ போல் இருக்கு ,டாக்டரை உடனே கூட்டி வா என்று அழுதுகொண்டே கூறுகிறார் . அவர் வீட்டில் இருந்து ஓரிருவர் ஓடி வந்து , ஈரத்தை துடைத்து விசிறி , மாம்மா மாமா என்று கூப்பிடுகிறார்கள் . ஆளாளுக்கு ஒன்று கூறுகிறார்கள்
இதற்குள் டாக்டரும் வந்து சேர , கூட்டம் போடாதீங்கோ , கொஞ்சம் காத்து வரட்டும் என்கிறார் டாக்டர் .
பிறகு கை பிடித்து நாடிப் பார்த்து , டார்ச் லைட் எடுத்து கண்களில் ஒளி பாய்ச்சி ,
சிறுது பெருமூச்சு விட்டு , அங்கு இருந்த பெரியவரை தனியே அழைத்து , 20 நிமிஷத்திற்கு மேல் ஆயிருக்கும்.
மேலே ஆகவேண்டியதை பாருங்கோ. மாமிக்கு ஆறுதல் சொல்லுங்கோ . உங்காத்து மாமி வரச்சொல்லி இவாளுக்கு துணை இருக்கச் சொல்லுக்கோ என்று கூறி விட்டு ச் சென்றார் ..
.
(உறவினர் கூறிய சாராம்சம்
இன்று எழுத்துருவில் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|