புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
62 Posts - 34%
i6appar
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
3 Posts - 2%
prajai
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
62 Posts - 34%
i6appar
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
3 Posts - 2%
prajai
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_m10உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா விஜய்
சிவா விஜய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/12/2015

Postசிவா விஜய் Tue Dec 22, 2015 5:43 pm

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.
4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.
6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்
சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.
7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,
பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.
9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய
திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான
அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.
14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண
காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.
15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்
வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.
17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்
என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.
20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த
கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே
அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர
சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.
26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன
பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.
27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.
28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை
கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை
தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.
30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்
நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.
32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.
33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.
34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.
35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்
தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்
இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.
37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.
38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.
39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்
அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.
41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு
சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.
42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.
44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.
45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.
46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.
48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.
50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.
51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.
52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்
முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.
53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.
54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா
56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.
57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  12360039_908865755866645_7725456576938606822_n

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Dec 22, 2015 6:14 pm

.சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளு
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே---திருமந்திரம் 2716

Namasivayam Mu
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Namasivayam Mu



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 6:31 pm

நல்லத் தொகுப்பு சிவா விஜய்.
60 முக்கியமான அருமையான தகவல்கள் .

இவை நீங்களாக தொகுத்த தொகுப்பா ?
வேறு ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தால் ,
அவர்களுக்கு நன்றி கூறி ,ஊடகத்தின் பெயரையும் போடவும் .
ஈகரை விதிமுறைகளில் (எண் 6 ) இதுவும் ஒன்று .
ஈகரை விதிமுறைகளை படித்து ,அதனை அனுசரிக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா விஜய்
சிவா விஜய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/12/2015

Postசிவா விஜய் Tue Dec 22, 2015 6:37 pm

ஐயா... முகநூலில் நானும் எனது வழிகாட்டியுமான என் குருநாதரும் இணைந்து தொகுத்து பதிந்ததுதான் இது. அனைவரும் தெரிந்து கொள்ளவே இங்கு பதிவிட்டோம். அடுத்தவர் பதிவல்ல இது என்பதை தெயவித்து கொள்கிறேன். அப்படிப்பட்ட பதிவினையும் நான் பதிவிட விரும்ப மாட்டேன் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 6:46 pm

சிவா விஜய் wrote:ஐயா... முகநூலில் நானும் எனது வழிகாட்டியுமான என் குருநாதரும் இணைந்து தொகுத்து பதிந்ததுதான் இது. அனைவரும் தெரிந்து  கொள்ளவே இங்கு பதிவிட்டோம். அடுத்தவர் பதிவல்ல இது என்பதை தெயவித்து கொள்கிறேன். அப்படிப்பட்ட பதிவினையும் நான் பதிவிட விரும்ப மாட்டேன் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.    
மேற்கோள் செய்த பதிவு: 1182207

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சிவா விஜய்.
சொந்தப் பதிவிற்கு என்றுமே தனி மதிப்புண்டு .

புதிதாக சேருபவர்கள் சிலசமயம் ஆர்வம் மிகுந்து , நன்றி கூறுதலை மறந்துவிடுகிறார்கள் .
அதை நினைவு படுத்துதல் எங்கள் கடமை .தவறாக நினைக்கவேண்டாம்
தங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 22, 2015 6:56 pm

உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  3838410834 உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  3838410834 உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  103459460



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சிவா விஜய்
சிவா விஜய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/12/2015

Postசிவா விஜய் Tue Dec 22, 2015 6:56 pm

சிவ சிவ ஐயா.... தவறு ஏற்படும் இடங்களில் சுட்டிக்காட்டி அதை திருத்துவது தங்கள் கடமை. அதைதான் செய்துள்ளீர்கள். தன் னிலை விளக்கம் கொடுப்பது என் கடமை.
ஈசன் அடிமைகளில் கடைகோடி அடிமை அடியேன். தாங்கள் மன்னிப்பு கோரும் அளவிற்கு அடியேன் உயர்ந்தவனல்ல என்று சுட்டி காட்ட விரும்புகிறேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 7:36 pm

நன்றி சிவா விஜய்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 22, 2015 9:55 pm

உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  103459460 உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  3838410834 உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  3838410834
-
உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  5dfXExUSViKtw76ndIZU+utterkoshamangai
-
உலகைப் படைத்து அதில் பெரும் மாயையைப் பரப்பிய நான்முகனாகிய பிரம்மனுக்கு ஒருசமயம் சொல்லொணாக் கோபம் தன்னையறியாமல் சூழ்ந்து உலகத்து உயிர்களை ஆட்டுவித்தது. தன்னுள் புதிதாக உருவான ராட்சத குணத்தையழிக்க பிரம்மா பலவாறு முயன்றார்.

இந்தத் தீவினையை அகற்ற தவத்தை நாடினார். தகுந்த இடத்தில் அமர்ந்து தவம்செய்தால் ஊழ்வினை அகலுமென்று எண்ணி உத்தரகோசமங்கை வந்தடைந்தார். அங்கே அக்னி தீர்த்தக் கரையில் கடும் தியானத்தில் ஈடுபட்டார்.

கோபமெனும் பாவத்திலிருந்து விமோசனம் கிடைத்தது. பிரம்மனுக்கு சிவன் இன்னருள் புரிந்த இடம் இதுவென்பதால், உத்தரகோசமங்கை பிரம்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
-
எஸ்.ஆர.எஸ்.ரெங்கராஜன்
--தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 22, 2015 10:00 pm

உத்தரகோச மங்கை கோயில் பற்றி 60 தகவல்கள்  G8PsOQ8IT9GEqxAtYWf8+201505060134494981_The-vision-of-the-devotees-in-the-temple-for-the-first-time_SECVPF.gif
-
மண்முந்தியோ மங்கை முந்தியோ என்று புராணங்களில்
போற்றப்படும் பூலோகத்தின் முதல் கோவிலான திருஉத்தரகோசமங்கை
வரலாற்றில் முதன்முதலாக 4-5-15 ல் தெப்பத்திருவிழா வெகு
சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டாண்டு காலமாக மழையின்றி வறட்சியின் கோரப்பிடியில்
சிக்கித்தவிக்கும் இந்த மாவட்டத்தில் மும்மாரி மழைபெய்ய வேண்டியும்,
வறட்சி நீங்கி வளம் பெறவும் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இந்த தெப் பத்திருவிழாவையொட்டி கோவிலில் உள்ள அக்னிதீர்த்த
குளத்தில் மங்கள நாதர்- மங்க ளேசுவரி ஆகியோர் எழுந்தருளினர்.
-
தினத்தந்தி 6-5-15

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக