புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_m10வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்! கவிஞர் இரா. இரவி


   
   

Page 1 of 2 1, 2  Next

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Dec 15, 2015 8:38 am

வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!

கவிஞர் இரா. இரவி



இன்றைக்கு பல குடும்பங்களில் பிரச்சனைகள் வருவதற்கும், நிம்மதி இழப்பதற்கும் காரணம் புரிந்து கொள்ளாமையே! ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.

சங்க இலக்கியத்தில் வரும் ஒரு காட்சி. சுனை நீரி சிறிதளவே உள்ளது. ஒரு மான் குடிப்பதற்கு மட்டுமே உள்ளது. ஆண் மான் குடிக்காமல் பெண்மானைக் குடிக்கச் சொன்னால் குடிக்காது. எனவே ஆண் மான் நீரைக் குடிப்பது போல பாவனை செய்ய பெண் மான் குடித்தது.

இக்காட்சி கணவன் மனைவிக்காக விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை நன்கு உணர்த்துகின்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.

மணமான புதிதில் கணவன்-மனைவி நடந்து செல்லும் போது, மனைவியின் காலில் கல் தட்டியது. உடன், சனியன் பிடித்த கல் என்று கல்லைத் திட்டி விட்டு, கல்லை எடுத்து தூக்கி எறிந்தான் கணவன். சில ஆண்டுகள் சென்றது, அதே கணவன்-மனைவி, மறுபடியும் கல் தட்டியது. உடன் கணவன், சனியனே, கல் இருக்குது பார்த்து வரக்கூடாதா? என்று திட்டினான். ஏன் இந்த மாற்றம். எப்போதும் மனைவியை நேசிக்கும் உள்ளம் கணவனுக்கு இருக்க வேண்டும்.

மனைவி உணவு பரிமாறினாள். உணவில் உப்பு குறைவாக இருந்தது. உடன் கணவன் தட்டை விட்டெறிந்து கோபத்தில் கத்தினான். சரியான உப்புப் போட்டு சுவையாக இருந்த போது என்றுமே பாராட்டாத கணவன் உப்பு குறைவு என்ற குறை கண்டதும் கோப்படுவது ஏன்? சமைப்பது மனைவி என்றாலும், சாப்பிட்டு விட்டு சுவையாக இருந்தால் மனம் திறந்து பாராட்ட வேண்டும். சிலர் தவிர, பலருக்கு இந்த பாராட்டும் எண்ணம் இருப்பது இல்லை. பாராட்டிப் பாருங்கள், மகிழ்ச்சியில் மனைவி இன்னும் சுவையாக சமைப்பாள், கணவனும் மனைவிக்கு சமையலில் உதவி செய்திடும் உள்ளம் வர வேண்டும்.

இரத்தத்தில் ஊறி விட்ட ஆணாதிக்க சிந்தனையை கணவன் அறவே அகற்றி விட்டால் குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்!

குடும்ப மகிழ்ச்சி என்பது புரிந்து கொள்வதில் தான் உள்ளது. பணத்தில் இல்லை மகிழ்ச்சி. ஏழை கணவன் மனைவி இருவர், மிதிவண்டியில் இடுப்பில் கை வந்து மகிழ்வாக பயணம் செய்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால், பணக்கார கணவன் மனைவி விலை உயர்ந்த மகிழுந்தில் மகிழ்ச்சி இல்லாமல் இருவரும் இரண்டு ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்வதையும் பார்த்து இருக்கிறோம்.

மனைவிக்கும் மனசு உண்டு; கருத்து உண்டு; காது கொடுத்து கேட்க வேண்டும்; மதிக்க வேண்டும்; கலந்து பேசி முடிவெடுத்தால் முடிவில் நன்மை இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் புரிதல் என்பது மிக மிக அவசியம்.

முன்பு இலஞ்சம் வாங்காதவரை நேர்மையானவர், நல்லவர் என்றனர். இப்போது ரொம்ப நல்லவர், வாங்கினால் முடித்துக் கொடுத்து விடுவார் என்கின்றனர். இந்த மனநிலை மக்களிடம் மாற வேண்டும். இலஞ்சம் ஒழிக்க முன்வர வேண்டும்.

மனைவியும், கணவனும் வருமானம் அறிந்து அதற்கு மீறிய எதையும் கேட்கக் கூடாது. மனைவி கேட்பதால் இலஞ்சம் வாங்கினேன் என்று சொல்லும் கணவனும் உண்டு, இந்த நிலை மாற வேண்டும். அறவழியில் வரும் வருமானமே இன்பம் தரும். அறம் தவறி வரும் வருமானம் தற்காலிக இன்பம் தந்தாலும், இறுதியில் பெருந்துன்பம் தரும் என்பதை உணர வேண்டும்.

கணவன் வட்டிக்கு கடன் வாங்கி பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலை வாங்கித் தருவதை விட கடன் வாங்காமல் சொந்த பணத்தில் நூறு ரூபாய்க்கு கைத்தறிச் சேலை வாங்கித் தந்தாலும் மகிழ்வோடு ஏற்கும் மனம் மனைவிக்கு வேண்டும். இது தான் புரிதல். கணவனும் நேர்மையான வழியில் உழைத்துப் பணம் ஈட்ட வேண்டும். உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதும் குற்றம். தந்தை பெரியார் சொல்வார் “ஓய்வும், சோர்வும் தற்கொலைக்கு சமம்” என்று. குடும்பத்திற்காக உழைத்து பணம் ஈட்ட வேண்டியது குடும்பத்தலைவனின் தலையாய கடமை ஆகும்.

ராக்பெல்லர் என்ற பெரிய பணக்காரர், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த இளைஞன் கேட்டான், “உங்களிடம் நிறைய பணம் உள்ளது, வயதாகி விட்டது, பேசாமல் வீட்டில் ஓய்வு எடுக்கலாமே, இந்த வயதிலும் ஏன் பயணம் செய்து சம்பாதித்து சிரமப்படுகிறீர்கள்” என்றான். ராக்பெல்லர் சொன்னார் விமானம் உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. எஞ்சினை இயங்குவதை நிறுத்தி விடலாமா? என்றார். அதற்கு இளைஞன், விமானம் விபத்துக்குள்ளாகி விடுமே! என்றான். ராக்பெல்லர் சொன்னார், “மனிதனும் அப்படித்தான், மூச்சு இருக்கும் வரை, முயற்சி இருக்க வேண்டும்” உழைப்பும் இருக்க வேண்டும் என்றார்.

வேட்டைக்கு செல்லும் போது மன்னர் மீது கல் வந்து விழுந்தது. கல் எறிந்தவனை பிடித்துக் கொண்டு வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். ஏன்? கல் எறிந்தாய் என்று கேட்ட போது, பசியோடு இருந்தேன், மரத்தில் கல் எறிந்தேன், பழம் விழும், உணவாகுமே என்று. கல் தவறி உங்கள் மீது பட்டுவிட்டது என்றான். மன்னர் சொன்னார், இவனுக்கு 100 பொற்காசுகள் கொடுங்கள் என்றார். மந்திரி வியப்பாகக் கேட்டார். தண்டனை தராமல் பரிசு தருகிறீர்களே, மன்னர் சொன்னார், கல் எறிந்தால் மரம் கூட பழம் தரும் போது, மன்னன் மீது கல் எறிந்தால் நான் தண்டனை தரலாமா? மரத்தை விட மன்னன் மோசம் என்றாகி விடும். அதனால் தான் பரிசு தரச் சொன்னேன் என்றார். இது போன்று புரிந்து கொள்ளும் மனநிலை வேண்டும்.

நிம்மதி என்பது வெளியில் இல்லை, நம் மனதில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.

எழுத்தாளர் மெர்வின் அவர்கள், சந்தனக்கட்டை வீரப்பன் போல, பெரிய மீசை வைத்து இருப்பார். அதற்கு அவரே மதுரையில் நடந்த விழாவில் சொன்ன காரணம். எனக்கு தலை வழுக்கையாக உள்ளது, எல்லோரும் என்னை அடையாளப்படுத்தும் போது சொட்டைத் தலை, வழுக்கைத் தலை என்றனர். மீசையை பெரிதாக வளர்த்தேன். மீசைக்காரர் என்றனர். இதில் வாழ்வியல் தத்துவமும் உள்ளது. “இழந்த ஒன்றுக்காக வருந்துவதை விட, இருப்பதை செம்மைப்படுத்துவது மேல்”, என்றார். நம்மில் பலர் இழந்ததற்காக வருந்தி, கவலையில் காலம் தாழ்த்தி வருகிறோம். அதனை விடுத்து, இருப்பதற்குள் மகிழ்ச்சி அடையும் உள்ளம் வேண்டும்.

ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர். பேராசை பெருநஷ்டம் என்று பொன்மொழியும் உண்டு. ஆசையின் காரணமாக பலர் நிம்மதி இழந்து, தவித்து வருகின்றனர். ஆசையையும், தேவைகளையும் குறைத்து புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும், வாழ்க்கையை இஷ்டப்பட்டு வாழ வேண்டும், கஷ்டப்பட்டு வாழக்கூடாது.

காலணி இல்லை என்று வருந்துபவர், கால்களே இல்லாதவரைப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டும். காலணி பெற உழைக்க வேண்டும், ஊதியம் ஈட்ட வேண்டும், உழைப்பு என்பது மிக உன்னதமானது. அதனால் தான் கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்றனர். இன்று கடின உழைப்பை விட விவேகமான, வித்தியாசமான உழைப்பு வேண்டும்.

வட்டிக்கு கடன் வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்வது இன்பம் என்று சிலர் தவறாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். “கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்” என்பார்கள். கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கூட மாற்றி எழுதி விடலாம். கடன் கொடுத்தவர்களும், வாங்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருப்பவர்களும் உண்டு. கடன் வாங்குவது அவமானம் என்று, அன்று கருதினார்கள் பெரியவர்கள். ஆனால் இன்று ‘கடன் மேளா’, ‘கடன் திருவிழா’ என்று அறிவிப்பு செய்து கடன் வழங்கி வருகின்றனர். மக்களும் நுகர்பொருள் மோகத்தின் காரணமாக கடனை பெருமளவில் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். முடிந்தவரை கடன் வாங்காமல் உழைத்து ஈட்டிய பணத்தில் வாழும் வாழ்க்கையே சிறப்பு என்பதை உணர வேண்டும்.

இந்தியாவே உலக வங்கியில் கடன் வாங்கும் போது, நான் கடன் வாங்கக் கூடாதா? மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்றார் நண்பர். கடன் வாங்கி விட்டு கவலையில் வாடுவதை விட கடன் வாங்காமல் நிம்மதியாக வாழலாம் என்றேன்.

கோபம் அதிகம் கொள்ளும் மகனிடம் 50 ஆணிகள் தந்து கோபம் வரும் போதெல்லாம், வீட்டின் சுற்றுச்சுவற்றில் அடி என்றார். அவன் ஒவ்வொன்றாக அடித்து 50 ஆணிகளும் தீர்ந்து விட்டது. பின் கோபம் வரும் போது ஒவ்வொரு ஆணியை பிடுங்கு (எடு) என்றார். 50 ஆணிகளையும் பிடுங்கி விட்டான். இப்போது அந்தச் சுவற்றைப் பார் என்றார். பார்த்தான், ஆணி அடித்த இடங்கள் சிதைந்து வடுக்களாக இருந்தன. நீ கோபத்தில் சொல்லும் சொற்கள் அடுத்தவர் மனத்தை இப்படித் தான் காயப்படுத்தி வடுக்களாக்கும். எனவே இனிமேல் கோபம் கொள்ளாதே என்று மகனுக்கு அறிவுரை வழங்கினார். அவனும் புரிந்து கொண்டு கோபத்தைக் கைவிட்டான்.

கணவன் மனைவி இருவரும் இக்கதையைப் புரிந்து கொள்ள வேண்டும். கோபத்தில் சொல்லும் சொற்கள் மற்றவரைக் காயப்படுத்தும் என்பதை உணர்ந்து, வன்சொல் பயன்படுத்தாமல் புரிந்து கொண்டு இன்சொல் பயன்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். சண்டை சச்சரவு வராது.

உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் அன்றே பாடினார்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. குறள் எண் 100

இனிய சொற்கள் இருக்கும் போது ஒருவர் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனிகள் இருக்கும் போது காய்களைத் தின்பதைப் போன்றது. காயை விட கனி தானே சிறப்பு. ஒப்பற்ற இந்தத் திருக்குறளை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும். இந்தத் திருக்குறள் எண் 100. சண்டை வந்தால் காவல் துறையை அழைக்க உதவும் தொலைபேசி எண் 100. அது போல நமக்கு கோபம் வந்தால் நினைத்துப் பார்க்க வேண்டிய திருக்குறள் எண் 100. இந்தத் திருக்குறளை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து விட்டு, இப்படி நல்ல திருக்குறள் உள்ள நூலை அதன் மூல மொழியிலேயே படிக்க வேண்டும் என்பதற்காக, நான் படிக்க வந்தேன் என்றார் செக்கோசுலேவியாவில் இருந்து வந்த ஓர் அறிஞர். திருக்குறள் அருமை, பெருமை அயலவர் அறிந்து உள்ளனர். நம்மவர் தான் அறியவும், கடைபிடிக்கவும் மறந்து வருகிறோம்.

தினமும் ஒரு பொன்முட்டையிட்ட வாத்தை அறுத்தால் நிறைய முட்டை கிடைக்கும் என்று பேராசைப்பட்டு அறுத்து, ஏமாந்த கதை எல்லோரும் படித்த கதை. பேராசை பெருநஷ்டம் என்ற பொன்மொழி உணர்த்தும் கதை. இக்கதை சொல்லும் நெறியைப் புரிந்து வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் வாழ்க்கை இனிக்கும்.

விட்டுக்கொடுத்து வாழ்தல், புரிந்து கொண்டு வாழ்தல் என்பதற்கு தமிழக முதல்வர் சொன்ன கதை என் நினைவிற்கு வந்தது.
கணவன், வேலைக்கு வெளியில் சென்றுள்ளான். மனைவி, இருந்த மாவில் 12 இட்லிகள் வேக வைத்து, வைத்திருந்தாள். கணவன், நண்பனுடன் இல்லம் வந்து சாப்பிட வை என்றான். இருவருக்கும் தலா 4 இட்லிகள் வைத்து விட்டாள். மீதமுள்ள 4 இட்லி நமக்கு இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள். மனைவியின் முகம் பார்த்து புரிந்து கொண்டான் கணவன். இன்னும் இரண்டு இட்லி சாப்பிடுங்கள் என்று வைக்க வந்தாள். கணவன் சொன்னான், 4-க்கு மேல் யார் சாப்பிடுவார்? எனக்கு போதும் என்றான். அண்ணன் நீங்க சாப்பிடுங்க என்று கணவனின் நண்பனுக்கு வைக்கப் போனாள். நான் எப்போதும் 3 இட்லி தான் சாப்பிடுவேன். சுவையாக இருந்ததால் 4 இட்லி சாப்பிட்டு விடுவேன். இது போதும் எனக்கு என்றான், நண்பன்.

இந்த இட்லி கதை எனக்கு சங்க இலக்கிய மான் காட்சியை நினைவூட்டியது. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நானே பெரியவன் என்ற அகந்தை விடுத்து அன்பு செலுத்தி வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாகும்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !







M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 15, 2015 9:42 am

//சங்க இலக்கியத்தில் வரும் ஒரு காட்சி. சுனை நீரி சிறிதளவே உள்ளது. ஒரு மான் குடிப்பதற்கு மட்டுமே உள்ளது. ஆண் மான் குடிக்காமல் பெண்மானைக் குடிக்கச் சொன்னால் குடிக்காது. எனவே ஆண் மான் நீரைக் குடிப்பது போல பாவனை செய்ய பெண் மான் குடித்தது. //

ஐயா ! சங்க இலக்கியத்தில் , இந்தக் காட்சி எந்த நூலில் வருகிறது ? அந்தப் பாடல் வரிகள் , இயற்றிய ஆசிரியர் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டுகிறேன் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Tue Dec 15, 2015 10:48 am

"இழந்த ஒன்றுக்காக வருந்துவதை விட, இருப்பதை செம்மைப்படுத்துவது மேல்”

அருமையான பதிவு அன்பரே ...



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Dec 15, 2015 6:38 pm

”சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’


மாறன் பொறையனார் பாடல் 38, ஐந்திணை ஐம்பது
இந்தப் பாடலின் பொருள் வருமாறு: சுனையில் சிறிது அளவே நீர் உள்ளது. ஆண் மான் குடிக்கவில்லை என்றால் பெண் மான் குடிக்காது. ஆனால் அங்கு ஒரு மான் குடிப்பதற்கு ஏற்ற அளவிலேயே நீர் உள்ளது. எனவே ஆண் மான் சுனை நீரில் வாயை வைத்துக் குடிப்பது போல பாவனை செய்து பெண் மானைக் குடிக்க வைக்கிறது. இதுதான் காதலர் உள்ளத்தின் நெறியாகும். (பொருள். கலைஆண் மான்; பிணை பெண்மான்.)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 10:21 pm

eraeravi wrote:வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!
தினமும் ஒரு பொன்முட்டையிட்ட வாத்தை அறுத்தால் நிறைய முட்டை கிடைக்கும் என்று பேராசைப்பட்டு அறுத்து, ஏமாந்த கதை எல்லோரும் படித்த கதை. பேராசை பெருநஷ்டம் என்ற பொன்மொழி உணர்த்தும் கதை. இக்கதை சொல்லும் நெறியைப் புரிந்து வாழ்வில் கடைப்பிடித்து வந்தால் வாழ்க்கை இனிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1180587
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 10:24 pm

M.Jagadeesan wrote://சங்க இலக்கியத்தில் வரும் ஒரு காட்சி. சுனை நீரி சிறிதளவே உள்ளது. ஒரு மான் குடிப்பதற்கு மட்டுமே உள்ளது. ஆண் மான் குடிக்காமல் பெண்மானைக் குடிக்கச் சொன்னால் குடிக்காது. எனவே ஆண் மான் நீரைக் குடிப்பது போல பாவனை செய்ய பெண் மான் குடித்தது. //
ஐயா ! சங்க இலக்கியத்தில் , இந்தக் காட்சி எந்த நூலில் வருகிறது ? அந்தப் பாடல் வரிகள் , இயற்றிய ஆசிரியர் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1180589
அருமையான எடுத்து காட்டு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 16, 2015 8:26 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 9:09 pm

eraeravi wrote:”சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக்கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’


மாறன் பொறையனார் பாடல் 38, ஐந்திணை ஐம்பது
இந்தப் பாடலின் பொருள் வருமாறு: சுனையில் சிறிது அளவே நீர் உள்ளது. ஆண் மான் குடிக்கவில்லை என்றால் பெண் மான் குடிக்காது. ஆனால் அங்கு ஒரு மான் குடிப்பதற்கு ஏற்ற அளவிலேயே நீர் உள்ளது. எனவே ஆண் மான் சுனை நீரில் வாயை வைத்துக் குடிப்பது போல பாவனை செய்து பெண் மானைக் குடிக்க வைக்கிறது. இதுதான் காதலர் உள்ளத்தின் நெறியாகும். (பொருள். கலைஆண் மான்; பிணை பெண்மான்.)
மேற்கோள் செய்த பதிவு: 1180673
-
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி 3838410834
-
வாழ்க்கை ருசிக்க புரிந்து கொள்ளல் அவசியம்!  கவிஞர் இரா. இரவி KaAYGk21SdKKywbqJLlL+index

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 17, 2015 6:33 am

ஐயாசாமியின் படம் பொருத்தமாக இல்லை ! கலைமான் குளத்திலே நீர் அருந்துவதுபோல காட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 17, 2015 6:37 am




இதே கருத்துடைய ஒரு காட்சி கலித்தொகையில்,வருகிறது .




“அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே , கனங்குழாய் ! காடு “ என்றார் , “ அக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின் உண்ணும் களிறு “ எனவும் உரைத்தனரே .

இந்தவரிகள் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் அதாவது பாலைக் கலியில் பத்தாம் பாடலில் வருகிறது .


பொருள் : யானைக் குடும்பம் ஒன்று காட்டில் நீர் தேடி அலைகிறது . அந்தக் கூட்டத்தில் ஆண் யானை , பெண் யானை , யானைக் கன்று ( குட்டி யானை ) உள்ளன . அடி பொறுக்க முடியாத நெருப்புப் போன்று வெப்பமுடைய காட்டில் , ஒரு இடத்தில் கொஞ்சம் நீர் உள்ளது . அதைக் கண்ட குட்டி யானை ஓடிச்சென்று , நீரைக் கலக்கி சேறாக்கி விடுகிறது . அந்தக் கொஞ்சம் நீரையும் முதலில் பெண் யானை குடித்த பிறகு நாம் குடிக்கலாம் என்று ஆண் யானை காத்திருக்குமாம் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Similar topics
» ஏவுகணை மனிதன் ! அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறும் ! கவிதைகளும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா.சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» ஒரு நீதியரசரின் நெடிய பயணம் ! (நீதியரசர் மு. கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு) நூலாசிரியர் : ராணிமைந்தன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» வாழ்க்கை ஓர் அதிசயம் ! நூல் ஆசிரியர் : அமுதா பாலகிருஷ்ணன் ! amuthabk74@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக