புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
2 Posts - 3%
jairam
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
13 Posts - 4%
prajai
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
9 Posts - 3%
jairam
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_m10மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Dec 05, 2015 9:57 pm

மிகவும் வெட்கப்படுகின்றேன்... மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல் காட்டம்!


மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! FLsQlCbNSSaHYzNv0D7Y+cartoon_kamal

சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் கடுமையான அச்சத்திலுள்ளனர்.சென்னையில் ஒட்டுமொத்த, நிர்வாகமும் உருகுலைந்து கிடக்கிறது. மீண்டும் சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பல மாதங்கள் தேவைப்படும்.

மக்கள் செலுத்திய வரிப் பணம் அனைத்துக்கும் எங்கே சென்றது? ஆளும் அரசாங்கங்கள், அது எந்த கட்சியுடையதாக இருந்தாலும், ஒரு கார்பொரேட் திட்டத்திற்கு ரூ.4000 கோடியை செலவிட முடிகிறது. இந்த நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறோம். அந்த 4000 கோடியை எங்கள் மத்தியில் வினியோகித்திருந்தால், எத்தனையோ இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்க முடியும்நான் முற்றிலுமாக கவலையில் ஆழ்ந்துள்ளேன்.

நான் வசதியான ஒரு வீட்டில் உட்கார்ந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசுடன் ஒப்பிட்டால் எனது வருமானம் மிகவும் சொற்பம். ஆனால், அரசோ, வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம்தான் பணம் கேட்கிறது. பிறகு அரசு என்னதான் செய்யும்? இருப்பினும், நான் பணம் கொடுக்கவே செய்வேன். நான் பணக்காரன் என்று நினைத்துக்கொண்டு பணம் கொடுக்கப்போவதில்லை. நான் எனது மக்களை நேசிக்கிறேன். பணக்காரன், ஏழை என நன்கொடைக்காக இப்போது பேசப்படும் அனைத்துமே நாடகம்தான். அரசியல் வாதிகள் பதவியில் இருக்கும்வரை சமூக ஏற்றத்தாழ்வை நீக்குவோம் என்றுதான் பேசிக்கொண்டிருக்க போகிறார்கள். இவ்வாறு கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார். (நன்றி - சினியுலகம் இணையம்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Dec 05, 2015 9:58 pm

கருத்து கந்தசாமி கமல்ஹாசன் குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி பிதற்றுகிறார்: அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலடி

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! AMQrS3GTRtQSHFseFGcb+p3a

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான  விஷயத்திலும்  உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார் என தமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், 'மக்கள் வரிப்பணம் எங்கே போனது?'  என கேள்வி எழுப்பியிருந்த  நிலையில்,  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டியதை விடுத்து, உள்ளிருந்து கொல்லும் நோய்போல, நடிகர் கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஒரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் தொடங்கியதிலிருந்து இன்றைய தினம் வரை, சென்னை மாநகர் மட்டுமின்றி, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற, முதலமைச்சர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், முதலமைச்சரின் ஆணைப்படி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் துரித நடவடிக்கைகளின் காரணமாகவும், மழை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து தமிழக மக்களின் உயிர்ச்சேதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பான நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்தச் சூழ்நிலையில் இப்படி தரமற்ற முறையில் பேட்டி அளிப்பதற்கு முன்பாக, 1918-ம் ஆண்டிற்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை என்பதையும், ஒரே நாளில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்து, இந்தப் பருவம் முழுவதும் பெய்யும் மழையைவிட பல மடங்கு கூடுதலான மழை, ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது என்பதையும் கமலஹாசன் தெரிந்து கொள்ளாமலேயே, தனது விதண்டாவாதக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

கமலஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான் முதலமைச்சர் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது 'அன்பே சிவம்' திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

போர்க்கால நடவடிக்கைகள் ஜெயலலிதா அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சமயத்தில், அரசு நிர்வாகம் செயலற்று போனதாக கமலஹாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல் ஆகும்.

இந்த இயற்கைச் சீற்றத்தினை வெற்றிகொள்ளும் வகையில் ஜெயலலிதாவின் அரசு, போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்து அவர் தெரிந்தும், தெரியாததுபோல் நடித்துள்ளார். அதனால்தான் மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமலஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடமிருயது பெறப்பட்ட வரிப் பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமலஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்களின் வரிப் பணம் என்ன ஆனது என்று கமலஹாசன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஜெயலலிதா அரசின் கடந்த நான்கு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை தனது படப்பிடிப்புகளுக்கிடையே சற்று நேரம் ஒதுக்கி, அவர் படித்துப் பார்த்திருக்க வேண்டும். கல்வி, மக்கள் நல்வாழ்வு, சாலை வசதி மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை உட்பட பல்வேறு முக்கியமான துறைகளில் கணிசமான அளவிற்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், அத்தகைய திட்டங்களை பிற மாநிலங்களும் செயல்படுத்துவதற்கான முன்னுதாரணமான மாநிலமாக தமிழகத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா முன்னேற்றமடையச் செய்துள்ளார் என்பதை இந்தியத் திருநாடே உணர்ந்து பாராட்டிக் கொண்டிருப்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மக்களின் வரிப்பணத்தை வைத்துதான் சமூக நலப் பணிகளுக்கு 61,119 கோடி ரூபாயும், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 49,930 கோடி ரூபாயும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், உணவு மானியம் போன்ற மானியத் திட்டங்களுக்கும் 12,897 கோடி ரூபாயும் செலவிட, 2015-16 வரவு செலவுத் திட்டத்தில் சட்டமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்தை வைத்துத்தான் சாலை வசதிகள் உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வளவு ஏன்? 2015-16-ல் மாநில பேரிடர் நிவாரணத்திற்கு ஒதுக்கப்பட்ட 679 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம்தான், தற்போது செலவிடப்பட்டு வருகிறது. ஆகவே, வரிப்பணம் எங்கே போகிறது என்ற சந்தேகம் கமலஹாசனுக்கு எழவேண்டிய அவசியமே இல்லை.

தமிழக மக்களின் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட வீணாகச் செலவழிக்கப்படக் கூடாது என்பது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ள வகையில் மக்கள் நலப்பணிகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா.

கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்! அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இயதியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன். அப்போது, அந்தப் பிரச்னையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு நன்றி கூறியதை மறயதுவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா அரசு, வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, இரக்க குணம் படைத்தவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், தாங்களே முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவர்களாகவே நிதியுதவி செய்கிறார்கள். மக்கள் துயர் துடைக்கும் மாநில அரசின் நிவாரண நடவடிக்கைகளில் தங்களையும் இணைத்துக் கொள்வது புண்ணியமான செயலாகக் கருதி, அவர்கள் பொருள் உதவியும், செயல் உதவியும் செய்கிறார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையற்ற கமலஹாசன் பாவ புண்ணியம் பற்றி கொண்டிருக்கும் கருத்தே வேறு அல்லவா? அதனால்தான் கேட்காத ஒன்றை கேட்டதாகச் சொல்லி, பேட்டி அளித்துள்ளார்.

இப்படி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வந்து வயது நிதி உதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா? அந்த வகையில் தற்போதும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விளம்பரமும் இன்றி நேரடியாக சேவை செய்து வருகின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமெனில் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 25 லட்ச ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்து, தனது டுவிட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான்.

""ஈ என இரத்தல் இழியதன்று, அதன் எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழியதன்று

கொள் என கொடுத்தல் உயர்யதன்று, அதன் எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்யதன்று""

என்பதுதான் தமிழர் பண்பாடு.

அத்தகைய தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் ஜெயலலிதா அரசு, கமலஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே ஆகும்.

இந்த வகை விளம்பரத்திற்காகத்தான், கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு 12 லட்ச ரூபாய் உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தாரா? உண்மையிலேயே அந்த உதவியை அவர் வழங்கினாரா? யாரிடம் வழங்கினார் என்பதை அவரால் தெரிவிக்க இயலுமா?

இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கமலஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.  (நன்றி - தினமணி)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 06, 2015 5:27 am



கமலின் கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

''உலக நாயகன் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பவராக இருந்தால் வெட்கப்பட வேண்டியதுதான்.''

''படம் வெளியாவதில் தடை ஏற்பட்டபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னவர், மக்கள் பாதிக்கப்பட்டதைக் கண்கூடாகப் பார்த்த பிறகும் வீட்டை விட்டே வெளியேறவே யோசிக்கிறாரே!'' என்று சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 7:53 am

கமல் முதலில் இறங்கி மக்களுக்கு உதவட்டும்,முடியாவிடில் பேசாதிருக்கட்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 06, 2015 4:24 pm

கமல் சொன்னதில் எந்த தவறும் இல்லையே , ஒரு குடிமகன் அரசாங்கத்தின் செயல்பாடை விமர்சிப்பதில் தவறொன்றுமில்லையே. இதற்கு OP பதில் கூறியது தான் சிரிப்பு வரவழைப்பதாக உள்ளது.

மக்களின் வரிப்பணம் இருக்கட்டும் , இது வரை மத்திய அரசாங்கம் அளித்துள்ள 1900 கோடிகளும் மற்ற நன்கொடையாளர்கள் அளித்துள்ள நிதிகளும் எந்த அளவிற்கு மக்களின் துயர் துடைக்க பயன்பட போகிறது, எந்த அளவிற்குக் அடுத்த தேர்ததில் ஓட்டு பொறுக்க பயன்பட போகிறது என்று கடவுள் தான் அறிவார்.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 06, 2015 5:10 pm

பொதுப்பணித்துறை சரியாக செயல்பட்டு இருந்தால் இந்த அளவுக்கு இழப்பு ஏற்ப்பட வாய்ப்பு இல்லை. அதை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் தான் பன்னீர் செல்வத்துக்கு கோபம் கொப்பளித்து கொண்டு வருகிறது.
பொதுப்பணித்துறை பன்னீர் செல்வம் ஆச்சே! இவ்வளவு பெரிய அறிக்கை தயார் செய்ய இவருக்கு இந்த பேரிடரில் நேரம் இருக்கிறது என்றால் மக்களின் கேள்விகளுக்கு உடனே பதில் அளிக்கிறாராம். இன்னும் திருந்தவே இல்லை. தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்ற எப்பொழுது காலம் வரும் என்று தெரியவில்லை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 06, 2015 5:31 pm

இதை யார் சுட்டிக்காட்டினாலும் அவர்கள்மீது பாய்கிறார்கள். முதல்வரின் செல்வாக்கைச் சீரழிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். நான் உழைத்துச் சம்பாதித்து கட்டிய வரிப்பணம் சேர வேண்டியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்று தெரிகிறது என்று நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தபோது, வெள்ளத்தைக் காட்டிலும் பலமடங்கு சீற்றத்துடன் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெடித்திருப்பதற்குக் காரணம் இந்த இயலாமைதான்.

வெள்ளம் குறித்தோ, வெள்ள நிவாரணம் குறித்தோ விரிவாக விளக்கமளிக்காத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசனைத் திட்ட மட்டும் முழ நீள அறிக்கையை வெளியிடுவதன் தேவை என்ன? புரையோடியிருக்கும் நிர்வாகத்தின் போக்கை வெளிப்படையாக ஒருவர் சுட்டிக் காட்டுகிறார் என்பதாலா..?

தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அரசு அளித்திருப்பது ஓர் வெற்றிடத்தை மட்டுமே. இந்த வெற்றிடத்தையும் பாதிக்கப்பட்ட மக்களே இட்டு நிரப்பிக்கொண்டிருக்கிறார் கள்.  இனியும் இதே போக்குதான் தொடரப்போகிறது என்றால் அரசு என்றொரு அமைப்பு இருக்கவேண்டி யதன் அவசியம்தான் என்ன?




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 06, 2015 6:21 pm

சசி wrote:பொதுப்பணித்துறை சரியாக செயல்பட்டு இருந்தால் இந்த அளவுக்கு இழப்பு ஏற்ப்பட வாய்ப்பு இல்லை. அதை கருத்தில் கொண்டு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் தான் பன்னீர் செல்வத்துக்கு கோபம் கொப்பளித்து கொண்டு வருகிறது.
பொதுப்பணித்துறை பன்னீர் செல்வம் ஆச்சே! இவ்வளவு பெரிய அறிக்கை தயார் செய்ய இவருக்கு இந்த பேரிடரில் நேரம் இருக்கிறது என்றால் மக்களின் கேள்விகளுக்கு உடனே பதில் அளிக்கிறாராம். இன்னும் திருந்தவே இல்லை. தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்ற எப்பொழுது காலம் வரும் என்று தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1178819அதானே பார்த்தேன் , இந்த ஆளுக்கு "பைல்ஸ் வந்த நோயாளி போல கூழை கும்பிடு போடுவதை தவிர வேறொன்றும் தெரியாதே" இவ்வளவு பெரிய அறிக்கை விடுகிறாரே என்று நினைத்தேன் புன்னகை

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! 3838410834 மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! 3838410834

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 06, 2015 6:32 pm

மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! O0hEKurTHmRplWP8op9w+IMG-20151206-WA0002மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! XP2f91RJGIaVoXT3i0rw+IMG-20151205-WA0000மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல்ஹாசன் காட்டம்! JQIWGGF9TNKNCz51BpTg+IMG-20151205-WA0009



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2015 7:54 pm

ராஜா wrote:கமல் சொன்னதில் எந்த தவறும் இல்லையே , ஒரு குடிமகன் அரசாங்கத்தின் செயல்பாடை விமர்சிப்பதில் தவறொன்றுமில்லையே. இதற்கு OP பதில் கூறியது தான் சிரிப்பு வரவழைப்பதாக உள்ளது.

மக்களின் வரிப்பணம் இருக்கட்டும் , இது வரை மத்திய அரசாங்கம் அளித்துள்ள 1900 கோடிகளும் மற்ற நன்கொடையாளர்கள் அளித்துள்ள நிதிகளும் எந்த அளவிற்கு மக்களின் துயர் துடைக்க பயன்பட போகிறது, எந்த அளவிற்குக் அடுத்த தேர்ததில் ஓட்டு பொறுக்க பயன்பட போகிறது என்று கடவுள் தான் அறிவார்.  
நிஜம் ராஜா............உண்மையை சொன்னால் எல்லோருக்கும் கோபம்  பொத்துக்கொண்டு தான் வரும்...........1900 கோடிகள் வருகிறது என்றதுமே கருணா, சர்வ கட்சி கூட்டம் கூட்டனும் என்கிறாரே பார்த்தீங்களா?...அது மக்களுக்கு எப்படிசேவை செய்யணும் என்பதற்கு alla , யாருக்கு எத்தனை என்று பிரித்துக்கொள்ளத்தான் ............. கோபம் கோபம் கோபம் 

மேலும், யார் யாரோ மனிதாபி மானத்துடன் தரும் நிவாரணப்பொருட்களில் "J " தன் போட்டோவை ஓட்டசொல்லி இருப்பதில் இருந்தே தெரிகிறதே நிவாரணப் பணம்   எங்குபோகிறது என்றும், ஓட்டுக்காக எவ்வளவு 'சீப்' பாக செயல் படுகிறார்கள் என்றும் தெரிகிறது................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக