புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_m10" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் "


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:44 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " 1SKdNAyuQGOzBcUjCq8q+alagarmalai
" அழகர்மலை "
மதுரை அழகர்கோவில் ஒரு புண்ணிய ஸ்தலமாகும் .
மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "
அழகர்மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அற்புதங்கள் நிறைந்த
அழகர் மலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ராமதேவர் சித்தர் வசித்து
வந்துள்ளார் .ராமதேவர் புலத்தியரின் சீடர். இளமை முதலே அம்பிகை
பக்தராகத் திகழ்ந்த இவர் அன்னையின் கருணையில் அபூர்வ
சித்திகள் வாய்க்கப் பெற்றார். வாசியோகம் பயின்ற
ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று தேகத்துடனே
வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி
உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப்
பயில ஆரம்பித்தார்.
நன்றி-முகநூல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:49 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " WgtxzL4LT1ypL6RJrKy3+alagarmalai.jpg-1
மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "
>> சஞ்சார சமாதியில் ஐக்கியப்படுத்திக் கொண்டு பல புண்ணிய தலங்களுக்கும்
சென்று தரிசனம் செய்தார்..ஒரு சமயம் மெக்கா சென்றார். அங்குள்ளவர்கள்
அவருக்கு யாக்கோபு என்று பெயர் சூட்டி அந்நாட்டு வழக்கப்படி உபதேசம்
செய்தார்கள். யாக்கோபு வெகு விரைவில் மெக்கா மக்களால் தம்முள்
ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.ஒருவர் பின் ஒருவராக சீடர் பலர்
சேர்ந்தனர். பாலைவன மணலில் புதைந்து கிடக்கும் கற்ப
மூலிகையைப் பற்றியெல்லாம் ஆராய்ந்த யாக்கோபு
அவை பற்றியெல்லாம் தம் நூலில் குறிப்புகள் எழுதி
வைத்தார். ஒரு நாள் கற்பக மூலிகைகளின்
திறனைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில்
இருக்கப் போவதாகச் சீடர்களிடம் கூறினார்.
சமாதி மூடப்பட்டது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:54 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " WVrRbpqwTW6SJws5mKHi+alagarmalai.jpg-2

மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> ராமதேவன் கற்பக மூலிகைகளின் துணை கொண்டு யார் கண்ணிலும் படாமல்
அங்கிருந்து மறைந்தார். காடு மலை நதி என்று நாடு கடந்தும் சுற்றித் திரிந்தார்.
அந்தக் காலத்தில் காலாங்கி நாதர் சமாதியைத் தரிசித்தார். உடனே கைகளைக்
கூப்பி வணங்கி அதன் பக்கத்திலேயே தியானம் செய்ய ஆரம்பித்தார்.தியானம்
சித்தியான நிலையில் காலாங்கி நாதர் ராமதேவருக்குத் தரிசனம் தந்து
அனுபவ ரகசியங்களை உபதேசித்து மறைந்தார். ராமதேவருக்கு அநுபூதி
நிலை கை கூடியது. யாக்கோபு என்ற பெயரில் மெக்காவில் எழுதிய
பதினேழு நூல்களைத் தமிழில் பாடினார். சதுரகிரியில் சிலகாலம்
தங்கியிருந்து தவமியற்றினார்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 12:58 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " PW1wOBD6RhWkN1HuI5Pr+alagarmalai.jpg-3

மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> பத்து ஆண்டுகள் கழிந்தன. யாக்கோபு சொன்னது போலவே திரும்பி வந்தார். தன்
உண்மைச் சீடன் சமாதியருகிலேயே இருந்தது கண்டு மனம் நெகிழ்ந்தார். நான்
மறுபடியும் சிறிது காலம் சமாதியிலிருக்க விரும்புகிறேன். இந்த முறை முப்பது
ஆண்டுகள் கழிந்த பிறகே வருவேன். நான் சமாதிக்குச் சென்ற பிறகு
என்னைத் தரிசிக்க வேண்டுமானால் சதுரகிரி மலைக்கு வர
வேண்டும், என்று தெரிவித்து விட்டு சமாதியானார்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 1:02 pm

" அழகர்மலை "-" ராமதேவர் சித்தர் " KPt6wWs1SKGz39je39wS+alagarmalai.jpg-4

மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> முப்பதாண்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ராமதேவராக நடமாடிய யாக்கோபு
சதுரகிரி வனத்தில் தங்கி வைத்திய சாஸ்திர நூல்களைத் தமிழில் எழுதினார்.
ராமதேவர் மெக்காவிலிருந்து திரும்பி வந்து சதுர கிரிவனத்தில் தங்கியதால்
அந்த வனத்திற்கு ராம தேவர் வனம் என்ற பெயரே வழங்குகிறது.அதன்
பிறகு ராமதேவர் மறுபடியும் மெக்கா சென்று அனைவருக்கும்
தரிசனம் தந்ததாகக் கூறப்படுகிறது.
>> யாக்கோபின் அன்புக்குரிய சீடனை அழைத்து அவனுக்கு காயகற்ப முறைகளைப்
போதித்து இனிதான் திரும்ப மாட்டேன். நிரந்தர சமாதியோகம் பூணப் போகிறேன்
என்று கூறி மெக்காவில் மவுன சமாதியானார். பின்னர் அங்கிருந்து வெளிப்பட்டு
தமிழகம் வந்து அழகர் மலையில் சமாதியடைந்தார்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 06, 2015 1:07 pm

" அழகர்மலை "
மதுரை அழகர்கோவில் ஒரு புண்ணிய ஸ்தலமாகும் .
மதுரை அழகர் கோவில் - " ராமதேவர் சித்தர் "

>> ராமதேவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில், சிவலிங்க வழிபாடு, ஒவ்வொரு சனிக்கிழமையும்
பகல் 12 மணிக்கு நடக்கிறது. இங்குள்ள இரண்டு பாறைகளுக்கு நடுவே, குகை போன்ற
இடத்தில் சிறிய அளவில் லிங்கம் உள்ளது. இங்கு செல்வது கடினமானது. கரடு, முரடான,
செங்குத்தான மலைகளைக் கடந்து, ஒற்றையடிப்பாதையில் செல்ல வேண்டும். மேலும்,
மிருகங்கள் நடமாட்டம் மிகுந்த வனம் என்பதால், பாதுகாப்பு கருதி, நான்கைந்து பேர்
சேர்ந்தே செல்கின்றனர். அழகர்கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, சோலைமலை
முருகன் கோயிலுக்கு வேன்களில் செல்லலாம். கோயிலை அடுத்துள்ள நூபுர கங்கை
ராக்காயி அம்மன் கோயிலில் இருந்து, ராமதேவர் சித்தர் மலைக்கு 7 கி.மீ., நடந்து
செல்ல வேண்டும். செல்லும் வழியில், தண்ணீர், உணவு கிடைக்காது. உடலை
வருத்தி வணங்க வரும் பக்தர்களுக்கு, ராமதேவர் சித்தர், வேண்டிய வரம்
தந்து காத்தருள்வார்.. நான் வணங்கும் சித்தா்
ஒரு முறை வந்து பாருங்கள் ...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக