புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மகா பெரியவா Poll_c10மகா பெரியவா Poll_m10மகா பெரியவா Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 05, 2015 2:05 pm


பாண்டவா வனவாசம் பண்ணிண்டு இருக்கறச்சே
ஒருசமயம் துர்வாச முனிவர் அவாளைப் பார்க்கப்
போனாராம்.

பசின்னு கேட்டுண்டு வந்த அந்தத் தபசிக்கு தர்றதுக்கு
ஒண்ணும் இல்லாம பாண்டவர்கள் தவிச்சதும்,
ஆபத்பாந்தவனா கிருஷ்ணர் வந்து பிரச்னையை தீர்த்து
வைச்சதும் அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

பாஞ்சாலி அலம்பி வைச்ச அட்சய பாத்திரத்துல ஒட்டிண்டு
இருந்த ஒரே ஒரு பருக்கையைத்தான் கிருஷ்ணர் சாப்பிட்டார்.
ஆனா, அதுவே முனிருக்கும் அவரோட வந்த சீடர்களுக்கும்
வயிறு நிரம்ப வைச்சுடுத்து இதெல்லாம் உங்களுக்குத்
தெரிஞ்சது தானே?

அதேமாதிரி பசியோட இருக்கறவாளுக்கு சாப்பிட ஏதாவது
பண்ணணும்ங்கறதுக்காகவும், தன்னை தரிசனம்
பண்ணவர்றவாளோட அறியாமையைப்
போக்கணும்கறதுக்காகவும் பெரியவா செஞ்ச திட்டம் ஒண்ணோட
அனுபவத்தைத்தான் இப்போ சொல்லப்போறேன்.

தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபலமான டாக்டர் ஒருவர்
காஞ்சிபுரத்துக்கு வர்ற சமயத்துல எல்லாம் மடத்துக்கும் வந்து
பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுப் போறதை வழக்கமா
வச்சுண்டு இருந்தார். அவர் வர்றச்சே எல்லாம் ரொம்ப வெலை
ஒசத்தியான ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை (அந்தக்காலத்துல
இதெல்லாம் பணக்காரா மட்டுமே சாப்பிடற பழங்களா இருந்தது)
வாங்கிண்டு வந்து கூடையோட பெரியவாகிட்டே சமர்ப்பிச்சுட்டுப்
போவார்.

ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த
ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே
அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம்
போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு
வந்தார்.

அவர் வந்த நேரம் மடத்துல கைங்கர்யம் பண்ற ஒருத்தர்,
முகாமோட வாசல்ல நின்னுண்டு இருந்தார். டாக்டர் பெரியவா
தரிசனத்துக்கு வழக்கமா வர்றவர்ங்கறதால அவரை அடையாளம்
தெரிஞ்சுண்டு, வாங்கோன்னு கூப்பிட்டார்.

கொஞ்ச நேரம் அவர்கிட்டே பேசிண்டு இருந்த டாக்டர்,
‘நான் வர்றச்சே எல்லாம் பெரியவாளுக்குன்னு ஆசையா பழங்களை
வாங்கிண்டு வர்றேன். ஆனா அதை மடத்துல இருக்கற
பெருச்சாளிகளும் சாப்பிடறதா தெரியறது. பெருச்சாளிகள் எல்லாம்
இந்தப் பழக்கூடைய நெருங்காத படிக்கு நீங்கதான் பத்திரமா
வைக்கணும். அதோட, இந்தப் பழங்கள் எல்லாத்தையும்
பெரியவாளுக்கே குடுக்கணும். இது என்னோட ஆசை!’ அப்படின்னு
அவர்கிட்டே சொல்லி, பழக்கூடையை அவர்கிட்டேயே ஒப்படைச்சார்.

மடத்துக்கு கைங்கர்யம் பண்றவருக்கு டாக்டர்கிட்டே என்ன
சொல்றதுன்னு தெரியலை. அதனால், ‘ஆகட்டும் பார்த்துக்கறேன்’னு
சொல்லிட்டு, பழக்கூடையை வாங்கி உள்ளே வைச்சுட்டார்.

உள்ளே வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினார் டாக்டர்.
மெல்லிசா ஒரு சிரிப்பை உதிர்த்த பரமாச்சார்யா, அவருக்கு
பிரசாதத்தை குடுத்தார். பவ்யமா அதை வாங்கிண்ட டாக்டர்,
‘பெரியவா, உத்தரவு தரணும். நான் புறப்படறேன்’ அப்படின்னார்.

‘என்ன அவசரம்? இன்னும் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் இருந்து
வந்த வேலையை முடிச்சுட்டுதான் போயேன்’ அப்படின்னார் ஆச்சார்யா.
டாக்டருக்கு ஒண்ணும் புரியலை. ‘வந்தது, பெரியவாளை தரிசனம்
பண்ணணும்னு, அந்த வேலை முடிஞ்சுடுத்து அப்புறம் வேற என்ன
வேலை இருக்கு?’ புரியலைன்னாலும் பரமாசார்யா சொன்னதை தட்ட
முடியாம, ‘சரி உங்க உத்தரவுப்படியே செய்யறேன்!’ என்று அந்தப்
பக்கமா உள்ளே போய் உட்கார்ந்துண்ட்டுட்டார்.

கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஆகியிருக்கும். தனக்குப் பக்கத்துல
நின்னுண்டு இருந்த ஒரு சீடன்கிட்டே, ‘நீ உள்ளே போய் அந்த டாக்டரை
அழைச்சுண்டு வா. அதோட, அவர் பழக்கூடை ஒண்ணைக் கொணடு
வந்து கொடுத்திருக்கார். அதை எடுத்துண்டு, அதை வாங்கி
வைச்சவரையும் கூட்டிண்டு வா!’ அப்படின்னார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். டாக்டர், பெரியவாளை தரிசனம்
பண்ணினப்போ பழக்கூடை பத்தி எதுவும் சொல்லலை. அவர் கொண்டு
வந்து குடுத்ததும், ஒருத்தர் அதை வாங்கிவைச்சதும் பெரியவாளுக்கு
எப்படித் தெரியும்னு எல்லாரும் யோசிச்சுண்டு இருக்கறச்சயே,
டாக்டர் அங்கே வந்து நின்னார்.

பின்னாலேயே பழக்கூடையை எடுத்துண்டு, அதை வாங்கிவைச்சவரும்
வந்து நின்னார்.

தனக்கு முன்னால அந்தப் பழக்கூடையை வைக்கச் சொன்ன பெரியவா,
டாக்டரை ஒரு நிமிஷம் உத்துப் பார்த்தார்.

‘எனக்கு என்ன வயசு ஆகறதுன்னு நோக்கு தெரியுமோ.. அறுபதைத்
தாண்டியாச்சு. பழம் ஒடம்புக்கு நல்லதா இருக்கலாம். ஆனா,
இத்தனையையும் நான் ஒருத்தனே சாப்பிட்டா அது எந்த மாதிரி
ஹானி பண்ணும்னு டாக்டரான நோக்கே தெரியுமோல்லியோ…
அப்படி இருக்கறச்சே ‘இதை எந்தப் பெருச்சளியும் தின்னுடாம
பார்த்துக்கணும்னு அவர்கிட்டே சொன்னியே அது நியாயமோ?

மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எ
ல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெரிச்சாளி.’

சொன்ன மகாபெரியவா, கொஞ்சம் நிறுத்தினார். இதுக்குள்ளே
டாக்டருக்கு உடம்பெல்லாம் குப்னு வேர்த்து முகமெல்லாம்
வெளுத்துடுச்சு. தான் பேசினது தப்புன்னு புரிஞ்சுண்டதால அவர்
கை, காலெல்லாம் லேசா நடுங்கவும் ஆரம்பிச்சுது.

‘நீ ரொம்ப பதட்டப்படாதே… நான் உன்னை மட்டும் சொல்லலை.
இங்கே வர்றவா பலரும் உன்னை மாதிரிதான். அவா தர்ற
எல்லாத்தையும் நானே சாப்பிடணும்ங்கறதுதான் அவாளோட
அவா! ஆனா அது முடியுமோ?
மொதல்ல நான் ஒரு சன்யாசிங்கறதையே எல்லாரும் மறந்துடறா.
எனக்கு எதுக்கு இத்தனை பழமும் பொருளும்? இதெல்லாம்
அநாவசியமில்லையோ!

அப்புறம் ஏன் இதையெல்லாம் நான் வாங்கிக்கறதா பாவனை
பண்ணிக்கறேன்னா, இங்கே மடத்துல எத்தனையோ நல்ல
காரியங்கள் நடத்தப்படறது, அதுக்கெல்லாம் பொருள் வேறும்.
குழந்தைகளையும் பொண்டாட்டியையும் விட்டுட்டு, மடமே
கதின்னு வந்து எத்தனையோ பேர் இங்கேயே இருந்து கைங்கரியம்
செஞ்சுண்டிருக்கா. அவாளுக்கெல்லாம் சாப்பிடறதுக்காவது நான்
ஏதாவது பண்ணியாகணும். இந்த மடத்தைப் பராமரிக்க வேண்டியது
என்னோட பொறுப்பில்லையோ!

சன்யாசியான எனக்கு அதைச் செய்யறதுக்கு ஏது வருமானம்?
உங்கள மாதிரியானவா தர்றதுதானே? அதைவைச்சு தானே நான்
இவாளுக்கு ஏதாவது செய்யணும்? அப்புறம் இவா சாப்பிடக்
கூடாதுன்னு நினைச்சா அது எப்படி முடியும்?

நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நன்னா புரிஞ்சுக்கணும்.
நீங்க ஒரு பொருளை ஒருத்தருக்குக் குடுத்துட்டா, அதுக்கப்புறம்
அது அவாளோடதுன்னு ஆயிடும். அதுக்கு நீங்க பாத்யதை கொண்டாட
முடியாது. அதை அவர் என்ன பண்ணணும்கறதை அவரேதான்
தீர்மானிக்கணும். அப்படித்தான் செய்யணும்னு நீங்க கன்ட்ரோல்
பண்ண முடியாது.

அப்படித்தான் நீங்க எனக்காகத் தர்றதும், அதெல்லாம் மத்தவாளுக்கும்
பிரயோஜனப்படற மாதிரி செய்யறதுதான் சன்யாசியான என்னோட
கடமை. நீங்க ஆசைப்படற மாதிரி நானே எல்லாத்தையும்
அனுபவிக்கணும்கறது சாத்யப்படவே படாது!’

சொன்ன பெரியவா, டாக்டர் தந்திருந்த பழக்கூடையில இருந்து
ஒவ்வொரு பழமா எடுத்து தான் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப்
பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா வெளியில வீச ஆரம்பிச்சுட்டார்.

பதறிப்போய்ட்டார் டாக்டர். பெரியவா ஏத்துக்காதது மட்டுமல்லாமல்,
பழத்தை தூக்கி வேற எறியராறே… பெரியவாளே எல்லாத்தையும்
சாப்பிடணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரியதப்பா? அப்படின்னு
மனசுக்குள்ளே நினைச்சு திகைச்சு நின்னவர், மனசுக்குள்ளே ஏதோ
தோணினவரா, வேகமா போய், அந்த ஜன்னல் பக்கமா வெளியில
எட்டிப் பார்த்தார்.

அவர் முகம் ஜன்னல் பக்கமா வெளியில தெரிஞ்ச விநாடி,
‘சாமீ! நீங்க குழந்தை குட்டியோட, நோய் நொடியில்லாம ஆரோக்யமா
நீண்டகாலம் இருக்கணும். எங்களுக்கு இவளோ நல்ல பழங்களைக்
குடுத்த நீங்க மவராசனா இருக்கணும்!’ அப்படின்னு கோரசா குரல்
எழும்பித்து வெளியில இருந்து.

என்னன்னு பார்த்தா, பத்துப் பதினைஞ்சு நரிக்குறவக் குடும்பம்
குழந்தைகளோட நின்னுண்ணு, ஜன்னல் பக்கமா வந்து விழற பழங்களை
எல்லாம் பிடிச்சு சேகரிச்சுண்டு இருந்தா. அவாள்லாம், அந்த டாக்டர்தான்
தங்களுக்காக பழங்களை வீசி எறியறதா நினைச்சுண்டு அவரை வாழ்த்த
ஆரம்பிச்சா!

மறுபடியும் மகாபெரியவாளைப் பார்த்தார் டாக்டர்.
‘என்ன பார்க்கறே? அவாளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பழஙகளைத்
தர்றதுக்கு யாருக்காவது மனசு வருமா? இப்போ நீ குடுத்ததா நினைச்சு
சந்தோஷமா எடுத்துண்டு போறாளே, அவாளோட மூஞ்சைப் பார்த்தியோ,
எத்தனை ஆனந்தம் அதுல தெரியறது? அந்த மாதிரியான சந்தோஷத்தை
மத்தவாளுக்குத் தர்றதுதான் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி தெரியுமோ..!

நம்பளால முடிஞ்சதை மத்தவாளுக்குத் தரணும்னு நினைக்கணும்.
கிடைக்கற எல்லாத்தையும் நாமளே அனுபவிக்கணும்னு நினைக்கறதும்,
நாம நினைச்சமாதிரிதான் எல்லாமே நடக்கணும்னும் நினைக்கறது தப்பு
புரிஞ்சுதோ?

இனனொரு முக்கியமான விஷயம்… நீ ஆசைப்பட்ட மாதிரியே மடத்துல
இருக்கற எந்தப் பெருச்சாளியும் அந்தப் பழத்தைத் திங்காம பார்த்துண்டாச்சு…
போதுமோ?’
மகாபெரியவா சொல்லி முடிக்க, அப்படியே சாஷ்டாங்கமா அவர் காலடியில
விழுந்தார் டாக்டர். பரமாசார்யா உபதேசம் பண்ணின பாடத்தைப்
புரிஞ்சுண்டுட்டேன்னு சொல்லாம சொல்ற மாதிரி, அவர் கண்ணுல இருந்து
நீர் வழிஞ்சு பெருகித்து.

தப்பை உணர்ந்துட்டாலே மன்னிப்புக் கிடைச்சுடும்கறதை உணர்த்தற மாதிரி
அவரை எழுந்திருக்கச் சொல்லி, இன்னொருதரம் பிரசாதம் தந்து, ‘அவா
வாழ்த்தின மாதிரியே மகாராஜனா இரு’ன்னு ஆசிர்வதிச்சு அனுப்பினார் மகா
பெரியவா.
எந்த தெய்வம் தன்னோட நைவேத்யத்தை தானே சாப்பிட்டிருக்கு?
அதெல்லாம் தன்னோட பக்தனுக்குக் கிடைக்கணும்கறதுதானே கடவுளோட
எண்ணம்? அப்படின்னா, தனக்குக் கிடைக்கறதெல்லாம் தேவை உள்ள
மத்தவாளுக்கேன்னு நினைச்ச பரமாசார்யாளை நடமாடம் தெய்வம்னு எல்லாரும்
சொன்னது வாஸ்தவமான உண்மைதானே.

———————————

– பி. ராமகிருஷ்ணன்
குமுதம் பக்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 05, 2015 2:23 pm

டாக்டருக்கு புரிய வைத்த காஞ்சி பெரியவர் நன்றி ஐழா.
ayyasamy ram wrote:
ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த
ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே
அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம்
போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு
வந்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1178659

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக