புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 22:26

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
34 Posts - 37%
heezulia
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
30 Posts - 33%
Dr.S.Soundarapandian
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
1 Post - 1%
mruthun
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
80 Posts - 34%
Dr.S.Soundarapandian
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
2 Posts - 1%
mruthun
இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_m10இன்றே செய்க, நன்றே செய்க! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றே செய்க, நன்றே செய்க!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 1 Dec 2015 - 6:46



வயது வந்தவர்களுக்கான வகுப்பு அது. ஆசிரியர் ஒருநாள் அவர்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தார். ‘நீங்கள் மிக விரும்பும் ஒருவரிடம் போய் நீங்கள் அவரை மிகவும் விரும்புவதாகச் சொல்லவேண்டும். யாரிடம் நீங்கள் இதுவரை இந்த வார்த்தைகளைச் சொன்னதில்லையோ அவரிடம் சொல்லுங்கள். அல்லது யாரிடம் நீண்ட நாட்களாக இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து ஆனால் சொல்லத் தயங்குகிறீர்களோ அவரிடம் போய் சொல்லுங்கள்’ என்பது தான் அந்த வீட்டுப் பாடம்.

இது என்ன பெரிய கஷ்டமான காரியமா என்று நமக்குத் தோன்றலாம். அந்த ஆசிரியரின் வகுப்பில் முக்கால்வாசிப்பேர் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள். முன் தலைமுறையை சேர்ந்த ‘ஆண் என்பவன் தன் உணர்வுகளைக் காண்பித்துக் கொள்வது தவறு என்ற கொள்கையில் வளர்க்கப்பட்டவர்கள். உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வது அல்லது வாய்விட்டு அழுவது (என்ன பெண் மாதிரி அழுகிறாய்?) என்பது அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. சிலருக்கு இந்த வீட்டுப் பாடம் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கியது.

அடுத்தமுறை வகுப்பு ஆரம்பிக்கும்போது ஆசிரியர் கேட்டார்: ‘உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களிடம் சென்று அவர்களை நீங்கள் விரும்புவதாகச் சொன்னபோது என்னவாயிற்று என்று உங்களில் யாராவது சொல்லத் தயாரா?’ என்று. அங்கிருந்த பெண்களில் யாரவது ஒருவர் எழுந்து ஏதாவது ஒரு அழுகை கதையைச் சொல்லுவார் என்று நினைத்திருந்த ஆசிரியைக்கு ஆண்களில் ஒருவர் கையைத் தூக்கியது வியப்பை அளித்தது.

அவர் மெதுவாக தன் நாற்காலியைவிட்டு எழுந்திருந்து வந்தார். ‘போனவாரம் இந்த வீட்டுப்பாடத்தை நீங்கள் கொடுத்தபோது எனக்கு உங்கள் மேல் மிகுந்த கோபம். எனக்கு. இந்த வார்த்தைகளைச் சொல்ல என்று எவருமில்லை என்பதுடன், இதெல்லாம் மிகவும் அந்தரங்கமான விஷயம். இதை ஒருவரிடம் சொல் என்று சொல்ல நீங்கள் யார்? என்று. ஆனால் நான் வீட்டிற்கு செல்லும் வழியில் என் மனசாட்சி என்னிடம் சொல்லியது: ‘உனக்குத் தெரியும், நீ யாரிடம் உங்களை நான் ரொம்ப நேசிக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்று’

ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கும் என் தந்தைக்கும் இடையில் முடிவில்லாத ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அன்றிலிருந்து அது அப்படியே இருந்தது. குடும்ப நிகழ்வுகள் தவிர மற்ற நேரங்களில் இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதையே தவிர்த்தோம். எதிர்பாராத சந்திப்பின் போதும் பேசுவதைத் தவிர்த்தோம். சென்ற வாரம் வகுப்பு முடிந்து வீட்டிற்குப் போவதற்குள், என் அப்பாவிடம் போய் நான் அவரை நேசிப்பதாகச் சொல்ல வேண்டும் தீர்மானித்தேன்.

விநோதமாக இருந்தாலும் உண்மையில் அந்த முடிவை எடுத்தவுடன் என் மனதில் இருக்கும் பாரம் இறங்கியதுபோல உணர்ந்தேன். காரிலிருந்து இறங்கியவுடன் வீட்டிற்குள் ஓடினேன். என் மனைவி உறங்கி விட்டாள். அவளை உலுக்கி எழுப்பி நான் செய்யவிருக்கும் காரியத்தை சொன்னேன். அவள் விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்து வந்து என்னை அப்படியே கட்டிக்கொண்டாள். எனது திருமண வாழ்க்கையில் முதன் முறையாக நான் அழுவதைப் பார்த்தாள். இரவு முழுவதும் இருவரும் விழித்திருந்தோம். காப்பி குடித்துக் கொண்டே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் காலையில் வெகு சீக்கிரம் எழுந்துவிட்டேன். மனம் முழுவதும் ஒரு பரபரப்பு அதனால் அதிகம் தூங்க முடியவில்லை. அலுவலகத்திலும் மிகவும் உற்சாகமாக எனது வேலைகளை துரிதமாக முடித்தேன். எனது தந்தையைக் கூப்பிட்டேன். ‘இன்றைக்கு அலுவலக வேலை முடிந்து இரவு நான் அங்கு வரலாமா? எனக்கு உங்களிடம் பேசவேண்டும்’ என்றேன். எனது தந்தை எரிச்சலுடன் ‘இப்போ என்ன?’ என்றார். ‘நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளமாட்டேன்’ என்றவுடன் என்னைப் பார்க்க சம்மதித்தார்.

மாலை ஐந்து முப்பதுக்கு நான் எனது பெற்றோர்களின் வீட்டில் இருந்தேன்.காலிங் பெல்லை அழுத்திவிட்டு, என் தந்தை வந்து கதவைத் திறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடி நின்றிருந்தேன். அம்மா வந்து திறந்துவிடக் கூடாதே என்ற பதட்டம் பரவியது என் உடலில். என் அதிர்ஷ்டம் என் அப்பாவே வந்து திறந்தார்.

நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு காலை வீட்டினுள் வைத்தவன், ‘அப்பா நான் உங்களை நேசிக்கிறேன் என்பதைச் சொல்லவே இங்கு வந்தேன்’ என்றேன்.

என் வார்த்தைகளைக் கேட்டவுடன் என் அப்பாவிடம் மிகப் பெரிய மாறுதல். அவர் முகம் மென்மையாக மாறி அதிலுள்ள சுருக்கங்கள் எல்லாம் கரைந்து போவது போல அழத் தொடங்கினார். என் அருகில் வந்து என்னைத் தழுவிக்கொண்டு ‘நானும் உன்னை நேசிக்கிறேன், மகனே! ஆனால் அதை சொல்ல என்னால் முடியவில்லை’ என்றார்.

அந்த நிமிடம் எனக்கு ஒரு பொக்கிஷமாகத் தோன்றியது. நான் அவரது பிடியிலிருந்து என்னை விலக்கிக் கொள்ளவில்லை. என் அம்மா எங்களிருவரையும் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் நின்றார். நான் அவரைப் பார்த்து கை அசைத்தேன். நானும் என் அப்பாவும் அப்படியே சற்று நேரம் நின்றோம். நான் விடை பெற்றுக் கொண்டேன். மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு எல்லையேயில்லை!

நான் இப்போது சொல்ல வந்தது இது இல்லை. இந்த விஷயம் நடந்து இரண்டு நாட்களுக்கெல்லாம் என் தந்தைக்கு மாரடைப்பு வந்து மருத்துவ மனையில் நினைவற்றுப் படுத்திருக்கிறார். மீண்டு வருவாரா தெரியாது.

நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான்: உடனடியாக செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போடாதீர்கள். என் தந்தையிடம் அவரை நேசிப்பதை சொல்ல நாள் கடத்தியிருந்தால் ஒருவேளை சொல்லாமலேயே போயிருப்பேனோ? எனக்கு அதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமலேயே போயிருக்குமோ? செய்ய வேண்டியதைச் செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுத்தவுடன் செய்து முடியுங்கள்’.

ரஞ்சனி நாராயணன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 1 Dec 2015 - 9:04

யதார்த்தமான உண்மை .
பல நேரங்களில் , சொல்ல வேண்டியதை ,
சொல்லவேண்டியவர்களிடம்
சொல்ல தயங்குவதும்
சொல்வதற்கு செல்லும் போது ,
காலம் மிகவும் கடந்துவிட்டது என்பதும்
நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் தண்டனை .

நல்ல பதிவு --ayyasami ram / ரஞ்சனி நாராயணன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 1 Dec 2015 - 12:43

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்? நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு காலை வீட்டினுள் வைத்தவன், ‘அப்பா நான் உங்களை நேசிக்கிறேன் என்பதைச் சொல்லவே இங்கு வந்தேன்’ என்றேன்.
என் வார்த்தைகளைக் கேட்டவுடன் என் அப்பாவிடம் மிகப் பெரிய மாறுதல். அவர் முகம் மென்மையாக மாறி அதிலுள்ள சுருக்கங்கள் எல்லாம் கரைந்து போவது போல அழத் தொடங்கினார். என் அருகில் வந்து என்னைத் தழுவிக்கொண்டு ‘நானும் உன்னை நேசிக்கிறேன், மகனே! ஆனால் அதை சொல்ல என்னால் முடியவில்லை’ என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1177905

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 1 Dec 2015 - 13:41

அட்டகாசம் ராம் அண்ணா புன்னகை.............சூப்பர் பதிவு !............. இன்றே செய்க, நன்றே செய்க! 3838410834 இன்றே செய்க, நன்றே செய்க! 3838410834 இன்றே செய்க, நன்றே செய்க! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக