புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
40 Posts - 63%
heezulia
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
viyasan
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
232 Posts - 42%
heezulia
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
21 Posts - 4%
prajai
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_m10 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளோ நினைவுகளோ (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 28, 2015 11:08 pm



*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ

மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ

சேனைகொண்டு அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம் எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ

தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ


******************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 28, 2015 11:12 pm

துன்பத்தில் காணும் இன்பங்கள்
-**********************************************

இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்
. ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென
. மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
. ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்
. தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்

எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
. போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்

சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ

எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்கமுண்டாகும் -மனம்
. எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் கண்டுமனம் ஆனந்தம்மேவ - இந்தப்
. பூமியிலே துன்பம்தனை கொஞ்சமாக்கினாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - முகில்
.. துரத்தமதி ஓடியொளித் தேகவிட்டவள்
கங்குல் விடி காலையிலே கதிரினை ஓட்டி -ஒளி
. காணும்பல மாற்றங்களாய் கணித்தபின் ஏனோ

தோற்றம் பெறும் மேனிதனும் இன்பம் காணவே என்று
,. துன்பம் தனை கொள்ள விடக் குவலயமாந்தர்
தூற்றியேவே றினமழித்து துடிதுடிக்கையில்`
. துன்பமுறும் வலிமரண ஓலம்கேட்டதில்
வீற்றிருக்கும் மன்னர் படை குடிகள்யாவுமே
. வெறிபிடித்து இன்பங்கண்டே வெற்றியென்றாறடி
ஆற்றும்செயல் அகிலமதில் எப்படி வந்தே
. அன்பழித்து இன்பமும்கொன் றெழுச்சிகொண்டதோ


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 8:30 am

 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) 3838410834  கனவுகளோ நினைவுகளோ (கவிதை) 3838410834  கனவுகளோ நினைவுகளோ (கவிதை) 1571444738
kirikasan wrote: துன்பத்தில் காணும் இன்பங்கள்
-**********************************************
எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
மேற்கோள் செய்த பதிவு: 1177506

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 8:33 am

அருமை அனைத்தும் தேன் சுவை கவிதைகள் நன்றி.
kirikasan wrote:
மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மேற்கோள் செய்த பதிவு: 1177505

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Nov 30, 2015 4:17 pm

kirikasan wrote: துன்பத்தில் காணும் இன்பங்கள்
-**********************************************

சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ

மேற்கோள் செய்த பதிவு: 1177506

அருமையான வரிகள் ! நன்றி.




Uploaded with ImageShack.us
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2015 4:44 pm

 கனவுகளோ நினைவுகளோ (கவிதை) 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக