புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
prajai
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
417 Posts - 48%
heezulia
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
28 Posts - 3%
prajai
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_m10கூந்தலுக்கு மணம் உண்டா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூந்தலுக்கு மணம் உண்டா?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 4:19 pm

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? ' என்ற கேள்விக்கு விடைகாணும் பொருட்டு பல காலங்களாக கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கேள்வியே எவ்வளவு தவறானது என்பதைப் பற்றியும் நம்மை வியப்பில் ஆழ்த்தப் போகின்ற சில உண்மைகளைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் காணலாம்.

குறுந்தொகைப் பாடல்:

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே. - பாடல் எண்: 2

இறையனார் என்னும் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் இப் பாடலின் தற்போதைய பொருள் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

திருவிளையாடல் திரைப்படம்:

மேற்காணும் பாடலுக்கான விளக்கத்தில் உண்மையிலேயே பொருள் தவறு உள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் திருவிளையாடல் படத்தில் வருகின்ற ஒரு நிகழ்ச்சியை இங்கே காணலாம்.


திருவிளையாடல் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இயக்கப்பட்ட திருவிளையாடல் என்னும் பழைய திரைப்படத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா? என்பதைப் பற்றி பாண்டிய மன்னனுக்கு ஓர் ஐயம் வரும். அந்த ஐயத்தைத் தீர்ப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று மன்னன் அறிவிக்க, அதைக் கேட்கும் தருமி ஒருவன் சிவபெருமானிடம் இருந்து ஒரு பாடலைப் பெற்றுவந்து பாண்டிய மன்னனின் அவையில் படித்துக் காட்டுவான். அப் பாடலைக் கேட்டு தனது ஐயப்பாடு நீங்கிய மன்னன் மகிழ்ந்து பரிசளிக்கும்போது நக்கீரர் என்னும் அவைப்புலவர் குறுக்கிட்டுத் தடுத்துவிடுவார். பின்னர் சிவபெருமானே மன்னனின் அவையில் தோன்றி நக்கீரருடன் வாதிடுவார். படத்தில் சிவபெருமானாக வரும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது அருமையான நடிப்புத் திறமையாலும் தருமியாக வரும் நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களின் வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவையினாலும் இத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ஓடியது. படம் அருமையாக ஓடி இருந்தாலும் அதிலும் சில தவறுகள் இருந்தன. இத் தவறுகள் நம் கட்டுரையுடன் தொடர்புடையவை என்பதால் அவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

திருவிளையாடல் புராணம்:

நாம் மேலே கண்ட திருவிளையாடல் திரைப்படத்தின் கதைக்கருவானது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் இருந்தே உருவானது. இப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதும்போது சில உண்மைகளை அவர்கள் ஆராயத் தவறிவிட்டனர். அவை என்ன என்று பார்ப்போம்.

புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் கீழ்க்காணும் ஓர் பாடல் உள்ளது.

தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.
- பா.எண்: 2520.

மேற்காணும் பாடலுக்கு விளக்கம் கூறும்போது " சிவபெருமான் 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் பாடலை தருமியின் துன்பம் தீரத் தந்தார்." என்று கூறியுள்ளனர். 'கொங்கு தேர் வாழ்க்கை' என்றே துவங்குவதால் இப் பாடலையும் நாம் மேலே கண்ட குறுந்தொகைப் பாடலையும் ஒன்றாகக் கருதி திரைப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி குறுந்தொகைப் பாடலை எழுதிய இறையனார் என்பவர் சிவபெருமானே என்றும் கூறுகிறார்கள். இக் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனென்றால் கொங்குதேர் வாழ்க்கை என்று சிவபெருமான் எழுதிய பாடலும் இறையனார் எழுதிய பாடலும் ஒன்றே என்று உறுதிப்படுத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை.

மேலும் குறுந்தொகையில் வரும் பாடலின் உண்மையான விளக்கத்தை நாம் அறிந்த பின்னர் பாண்டிய மன்னனது ஐயத்திற்கும் இப் பாடலுக்கும் சற்றும் தொடர்பில்லை என்னும் உண்மையினையும் அறிந்துகொள்ளலாம்.

நன்றி முகநூல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:26 pm

கூந்தலுக்கு மணம் உண்டா? 103459460
கார்த்திக் செயராம் wrote:கொங்குதேர் வாழ்க்கை என்று சிவபெருமான் எழுதிய பாடலும் இறையனார் எழுதிய பாடலும் ஒன்றே என்று உறுதிப்படுத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை.
இரண்டும் வெவ்வேறானவை என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இல்லையே...




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:09 pm

கூந்தலுக்கு மணம் உண்டா? 3838410834 கூந்தலுக்கு மணம் உண்டா? 103459460 கூந்தலுக்கு மணம் உண்டா? 1571444738

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:08 am

கார்த்திக் செயராம் wrote: பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? ' என்ற கேள்விக்கு விடைகாணும் பொருட்டு பல காலங்களாக கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கேள்வியே எவ்வளவு தவறானது என்பதைப் பற்றியும் நம்மை வியப்பில் ஆழ்த்தப் போகின்ற சில உண்மைகளைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் காணலாம்.

குறுந்தொகைப் பாடல்:

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.     - பாடல் எண்: 2

இறையனார் என்னும் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் இப் பாடலின் தற்போதைய பொருள் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

திருவிளையாடல் திரைப்படம்:

மேற்காணும் பாடலுக்கான விளக்கத்தில் உண்மையிலேயே பொருள் தவறு உள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் திருவிளையாடல் படத்தில் வருகின்ற ஒரு நிகழ்ச்சியை இங்கே காணலாம்.


திருவிளையாடல் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இயக்கப்பட்ட திருவிளையாடல் என்னும் பழைய திரைப்படத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா? என்பதைப் பற்றி பாண்டிய மன்னனுக்கு ஓர் ஐயம் வரும். அந்த ஐயத்தைத் தீர்ப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று மன்னன் அறிவிக்க, அதைக் கேட்கும் தருமி ஒருவன் சிவபெருமானிடம் இருந்து ஒரு பாடலைப் பெற்றுவந்து பாண்டிய மன்னனின் அவையில் படித்துக் காட்டுவான். அப் பாடலைக் கேட்டு தனது ஐயப்பாடு நீங்கிய மன்னன் மகிழ்ந்து பரிசளிக்கும்போது நக்கீரர் என்னும் அவைப்புலவர் குறுக்கிட்டுத் தடுத்துவிடுவார். பின்னர் சிவபெருமானே மன்னனின் அவையில் தோன்றி நக்கீரருடன் வாதிடுவார். படத்தில் சிவபெருமானாக வரும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது அருமையான நடிப்புத் திறமையாலும் தருமியாக வரும் நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களின் வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவையினாலும் இத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ஓடியது. படம் அருமையாக ஓடி இருந்தாலும் அதிலும் சில தவறுகள் இருந்தன. இத் தவறுகள் நம் கட்டுரையுடன் தொடர்புடையவை என்பதால் அவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

திருவிளையாடல் புராணம்:

நாம் மேலே கண்ட திருவிளையாடல் திரைப்படத்தின் கதைக்கருவானது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் இருந்தே உருவானது. இப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதும்போது சில உண்மைகளை அவர்கள் ஆராயத் தவறிவிட்டனர். அவை என்ன என்று பார்ப்போம்.

புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் கீழ்க்காணும் ஓர் பாடல் உள்ளது.

தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.
                            - பா.எண்: 2520.

மேற்காணும் பாடலுக்கு விளக்கம் கூறும்போது " சிவபெருமான் 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் பாடலை தருமியின் துன்பம் தீரத் தந்தார்." என்று கூறியுள்ளனர். 'கொங்கு தேர் வாழ்க்கை' என்றே துவங்குவதால் இப் பாடலையும் நாம் மேலே கண்ட குறுந்தொகைப் பாடலையும் ஒன்றாகக் கருதி திரைப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி குறுந்தொகைப் பாடலை எழுதிய இறையனார் என்பவர் சிவபெருமானே என்றும் கூறுகிறார்கள். இக் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனென்றால் கொங்குதேர் வாழ்க்கை என்று சிவபெருமான் எழுதிய பாடலும் இறையனார் எழுதிய பாடலும் ஒன்றே என்று உறுதிப்படுத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை.

மேலும் குறுந்தொகையில் வரும் பாடலின் உண்மையான விளக்கத்தை நாம் அறிந்த பின்னர் பாண்டிய மன்னனது ஐயத்திற்கும் இப் பாடலுக்கும் சற்றும் தொடர்பில்லை என்னும் உண்மையினையும் அறிந்துகொள்ளலாம்.

நன்றி முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1174740 கூந்தலுக்கு மணம் உண்டா? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக