புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டினத்தார் உணர்த்திய உண்மைகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தாம் உணர்ந்த உண்மைகளை சித்தர்களும் புலவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் நமக்கு எடுத்துக் காட்டி உள்ளார்கள்
அவற்றை நாம் படித்துப்பார்த்தால் தவறுகளைச் செய்யும் போது அச்சப்படுவோம்
பட்டினத்தார் பாடிய சில பாடல்களை நாம் பார்ப்போம்
நன்றி-முகநூல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த உடல் என்பது என்ன?
“அங்கோடு இங்கோடு அலமருங்க கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை – இருவினைப் பெட்டகம்
வாத பித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை
நாற்றப் பாண்டம் – நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம் – பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோக்கிடம்- ஓடும் மரக்கலம்
மாயா விகாரம் – மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி – தூற்றும் பத்தம்
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டும் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை
ஈமக் கனலில் இடுசில விருந்து
காமக் கனலில் கருகும் சருகு
கிருமி கிண்டும் கிழங்கு”
“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”
என்று நிலையில்லா இந்த உடலை – இந்த உலக வாழ்வை மிக அழகாக விவரிப்பார் பட்டினத்தார் ஆவார்
“அங்கோடு இங்கோடு அலமருங்க கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை – இருவினைப் பெட்டகம்
வாத பித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை
நாற்றப் பாண்டம் – நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம் – பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோக்கிடம்- ஓடும் மரக்கலம்
மாயா விகாரம் – மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி – தூற்றும் பத்தம்
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டும் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை
ஈமக் கனலில் இடுசில விருந்து
காமக் கனலில் கருகும் சருகு
கிருமி கிண்டும் கிழங்கு”
“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”
என்று நிலையில்லா இந்த உடலை – இந்த உலக வாழ்வை மிக அழகாக விவரிப்பார் பட்டினத்தார் ஆவார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுமட்டுமல்ல“ஐம்பொறி மயக்கமும் இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை
எலும்போடு நரம்பு கொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச் சென்றடையும்
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை(பஞ்சரம் என்றால் கூண்டு)
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தைக்
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை”
“காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக்கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலனைக்
நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையைப்”
“ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்பு வைத்து அலைந்தாய் நெஞ்சமே”
“எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை
அத்தனையும் மண் தின்பதில்லையோ”
“ஆங்காசப் பொக்கிசம் – கோபக் களஞ்சியம் – ஆணவத்தால்
நீங்கா அரண்மனை – பொய் வைத்த கூடம் – வீண்நீடி வளர்
தேங்கார் பெருமதில் – காமவிலாசம் – இத்தேகம் கந்தல்”
“விடக்கே – பருந்தின் விருந்தே – கமண்டல வீணன் இட்ட
முடக்கே – புழு வந்து உறையிடமே – நலம் முற்றும் இலாச்
சடக்கே – கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
தொடக்கே” என்கிறார் நமது உடலை பார்த்து
(விடக்கு என்றால் தசைப்பிண்டம், முடக்கு என்றால் சிறு குடில், கமண்டல வீணன் என்றால் பிரமன், )
உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை
எலும்போடு நரம்பு கொண்டு இடையில் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச் சென்றடையும்
ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை(பஞ்சரம் என்றால் கூண்டு)
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தைக்
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை”
“காமக் காற்றெடுத்து அலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக்கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலனைக்
நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையைப்”
“ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்பு வைத்து அலைந்தாய் நெஞ்சமே”
“எத்தனை நாள் கூடி எடுத்த சரீரம் இவை
அத்தனையும் மண் தின்பதில்லையோ”
“ஆங்காசப் பொக்கிசம் – கோபக் களஞ்சியம் – ஆணவத்தால்
நீங்கா அரண்மனை – பொய் வைத்த கூடம் – வீண்நீடி வளர்
தேங்கார் பெருமதில் – காமவிலாசம் – இத்தேகம் கந்தல்”
“விடக்கே – பருந்தின் விருந்தே – கமண்டல வீணன் இட்ட
முடக்கே – புழு வந்து உறையிடமே – நலம் முற்றும் இலாச்
சடக்கே – கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
தொடக்கே” என்கிறார் நமது உடலை பார்த்து
(விடக்கு என்றால் தசைப்பிண்டம், முடக்கு என்றால் சிறு குடில், கமண்டல வீணன் என்றால் பிரமன், )
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்படி நமது உடலை வர்னிக்கும் பட்டினத்தார் மரணம் வந்தால் என்ன நிகழும் என்பதையும் பல பாட்டுகளில் நமக்கு விளக்குகிறார்.
“கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பாரோ?” என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்? யாரும் வரமாட்டார்கள்
“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”
என்றும்,
“மனையாளும் மக்களும், வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே-வழிக்கேது துணை
தினையாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே” ஆகும்
“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே – விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே – விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புணிணியமும் பாவமுமே” ஆகும்
என்று நற்செயலாம் தவத்தைச் செய்யச் சொல்கிறார் பட்டினத்தார்
“கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பாரோ?” என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்? யாரும் வரமாட்டார்கள்
“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”
என்றும்,
“மனையாளும் மக்களும், வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே-வழிக்கேது துணை
தினையாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்தவம்
தனையாள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே” ஆகும்
“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே – விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே – விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புணிணியமும் பாவமுமே” ஆகும்
என்று நற்செயலாம் தவத்தைச் செய்யச் சொல்கிறார் பட்டினத்தார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார்
ஒரு பாடலிலே சொல்கிறார்
“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே
எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்
நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்
அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்
சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்
ஒரு பாடலிலே சொல்கிறார்
“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே
எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்
நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்
அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்
சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இறக்கும் தருவாயில் ஞானத் தெளிவு வந்து மனிதன் எப்படி எல்லாம் தனக்குள் புலம்புவான் என்பதை பட்டினத்தார் மிக அழகாகத் தொகுத்துத் தந்துள்ளார்
“வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே
மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே
வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே
ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும் (ஆணி என்றால் முதன்மை)
காணில் நமது என்று கனம் பேசிக் கொண்டேனே ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் மதி இழந்து கெட்டேனே
குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று மதி இழந்து கெட்டேனே
பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய் என்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே
கண்ட புலவர் தனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே
எண்ணிறந்த ஜென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் மதி இழந்து கெட்டேனே
சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறா உடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே
தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மான்டேனே
தோல் எலும்பு மாமிசமும் தோல் அன்னத்தால் வளரும்
போல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே
போக்குவரத்தும் பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம் முறுகிக் கெட்டேனே”
என்று மனம் புலம்ப பிரியப் போகும் உயிர் உடலைப் பார்த்து கிண்டல் செய்கிறது. வாழத் தவறிவிட்டாய் மனிதனே எனச் சுட்டிக் காட்டுகிறது
“வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லிச் சதுர் இழந்து கெட்டேனே
மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே
வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே
ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும் (ஆணி என்றால் முதன்மை)
காணில் நமது என்று கனம் பேசிக் கொண்டேனே ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிப்
பாசாங்கு பேசிப் மதி இழந்து கெட்டேனே
குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய் என்று மதி இழந்து கெட்டேனே
பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய் என்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே
கண்ட புலவர் தனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே
எண்ணிறந்த ஜென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் மதி இழந்து கெட்டேனே
சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறா உடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே
தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வு இல்லாமல் இன்பம் என்று மான்டேனே
தோல் எலும்பு மாமிசமும் தோல் அன்னத்தால் வளரும்
போல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே
போக்குவரத்தும் பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம் முறுகிக் கெட்டேனே”
என்று மனம் புலம்ப பிரியப் போகும் உயிர் உடலைப் பார்த்து கிண்டல் செய்கிறது. வாழத் தவறிவிட்டாய் மனிதனே எனச் சுட்டிக் காட்டுகிறது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இறைவனை துதிக்கத் தவறினாயே எனப் பழி சுமத்துகிறது
“உடக்கை ஒருக்கி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே
(உடக்கு என்றால் சுற்றாணி சடக்கு என்றால் தேகம்)
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்ற முறை மாதல் வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாலுக்கு இறைத்தோமே
(பஞ்சரித்து என்றால் கெஞ்சிப்பேசி)
அக்கு அறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டீர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே
(அக்கு என்றால் ருத்ராட்சம்)
ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிக்கெண்டை ஆனேனே
பூவணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே
“உடக்கை ஒருக்கி உயிரை அடைத்து வைத்த
சடக்கைச் சதம் என்று சார்ந்து அங்கு இறுமாந்தை
உடக்கைத் தகர்த்தே உயிரை எமன் கொள்கையிலே
அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே
(உடக்கு என்றால் சுற்றாணி சடக்கு என்றால் தேகம்)
தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
சுற்றி இருக்கும் வினை சூழ்ந்தனையே நெஞ்சமே
அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோர் அட்சரமாய்ப்
பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
வஞ்சகமாய் உற்ற முறை மாதல் வலைக்குள்ளாகிப்
பஞ்சரித்துத் தேடிப் பாலுக்கு இறைத்தோமே
(பஞ்சரித்து என்றால் கெஞ்சிப்பேசி)
அக்கு அறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
மக்கள் பெண்டீர் சுற்றமுடன் வாழ்வை மிக நம்பி அன்பாய்
எக்காலமும் உண்டென்று எண்ணினையே நெஞ்சமே
(அக்கு என்றால் ருத்ராட்சம்)
ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல்
பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
தூண்டில் அகப்பட்டுத் துடிக்கெண்டை ஆனேனே
பூவணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
சீர்பாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே
ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஞானம் பிறக்கிறது நெஞ்சுக்குள்
செய்ய மறந்ததைப் பட்டியலிடுகிறான் மனிதன்
மூலத்து உதித்து எழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதி மறந்தேன் பூரணமே
உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே
நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவிழந்தேன் பூரணமே
உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே
விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே
நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே
நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே
உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவிழந்தேன் பூரணமே மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவிழந்தேன் பூரணமே
இடைபிங்கலையின் இயல்பு அறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே
ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்று இருந்து நலன் அழிந்தேன் பூரணமே
மெய்வாழ்வை மிக விரும்பி மிக வாழாமல்
பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே
பெண்டு பிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே
தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே
இந்த உடல் உயிரை எப்போதும் தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே
மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே
மண் பெண் பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து
கண் கெட்ட மாடு அது போல் கலங்கினேன் பூரணமே
தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாப் பிறந்து இங்கு அலைந்து நின்றேன் பூரணமே
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உன்னைத் தான் போற்றாமல்
காசிவரைப் போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே
(வாசி என்றால் பிராணவாயு)
உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல் மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே
எத்தேச காலமும் நாம் இறவாது இருப்போம் என்று
உற்று உனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே
எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே
பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன்துணைத்தாள் தந்து புகழ் அருள்வாய் பூரணமே
உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே
பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து அலுத்தேன் நான்
உரமுடைய அக்கினி தான் உண்டு அலுத்தான் பூரணமே
என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே
கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே
செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பாம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே
எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே
குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல்
மலபாண்டத்துள் இருந்து மயங்கினேன் பூரணமே
ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே
என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே
நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே
உள்ளும் புறமுமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே
தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே
விலங்கு புள் ஊர்வன அசரம் விண்ணவர் நீர்ச்சாதி
மனுக்குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவு
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே
வாழையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே
கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே
என்ன தான் கற்றால் என்? எப்பொருள் பெற்றால் என்?
உன்னை அறியாதார் உய்வாரோ? பூரணமே
கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தை
பெற்று அறியார் தங்களுக்கு பிறப்பு அறுமோ பூரணமே
வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞானமே பேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே
மூச்சு என்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சு என்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே
வாயார வாழ்த்தி மகிழ்ந்து உன்னைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே
சந்திரனை மேகமது தான் மறைத்தவாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே
நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்று எண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே
எள்ளுக்குள் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே
பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவிழந்தேன் பூரணமே
படைத்தும் அழித்திடுவாய் – பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே
பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்து இங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே
சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதி பேதங்கள் என்றும்
பந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே
நானே நீ - நீயே நான் – நாம் இரண்டும் ஒன்றானால்
தேனில் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே
செய்ய மறந்ததைப் பட்டியலிடுகிறான் மனிதன்
மூலத்து உதித்து எழுந்த முக்கோணச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதி மறந்தேன் பூரணமே
உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே
நாவிக் கமல நடுநெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவிழந்தேன் பூரணமே
உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே
விசுத்தி மகேசுவரனை விழி திறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே
நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே
நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல்
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே
உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவிழந்தேன் பூரணமே மூக்கு முனையை முழித்திருந்து பாராமல்
ஆக்கை கெட்டு நானும் அறிவிழந்தேன் பூரணமே
இடைபிங்கலையின் இயல்பு அறிய மாட்டாமல்
தடையுடனே யானும் தயங்கினேன் பூரணமே
ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நான் என்று இருந்து நலன் அழிந்தேன் பூரணமே
மெய்வாழ்வை மிக விரும்பி மிக வாழாமல்
பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே
பெண்டு பிள்ளை தந்தை தாய் பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி உடல் அழிந்தேன் பூரணமே
தண்டிகை பல்லக்குடனே சகல சம்பத்துகளும்
உண்டென்று நம்பி உணர்வு அழிந்தேன் பூரணமே
இந்த உடல் உயிரை எப்போதும் தான் சதமாய்ப்
பந்தமுற்று நானும் பதம் அழிந்தேன் பூரணமே
மாதர் பிரபஞ்ச மயக்கத்திலே விழுந்து
போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே
மண் பெண் பொன் ஆசை மயக்கத்திலே விழுந்து
கண் கெட்ட மாடு அது போல் கலங்கினேன் பூரணமே
தனிமுதலைப் பார்த்துத் தனித்திருந்து வாழாமல்
அநியாயமாப் பிறந்து இங்கு அலைந்து நின்றேன் பூரணமே
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உன்னைத் தான் போற்றாமல்
காசிவரைப் போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே
(வாசி என்றால் பிராணவாயு)
உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
கடல் மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே
எத்தேச காலமும் நாம் இறவாது இருப்போம் என்று
உற்று உனைத்தான் பாராமல் உருவழிந்தேன் பூரணமே
எத்தனை தாய் தந்தை இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும் பிறந்து இறந்தேன் பூரணமே
பெற்று அலுத்தார் தாயார் பிறந்து அலுத்தேன் யானும் உன்றன்
பொன்துணைத்தாள் தந்து புகழ் அருள்வாய் பூரணமே
உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே
பிரமன் படைத்து அலுத்தான் பிறந்து இறந்து அலுத்தேன் நான்
உரமுடைய அக்கினி தான் உண்டு அலுத்தான் பூரணமே
என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல் உடல் இழந்தேன் பூரணமே
கருவாய் உருவாய்க் கலந்து உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது அறிகிலேன் பூரணமே
செம்பொன் கமலத் திருவடியைப் போற்றாமல்
பாம்பை கொட்ட ஆடும் பிசாசானேன் பூரணமே
எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே
குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல்
மலபாண்டத்துள் இருந்து மயங்கினேன் பூரணமே
ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல்
நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே
என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய்
உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே
நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து
வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே
உள்ளும் புறமுமாய் உடலுக்குள் நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது இருந்தேனே பூரணமே
தாயாகித் தந்தையாய்த் தமர் கிளைஞர் சுற்றம் எல்லாம்
நீயாகி நின்ற நிலை அறியேன் பூரணமே
விலங்கு புள் ஊர்வன அசரம் விண்ணவர் நீர்ச்சாதி
மனுக்குலங்கள் எழுவகையில் நின்ற குறிப்பறியேன் பூரணமே
ஆணாகிப் பெண்ணாய் அலியாகி வேற்றுருவு
மாணாகி நின்ற வகையறியேன் பூரணமே
வாழையாய்ப் பக்குவமாய் வளர்ந்து கிழம் தானாகி
பாலையாய் நின்ற பயன் அறியேன் பூரணமே
கொல்வாய் பிறப்பிப்பாய் கூட இருந்தே சுகிப்பாய்
செல்வாய் பிறர்க்குள் செயல் அறியேன் பூரணமே
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள் தாம் பூரணமே
என்ன தான் கற்றால் என்? எப்பொருள் பெற்றால் என்?
உன்னை அறியாதார் உய்வாரோ? பூரணமே
கற்றறிவோம் என்பார் காணார்கள் உன்பதத்தை
பெற்று அறியார் தங்களுக்கு பிறப்பு அறுமோ பூரணமே
வான் என்பார் அண்டம் என்பார் வாய்ஞானமே பேசித்
தான் என்பார் வீணர் தனை அறியார் பூரணமே
மூச்சு என்பார் உள்ளம் என்பார் மோனம் எனும் மோட்சம் என்பார்
பேச்சு என்பார் உன்னுடைய பேர் அறியார் பூரணமே
வாயார வாழ்த்தி மகிழ்ந்து உன்னைத்தான் போற்றாமல்
காயம் எடுத்துக் கலங்கினேன் பூரணமே
சந்திரனை மேகமது தான் மறைத்தவாரது போல்
பந்தமுற யானும் உனைப் பார்க்கிலேன் பூரணமே
நீர்மேல் குமிழி போல் நிலையற்ற காயம் இதைத்
தாரகம் என்று எண்ணி நான் தட்டழிந்தேன் பூரணமே
எள்ளுக்குள் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருந்து
உள்ளம் அறியாது உருகினேன் பூரணமே
பூசையுடன் புவன போகம் எனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும் அறிவிழந்தேன் பூரணமே
படைத்தும் அழித்திடுவாய் – பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீவியாய்த் துலங்குவிப்பாய் பூரணமே
பாவபுண்ணியம் என்னும் பகுப்பாய்ப் படைத்து அழித்து இங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த அருள் அறியேன் பூரணமே
சாந்தம் என்றும் கோபம் என்றும் சாதி பேதங்கள் என்றும்
பந்தம் என்றும் புத்தி என்றும் படைத்தனையே பூரணமே
நானே நீ - நீயே நான் – நாம் இரண்டும் ஒன்றானால்
தேனில் ருசியது போல் தெவிட்டாய் நீ பூரணமே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கண்ணிழந்த பிறகு சூரிய வணக்கம் செய்ய நினைப்பது போல சாகும் தருவாயில் ஞானம் பிறக்கிறது பிறந்து என்ன பயன்
சிறிது நேரத்தில் சாகப் போகிறோம்“நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமாய் எண்ணுதே
ஆர்க்கும் உயர் ஆசை அழியேனே என்குதே
கண்ணுக்கு கண் எதிரே கட்டையில் வேகக் கண்டும்
எண்ணும் திறமாய் இருப்போம் என்று எண்ணுதே”
என்று புலம்பி,
“அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?
உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ?”
என்று இறைவனிடம் வேண்டுகிறார் பட்டினத்தார் .
எல்லாம் கிட்டும் இறைவனின் திருவடியில் ..
சிறிது நேரத்தில் சாகப் போகிறோம்“நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமாய் எண்ணுதே
ஆர்க்கும் உயர் ஆசை அழியேனே என்குதே
கண்ணுக்கு கண் எதிரே கட்டையில் வேகக் கண்டும்
எண்ணும் திறமாய் இருப்போம் என்று எண்ணுதே”
என்று புலம்பி,
“அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ?
சொர்ண விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ?
உலக விசாரம் ஒழிந்த இடம் கிட்டாதோ?
செப்புதற்கும் எட்டா தெளிந்த இடம் கிட்டாதோ?”
என்று இறைவனிடம் வேண்டுகிறார் பட்டினத்தார் .
எல்லாம் கிட்டும் இறைவனின் திருவடியில் ..
டி.எம். சௌந்தரராஜன் பாடிய பட்டினத்தார் பாடல்களை யாரே மறக்கமுடியும் ?
“ஐயிரண்டு திங்களாய்
அங்கமெல்லாம் நொந்து பெற்று” என்ற அடிகளை டி.எம்.எஸ். பாடியபோது, அந்த ‘நோவு’ என்பதன் முழுப் பொருளும் புரியும் ! அற்புதம் !
இதை நினைப்பூட்டிய பழ. முத்துராமலிங்கத்திற்கு நன்றி !
“ஐயிரண்டு திங்களாய்
அங்கமெல்லாம் நொந்து பெற்று” என்ற அடிகளை டி.எம்.எஸ். பாடியபோது, அந்த ‘நோவு’ என்பதன் முழுப் பொருளும் புரியும் ! அற்புதம் !
இதை நினைப்பூட்டிய பழ. முத்துராமலிங்கத்திற்கு நன்றி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|