புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_m10பழந்தமிழ்  இசைக்கருவிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழந்தமிழ் இசைக்கருவிகள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 12 Nov 2015 - 14:30

பழந்தமிழ் இசை
********************
இசைக்கருவிகள்

***********************
முரசு
**********
நமது முன்னோர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும்,
அதை பலர் அறியும் விதமாகப் பறைசாற்றிச் செய்வார்கள்.

“பறை அடித்தல்” அல்லது “முரசு கொட்டுதல்” என்று அதற்கு பெயர்.

தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசமாகும்.
இத்தகைய முரசம் பலவகைப்படும்.

கொடை முரசு
**************
தான தர்மங்கள் செய்வதை அறிவிப்பது.

மணமுரசு
**************
மங்கல காரியமான மணம் புரிதலை தெரிவிப்பது.

வெற்றிமுரசு
**************
அரசன் போரில் வெற்றி பெற்றதை அறிவிக்கும் முரசு.

வேள்வி முரசு
**************
மந்திர வேள்விகள் செய்யும் பொழுது ஒலிக்கும் முரசு.

காவல் முரசு
**************
காவலர்கள் காவல் செய்யும் பொழுது அடிக்கும் முரசு.

வெற்றிமுரசு
**************
போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசமாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீரமுரசமாகும்.

புலியோடு போராடி, அதனைத் தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்துச் செய்யப்படுவது மயிர்க்கண் முரசம் என்று நூல்கள் கூறும்.

இதுவும் வீரமுரசத்தின்பாற்படும்.

பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர்.

இதனை மலர் பரப்பிய கட்டிலில் வைத்துச் சிறப்புச் செய்வர்.

இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்க்களத்தில் வீரவெறியூட்டும் தோற் கருவிகள் பல இருந்தன.

அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம்.

இவ்விசைக் கருவிகள் யாவும் சேர்ந்து முழுங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர்வெறி கொண்டு செருக்களம் நோக்குவர்.

“செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி நின்றாள் மறக்குடியிற் பிறந்த மகள்’’ என்று புறநானூறு கூறுவதால் போர் முரசின் இயல்பை அறியலாகும்.

தியாக முரசு
**************
இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு இதுவாகும்.

நியாய முரசு
**************
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது.

(மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

பம்பை (இசைக்கருவி)
**************************
பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது.

பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.

பம்பை என்ற நாட்டுப்புற தோல் இசைக்கருவி நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பின்னணி (வாத்தியமாக) இசைக் கருவியாக இடம் பெறுகின்றது.

நாட்டுப்புற இசைக்கருவிகள் நாட்டுப்புற மக்களிடம் தோன்றி, வழங்கி வருவது.

திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் பம்பை இசைக்கப்படுகிறது. நாட்டுப்புற கோவில் விழாக்களில் சக்தி கரகம் அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பம்பையை இசைத்தபடி கதைப் பாடல்களை பாடுகின்றனர்.

மேலும் இந்த இசைக்கருவி நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்கும் பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது.

பஞ்சமுக வாத்தியம் (இசைக்கருவி) ****************************************************
பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும்.

குடமுழா, குடபஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு.

தமிழ்நாட்டில் சில பெருங்கோவில்களில் மட்டும் இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

குடபஞ்சமுகி எனும் பஞ்சமுகவாத்தியம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழ மண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவியாகும்..

சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது.
இது பெரும்பாலும் கோவில்களில் நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் போது இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.
திருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதன் அமைப்பு:
***********************
ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது.
மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது.

வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது.
பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது.

நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது.

பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன.

இந்த இசைக்கருவியில் ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும்போது ஏழு முறையும்
ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும்.

இது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது.

இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சிபெற்ற கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கின்றார்கள்.

ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.

மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். பஞ்சமுக வாத்தியம் சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும்.

இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 12 Nov 2015 - 15:09

வாத்தியங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி பழந்தமிழ்  இசைக்கருவிகள் 3838410834 பழந்தமிழ்  இசைக்கருவிகள் 103459460 பழந்தமிழ்  இசைக்கருவிகள் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக