புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1170826ஹைக்கூ பூக்கள் !
தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நம்மொழி பதிப்பகம், 68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011. பேச : 98409 12010 ; மின் அஞ்சல் : kaviooviya@gmail.com
பக்கம் : 128, விலை : ரூ. 120/-
*****
நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர். பல வருடங்களாக வாழ்விடம் சென்னை என்ற போதிலும், பிறந்த ஊரான மயிலாடுதுறையை பெயரோடு இணைத்துக் கொண்டவர், இனிய நண்பர் மயிலாடுதுதுறை இளையபாரதி. இளையபாரதி என்பது பொருத்தமான, புனைப்பெயர். இலக்கிய உல்கில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி, உழைப்பாளி. தமிழகம், புதுவை உள்பட பரந்து விரிந்துள்ள ஹைக்கூ கவிஞர்களிடமிருந்து ஹைக்கூ கவிதைகளைப் பெற்று தொகுத்து அழகிய நூலாக வடித்து உள்ளார்.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள், தரமான தாள்கள் என யாவும் மிக நேர்த்தி. நம்மொழி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள். நூலாசிரியரின் சொந்தப் பதிப்பு. இந்த நூலை ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆசிரியரான பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், பொன்மனச் செம்மல் கார்முகிலோன் அவர்கள் சென்னையிலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களுக்கு புரவலராக இருந்து பரிசுகள் நல்கி வரும் பொன்மனம் படைத்தவர் இருவரின் அணிந்துரை மிக நன்று.
படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கு (வாசகருக்கு) உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ. படைப்பாளி உணர்ந்து படைத்ததைத் தாண்டி கூடுதலாக படிப்பாளி உணர்ந்து கொள்ளும் உணர்வு ஹைக்கூ. படைத்தவருக்கு மேல் சென்று சிந்திக்க வைக்கும். ஒரு பொருள் மட்டுமல்ல, சிந்தித்தால் பல பொருள் புரிய வைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. ஹைக்கூ கவிதை எழுதுவது கம்ப சூத்திரம் அன்று. இந்த நூல் படித்து முடித்தவுடன், படித்த வாசகரும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதியிட்டுக் கூற முடியும். ஹைக்கூ பற்றிய புரிதலை உண்டாக்கும் நூல். மூன்று வரி முத்தாய்ப்பான ஹைக்கூ ரசித்துப் படித்தால் ஹைக்கூ படிப்பாளியாகலாம் என்பது உண்மை.
இந்த நூலில் நான் உள்பட, மொத்தம் 58 கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த போதும் பதச்சோறாக ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ வீதம் மேற்கோள் காட்டி உள்ளேன்.
கவிஞர்புதுவைத் தமிழ்நெஞ்சன்
வளர்க்கிறோம்
தொட்டிச் செடி
வாடகை வீடு!
கவிச்சுடர் கார்முகிலோன்
அரிதாரம் இல்லை
அனுதினமும் நடிப்பு
அரசியல்வாதி!
கவிஞர் கு.அ. தமிழ்மொழி
அழைப்பிதழில்
அன்பளிப்பு தவிர்க்கவும்
சுமை உந்தில் சீர்வரிசை.
கவிஞர் சாந்தா வரதராசன்
தமிழ்ப்பானையில்
சுவைப் பத்நீர்
திருக்குறள்.
கவிஞர் ஆரிசன்
கரும்பலகை
நெற்றிக்கண் திறக்கிறது
அறிவு!
கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
படித்து முடித்த பின்
பயமுறுத்துகிறது
கல்விக்கடன்!
கவிஞர் எஸ். சத்யவீணா
கிள்ளுவதற்காக
அழுவதில்லை
பூக்கள்!
கவிஞர் ரேவதி இளையபாரதி
மனவலிகள்
மாயமாய் போனது
மழலைச் சிரிப்பு
கவிஞர் அய்யாலு ச. புகழேந்தி
அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!
கவிஞர் ஆர். சியாமளா ரகுநாதன்
சிதைந்து போகின்றது
வாழ்க்கை
புரிதலில்லா மனங்கள்!
கவிஞர் புதுவை சுமதி
மனதில் ஓசை
இதழில் மௌனம்
நினைவுகள்!
கவிகர் ப. கண்ணன் சேகர்
விதைக்காமல்
விருட்சமானது
வதந்தி!
கவிஞர் கி. சந்திரசேகரன்
ஏழுசீர் கவிதை
ஆளுது உலகை
திருக்குறள்!
கவிஞர் முனைவர் மரியதெரசா
நீயா... நானா.. அழகு
பூக்களில் அமர்ந்து கேட்கும்
வண்ணத்துப் பூச்சிகள்!
கவிஞர் தி. கவிமனோ
திட்டினால் அபராதம்
அடித்தால் ஆயுள் தண்டனை
பயத்தோடு ஆசிரியர்
கவிஞர் கொள்ளிடம் காமராஜ்
என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!
கவிஞர் வீ. உதயக்குமாரன்
சுதந்திரமாய்
நடத்த முடிவதில்லை
சுதந்திர தின விழா!
கவிஞர் தமிழ்மதி
அலட்சியப் போக்கு
கேட்கிறது உயிர்பலி
ஆழ்துளைக் கிணறு!
கவிஞர் மியூரியல் உஷா
வாடிய பயிரைக் கண்டும்
வாடாத மனங்கள்
நதிநீர் பங்கீடு!
கவிஞர் மன்னை பாசந்தி
புறம் கூறாதே
புண்படுத்தாதே
புற்றுநோயே மேல்!
கவிஞர் திருச்சிற்றம்பலம் சுரேஷ்
தினம் தினம்
இரத்த தானம்
சர்க்கரை பரிசோதனை!
கவிஞர் ஸ்ரீமதி மணவாளன்
முயற்சி செய்
வசப்படும்
வானமும் கூட!
கவிஞர் சொ. சாந்தி
பண்டிகை நாட்களில்
நவீன கொள்ளைக்காரர்கள்
அலைபேசி நிறுவனங்கள்!
கவியருவி கோவை கோகுலன்
அறியாமையின் முதிர்ச்சி
விதவிதமாய்ப் படையல்கள்
சாப்பிடாத சாமிகளுக்கு!
கவிஞர் அருணாச்சல சிவா
மௌன சாளரம்
உள்ளே வந்து உரையாடுகிறது
வண்ணத்துப் பூச்சி!
கவிஞர் மு. ஜெயலெட்சுமி
குளிரூட்டிய அறை
சுடுகிறது
மின் கட்டணம்!
கவிஞர் இரா. இரவி
பெயர் மாற்றி
இடம் மாற்றிப் பயனில்லை
சிந்தை மாற்று சிறப்பாய்!
கவிஞர் க. மாரிமுத்து
அணைக்க முயன்றும்
அடர்ந்து பரவுகிறது
சாதித் தீ!
கவிஞர் ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்
உழைத்த உடலில்
பூக்கிறது
வியர்வைப் பூக்கள்!
கவிஞர் சிவாஜிநஞ்சன்
மதிக்கப்பழகு
உழவனை
உலகம் உயரும்!
கவிஞர் த. கருணைச்சாமி பி.இ.
நம்பிக்கை வை
உன் மேல்
ஒழியும் மூட நம்பிக்கை!
கவிஞர் புதுயுகா!
பிள்ளை முதுகில்
புத்தகப் பை
மனம் கனத்தது தாய்க்கு
கவிஞர் சு. பாரதி பாக்கியம்
ஒற்றைப்புள்ளியில்
ஐந்தாண்டு வறுமை
தேர்தல்!
கவிஞர் சி. அருள் ஜோசப்ராஜ்
சேர்த்தன தேனீக்கள்
சுவைத்தான் மனிதன்
உழைப்பு சுரண்டல்?
கவிஞர் சு. கேசவன்
வரும்புயல்
குலை நடுக்கம்
வாழை விவசாயி!
கவிஞர் தகடூர் செவ்வியன்
பேருந்து பயணம்
யாரோ ஒருத்தி கதறுகிறாள்
படிக்கட்டில் மகன்!
கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன்
இரவு நேர பூஜை
சிக்கினார்
சபல சாமியார்!
கவிஞர் பே. ராஜேந்திரன்
அன்பு மனங்கள்
அழகாய் சங்கமம்
காதல்!
கவிஞர் உமையவன்
கனத்த மழை
நிரம்பும் காலிப் பாத்திரம்
சிதறும் இன்னிசை!
கவிஞர் வி. சிவாஜி
பிச்சைப் பாத்திரம்
நிரம்பி வழிகிறது
பெருமூச்சு!
கவிஞர் கா.நா. கல்யாணசுந்தரம்
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்
தேவை – அங்குசக் கவிஞர்கள்
கவிஞர் பொருநை பாலு
எடுக்கும் முயற்சியை
தடுக்கும் ஆயுதம்
சகுனம்!
கவிஞர் சு. நவநீதன்
மனம் பார்த்து அன்று
பணம் பார்த்து இன்று
காதல்.
கவிஞர் இராம கம்பர்
தள்ளாட வைத்தது
தமிழ்நாட்டை
தண்ணி!
கவிஞர் டி.என். இமாஜன்
செத்தும் கொடுக்கின்றனர்
வள்ளல்கள் சிலர்
உறுப்பு தானம்!
கவிஞர் தேவனூர் ஆ.ச. செல்வராஜூ
விண்ணை முட்டுகிறது
ஏழையைத் தவிக்க வைத்து
விலைவாசி!
கவிஞர் இளந்தென்றல்
நல்லது கெட்டது
நாளும் ஒரு காரணம்
மது அருந்த!
கவிஞர் ச. கிறிஸ்து ஞானவள்ளுவன்
அதிகார வர்க்கம்
எடுக்கும் நாகரிகப் பிச்சை
லஞ்சம்!
கவிஞர் நீலமலை ஜே.பி.
தோல்விக்கும்
முத்து
தொடர்முயற்சி!
கவிஞர் வெ. சென்னப்பன்
இரையூட்டும் காகம்
ஏக்கமுடன் பார்க்கிறது
காப்பகக் குழந்தை!
கவிஞர் சுப. சந்திரசேகரன்
முள்வேலிக்குள்
குருதி சிந்துகின்றன
ஈழ ரோஜாக்கள்!
கவிஞர் மு. குமரன்
கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம்
அட்சயப் பாத்திரம்
கவிஞர் ஈழபாரதி
மைல்கல் சாமியானது
மகிழ்ச்சியில்
பூசாரி!
கவிஞர் தாயானி தாயுமானவன்
நினைவுகளை
உடைத்தபடி அம்மா
கல் குவாரி!
கவிஞர் வ. விஜயலெட்சுமி
விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி!
கவிஞர் கு. இராம்குமார்
ஆயிரம் காலத்துப் பயிர்
அவசரமாய நடப்பட்டது
குழந்தை திருமணம்
கவிஞர் ம. பாலன்
திறக்கப்பட்டது அன்று
மூடப்படுகிறது இன்று
அரசுப் பள்ளிகள்!
கவிஞர் பூ. இராஜேஸ்குமார்
விலையில்லாப் பொருட்கள்
விலை போயினர்
மக்கள்!
பல்வேறு கோணங்களில் சமூக அவலங்களை படம் பிடித்துக் காட்டி படிக்கும் வாசகர்கள் மனதில் மின்னலை உருவாக்கிய கவிஞர்கள் அனைவருக்கும் , நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதிக்கும் பாராட்டுக்கள்.
.
தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நம்மொழி பதிப்பகம், 68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011. பேச : 98409 12010 ; மின் அஞ்சல் : kaviooviya@gmail.com
பக்கம் : 128, விலை : ரூ. 120/-
*****
நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர். பல வருடங்களாக வாழ்விடம் சென்னை என்ற போதிலும், பிறந்த ஊரான மயிலாடுதுறையை பெயரோடு இணைத்துக் கொண்டவர், இனிய நண்பர் மயிலாடுதுதுறை இளையபாரதி. இளையபாரதி என்பது பொருத்தமான, புனைப்பெயர். இலக்கிய உல்கில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி, உழைப்பாளி. தமிழகம், புதுவை உள்பட பரந்து விரிந்துள்ள ஹைக்கூ கவிஞர்களிடமிருந்து ஹைக்கூ கவிதைகளைப் பெற்று தொகுத்து அழகிய நூலாக வடித்து உள்ளார்.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள், தரமான தாள்கள் என யாவும் மிக நேர்த்தி. நம்மொழி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள். நூலாசிரியரின் சொந்தப் பதிப்பு. இந்த நூலை ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆசிரியரான பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், பொன்மனச் செம்மல் கார்முகிலோன் அவர்கள் சென்னையிலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களுக்கு புரவலராக இருந்து பரிசுகள் நல்கி வரும் பொன்மனம் படைத்தவர் இருவரின் அணிந்துரை மிக நன்று.
படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கு (வாசகருக்கு) உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ. படைப்பாளி உணர்ந்து படைத்ததைத் தாண்டி கூடுதலாக படிப்பாளி உணர்ந்து கொள்ளும் உணர்வு ஹைக்கூ. படைத்தவருக்கு மேல் சென்று சிந்திக்க வைக்கும். ஒரு பொருள் மட்டுமல்ல, சிந்தித்தால் பல பொருள் புரிய வைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. ஹைக்கூ கவிதை எழுதுவது கம்ப சூத்திரம் அன்று. இந்த நூல் படித்து முடித்தவுடன், படித்த வாசகரும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதியிட்டுக் கூற முடியும். ஹைக்கூ பற்றிய புரிதலை உண்டாக்கும் நூல். மூன்று வரி முத்தாய்ப்பான ஹைக்கூ ரசித்துப் படித்தால் ஹைக்கூ படிப்பாளியாகலாம் என்பது உண்மை.
இந்த நூலில் நான் உள்பட, மொத்தம் 58 கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த போதும் பதச்சோறாக ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ வீதம் மேற்கோள் காட்டி உள்ளேன்.
கவிஞர்புதுவைத் தமிழ்நெஞ்சன்
வளர்க்கிறோம்
தொட்டிச் செடி
வாடகை வீடு!
கவிச்சுடர் கார்முகிலோன்
அரிதாரம் இல்லை
அனுதினமும் நடிப்பு
அரசியல்வாதி!
கவிஞர் கு.அ. தமிழ்மொழி
அழைப்பிதழில்
அன்பளிப்பு தவிர்க்கவும்
சுமை உந்தில் சீர்வரிசை.
கவிஞர் சாந்தா வரதராசன்
தமிழ்ப்பானையில்
சுவைப் பத்நீர்
திருக்குறள்.
கவிஞர் ஆரிசன்
கரும்பலகை
நெற்றிக்கண் திறக்கிறது
அறிவு!
கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
படித்து முடித்த பின்
பயமுறுத்துகிறது
கல்விக்கடன்!
கவிஞர் எஸ். சத்யவீணா
கிள்ளுவதற்காக
அழுவதில்லை
பூக்கள்!
கவிஞர் ரேவதி இளையபாரதி
மனவலிகள்
மாயமாய் போனது
மழலைச் சிரிப்பு
கவிஞர் அய்யாலு ச. புகழேந்தி
அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!
கவிஞர் ஆர். சியாமளா ரகுநாதன்
சிதைந்து போகின்றது
வாழ்க்கை
புரிதலில்லா மனங்கள்!
கவிஞர் புதுவை சுமதி
மனதில் ஓசை
இதழில் மௌனம்
நினைவுகள்!
கவிகர் ப. கண்ணன் சேகர்
விதைக்காமல்
விருட்சமானது
வதந்தி!
கவிஞர் கி. சந்திரசேகரன்
ஏழுசீர் கவிதை
ஆளுது உலகை
திருக்குறள்!
கவிஞர் முனைவர் மரியதெரசா
நீயா... நானா.. அழகு
பூக்களில் அமர்ந்து கேட்கும்
வண்ணத்துப் பூச்சிகள்!
கவிஞர் தி. கவிமனோ
திட்டினால் அபராதம்
அடித்தால் ஆயுள் தண்டனை
பயத்தோடு ஆசிரியர்
கவிஞர் கொள்ளிடம் காமராஜ்
என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!
கவிஞர் வீ. உதயக்குமாரன்
சுதந்திரமாய்
நடத்த முடிவதில்லை
சுதந்திர தின விழா!
கவிஞர் தமிழ்மதி
அலட்சியப் போக்கு
கேட்கிறது உயிர்பலி
ஆழ்துளைக் கிணறு!
கவிஞர் மியூரியல் உஷா
வாடிய பயிரைக் கண்டும்
வாடாத மனங்கள்
நதிநீர் பங்கீடு!
கவிஞர் மன்னை பாசந்தி
புறம் கூறாதே
புண்படுத்தாதே
புற்றுநோயே மேல்!
கவிஞர் திருச்சிற்றம்பலம் சுரேஷ்
தினம் தினம்
இரத்த தானம்
சர்க்கரை பரிசோதனை!
கவிஞர் ஸ்ரீமதி மணவாளன்
முயற்சி செய்
வசப்படும்
வானமும் கூட!
கவிஞர் சொ. சாந்தி
பண்டிகை நாட்களில்
நவீன கொள்ளைக்காரர்கள்
அலைபேசி நிறுவனங்கள்!
கவியருவி கோவை கோகுலன்
அறியாமையின் முதிர்ச்சி
விதவிதமாய்ப் படையல்கள்
சாப்பிடாத சாமிகளுக்கு!
கவிஞர் அருணாச்சல சிவா
மௌன சாளரம்
உள்ளே வந்து உரையாடுகிறது
வண்ணத்துப் பூச்சி!
கவிஞர் மு. ஜெயலெட்சுமி
குளிரூட்டிய அறை
சுடுகிறது
மின் கட்டணம்!
கவிஞர் இரா. இரவி
பெயர் மாற்றி
இடம் மாற்றிப் பயனில்லை
சிந்தை மாற்று சிறப்பாய்!
கவிஞர் க. மாரிமுத்து
அணைக்க முயன்றும்
அடர்ந்து பரவுகிறது
சாதித் தீ!
கவிஞர் ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்
உழைத்த உடலில்
பூக்கிறது
வியர்வைப் பூக்கள்!
கவிஞர் சிவாஜிநஞ்சன்
மதிக்கப்பழகு
உழவனை
உலகம் உயரும்!
கவிஞர் த. கருணைச்சாமி பி.இ.
நம்பிக்கை வை
உன் மேல்
ஒழியும் மூட நம்பிக்கை!
கவிஞர் புதுயுகா!
பிள்ளை முதுகில்
புத்தகப் பை
மனம் கனத்தது தாய்க்கு
கவிஞர் சு. பாரதி பாக்கியம்
ஒற்றைப்புள்ளியில்
ஐந்தாண்டு வறுமை
தேர்தல்!
கவிஞர் சி. அருள் ஜோசப்ராஜ்
சேர்த்தன தேனீக்கள்
சுவைத்தான் மனிதன்
உழைப்பு சுரண்டல்?
கவிஞர் சு. கேசவன்
வரும்புயல்
குலை நடுக்கம்
வாழை விவசாயி!
கவிஞர் தகடூர் செவ்வியன்
பேருந்து பயணம்
யாரோ ஒருத்தி கதறுகிறாள்
படிக்கட்டில் மகன்!
கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன்
இரவு நேர பூஜை
சிக்கினார்
சபல சாமியார்!
கவிஞர் பே. ராஜேந்திரன்
அன்பு மனங்கள்
அழகாய் சங்கமம்
காதல்!
கவிஞர் உமையவன்
கனத்த மழை
நிரம்பும் காலிப் பாத்திரம்
சிதறும் இன்னிசை!
கவிஞர் வி. சிவாஜி
பிச்சைப் பாத்திரம்
நிரம்பி வழிகிறது
பெருமூச்சு!
கவிஞர் கா.நா. கல்யாணசுந்தரம்
மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்
தேவை – அங்குசக் கவிஞர்கள்
கவிஞர் பொருநை பாலு
எடுக்கும் முயற்சியை
தடுக்கும் ஆயுதம்
சகுனம்!
கவிஞர் சு. நவநீதன்
மனம் பார்த்து அன்று
பணம் பார்த்து இன்று
காதல்.
கவிஞர் இராம கம்பர்
தள்ளாட வைத்தது
தமிழ்நாட்டை
தண்ணி!
கவிஞர் டி.என். இமாஜன்
செத்தும் கொடுக்கின்றனர்
வள்ளல்கள் சிலர்
உறுப்பு தானம்!
கவிஞர் தேவனூர் ஆ.ச. செல்வராஜூ
விண்ணை முட்டுகிறது
ஏழையைத் தவிக்க வைத்து
விலைவாசி!
கவிஞர் இளந்தென்றல்
நல்லது கெட்டது
நாளும் ஒரு காரணம்
மது அருந்த!
கவிஞர் ச. கிறிஸ்து ஞானவள்ளுவன்
அதிகார வர்க்கம்
எடுக்கும் நாகரிகப் பிச்சை
லஞ்சம்!
கவிஞர் நீலமலை ஜே.பி.
தோல்விக்கும்
முத்து
தொடர்முயற்சி!
கவிஞர் வெ. சென்னப்பன்
இரையூட்டும் காகம்
ஏக்கமுடன் பார்க்கிறது
காப்பகக் குழந்தை!
கவிஞர் சுப. சந்திரசேகரன்
முள்வேலிக்குள்
குருதி சிந்துகின்றன
ஈழ ரோஜாக்கள்!
கவிஞர் மு. குமரன்
கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம்
அட்சயப் பாத்திரம்
கவிஞர் ஈழபாரதி
மைல்கல் சாமியானது
மகிழ்ச்சியில்
பூசாரி!
கவிஞர் தாயானி தாயுமானவன்
நினைவுகளை
உடைத்தபடி அம்மா
கல் குவாரி!
கவிஞர் வ. விஜயலெட்சுமி
விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி!
கவிஞர் கு. இராம்குமார்
ஆயிரம் காலத்துப் பயிர்
அவசரமாய நடப்பட்டது
குழந்தை திருமணம்
கவிஞர் ம. பாலன்
திறக்கப்பட்டது அன்று
மூடப்படுகிறது இன்று
அரசுப் பள்ளிகள்!
கவிஞர் பூ. இராஜேஸ்குமார்
விலையில்லாப் பொருட்கள்
விலை போயினர்
மக்கள்!
பல்வேறு கோணங்களில் சமூக அவலங்களை படம் பிடித்துக் காட்டி படிக்கும் வாசகர்கள் மனதில் மின்னலை உருவாக்கிய கவிஞர்கள் அனைவருக்கும் , நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதிக்கும் பாராட்டுக்கள்.
.
Re: ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1170830- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மனம் கவர்ந்த சில ஹைகூக்கள் !
அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!
என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!
விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி
தினம் தினம்
இரத்த தானம்
சர்க்கரை பரிசோதனை!
அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!
என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!
விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி
தினம் தினம்
இரத்த தானம்
சர்க்கரை பரிசோதனை!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1170870- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல நூல். வாங்கிட வேண்டியதுதான். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Re: ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|