புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
69 Posts - 40%
heezulia
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
2 Posts - 1%
manikavi
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
2 Posts - 1%
prajai
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
320 Posts - 50%
heezulia
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
22 Posts - 3%
prajai
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
3 Posts - 0%
manikavi
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
செயற்கை அறிவு Poll_c10செயற்கை அறிவு Poll_m10செயற்கை அறிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயற்கை அறிவு


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Nov 15, 2009 5:13 pm

உலக
அளவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் அதிகமாக
பேசப்படும் விஷயம் 'செயற்கை அறிவு'. ஆங்கிலத்தில் ஆர்டிபீசியல்
இன்டலிஜென்ஸ் சுருக்கமாக ஏ.ஐ. (A.I.) என்று
அழைக்கிறார்கள். மனிதனைப் போல சிந்திக்கும் திறன், கற்றுக்கொள்ளும் திறனை
கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களுக்கு அளிப்பதுதான் 'செயற்கை அறிவு'
திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் முதல்படிதான் 'ரோபட்டு'கள்.
ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில்
'ரோபட்டு'களின் இயக்கங்கள் உள்ளது. இந்த ஆராய்ச்சியில் செல்ல வேண்டிய
தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.



அறிவியல்
அதிசயம் பகுதியில் இடம்பெற்று வரும் 'ரோபட்டு'கள் பற்றிய தகவல்களில் இந்த
வாரம் 'செயற்கை அறிவு' பற்றிய விவரங்கள் இடம்பெறுகிறது.



செயற்கை அறிவு



நவீன
கம்ப்யூட்டர் மற்றும் 'ரோபட்' துறையில் உணர்ச்சி மிகுந்த ஆவலை தூண்டும்
பகுதியாக செயற்கை அறிவு விளங்குகிறது. அதே சமயம் இந்த துறை பற்றிய
சர்ச்சைகளும் ஏராளம் உண்டு.



இறைவனின்
படைப்பில் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் உள்ளன. அதில் ஒன்று மனிதன். ஆதி
மனிதன் முதல் இன்றைய நவீன கால மனிதன் வரை மனித இனம் வியக்கத்தகுந்த
மாற்றங்களை சந்தித்துள்ளது. தேவைகளை நிறைவேற்ற மனிதன் எடுத்த முயற்சிகள்,
இதற்காக அவன் நடத்திய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் போன்றவை மனித இனத்தை
நாகரீகம் மிகுந்ததாக வளர்ச்சி அடையச் செய்தது.



தான்
கற்றுக்கொண்ட விஷயங்களை எந்திரத்துக்கு, ஒரு கம்ப்யூட்டருக்கு கற்றுக்
கொடுத்து தன்னைப் போல புத்திசாலித்தனம் நிறைந்ததாக அதை மாற்ற மனிதன்
முயற்சி செய்கிறான். இது தான் 'செயற்கை அறிவு' திட்டத்தின் விளக்கம்.



புத்திசாலித்தனம்
மிக்க எந்திரம் மற்றும் கம்ப்யூட்டர்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம்
விஞ்ஞானிகள் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போர்
முடிந்த உடன் இதற்கான ஆய்வுகள் தீவிரம் அடைந்தது.



இந்த ஆராய்ச்சிகளில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ஆலன் டூரிங் அதிக ஈடுபாடு காட்டினார்.



1947-ம்
ஆண்டு இது தொடர்பாக அவர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். கம்ப்யூட்டர்
புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட எந்திரங்களை உருவாக்க முடியும்
என்று ஆலன் டூரிங் நம்பினார். அவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே
விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.



அதற்கு
ஏற்ப கம்ப்யூட்டர் புரோகிராம்களை உருவாக்கி அதன் மூலம் எந்திரங்களை,
ரோபட்டுகளை இயக்கி வருகிறார்கள். இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட
தொழிற்சாலை ரோபட்டுகளின் பணிகள், வேலைத்திறமை அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.



அதே
நேரத்தில் மனிதனைப் போல புத்திசாலித்தனம் நிறைந்த கம்ப்யூட்டர் புரோகிராம்
மற்றும் ரோபட்டுகளை உருவாக்குவது சவால் நிறைந்தது என்கிறார்கள்
விஞ்ஞானிகள். காரணம், மனிதனின் புத்திசாலித்தனத்துக்கு அடிப்படையாக
விளங்கும் மூளை மற்றும் நரம்பு அமைப்புகள் மிக நுட்பமானவை. அதுபோன்ற ஒரு
அமைப்பை (அதாவது, செயற்கை அறிவு) உருவாக்குவது கடினம்.



மனிதனின்
எண்ணச் செயல்களில் பிரதிபிம்பம் மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட (மனித
அறிவு கொண்ட) எந்திரம்தான் 'செயற்கை அறிவு.' எதை வேண்டுமானாலும்
கற்றறியும் திறன் காரணங்களை அறியும் திறன்.



செயற்கை அறிவு A64-2மொழிகளை கையாளும் திறன், மற்றும் தன் எண்ணங்களை தானே ஒழுங்குபடுத்தும் திறன் போன்ற திறமைகளை கொண்டதுதான் 'செயற்கை அறிவு'.



இத்தகைய
'செயற்கை அறிவு' மிக்க மனித எந்திரங்கள் (ரோபட்டுகள்) உருவாக்குவதில்
விஞ்ஞானிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் அவர்களால் ஒரு
எல்லையைத் தாண்டி முன்னேற முடியவில்லை.



இன்றைய 'செயற்கை அறிவு' கொண்ட எந்திரங்கள் மனித கெட்டிக்காரத்தனத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளை பிரதிபலிக்கும் திறன் கொண்டவை.



சில
நவீன ரோபட்டுகளில் கற்றறியும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே
இருக்கின்றன. பயிற்சி ரோபட்டுகள் தன் வழிப்பாதையில் உள்ள தடைகளை
கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு தன் நகரும் பாதையை மாற்றிக்கொள்கிறது. இந்த
நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் இந்த ரோபட்டுகள்
இதே மாதிரி சந்தர்ப்பங்கள் மீண்டும் வரும்பொழுது திறம் பட கையாண்டு தடைகளை
முறியடிக்கின்றன. ஏற்கனவே கூறியது போல் நவீன கணினிகள் மனிதனைப் போல்
சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டிருப்பது கிடையாது. சில ரோபட்டுகள்
மனிதனைப் பார்த்து அறிந்து அவன் அசைவுகளை அப்படியே செய்து காண்பிக்கிறது.
ஜப்பானில் ரோபட் வடிவமைப்பாளர்கள் ரோபட்டுகளுக்கு நடனமாடுவது எப்படி
என்பதைக் கற்றுக் கொடுக்கின்றார்கள்.



சில
ரோபட்டுகள் சகஜமாக பழகும் தன்மையைக்கூட கொண்டிருக்கின்றது. எம்.ஐ.டி.
நிறுவனத்தில் செயற்கையாக சிந்திக்கும் திறன் பரிசோதனைக் கூடத்தில் உள்ள
கிஸ் மெட் ரோபட் மனித உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறும் குரலில் உள்ள ஏற்ற
இறக்கங்களுக்கு ஏற்றவாறும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றது.
கிஸ்மெட்டின் வடிவமைப்பாளர்கள் மனிதர்கள் குழந்தையிடம் அவ்வாறு
உரையாடுகிறார்கள் (குரலில் ஏற்ற இறக்கம் மற்றும் உடல் அசைவுகள் போன்ற)
என்ற ஆரம்பக்கட்ட உரையாடலில் ஆர்வம் காட்டினார்கள். இந்த ஆரம்ப
உரையாடல்தான் ரோபட்டுகளின் மனிதனைப்பற்றி கற்றறிவதற்கு உண்டான முக்கிய
அடித்தளமாக அமைந்தன.



எம்.ஐ.டி.யின்
'செயற்கை அறிவு' தொடர்பான பரிசோதனைக் கூடத்தில் உள்ள 'கிஸ்மெட்' மற்றும்
சில ரோபட்டுகள் பிரத்தியேக கட்டுப்பாட்டு கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன.
அதாவது இதன் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு மத்தியக் கணினியை
சார்ந்திருப்பதில்லை. இதற்குப்பதிலாக இந்த 'ஆரம்ப கட்ட உரையாடும் முறைகளை'
கையாள்வதற்கு ஏற்ற கணினியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 'இந்த முறைதான்
மனித அறிவுத்திறனின் துல்லியமான மாதிரி முறை' என்கிறார் இத்திட்ட
இயக்குனர் ரோட்னி புரூக்ஸ்.





செயற்கை அறிவு A64-3மேலும்
கூறுகையில் இந்த ரோபட்டுகளின் பெரும்பாலான இயக்கங்கள் தன்னிச்சையாக
இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகும், சுயமாக சிந்திக்கும் திறனில் அதி
உன்னத நிலையை எட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை என்கிறார். செயற்கை அறிவு
திட்டத்தின் மற்றொரு மிகப் பெரிய சவாலாக இருப்பது இயற்கையாகவே
(மனிதனைப்போல்) சிந்திக்கும் திறன் எவ்வாறு வேலை செய்கிறது என்பதே.
செயற்கை அறிவை மேம்படுத்துவது என்பது ஒரு செயற்கை இருதயத்தை வடிவமைப்பது
போன்ற எளிதான காரியமில்லை. விஞ்ஞானிகளிடம் ஒரு எளிமையான மற்றும்
முன்மாதிரி வரைமுறைகள் இல்லை மனித மூளை பல நூற்றுக்கோடிக்கணக்கான
நியூரான்களைக் கொண்டிருப்பதை நாமறிவோம். இவற்றிற்கிடையே ஏற்படும் மின்
பரிமாற்றங்களின் மூலமாகவே நாம் சிந்திக்கவும் கற்றறியவும் முடிகிறது
என்பதையும் அறிவோம். இருந்தாலும் இவற்றிற்கிடையே உள்ள இணைப்புகளின் இந்த
வேலையைத்தான் செய்கின்றன என்பதை நாம் சரியாக உறுதியிட்டுக் கூற முடியாது.
அந்தளவுக்கு திறன்பட்ட மற்றும் சிக்கலான சுற்று இணைப்புகளைக் கொண்டது மனித
மூளை. மேற்கூறிய காரணங்களால் செயற்கை அறிவு பற்றிய பெரும்பாலான
ஆராய்ச்சிகள் எழுத்து வடிவங்களிலேயே உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? நாம்
சிந்திக்கிறோம். நாம் கற்றுக் கொள்கிறோம்? என் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு
ரோபட்டுகளை வடிவமைக்கும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
விஞ்ஞானிகள். மனிதனை ஒத்த ரோபட்டுகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு
கொண்டிருக்கும் புரூக்ஸும் அவரது குழுவும், 'மனித அறிவாற்றலுக்கு
ஏற்றுவாறு வடிவமைப்பதற்கு மனித சமுதாயத்தின் அனுபவங்கள் தேவைப்படுகின்றன'
எனவும், 'இது மேலும் மனிதர்களுடன் பழகுவதற்குண்டான முறையையும்'
எளிதாக்குவதோடு மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் ரோபட்டிற்கு
வாய்ப்பு உள்ளது' என்கிறார்.





செயற்கை
பற்றிய ஆராய்ச்சி இயற்கையாக (மனிதன்) சிந்திக்கும் திறன் பற்றி அறிந்து
கொள்வதற்கும் பயன்பட்டு வருகிறது. சிலர் செயற்கை அறிவைக் கொண்டு ரோபட்
வடிவமைப்பதை தீவிர எண்ணமாக கொண்டுள்ளனர். இன்னும் சிலர் எந்திரத்
தொழிலாளர், உடல் சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்பு ரோபட்டுகளை வடிவமைத்து
வருகின்றனர். பெரும்பாலான கைதேர்ந்த ரோபட் வடிவமைப்பாளர்கள் ரோபட் உலகில்
நடக்கும் புரட்சி 'ஊலடிழசபள' என்ற உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும்
(மனிதன் மற்றும் எந்திரங்களின் ஒருங்கிணைப்பு) என கணித்துள்ளனர்.



செயற்கை அறிவு A64-4இந்த
புரட்சிகள் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் தன் மூளையின் செயல்பாடுகளை
அதிக திறமை படைத்த ரோபட்டுகளில் உட்செலுத்தி மனிதன் பல நூற்றாண்டு காலம்
வாழ வழி வகுக்கும் எனவும் நம்புகின்றன. எது எப்படி இருந்தாலும்
வருங்காலத்தில் ரோபட்டுகள் நமது அன்றாட வாழ்க்கைக்கு ஒரு முக்கிய நபராக
அங்கம் வகிக்கப் போகிறது. 1980_ம் ஆண்டு கணினிகள் எவ்வாறு நம்
வீட்டிற்குள் நுழைந்தனவோ அதே போல் ரோபட்டுகள் வரும் பத்தாண்டுகளில்
தொழிற்சாலை, ஆராய்ச்சி பணிகள் போன்ற எல்லைகளை கடந்து நம் வீட்டின் ஒரு
அங்கமாக விளங்கப்போகிறது.

Read more: http://therinjikko.blogspot.com/2009/04/blog-post_5825.html#ixzz0WvZb1zXv


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக