புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
தமிழகத்தில் அரியும் அரனும் காட்சியளிக் கும் கோவில்கள் சிலதான் உண்டு. இவற்றில் சிவனுக்கும் பெருமாளுக்கும் தனித் தனியாக சந்நிதி இருக்கும்- சைவமும் வைணவமும் ஒன்றே என்று காட்டும் விதத்தில் இறையுரு அமைந்த சங்கரன்கோவிலை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஆனால், இரு தெய்வங்களும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் இந்தியாவிலேயே அம்மையப்ப நாயக்கனூரில் மட்டுமே உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரும் தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகில் உள்ளது அம்மையப்ப நாயக்கனூர். இங்கு நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந் திருக்கும் கதலி நரசிங்கப் பெருமாள் கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் காட்சியளிக்கின்றனர்.
மதுரையை ஆண்ட திருமலை மன்னர் காலத்தில் நிர்வாக வசதிக்காக மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்ப டிப் பிரிக்கப்பட்ட பாளையங்களில் ஒன்றுதான் இந்த அம்மையப்ப நாயக்கன் பாளையம்.
விஸ்வநாத நாயக்கருக்கு போரில் வெற்றி தேடித் தந்த பெஞ்சை மாக்கைய நாயக்கருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது இந்தப் பாளையம். பெஞ்சை மாக்கைய நாயக்கர் பரம்பரையினரே கதரீஸ்வரர் எனும் சிவலிங்கத்தை முதலில் கண்டெடுத்தவர்கள்.
இந்தப் பாளையத்தில் உள்ள சந்தையூர் பகுதி அக்காலத்தில் இலந்தை வனமாக இருந்தது. மாடு மேய்ப்பவர்கள் அங்கே தொழுவம் அமைத் திருந்தனர். தொழுவத்தின் அருகே பெரிய இலந்தை மரம் இருந்தது. ஒரு நாள் வழக்கம் போல யாதவர் ஒருவர் தொழுவத்திலிருந்து பாலைக் கறந்து வந்தபோது கால்தடுக்கி விழுந்த தில், பால் அனைத்தும் அந்த இலந்தை மரத்தின் அடியில் கொட்டி விட்டது. இதனால் கோப முற்ற அவர் அந்த மரத்தை வெட்டினார். அப்போது அங்கு சுயம்பு லிங்கம் காட்சி தருவதைக் கண்டார். அந்த லிங்கத்தின்மீது கோடரி பட்ட காயமும் இருந்தது. அப்படிக் கண்டெடுக்கப் பட்டதே இந்த ஆலய லிங்கம். அந்தக் காயத்தை இன்றும் லிங்கத்தின் தலைப்புறத்தில் காணலாம்.
மரத்தை வெட்டியதற்காக அந்த யாதவருக்கு பார்வை போய், பின் அவன் தன் தவறை உணர்ந்து கதரீஸ்வரரை வணங்கியபின் மீண்டும் பார்வை கிடைத்ததாக செவிவழிக் கதைகள் வழக்கில் உள்ளன.
இந்தப் பாளையத்தின் மூன்றாம் பட்டயதாரர் கொந்தி பொம்மன நாயக்கர். இவரது காலத்தில்தான் கதரீஸ்வரர் கோவில் பெருமாள் கோவிலாகவும் மேம்பாடடைந்தது. ஒருமுறை இந்தப் பாளையத்திற்கு விஜயநகர மன்னர் வந்தார். அப்போது கதரீஸ்வரர் அவருக்குப் பெருமாளாகக் காட்சி அளித்தார்.
"சிவன் கோவில் என்று தரிசனம் செய்ய அழைத்தனர். ஆனால், இறைவனோ பெருமா ளாகக் காட்சி தருகிறாரே...' என்று மன்னர் அதிர்ந்து போனார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் இது லிங்கம்தான் என சாதித்தனர்.
மன்னருக்கு தன் கண்மீதே சந்தேகம் ஏற்பட்டது. இறுதியில் இது பெருமாளா அல்லது லிங்கமா என்ற உண்மையை அறிய, மூலவரை கண்களை மூடிக்கொண்டு தொட்டுப் பார்த்தார். அப்போது லிங்கத்தின் உருவம்தான் கைகளுக்குத் தட்டுப்பட்டது.
மூடிய கண்களுக்கு லிங்கமாகக் காட்சி தரும் இறைவன் கண்களைத் திறந்தபின் பெருமாளாகக் காட்சி அளிப்பதைக் கண்டு மன்னருக்கு மெய்சிலிர்த்தது.
இது சிவனும் பெருமாளும் கலந்த தலம் என்பதை உணர்ந்தார் விஜயநகர மன்னர். உடனே, அதே கருவறையில் பெருமாளையும் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அது முதல் இந்த இறைவன் கதரி நரசிங்கப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.
1 ஏக்கர் பரப்பளவில் கோவில் அமைந்துள் ளது. கோவிலைச் சுற்றி இருபது அடி உயரத்தில் கோட்டைச்சுவர் நான்கு பக்கமும் உள்ளது. கோவில் மூலஸ்தானத்தில் சிவனும்; உபயநாச்சி யார், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளும் காட்சி தருகின்றனர்.
பைரவர், கமலவல்லித் தாயார், சக்கரத்தாழ் வார், விநாயகர், சனீஸ்வர பகவான், உடையவர், நம்மாழ்வார் உள்பட முக்கிய சந்நிதிகள் உள்ளன.
வைகுண்ட ஏகாதசி, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், பைரவர் அஷ்டமி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி), மார்கழித் திங்கள் பூஜை, புரட்டாசி சனி, நவராத்திரி பூஜை, ஆவணி அவிட்டம் என பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
இங்கு 1978-ல் வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி கள், "அரியும் அரனும் இணைந்து காட்சியளிக் கும் இந்தக் கோவில்போல எங்கும் கிடையாது' என்று கூறி ஆலயத்தைப் புதுப்பிக்கும்படிக் கூறினார். அதன்படி திருப்பணிகள் செய்யப் பட்டு, மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசை யாக நடந்தேறியது.
நன்றி திருமதி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன்
ஆனால், இரு தெய்வங்களும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் இந்தியாவிலேயே அம்மையப்ப நாயக்கனூரில் மட்டுமே உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரும் தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகில் உள்ளது அம்மையப்ப நாயக்கனூர். இங்கு நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந் திருக்கும் கதலி நரசிங்கப் பெருமாள் கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் காட்சியளிக்கின்றனர்.
மதுரையை ஆண்ட திருமலை மன்னர் காலத்தில் நிர்வாக வசதிக்காக மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்ப டிப் பிரிக்கப்பட்ட பாளையங்களில் ஒன்றுதான் இந்த அம்மையப்ப நாயக்கன் பாளையம்.
விஸ்வநாத நாயக்கருக்கு போரில் வெற்றி தேடித் தந்த பெஞ்சை மாக்கைய நாயக்கருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது இந்தப் பாளையம். பெஞ்சை மாக்கைய நாயக்கர் பரம்பரையினரே கதரீஸ்வரர் எனும் சிவலிங்கத்தை முதலில் கண்டெடுத்தவர்கள்.
இந்தப் பாளையத்தில் உள்ள சந்தையூர் பகுதி அக்காலத்தில் இலந்தை வனமாக இருந்தது. மாடு மேய்ப்பவர்கள் அங்கே தொழுவம் அமைத் திருந்தனர். தொழுவத்தின் அருகே பெரிய இலந்தை மரம் இருந்தது. ஒரு நாள் வழக்கம் போல யாதவர் ஒருவர் தொழுவத்திலிருந்து பாலைக் கறந்து வந்தபோது கால்தடுக்கி விழுந்த தில், பால் அனைத்தும் அந்த இலந்தை மரத்தின் அடியில் கொட்டி விட்டது. இதனால் கோப முற்ற அவர் அந்த மரத்தை வெட்டினார். அப்போது அங்கு சுயம்பு லிங்கம் காட்சி தருவதைக் கண்டார். அந்த லிங்கத்தின்மீது கோடரி பட்ட காயமும் இருந்தது. அப்படிக் கண்டெடுக்கப் பட்டதே இந்த ஆலய லிங்கம். அந்தக் காயத்தை இன்றும் லிங்கத்தின் தலைப்புறத்தில் காணலாம்.
மரத்தை வெட்டியதற்காக அந்த யாதவருக்கு பார்வை போய், பின் அவன் தன் தவறை உணர்ந்து கதரீஸ்வரரை வணங்கியபின் மீண்டும் பார்வை கிடைத்ததாக செவிவழிக் கதைகள் வழக்கில் உள்ளன.
இந்தப் பாளையத்தின் மூன்றாம் பட்டயதாரர் கொந்தி பொம்மன நாயக்கர். இவரது காலத்தில்தான் கதரீஸ்வரர் கோவில் பெருமாள் கோவிலாகவும் மேம்பாடடைந்தது. ஒருமுறை இந்தப் பாளையத்திற்கு விஜயநகர மன்னர் வந்தார். அப்போது கதரீஸ்வரர் அவருக்குப் பெருமாளாகக் காட்சி அளித்தார்.
"சிவன் கோவில் என்று தரிசனம் செய்ய அழைத்தனர். ஆனால், இறைவனோ பெருமா ளாகக் காட்சி தருகிறாரே...' என்று மன்னர் அதிர்ந்து போனார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் இது லிங்கம்தான் என சாதித்தனர்.
மன்னருக்கு தன் கண்மீதே சந்தேகம் ஏற்பட்டது. இறுதியில் இது பெருமாளா அல்லது லிங்கமா என்ற உண்மையை அறிய, மூலவரை கண்களை மூடிக்கொண்டு தொட்டுப் பார்த்தார். அப்போது லிங்கத்தின் உருவம்தான் கைகளுக்குத் தட்டுப்பட்டது.
மூடிய கண்களுக்கு லிங்கமாகக் காட்சி தரும் இறைவன் கண்களைத் திறந்தபின் பெருமாளாகக் காட்சி அளிப்பதைக் கண்டு மன்னருக்கு மெய்சிலிர்த்தது.
இது சிவனும் பெருமாளும் கலந்த தலம் என்பதை உணர்ந்தார் விஜயநகர மன்னர். உடனே, அதே கருவறையில் பெருமாளையும் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அது முதல் இந்த இறைவன் கதரி நரசிங்கப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.
1 ஏக்கர் பரப்பளவில் கோவில் அமைந்துள் ளது. கோவிலைச் சுற்றி இருபது அடி உயரத்தில் கோட்டைச்சுவர் நான்கு பக்கமும் உள்ளது. கோவில் மூலஸ்தானத்தில் சிவனும்; உபயநாச்சி யார், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளும் காட்சி தருகின்றனர்.
பைரவர், கமலவல்லித் தாயார், சக்கரத்தாழ் வார், விநாயகர், சனீஸ்வர பகவான், உடையவர், நம்மாழ்வார் உள்பட முக்கிய சந்நிதிகள் உள்ளன.
வைகுண்ட ஏகாதசி, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், பைரவர் அஷ்டமி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி), மார்கழித் திங்கள் பூஜை, புரட்டாசி சனி, நவராத்திரி பூஜை, ஆவணி அவிட்டம் என பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
இங்கு 1978-ல் வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி கள், "அரியும் அரனும் இணைந்து காட்சியளிக் கும் இந்தக் கோவில்போல எங்கும் கிடையாது' என்று கூறி ஆலயத்தைப் புதுப்பிக்கும்படிக் கூறினார். அதன்படி திருப்பணிகள் செய்யப் பட்டு, மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசை யாக நடந்தேறியது.
நன்றி திருமதி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நன்றி ஹரி பிரசாத் .
நல்ல தகவல்கள் .
இந்த செய்திகள் வேறு ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தால் ,
அந்த ஊடகத்திற்கு நன்றி கூறுவது , ஈகரை கடைப்பிடிக்கும் வழக்கம் .
உங்களுடையது எனில் அவசியமில்லை .
ரமணியன்
நல்ல தகவல்கள் .
இந்த செய்திகள் வேறு ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தால் ,
அந்த ஊடகத்திற்கு நன்றி கூறுவது , ஈகரை கடைப்பிடிக்கும் வழக்கம் .
உங்களுடையது எனில் அவசியமில்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
தகவலுக்கு நன்றி
திருமதி லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு இக்கணத்தில் நன்றி கூறி வணங்குகிறேன்
திருமதி லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு இக்கணத்தில் நன்றி கூறி வணங்குகிறேன்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167419Hari Prasath wrote:தகவலுக்கு நன்றி
திருமதி லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு இக்கணத்தில் நன்றி கூறி வணங்குகிறேன்
நன்றியை இணைத்து விட்டேன் ,ஹரி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அம்மைநாயக்கனூர் வழியாக என் உத்தப்பநாயக்கனூர் பல முறை சென்றுள்ளேன் ஆனால் இன்று தான் சிறப்பு அறிய நேர்ந்த்து. நன்றி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167550பழ.முத்துராமலிங்கம் wrote:அம்மைநாயக்கனூர் வழியாக என் உத்தப்பநாயக்கனூர் பல முறை சென்றுள்ளேன் ஆனால் இன்று தான் சிறப்பு அறிய நேர்ந்த்து. நன்றி.
இதை தாங்கள் அறிய உதவி புரிந்தமைக்கு பெருமை கொள்கிறேன்...
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அம்மையநாயக்கனூர் பாளையம்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு நகரில் தற்போதுஅமைந்துள்ள இந்த ஊர், நாயக்கர்ஆட்சிக்காலத்தில் சிறப்பு பெற்ற பாளையமாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜமினாகவும் இருந்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ,
பாளையம் உருவாகுதல்
பாளையத்தின் முன்னவரான பெஞ்சை மாகையா நாயக்கர் அவர்கள் கி.பி.1435 இல் விஜயநகர மன்னரிடம் போர் வீரர்களாக பணிபுரிந்தவர்கள் . விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் ஒன்றாக இருந்து வந்தது . இவர்கள் மதுரைக்கு காவல் என்ற உரிமையை பெற்றுவந்தனர் . இவர்கள் ராஜகம்பளம்என்ற நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . மதுரைக்கு காவலாக இவர்கள் இருந்ததால் பெஞ்சை மாகையா நாயக்கர் மற்றும் அவர் சார்த்த கம்பளத்து நாயக்கர்கள் மதுரைக்கு வடமேற்கில் சிறுமலை மற்றும் சுற்றில் உள்ள சில கிராமங்களில் குடியமர்ந்தனர் . இதில் இவர்கள் ஒரு கோட்டையை உருவாக்கி அம்மைய நாயக்கனூர்பாளையத்தை உருவாக்கினர் ,
ஊர்களை உருவாக்குதல்
வேடசந்தியூர் , வெள்ளோடு , பச்சைமலன் கோட்டை ம,சம்புதரைகோட்டை, ஒருதநாட்டு கிராமம் , பாளயக்கவுண்டன் பட்டி , எதுலூட்டு , சிதர்னத்தம். மேட்டுப்பட்டி , மட்டப்பாறை , பள்ளப்பட்டி , குள்ளல்குண்டு , குலசேகரன் பேட்டை , தனிசியம் முதலிய ஊர்களை நிர்வகித்தும் , உருவாகியும் வந்துள்ளனர் . 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மகன் அம்மைய லக்கம்மா நாயக்கர் பதவிஏற்றார் . இவரின் மனைவியின் பெயர் ஏற்ரம்மா . இவர்காலத்தில் கதிரீஸ்வருக்கு கோவில் அமைக்கப்பட்டது . இவருக்கு பின் இவரது மகன் வள்ளால மக்கைய நாயக்கர் மற்றும் அவரின் துணைவியார் காமுலம்மாள் ஒருத்தநாட்டு கிராமத்தில் குருநாதசாமி கோவில் அமைத்துள்ளார் , சந்தையூர் கிராமத்தில் கதிலி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு மண்டபம் கட்டி உள்ளார் ,
கள்ளர்களை அடக்குதல்
அம்மைய நாயக்கனூருக்கு பக்கத்தில் இருந்த கள்ளர்கள் கர்நாடக மன்னரின் கால்நடைகளை திருடிச்சென்று விட்டனர் . இதனை அறிந்த வள்ளால மாகைய நாயக்கர் மற்றும் சில சேர்வைகாரர்களை அழைத்து கள்ளர்களை அடக்கி அவர்களிடம் இருந்த கால்நடைகளை மீட்டு கர்நாடக மன்னரிடம் தந்து உள்ளார் , இதனால் மனம் மகிழ்ந்த அவர் வீர வள்ளால மாக்கையா நாயக்கர் என்ற பட்டத்தினை நாயக்கருக்கு தருகிறார் . இவர் கல்லூத்து யோவார்பட்டி , பேதகாளிங்கம்மா நாயக்கர் பட்டி , குய்யம்மா நாயக்கனூர் போன்ற கிராமங்களை உருவாக்கி உள்ளார் . மதுரையில் உள்ள கூடல் அழகுப்பெருமாள் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை இவரே ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதால் இன்றும் இவர் வாரிசுதாரர்களுக்கு முதல் மரியாதையும் , இவர்கள் தேங்காய் தொட்டவுடன் தான் வடம் இழுப்பார் மேலும் இவர்களுக்கு பரிவட்டமும் கட்டப்படுகின்றன .
கோவில்களை அமைத்தல்
இவருக்கு அடுத்து இவர் மகன் கொந்தி பொம்ம நாயக்கர் அவரின் மனைவி வீரமுத்தம்மா இவர்களுக்கு பொன்னையா நாயக்கர் , காமைய நாயக்கர் என்ற மகன்கள் இருந்தனர் , இவரது காலத்தில் குருவி துறை சித்திரத்து வல்லவர் தேர் உருவாக்கப்பட்டுள்ளது . இவரது காலத்தில் போயர் என்று சொல்லப்படும் ஒட்டர்கள் அதிக அளவில் இங்கு குடியமர்ந்தனர் மேலும் அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் உரிமையும் கிடைத்துள்ளது . இதற்கு பின் பெரியமுதல்ல நாயக்கர் கதிரி நரசிங்கப்பெருமாளுக்கு பல விலை உயர்ந்த பொருட்களை தந்துள்ளார் , சந்தையூர் பகுதியில் கம்பளதார்களின் குல தெய்வமான கன்னிமார் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது . குருநாதசாமி கோவிலுக்கும் பல தானங்களை தந்துள்ளார் . குழந்தைவேலு நாயக்கர் என்ற 16 வது பட்டதுக்காரர் குலசேகரன் கோட்டையில் மலை மேல் பொன்னும் பெருமாள் கோவிலுக்கு கலசக்கம்பம் மற்றும் தானங்கள் தந்துள்ளார் , பழனி தலத்தில் முன் மண்டபமும் கட்டி உள்ளார் .
கதலி நரசிங்கப் பெருமாள் கோவில்
கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் உள்ளனர். பெருமாள் தேவியர் இருவருடன் நிற்கிறார். இங்குச் சிவன் பெயர் கதலீஸ்வரர். பெருமாள் பெயர் கதிர் நரசிங்கப் பெருமாள்.கோவிலின் பெயர் கதலி நரசிங்கப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டில் அரியும் அரனும் ஒரே கருவையில் அமர்ந்திருக்கும் கோவில் இது ஒன்றுதான்.இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவிலை அமைத்தது இந்த பாளயக்கார்களே.
அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர்
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாளையகார் காமைய சாமி நாயக்கர் கனவில் ஆஞ்சிநேயர் தோன்றி வைகை ஆற்றில் தான் சுயம்புவாக உள்ளதாகவும் கோவில் அமைத்து வழிபடவும் சொல்ல காமைய சாமி நாயக்கரும் கோவில் அமைத்து வீர ஆஞ்சிநேயர் என்று பெயர் சூடி வழிபட்டு வந்தார் , இம்மாவட்டத்தில் உள்ள பழமையான ஆஞ்சிநேயர் கோவில் எனபது சிறப்பு , மேலும் இந்த பாளையதினை ஆட்சி செய்தவர்கள் பல கோவில்கள், ஊர்களை அமைத்துள்ளனர் . மேலும் பல்வேறு சமுக மக்களையும் தாங்கள் அமைத்த ஊர்களில் குடியமர்த்தினர் .
குறிப்பு:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஹரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரே கோவிலைப்பற்றிய பதிவு என்பதால் உங்கள் பதிவுகள் இரண்டையும் இணைக்கிறேன் ஹரி
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1167670krishnaamma wrote:ஒரே கோவிலைப்பற்றிய பதிவு என்பதால் உங்கள் பதிவுகள் இரண்டையும் இணைக்கிறேன் ஹரி
தங்கள் உதவிக்கு நன்றி
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|