புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
6 Posts - 33%
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
88 Posts - 38%
i6appar
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
2 Posts - 1%
prajai
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 15 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....


   
   

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 5:35 pm

18-12-2015

பொய் மான்

பிரபஞ்ச வாழ்வு என்னும் பொய்மானைப் பார்த்தோடா திருக்குமாறு
பரம்பொருளே, நீ அருள் புரிவாயாக.

தவத்துக்காகக் காட்டுக்குச் சென்றிருந்த ஸ்ரீ ராமனும் சீதையும் சிறிது நேரம்
பொய்மானுக்கு ஆசைப்பட்டார்கள். அந்த ஆசைக்கு இடங்கொடுத்ததால்
அவர்கள் பெருந்துயரத்துக்கு ஆளானார்கள். மக்கள் எல்லாரும் படும்
துயரத்துக்கு மூலகாரணம் பொறி வழியே அவர்கள் பிரபஞ்சப்
பொருள்கள் என்னும் பொய்மானை நாடிச் செல்வதாம்.
அதைப் புறக்கணிக்குமளவு துன்பம் தவிர்க்கப்படும்.

இகமுழுதும் பொய்யெனவே

ஏய்த்துணர்ந்தால் ஆங்கே

மிகவளர வந்தஅருள்

பெய்யே- அகநெகிழப்

பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தைச்

சேரீர் அதுவே நிறம்

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 11:08 am

19-12-2015

அபயம்

அபயகரங்காட்டி என்னை வாவென்று அழைத்த வண்ணமாயிருக்கும்
இறைவா, நான் விரைவில் உன் சந்நிதி வந்து சார்வேனாக.


தீக்கு அருகில் வருகிறவர்களுக்குக் குளிர் போகிறது. உணவை ஏற்பவர்க்குப்
பசி போகிறது. கடவுளை அடைபவர்க்குப் பயம் போகிறது. கடவுளில்
ஒன்றித்துவிடுபவர்க்கு ஆபத்து ஒன்றுமேயில்லை. கடவுளை
அடைவதும் அபயத்தில் நிலைபெறுவதும் ஒன்றேயாம்.


இக்காயம் பொய்யென்றோர் ஈட்டத்து உனக்கபயம்

புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:57 am

20-12-2015

நின் செயல்

பிரபஞ்சத்தில் நிகழ்வதெல்லாம் இறைவா, நின் செயல். என் செயல் என்று சிலவற்றுள்
நான் உரிமை பாராட்டி பந்த பாசத்தை உண்டு பண்ணிக்கொள்கிறேன்.


மின் சக்தியால் இயக்கப்பெற்றுச் சக்கரம் சுழல்கிறது; தீபம் எரிகிறது; ஒலிபெருக்கி
ஓலமிடுகிறது; அடுப்பு வெப்பம் கொடுக்கிறது. அப்படித் தெய்வத்தின் ஆனையால்
இயற்கையில் யாவும் நடைபெறுகின்றன. இதை அறியாத மனிதன் தன்னைச்
செயலுக்குக் கர்த்தாவாக்கிக்கொள்கிறான்.


பார்க்கின் அண்டபிண்டப் பரப்பனைத்தும் நின்செயலே

யார்க்குஞ் செயலிலையே ஐயா பராபரமே.


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 4:58 pm

21-12-2015

மனது

தீயில் போட்ட அடுப்புக்கரி தானே தீயாவது போன்று தேவே, என் மனதை உன்னிடம்
கொடுத்துவிட்டால் அது உன் சொரூபம் ஆய்விடுகிறது.


மனம் இருக்கும் வரையில் உலக்க காட்சியிருக்கிறது. நல்ல மனதுக்கு உலகம் நல்லதாக காட்சியளிக்கிறது; கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகத் தென்படுகிறது. தெய்வீக
மனதுக்குத் தெய்வக் காட்சி தென்படுகிறது. மனம் அழியுங்கால் காணப்படும்
உலகும் மறைகிறது. மனோ நாசத்துக்குப் பிறகு
எஞ்சியிருப்பது மெய்ப்பொருள்.


சிந்தை பிறந்ததும் ஆங்கே-அந்தச்

சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே

எந்த நிலைகளும் ஆங்கே-கண்ட

யான்தான் இரண்டற்று இருந்தது ஆங்கே


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:55 pm

22-12-2015

நான்

நான் என்பதை இறைவா, உனக்கே உரியதாக்கி விடுவேனாக.

நான் என்பதற்கு இலக்காயிருப்பது எது? உடலா, தசையா,ரத்தமா,எலும்பா? மனம்,புத்தி
முதலிய அந்தக்காணமா? நான் என்பது வெங்காயம் போன்றது. சருகுகளை
ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு வெங்காந்ததில் எஞ்சியிருப்பது
ஒன்றுமில்லை. கருவி கரணங்களை நீக்கய பிறகு நான்
என்பதற்கு இலக்காக ஒன்றுமில்லை.


ஊன்கெட்டு உயிர்கெட்டு

உணர்வுகெட்டு என் உள்ளமும்போய்

நான்கெட்ட வாபாடித்

தெள்ளேணங் கொட்டாமோ?

---மாணிக்கவாசகர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 7:00 pm

23-12-2015

]u]அருள் நிலை[/u]

மருளிலே மயங்கி மாயாஜகத்தில் உழலும் என்னை எம்மானே,
அருளிலே அசையாதிருக்க வைப்பாயாக.

மனிதன் ஏக காலத்தில் மாறுபடும் இரண்டு காட்சிகளைக் காண்பதில்லை.பாம்பு
என்னும் காட்சி தென்படும் பொழுது கயிறு என்னும் காட்சியில்லை.கயிற்றைக்
கயிறாக உணரும்போது பாம்பு இல்லை. பொருளை இயற்கையாகக் காண்பது
மருள் நிலை. பொருளைப் பரமனாக்க காண்பது அருள் நிலை.


அருள் எலாந்திரண்டு ஓர்வடி வாகிய

பொருள் எலாம்வல்ல பொற்பொதுநாத! என்

மருள் எலாங்கெடுத் தேஉளம் மன்னலால்

இருள் எலநம்இரிந்து எங்கொளித் திட்டதே?

---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்



Sponsored content

PostSponsored content



Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக