புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
435 Posts - 47%
heezulia
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
30 Posts - 3%
prajai
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10அனுபவத் துளிகள் - Page 7 Poll_m10அனுபவத் துளிகள் - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவத் துளிகள்


   
   

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 07, 2015 6:52 pm

First topic message reminder :

அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)

ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!

[வாயசம் = காக்கை]

--ரமணி, 21/09/2015

*****


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 6:56 pm

ரமணி wrote:34. கண்முன்னே ஓர் கொலை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!

--ரமணி, 03/11/2015

*****
என்னே ஒரு உயிரிரக்கம்
மிக அருமை ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 17, 2015 8:42 pm

45. சிறகைக் களைந்தால் சிறை?!
(அளவியல் இன்னிசை/நேரிசை வெண்பா)

பிரளயத்தின் ஓர்துளி பேய்மழை ஆட்டம்
இரணியன் நெஞ்சென இற்றது பூமி
தனதாம் பொருட்களின் தாக்கம் தகர்த்தே
மனதை அரித்த மழை. ... 1

தினமும் மழையில் திரண்டுருள் வெள்ளம்
வனப்பில் பயத்தினை வார்த்தது நெஞ்சில்
கனவுகள் பொய்யாய்க் கவலைகள் மெய்யாய்
மனத்தை அரித்த மழை. ... 2

வெள்ளம் நலத்தை விசாரிக்க வீடுபுக
உள்ளம் பயத்தில் உறையவே - உள்ள
உடைமையில் உண்ண உறங்கவெனத் தேவை
எடுத்தேறி னோம்மாடி மேல். ... 3

அணைந்தமின் சாரசக்தி ஆற்றுப் படுத்த
இணையம் இலாத இருளில் - பிணையெலாம்
அற்றவுளம் நிம்மதியில் ஆறாதோ? மாறாகக்
குற்றுயி ரான குலை. ... 4

கடமை குறையக் கவலை குறைய
உடைமை குறைப்பதில் உள்ளங்கள் ஒன்றக்
குடும்பத்தின் கூட்டுறவைக் கொண்டாடி னாலும்
விடுத்ததைப் பற்றும் விழைவு. ... 5

மூன்று தினமாக முக்கி முனகியே
ஊன்றுகோல் இன்றி உளைந்து தவிக்க
விடியலின் கீற்றுவர விட்டது மாரி
ஒடிந்த மனத்தில் உவப்பு. ... 6

இணையம் இலக்கியம் கேளிக்கை என்றே
துணைகளைப் பற்றித் தொடர்ந்திடும் வாழ்வில்
சிறகை விரும்பும் சிறுமனம் எண்ணும்
சிறகைக் களைந்தால் சிறை. ... 7

--ரமணி, 17/11/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 19, 2015 5:59 pm

46. சாலையில் மீன்கள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

இந்தமழை வெள்ளத்தில் துன்பம் எதற்கெனில்
சொந்தமென ஏரியின் சூழலில் வாழ்மீன்கள்
ஏரி உடைய எறிவெள்ளம் பாயவே
மூரி இழந்த முடை. ... 1

[மூரி = வலிமை, பெருமை, பழமை; முடை = நெருக்கடி]

சாலைவழி வெள்ளத்தில் சஞ்சரித்த மீனெலாம்
ஓலமிட்ட மௌன ஒலியுடன் வீட்டுவெளிப்
பாதையில் கேணியில் பற்பல குஞ்சுடன்
சேதமுறும் சேற்றுடன் சேர்ந்து. ... 2

இந்தமழை வெள்ளத்தில் இன்பம் எதற்கெனில்
வந்துவந்து வெள்ளம் வரும்மீன் பிடிக்கத்
தடியால் அடித்துத் தவளையாய்ப் பாய்ந்தே
விடுவலை கொண்ட விழி. ... 3

மீன்விலை யேற்ற மிதப்பில் சிலமக்கள்
வான்வழி நீரினால் வந்ததைப் பற்றி
நெகிழ்பையில் சேர்த்த நிகழ்வினைக் கண்டோர்
நெகிழ்ந்தே வருந்தும் நிலை. ... 4

உயிர்கள் வதைதடுக்க உள்ளசட் டம்தான்
அயலாகிப் போக அரிதாமோ மீன்கள்?
கயல்விழி கண்ணில் கவிதையில் தானோ?
உயிர்க்கும் உரிமையிலை யோ? ... 5

--ரமணி, 17/11/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 20, 2015 7:16 pm

35. காலம் கடந்த ரயில்!
(நேரிசை ஆசிரியப்பா)

’அம்மா, எத்தன அய்யில் பத்தியா!’
கம்மல் காதாடக் கண்விரிந் தேநான்
மூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை
ஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்!
காலம் கடந்தும் ரயிலின்
ஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.

அந்த நாட்களின் அருமையும் நெடுமையும்
சிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,
அணுவின் அளவாய், ஆழத் தங்கியும்
அணுகில் ஆடும் அசைபடம் என்றே
வீழ்ந்ததை உள்ளம் விரிப்பதே
வாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ?

--ரமணி, 04/11/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 8:10 pm

அனுபவத் துளிகள் - Page 7 3838410834 அனுபவத் துளிகள் - Page 7 103459460 அனுபவத் துளிகள் - Page 7 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 20, 2015 8:36 pm

அனுபவத் துளிகள் - Page 7 3838410834

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 21, 2015 7:40 pm

36. ஆறும் ஆஞ்சநேயரும்!
(நேரிசை ஆசிரியப்பா)

ஆற்றங் கரைப்பள்ளி. ஆசையுடன் நாங்கள்
சேற்றில் நிற்போம். சிறுமீன்கள் கொட்டும்.
அலைகள் வருடும். ஆனந்தம் பொங்கும்.
சிலபை யன்கள் சிறுமீன்கள் புட்டியில்
நீருடன் அடைத்தே நிறைவெய்தச்
சீரிழந் தேயவை சின்னாளில் சிலையாமே!

அருகில் கோவிலில் ஆஞ்சநேயர் கும்பிட்டே
அருமைச் சுற்றம் அவள்தோழி யுடன்நான்
சில்லெனும் உணர்வையெம் சிறுதொடை விரும்பக்
கல்மேடை அமர்ந்தே சொல்லுரை யாடுவோம்.
கள்ளமிலா நாட்கள் கனவாக
உள்ளம் இன்றும் உவகையில் ஒன்றுமே!

--ரமணி, 05/11/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 22, 2015 6:03 pm

37. கற்சட்டி மகிமை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கற்சட்டி நிறையக் கட்டித் தயிர்சாதம்
சுற்றியரை வட்டமாய்ச் சொகுசாய்த் தரையமர்ந்தே
உருவினிற் பெரியதாய் உருண்டை உள்ளங்கைக்
கரம்நீட்டி வாங்கிக் கட்டை விரல்மடித்தே
சின்னதாய்க் குழியைச் செய்தபின் சாம்பாரால்
அன்னையின் அன்னை அற்பக் குளமாக்க
பருக்கை சிதறாமல் பல்லால் கவ்வியதன்
உருவம் சிதைத்தே உட்கொளும் குழந்தைகளாய்ப்
பொன்மாலை மறைந்த பொழுதை இரவுண்ணச்
சின்னக்கை நக்குவோம் சீர்த்தெழும் ஏப்பமே!

கற்சட்டி உடையமாக் கல்லென் றாகியே
பற்பல வாயெழுதப் பயன்தரும் கோலாகும்
மகளிர் புள்ளி வைத்தே கோலமிட
மகன்மை வாரிசாம் வால்கள் நாங்களோ
தரையில் கிறுக்கித் தத்தம் பாடங்கள்
உருவேற்றும் வேலையில் உள்ளம் களைத்தே
வரைவோம் சித்திரம் வாய்மூக்கு வைத்தே
ஒருவரை ஒருவர் புகழ்ந்தே பழித்தே!
கற்சட்டி மாக்கல் கண்படா இன்னாளில்
வெற்றுக் காகிதமும் வீணென மறையுமே!

--ரமணி, 07/11/2015

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 23, 2015 7:29 pm

38. ஆரோவோர் பையன்!
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)

ஆரோவோர் பையன்... (கொஞ்சம்நான் நிதானித்தே)
. அடிவாங்கப் போறான்!
தாராள மெனினும் தந்தையன்றோ? என்பொறுமை
. தளைமீற இரைவேன்
பேரோசை விளைத்தே பித்தாக்கும் பிள்ளைதொலை
. பேசியைக்கை விடுக்கும்!
வாரிக்குள் மணியாய் வந்ததன்றோ? குறும்பெல்லாம்
. மனதுக்குள் மகிழ்வே!

ஆரோவோர் பையன்... மீண்டொலிக்கும் என்குரலே!
. ஆசையிலே பிள்ளை
பேரோசை வைத்தே பக்கத்தில் நின்றுகொண்டே
. பிடித்ததெலாம் பார்க்கத்
சோராமல் நானும் மறுபடியும் குரலேற்றத்
. தொலைக்காட்சி யடக்கி
ஆரோவோர் பையன்... பிள்ளையது எதிரொலிக்கும்
. அடிவாங்க மாட்டான்!

--ரமணி, 07/11/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 24, 2015 12:05 pm


அனுபவத் துளிகள் - Page 7 3838410834 அனுபவத் துளிகள் - Page 7 103459460 அனுபவத் துளிகள் - Page 7 1571444738
ரமணி wrote:38. ஆரோவோர் பையன்!
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)
--ரமணி, 07/11/2015

*****
மேற்கோள் செய்த பதிவு: 1176380

Sponsored content

PostSponsored content



Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக