புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவத் துளிகள்
Page 7 of 11 •
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
என்னே ஒரு உயிரிரக்கம்ரமணி wrote:34. கண்முன்னே ஓர் கொலை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!
--ரமணி, 03/11/2015
*****
மிக அருமை ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
45. சிறகைக் களைந்தால் சிறை?!
(அளவியல் இன்னிசை/நேரிசை வெண்பா)
பிரளயத்தின் ஓர்துளி பேய்மழை ஆட்டம்
இரணியன் நெஞ்சென இற்றது பூமி
தனதாம் பொருட்களின் தாக்கம் தகர்த்தே
மனதை அரித்த மழை. ... 1
தினமும் மழையில் திரண்டுருள் வெள்ளம்
வனப்பில் பயத்தினை வார்த்தது நெஞ்சில்
கனவுகள் பொய்யாய்க் கவலைகள் மெய்யாய்
மனத்தை அரித்த மழை. ... 2
வெள்ளம் நலத்தை விசாரிக்க வீடுபுக
உள்ளம் பயத்தில் உறையவே - உள்ள
உடைமையில் உண்ண உறங்கவெனத் தேவை
எடுத்தேறி னோம்மாடி மேல். ... 3
அணைந்தமின் சாரசக்தி ஆற்றுப் படுத்த
இணையம் இலாத இருளில் - பிணையெலாம்
அற்றவுளம் நிம்மதியில் ஆறாதோ? மாறாகக்
குற்றுயி ரான குலை. ... 4
கடமை குறையக் கவலை குறைய
உடைமை குறைப்பதில் உள்ளங்கள் ஒன்றக்
குடும்பத்தின் கூட்டுறவைக் கொண்டாடி னாலும்
விடுத்ததைப் பற்றும் விழைவு. ... 5
மூன்று தினமாக முக்கி முனகியே
ஊன்றுகோல் இன்றி உளைந்து தவிக்க
விடியலின் கீற்றுவர விட்டது மாரி
ஒடிந்த மனத்தில் உவப்பு. ... 6
இணையம் இலக்கியம் கேளிக்கை என்றே
துணைகளைப் பற்றித் தொடர்ந்திடும் வாழ்வில்
சிறகை விரும்பும் சிறுமனம் எண்ணும்
சிறகைக் களைந்தால் சிறை. ... 7
--ரமணி, 17/11/2015
*****
(அளவியல் இன்னிசை/நேரிசை வெண்பா)
பிரளயத்தின் ஓர்துளி பேய்மழை ஆட்டம்
இரணியன் நெஞ்சென இற்றது பூமி
தனதாம் பொருட்களின் தாக்கம் தகர்த்தே
மனதை அரித்த மழை. ... 1
தினமும் மழையில் திரண்டுருள் வெள்ளம்
வனப்பில் பயத்தினை வார்த்தது நெஞ்சில்
கனவுகள் பொய்யாய்க் கவலைகள் மெய்யாய்
மனத்தை அரித்த மழை. ... 2
வெள்ளம் நலத்தை விசாரிக்க வீடுபுக
உள்ளம் பயத்தில் உறையவே - உள்ள
உடைமையில் உண்ண உறங்கவெனத் தேவை
எடுத்தேறி னோம்மாடி மேல். ... 3
அணைந்தமின் சாரசக்தி ஆற்றுப் படுத்த
இணையம் இலாத இருளில் - பிணையெலாம்
அற்றவுளம் நிம்மதியில் ஆறாதோ? மாறாகக்
குற்றுயி ரான குலை. ... 4
கடமை குறையக் கவலை குறைய
உடைமை குறைப்பதில் உள்ளங்கள் ஒன்றக்
குடும்பத்தின் கூட்டுறவைக் கொண்டாடி னாலும்
விடுத்ததைப் பற்றும் விழைவு. ... 5
மூன்று தினமாக முக்கி முனகியே
ஊன்றுகோல் இன்றி உளைந்து தவிக்க
விடியலின் கீற்றுவர விட்டது மாரி
ஒடிந்த மனத்தில் உவப்பு. ... 6
இணையம் இலக்கியம் கேளிக்கை என்றே
துணைகளைப் பற்றித் தொடர்ந்திடும் வாழ்வில்
சிறகை விரும்பும் சிறுமனம் எண்ணும்
சிறகைக் களைந்தால் சிறை. ... 7
--ரமணி, 17/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
46. சாலையில் மீன்கள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)
இந்தமழை வெள்ளத்தில் துன்பம் எதற்கெனில்
சொந்தமென ஏரியின் சூழலில் வாழ்மீன்கள்
ஏரி உடைய எறிவெள்ளம் பாயவே
மூரி இழந்த முடை. ... 1
[மூரி = வலிமை, பெருமை, பழமை; முடை = நெருக்கடி]
சாலைவழி வெள்ளத்தில் சஞ்சரித்த மீனெலாம்
ஓலமிட்ட மௌன ஒலியுடன் வீட்டுவெளிப்
பாதையில் கேணியில் பற்பல குஞ்சுடன்
சேதமுறும் சேற்றுடன் சேர்ந்து. ... 2
இந்தமழை வெள்ளத்தில் இன்பம் எதற்கெனில்
வந்துவந்து வெள்ளம் வரும்மீன் பிடிக்கத்
தடியால் அடித்துத் தவளையாய்ப் பாய்ந்தே
விடுவலை கொண்ட விழி. ... 3
மீன்விலை யேற்ற மிதப்பில் சிலமக்கள்
வான்வழி நீரினால் வந்ததைப் பற்றி
நெகிழ்பையில் சேர்த்த நிகழ்வினைக் கண்டோர்
நெகிழ்ந்தே வருந்தும் நிலை. ... 4
உயிர்கள் வதைதடுக்க உள்ளசட் டம்தான்
அயலாகிப் போக அரிதாமோ மீன்கள்?
கயல்விழி கண்ணில் கவிதையில் தானோ?
உயிர்க்கும் உரிமையிலை யோ? ... 5
--ரமணி, 17/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
இந்தமழை வெள்ளத்தில் துன்பம் எதற்கெனில்
சொந்தமென ஏரியின் சூழலில் வாழ்மீன்கள்
ஏரி உடைய எறிவெள்ளம் பாயவே
மூரி இழந்த முடை. ... 1
[மூரி = வலிமை, பெருமை, பழமை; முடை = நெருக்கடி]
சாலைவழி வெள்ளத்தில் சஞ்சரித்த மீனெலாம்
ஓலமிட்ட மௌன ஒலியுடன் வீட்டுவெளிப்
பாதையில் கேணியில் பற்பல குஞ்சுடன்
சேதமுறும் சேற்றுடன் சேர்ந்து. ... 2
இந்தமழை வெள்ளத்தில் இன்பம் எதற்கெனில்
வந்துவந்து வெள்ளம் வரும்மீன் பிடிக்கத்
தடியால் அடித்துத் தவளையாய்ப் பாய்ந்தே
விடுவலை கொண்ட விழி. ... 3
மீன்விலை யேற்ற மிதப்பில் சிலமக்கள்
வான்வழி நீரினால் வந்ததைப் பற்றி
நெகிழ்பையில் சேர்த்த நிகழ்வினைக் கண்டோர்
நெகிழ்ந்தே வருந்தும் நிலை. ... 4
உயிர்கள் வதைதடுக்க உள்ளசட் டம்தான்
அயலாகிப் போக அரிதாமோ மீன்கள்?
கயல்விழி கண்ணில் கவிதையில் தானோ?
உயிர்க்கும் உரிமையிலை யோ? ... 5
--ரமணி, 17/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
35. காலம் கடந்த ரயில்!
(நேரிசை ஆசிரியப்பா)
’அம்மா, எத்தன அய்யில் பத்தியா!’
கம்மல் காதாடக் கண்விரிந் தேநான்
மூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை
ஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்!
காலம் கடந்தும் ரயிலின்
ஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.
அந்த நாட்களின் அருமையும் நெடுமையும்
சிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,
அணுவின் அளவாய், ஆழத் தங்கியும்
அணுகில் ஆடும் அசைபடம் என்றே
வீழ்ந்ததை உள்ளம் விரிப்பதே
வாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ?
--ரமணி, 04/11/2015
*****
(நேரிசை ஆசிரியப்பா)
’அம்மா, எத்தன அய்யில் பத்தியா!’
கம்மல் காதாடக் கண்விரிந் தேநான்
மூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை
ஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்!
காலம் கடந்தும் ரயிலின்
ஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.
அந்த நாட்களின் அருமையும் நெடுமையும்
சிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,
அணுவின் அளவாய், ஆழத் தங்கியும்
அணுகில் ஆடும் அசைபடம் என்றே
வீழ்ந்ததை உள்ளம் விரிப்பதே
வாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ?
--ரமணி, 04/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![அனுபவத் துளிகள் - Page 7 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அனுபவத் துளிகள் - Page 7 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![அனுபவத் துளிகள் - Page 7 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
36. ஆறும் ஆஞ்சநேயரும்!
(நேரிசை ஆசிரியப்பா)
ஆற்றங் கரைப்பள்ளி. ஆசையுடன் நாங்கள்
சேற்றில் நிற்போம். சிறுமீன்கள் கொட்டும்.
அலைகள் வருடும். ஆனந்தம் பொங்கும்.
சிலபை யன்கள் சிறுமீன்கள் புட்டியில்
நீருடன் அடைத்தே நிறைவெய்தச்
சீரிழந் தேயவை சின்னாளில் சிலையாமே!
அருகில் கோவிலில் ஆஞ்சநேயர் கும்பிட்டே
அருமைச் சுற்றம் அவள்தோழி யுடன்நான்
சில்லெனும் உணர்வையெம் சிறுதொடை விரும்பக்
கல்மேடை அமர்ந்தே சொல்லுரை யாடுவோம்.
கள்ளமிலா நாட்கள் கனவாக
உள்ளம் இன்றும் உவகையில் ஒன்றுமே!
--ரமணி, 05/11/2015
*****
(நேரிசை ஆசிரியப்பா)
ஆற்றங் கரைப்பள்ளி. ஆசையுடன் நாங்கள்
சேற்றில் நிற்போம். சிறுமீன்கள் கொட்டும்.
அலைகள் வருடும். ஆனந்தம் பொங்கும்.
சிலபை யன்கள் சிறுமீன்கள் புட்டியில்
நீருடன் அடைத்தே நிறைவெய்தச்
சீரிழந் தேயவை சின்னாளில் சிலையாமே!
அருகில் கோவிலில் ஆஞ்சநேயர் கும்பிட்டே
அருமைச் சுற்றம் அவள்தோழி யுடன்நான்
சில்லெனும் உணர்வையெம் சிறுதொடை விரும்பக்
கல்மேடை அமர்ந்தே சொல்லுரை யாடுவோம்.
கள்ளமிலா நாட்கள் கனவாக
உள்ளம் இன்றும் உவகையில் ஒன்றுமே!
--ரமணி, 05/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
37. கற்சட்டி மகிமை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கற்சட்டி நிறையக் கட்டித் தயிர்சாதம்
சுற்றியரை வட்டமாய்ச் சொகுசாய்த் தரையமர்ந்தே
உருவினிற் பெரியதாய் உருண்டை உள்ளங்கைக்
கரம்நீட்டி வாங்கிக் கட்டை விரல்மடித்தே
சின்னதாய்க் குழியைச் செய்தபின் சாம்பாரால்
அன்னையின் அன்னை அற்பக் குளமாக்க
பருக்கை சிதறாமல் பல்லால் கவ்வியதன்
உருவம் சிதைத்தே உட்கொளும் குழந்தைகளாய்ப்
பொன்மாலை மறைந்த பொழுதை இரவுண்ணச்
சின்னக்கை நக்குவோம் சீர்த்தெழும் ஏப்பமே!
கற்சட்டி உடையமாக் கல்லென் றாகியே
பற்பல வாயெழுதப் பயன்தரும் கோலாகும்
மகளிர் புள்ளி வைத்தே கோலமிட
மகன்மை வாரிசாம் வால்கள் நாங்களோ
தரையில் கிறுக்கித் தத்தம் பாடங்கள்
உருவேற்றும் வேலையில் உள்ளம் களைத்தே
வரைவோம் சித்திரம் வாய்மூக்கு வைத்தே
ஒருவரை ஒருவர் புகழ்ந்தே பழித்தே!
கற்சட்டி மாக்கல் கண்படா இன்னாளில்
வெற்றுக் காகிதமும் வீணென மறையுமே!
--ரமணி, 07/11/2015
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கற்சட்டி நிறையக் கட்டித் தயிர்சாதம்
சுற்றியரை வட்டமாய்ச் சொகுசாய்த் தரையமர்ந்தே
உருவினிற் பெரியதாய் உருண்டை உள்ளங்கைக்
கரம்நீட்டி வாங்கிக் கட்டை விரல்மடித்தே
சின்னதாய்க் குழியைச் செய்தபின் சாம்பாரால்
அன்னையின் அன்னை அற்பக் குளமாக்க
பருக்கை சிதறாமல் பல்லால் கவ்வியதன்
உருவம் சிதைத்தே உட்கொளும் குழந்தைகளாய்ப்
பொன்மாலை மறைந்த பொழுதை இரவுண்ணச்
சின்னக்கை நக்குவோம் சீர்த்தெழும் ஏப்பமே!
கற்சட்டி உடையமாக் கல்லென் றாகியே
பற்பல வாயெழுதப் பயன்தரும் கோலாகும்
மகளிர் புள்ளி வைத்தே கோலமிட
மகன்மை வாரிசாம் வால்கள் நாங்களோ
தரையில் கிறுக்கித் தத்தம் பாடங்கள்
உருவேற்றும் வேலையில் உள்ளம் களைத்தே
வரைவோம் சித்திரம் வாய்மூக்கு வைத்தே
ஒருவரை ஒருவர் புகழ்ந்தே பழித்தே!
கற்சட்டி மாக்கல் கண்படா இன்னாளில்
வெற்றுக் காகிதமும் வீணென மறையுமே!
--ரமணி, 07/11/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
38. ஆரோவோர் பையன்!
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)
ஆரோவோர் பையன்... (கொஞ்சம்நான் நிதானித்தே)
. அடிவாங்கப் போறான்!
தாராள மெனினும் தந்தையன்றோ? என்பொறுமை
. தளைமீற இரைவேன்
பேரோசை விளைத்தே பித்தாக்கும் பிள்ளைதொலை
. பேசியைக்கை விடுக்கும்!
வாரிக்குள் மணியாய் வந்ததன்றோ? குறும்பெல்லாம்
. மனதுக்குள் மகிழ்வே!
ஆரோவோர் பையன்... மீண்டொலிக்கும் என்குரலே!
. ஆசையிலே பிள்ளை
பேரோசை வைத்தே பக்கத்தில் நின்றுகொண்டே
. பிடித்ததெலாம் பார்க்கத்
சோராமல் நானும் மறுபடியும் குரலேற்றத்
. தொலைக்காட்சி யடக்கி
ஆரோவோர் பையன்... பிள்ளையது எதிரொலிக்கும்
. அடிவாங்க மாட்டான்!
--ரமணி, 07/11/2015
*****
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)
ஆரோவோர் பையன்... (கொஞ்சம்நான் நிதானித்தே)
. அடிவாங்கப் போறான்!
தாராள மெனினும் தந்தையன்றோ? என்பொறுமை
. தளைமீற இரைவேன்
பேரோசை விளைத்தே பித்தாக்கும் பிள்ளைதொலை
. பேசியைக்கை விடுக்கும்!
வாரிக்குள் மணியாய் வந்ததன்றோ? குறும்பெல்லாம்
. மனதுக்குள் மகிழ்வே!
ஆரோவோர் பையன்... மீண்டொலிக்கும் என்குரலே!
. ஆசையிலே பிள்ளை
பேரோசை வைத்தே பக்கத்தில் நின்றுகொண்டே
. பிடித்ததெலாம் பார்க்கத்
சோராமல் நானும் மறுபடியும் குரலேற்றத்
. தொலைக்காட்சி யடக்கி
ஆரோவோர் பையன்... பிள்ளையது எதிரொலிக்கும்
. அடிவாங்க மாட்டான்!
--ரமணி, 07/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![அனுபவத் துளிகள் - Page 7 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அனுபவத் துளிகள் - Page 7 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![அனுபவத் துளிகள் - Page 7 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1176380ரமணி wrote:38. ஆரோவோர் பையன்!
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)
--ரமணி, 07/11/2015
*****
- Sponsored content
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 11
|
|