புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_m10கந்தர் அலங்காரம் பாடல் 8  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அலங்காரம் பாடல் 8


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Sep 06, 2015 12:26 pm

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
  அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே
     வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
        தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.   ...      8

மனிதனின் உச்சந்தலையில் ஒரு சக்கரம் உள்ளது . சரீரத்தின் உச்சியில் உயர்ந்த ஞானத்தை அளிக்க வல்ல சகஸ்ரம் என்ற இந்த சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையை போன்றது . சரீரத்தின் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பை போன்று குண்டலினி என்ற அருள் சக்தி சகலருக்கும் தூங்கிக்கொண்டுள்ளது . மனிதர்களின் எவ்வகையான செயல்பாட்டின் போதும் அது கொஞ்சம் வெளியேறி இரண்டாம் சக்கரமான குடற்பகுதியில் உள்ள சுவாதிட்டானம் சக்கரம் வரை வரும் . அதற்கு மேல் பல யோகிகளுக்கும் கூட அது உயர்ந்ததில்லை . சும்மா ஏத்துறேன் இறக்குறேன் என பேசிக்கொள்வார்களே தவிர மணிபூரகம் அடைந்தவர்கள் சிலரே . இந்த நிலையை அடைந்தால் முதலாவது ஆவி மண்டல தாக்குதல் உண்டாகி அதனுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் இறைவனை சார்ந்துகொள்ளும் சரணாகதிக்கு ஒரு நபர் வந்தாகவேண்டும் . ஞானத்தின் வளர்ச்சியால் உண்டாகும் பக்தியோகத்தின் வாசலே ஆவிமண்டல சக்திகளால் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகி இயலாமையை உணர்ந்து தாழ்மையடைவதே . அதுவரை மனித அறிவை பட்டை தீட்டு எழுந்து நில் விழித்துக்கொள் நம்பு எண்ணத்தை வலிமையாக்கினால் எதையும் சாதிக்கலாம் என சுயத்தை அலட்டிக்கொண்டிருப்பார்கள் . உலக காரியங்களில் பல வெற்றிகளையும் புத்திசாலித்தனத்தையும் காட்டவும் செய்வார்கள் .குடும்பத்தையும் தொழிலையும் நிர்வாகத்தையும் விருத்தியும் செய்வார்கள் . எளிய முறை குண்டலினி யோகம் வாசியோகம் சித்தவித்யை முதலான பல யோகங்கள் மட்டுமே முழுமைக்கு போதுமானதே அல்ல . யாரோ ஒருவர் அடைந்ததை காரணம் காட்டி எல்லாமே முடியும் என அவர்கள் நம்பிக்கொண்டிருப்பதன் பின்னணி அவர்களுக்கு இன்னும் குண்டலினி மணிபூரகத்தை அடையவில்லை என்பதே . மனித அறிவால் பூமிக்குரிய விசயங்களை ; நவீன நாத்திக வாடையுடன் அலப்பித்திரிவார்கள் . அவர்களுக்கு ஆவிமண்டல அனுபவம் என்ற பரத்தின் அடித்தட்டு அனுபவமே உண்டாகவில்லை . உண்டானால் நிச்சயம் பக்திக்குள் வந்தே ஆகவேண்டும் .

இவர்கள் நற்குணங்கள் தீயகுணங்கள் என்பவைகளின் செயல்பாடுகளை படர்க்கையாக பார்க்கிறார்களே தவிர இக்குணங்களின் பின்னணியில் தேவர்கள் அசுரர்கள் என்ற ஆவிமண்டல சக்திகள் செயல்படுகிறார்கள் ; இவர்களே மனிதனுக்குள்ளிருக்கும் இயல்புகளை தூண்டிவிட்டு பல பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்ற தெளிவுக்குள் யார் வரவில்லையோ அவர்கள் வாயிலேதான் ஆக்ஞை சகஸ்ரம் விசுத்தி அனாகதம் என்று பேசுகிறார்கள் யாரோ சொல்லிக்கொடுத்ததை ஒப்புவிக்கிறார்கள் ஒழிய மணிபூரகத்தை தாண்டவில்லை என்பதே உண்மை .

சரீரத்தை பூத உடம்பென்பார்கள் . ஆத்மாவோ சூக்குமமான சரீரமாகும் . இந்த பூத உடம்பிலேயே மணிபூரகத்திற்கு மேலே குண்டலினி இயங்கினால் அது உயர் ஞான பூதமென்கிறார் அருணகிரியார் . அதாவது பர ஞான பூதம் என்பது அனாகதத்திற்கு மேலே குண்டலினி இயங்குவது . இதற்கு ஒரு அடையாளம் அவர்கள் பக்தியோகம் கைகூடியவர்களாக இருப்பார்கள்

ஆனால் அனாகதத்திற்கு கீழே குண்டலினி இயங்கினாலும் அவர்கள் செயற்கரிய பல செய்தாலும் பூமிக்குரிய ஞான பூதமாகவே இருப்பார்கள் . நவீன நாத்திக வாதத்தை ஆன்மீக சாயலில் பேசிக்கொண்டு கடவுளின் முக்கியத்துவத்தை ஓரங்கட்டுவார்கள் .

அப்படி குண்டலினி இயங்கும் உயர்ஞான பூதரத்து உச்சி சகஸ்ரத்தில் குண்டலினி நிற்கும்போது ஒளி சரீரம் ஆத்மாவில் விளையும் . பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள வைரவன் கோவிலில் உள்ள மூர்த்தம் பெயர் வளர் ஒளி நாதர் .

அவ்வாறு சகஸ்ரத்தில் குண்டலினி நிற்கும் போது அதன் அடியில் ஆனந்தம் அளிக்கும் தேன் அதாவது அமுதம் விளையும் இடம் ஒன்று இருக்கிறது

நம் வாயிலே நாக்கை மடக்கி அண்ணத்தை தொடும் இடத்திற்கு மேலே ஆக்கினை யிலிருந்து ஒரு கோடும் சகஸ்ரத்தின் கீழே ஒரு கோடும் சந்திக்கிற ஒரு இடம் . இந்த இடத்தையே கண்ணின் மணியை திறக்கிறேன் என தங்கஜோதிஞானசபையினர் உல்ட்டா விடுகின்றனர் . நம் நாக்குக்கு உச்சியிலே சூட்சுமமாக உள்ள அந்த நாக்கே அண்ணாக்கு . தண்ணீரை கடித்து குடிக்காமல் அண்ணாக்க குடி அண்ணாக்க குடி என்று பெரியவர்கள் சொல்வார்கள் ; அப்படி குடிக்கும்போது அந்த இடத்தில் உணர்ச்சி உண்டாகும் . அப்போது அதில் தேன் எதுவும் ஊரியிருந்தால் அது சேர்ந்து உள்ளே சென்றால் மேன்மையுன்டாகும்

இந்த இடத்தைப்பற்றி வள்ளலார் கொடி கட்டிக்கொண்டேன் என குறிப்பால் உணர்த்தியது . அவர் சன்மார்க்க கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரையில் :

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.


இந்த பரம ரகசியத்தை வெளிப்படையாக கொடி கட்டி கூறிவிட்டேன் ; எனவே இந்த நல்முயற்சியில் அநேகர் முயன்று தேரியும் விடுவார்கள் . வரப்போகிற சமரச சன்மார்க்க சத்தியம் விரைவில் வெளிப்படும் என்பது இந்த உரையின் நம்பிக்கை


ஏனெனில் ஆறாம் திருமுறையை அவர் பதிப்பிக்க ஆர்வம் காட்டவில்லை . ஐந்து திருமுறைகளும் அவர் மேற்பார்வையில் அச்சேற்றப்பட்டன ; ஆறாம் திருமுறையையும் சமரச வேதத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும் காலம் வரவில்லை ; அதற்கான சமரச வேதாந்தி வரும்போதே அது நிறைவடையும் என்றார் வள்ளலார் . அந்த நபர் வடலூருக்கு தெற்கே பிறந்து வடலூருக்கு வருவார் அழைத்து வாடி என்று அவரைப்பற்றி முன்னறிவித்தார்

வள்ளலார் சன்மார்க்க சத்திய சங்கம் என்று மட்டுமே பெயர் வைத்திருந்தால் இன்று அவரது சீடர்கள் அடிக்கும் வள்ளலார் சொம்புக்கு போதுமானதாக இருந்திருக்கும் ; ஆனால் அவர் சமரச சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்து விட்டு சமரச சத்தியம் இனிமேல் உச்சத்திற்கு வரும் என முன்னறிவித்தது ஏன் என்பதை வள்ளலாரின் சீடர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை . ஏனென்றால் ஒரு மார்க்கத்தை மட்டுமே பின்பற்றினால் அதற்கு பெயர் சமரசமில்லை . சமரசம் என்றாலே வேறு வேறாக தெரியும் மார்க்கங்களின் மத்தியில் சமரசம் என்று அர்த்தம் . ஆக அவரவர் மார்க்கத்தை மட்டுமே சொம்படிக்கிறவர்களால் சமரசம் வரவே வராது

இது மட்டுமே சத்தியம் மற்றதெல்லாம் பொய் என்றால் சமரசம் வரவே வராது . இதுவும் உண்மை மற்ற எல்லாவற்றிலும் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட சில உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன என்ற பார்வை வராமல் சமரசம் வரவே வராது

ஆனாலும் சொல்லாமல் சொல்லி செய்கையால் சமரச வேதத்தின் வித்துகளை வள்ளலார் விதைத்திருக்கிறார் . அது தீவிர சைவர்களாக இருந்த பலரை சிவனையும் கடந்த அருட்பெருஞ்சோதி என்ற அருப ஏக இறைவழிபாட்டுக்கு இட்டு சென்றதுதான் . அந்தக்காலகட்டத்தில் அதிதேவர் சிவனையும் விட பெரியவரான அல்லா என்று வெளிப்படையாக சொல்லாமல் உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டுக்கு சைவர்களை மாற்றியது சமரச வேதம் . சைவத்தில் இப்போதும் யுக முடிவு ஆண்டவர் வருகை என்ற வைணவ கோட்பாடுகள் ஏற்புடையதல்ல ; ஆனால் சைவர்களான தனது சீடர்களுக்கு ஆண்டவர் வரும் காலம் வரை நல்ல முயற்சியில் இருங்கள் என்று கல்கி  வருகையை ஏற்புடையதாக்கியதும் ஒரு சமரசமே .

ஆதியில் வள்ளலார் முருகனின் குருகுலத்தில் வளர்ந்தவர் ; கண்ணாடியின் முன்பு அமர்ந்து தவம் செய்யும்போது கண்ணாடியில் முருகனின் அருட்காட்சி கண்டவர் . அந்த சற்குரு முருகன் ஆறு முகமுடையவன் அதாவது சன்முகன் . சன் என்றால் ஆறு என்று பொருள் . சன்மார்க்கம் என்றால் ஆறு மார்க்கம் என்றும் பொருள் . இவ்வுலகிலுள்ள எல்லா மார்க்கங்களும் ஆறு பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம் . அவை எல்லாவற்றிற்கும் ஞான சற்குரு ஆறு குழந்தைகள் ஒரே குழந்தையாக மாறிய முருகன் . ஆறு குழந்தைகளும் வேறு வேறு குழந்தைகள் . ஆனால் ஒரே குழந்தையாக மாற்றப்பட்டன . அதுபோல இந்த ஆறு மார்க்கங்களையும் சமரசம் செய்யும் சத்திய சங்கமே வள்ளலாரின் சமரச சன்மார்க்க சங்கம் .

இப்பாடலிலும் முருகன் ஆறு வேறு வேறான முகங்களின் தேசியமான ஒரு முகமுடையவன் என்ற சமரசம் வேதம் உள்ளது . தேசியம் என்றால் பல வேறுபாடு உள்ள நாடுகளின் ஒன்றியம் என்று பொருள் . இந்திய தேசிய நீரோட்டத்தில் மொழி வாரி இனங்கள் பல ஒரு நாடாகவே  ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன . முருகனை ஏன் தேசிகன் என்கிறார்கள் என்றால் அவன் வெவ்வேறு போல இருக்கும் ஆறு மார்க்கங்களுக்கும் சற்குரு என்றால் அவனே சமரச வேதத்திற்கும் சற்குருவானவன் . மேலும் மனிதன் முழுமையடைவதற்கு யோக சாதனையும் வேண்டும் பக்திசாதனையும் வேண்டும் இரண்டின் உன்னதம் சங்கமிக்கும்போது மட்டுமே சித்தியடைய முடியும் என்ற உண்மையை விளம்பியவன் சமரச வேத முகத்தினன் முருகன் என்கிறார் அருணகிரியார்

முழுமையடையும் போது யோகத்தின் முதிர்வான அண்ணாக்கில் அமிர்தம் ஊறும் சித்தி நிலை கிட்டும் அதோடு கடவுளைப்பற்றிய அநாதியான ரகசியம் தெளியவைக்கப்படும்

அந்த மறைபொருளானது ; அநாதியிலே வெற்று வெளியாக தனித்தவனாக அருவ இறைவன் இருந்தார் . அது பூமியையும் அதனைத்தாங்கியுள்ள பால்வெளி மண்டலத்தை பெற்றது அல்லது படைத்தார் என்பதுதான் .

படைக்கப்பட்ட அனைத்தும் பால்வெளி மண்டலத்திற்குள் அடக்கம் . சகல நட்சத்திர மண்டலங்களும் பால்வெளிக்குள் மட்டுமே உள்ளன . அந்த பால்வெளிக்கு வெளியிலோ பல மடங்கு பெரிய அளவிடமுடியாத வெட்டவெளிதான் உள்ளது

அதிதேவர்கள் நால்வர் முதலான தேவர்கள் அசுரர்கள் நட்சத்திரங்கள் கிரகங்கள் மனிதர்கள் விலங்குகள் அனைத்தும் படைக்கப்பட்டவையே .பால்வெளிக்குள் மட்டுமே உள்ளனர் . இவையனைத்தையும் விட வெட்டவெளியோ பல மடங்கு பெரியது என்றால் அவை அனைத்தையும் அடக்கிய கடவுள் நாம் பார்த்த எவருமே அல்ல . அவர் அருவமானவர் அனாதியானவர் .தனித்தவர் . தனித்தவர் என்றால் பிரபஞ்சம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் . அவர் கடவுள் மட்டுமே . அவரையே அரபு மொழியில் அல்லா என்றும் யூதபாஷையில் எல்லா என்றும் சொல்கிறார்கள் .

நாம் அறிந்த அனைத்து தெய்வங்களையும் விட தனித்தவரான அந்த கடவுளை முருகன் சிவனுக்கும் தெளியவைத்தாராம் .

சிவன் ஓம் என்ற மந்திரத்தின் உட்பொருளை மறந்துவிட்டார் . அதை முருகன் சிவனின் காதில் ரகசியமாக ஓதினார் ; அதனால் அவர் தகப்பனுக்கே குருவானார் என்றார்கள் . ஆனால் கொடுமை என்னவென்றால் முருகன் சிவனுக்கு சொன்ன ஓம் என்பதின் பொருள் என்ன எனக்கேட்டால் அது பிரணவமந்திரம் அதை முருகனே சிவனின் காதில் ரகசியமாக ஓதிவிட்டார் என்பார்கள் . எங்களுக்கு தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் .

அந்த ரகசியம் சமரச வேதத்தால் மட்டுமே விளக்கப்பட வல்லது . சமரச வேதத்தின் உயிர் மூச்சுமானது .

சன்மார்க்கிகளால் புரிந்துகொள்ள முடியாதது
சமரச சன்மார்க்கிகளால் மட்டுமே புரிந்துகொள்ள கூடியது

ஓம் என்றால் ஓரிறைவனையே துதிக்கிறோம் ; ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் என்பதாகும் . பால்வெளியில் தேவர்களால் இம்மந்திரமே உச்சரிக்கப்பட்டு பிரணவ மந்திரமாக சுற்றி சுழன்று வருகிறது

இது பீஜ மந்திரம் என்றால் யார் மூலமாக துதிக்கிறோம் என்பதை அந்தந்த குருகுலத்தினர் சேர்த்துக்கொள்ளலாம் .

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக