புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை: இதெல்லாம் இதற்குத் தானா?
Page 1 of 1 •
இவாஞ்சலின் அதிகாலையில் பால் வாங்கக் கிளம்பிக் கொண்டிருந்தபோதுதான் கீரைக்காரம்மாளின் புருஷன் செத்துப் போன செய்தி கிடைத்தது.
கீரைக்காரம்மாளுக்கும் அவளின் குழந்தைகளுக்கும் இந்த மரணம் பெரிய இழப்பாக இருக்க முடியாது. அவர்களுக்கு நிஜத்தில் இது பெரும் விடுதலைதான்.
கீரைக்காரம்மாவுடன் இவாஞ்சலினுக்கு ஆரம்பத்தில் அதிகம் நெருக்கம் இல்லை. கீரைக்காரம்மாளின் பெண்ணால்தான் அந்த நெருக்கம் பின்னால் ஏற்பட்டது. ப்ளஸ் டூ முடித்தவர்கள் எல்லாம் உற்சாகமாக, கல்லூரிகளில் சேர்வதற்கான ஆயத்தங்களில் இருக்க, கீரைக்காரம்மாளின் பெண் மட்டும் இன்னும் எங்கோ வேலைக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்த இவாஞ்சலினின் மனசுக்கு வருத்தமாக இருந்தது.
அந்தப் பெண் ரொம்பவும் நன்றாகப் படிக்குமென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட பெண், கல்லூரிக்குப் போகாமல் ஏன் வேலைக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும்? ஒருவேளை படித்தது போதுமென்று நிறுத்தி விட்டார்களா? மனசுக்குள் உழலும் கேள்விகள் இவாஞ்சலினுக்கு மிகவும் கவலையளித்தன. கீரைக்காரம்மாளிடம் இதுபற்றி விசாரிக்கலாமென்றால், இப்போதெல்லாம் அவளைப் பார்க்கவே முடிவதில்லை. தண்ணீர்க் குழாயில் சந்தித்து கூட ரொம்ப நாளாகி விட்டது.
பிறகு ஒரு நாள் தண்ணீர் குழாய் அருகில் சந்தித்தப்போதுதான் இவாஞ்சலின் கீரைக்காரம்மாளிடம், ”அப்புறம் ரொம்ப நாளாவே உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்னு நெனச்சிருந்தேன்; நல்லாப் படிக்கிற உங்க பொண்னோட படிப்பு ஏன் பாதியிலேயே நிறுத்திட்டீங்க? ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சுருக்கலாமில்ல..!” என்றாள்.
கீரைக்காரம்மாளின் கண்களில் நீர் திரையிட்டது. ”அந்தக் கொடுமைய ஏன் தாயி கேட்குற..?” என்றபடி வாசல்படியில் கால்நீட்டி வசதியாக உட்கார்ந்து கொண்டு பேசத் தொடங்கினாள். ”என் பொண்ணு பத்தாவதுல நானூறுக்கு ஒரு மார்க் குறைவு; நம்ம தெருவே மூக்குல விரல் வச்சு சந்தோஷப் பட்டுச்சு; நான்தான் ப்ளஸ் டூ சேர்க்குறதுக்கு கவர்மென்ட் பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போனேன்; என்ன குரூப் வேணுமின்னு கேட்டாங்க. எங்களுக்குச் சொல்லத் தெரியல! உன்னை மாதிரி விஷயம் தெரிஞ்ச மகராசி யாரையாச்சும் கூட்டிட்டாவது போயிருக்கலாம்; அப்பத் தோணாமப் போயிடுச்சு.
ஏழை வீட்டுப் புள்ளைய்யா; நல்லதா நீங்களே ஏதாவது படிப்புல சேர்த்துக்குங்க; உங்களுக்குக் கோடி புண்ணியம் கெடைக்கும்’ன்னு வாத்தியார்கிட்டயே பொறுப்பக் கொடுத்தேன். அவங்கதான் ஏதோ பேசன் டிசைன்னு ஒரு புதுக்குரூப்புல சேர்த்துக்குறோம்; ப்ளஸ் டூ படிச்சு முடிச்சாலே வேலை கிடைச்சுடும்னு ஆசைகாட்டி சேர்த்துக் கிட்டாங்க; ஆனா படிச்சு முடிச்சப்புறம் தான் அந்தப் படிப்போட வண்டவாளம் தெரிஞ்சுச்சு, வேலையும் கிடைக்கல; ஒரு மண்ணும் கிடைக்கல.
அந்தப் படிப்புல படிக்குறதுக்கு ஆளே சேரலைன்னு அரசாங்கமே அந்தக் குரூப்ப மூடச் சொல்லிருச்சாம்; அப்படி மூடிட்டா எங்க அதைச் சொல்லிக் குடுக்குற வாத்தியாருங்களுக்கு வேலை இல்லாமப் போயிருமோன்னு பயந்துக்கிட்டு வாத்திமாருங்களெல்லாம் ஒண்ணாச் சேர்ந்துகிட்டு விவரந்தெரியாத என்னை மாதிரி ஏழை வீட்டுப் புள்ளைங்கள அமுக்கி அந்தக் குரூப்ல சேர்த்துக்கிட்டாங்களாம்; இந்த உண்மையெல்லாம் இப்பத்தான் தெரியுது, என்ன செய்றது?
அந்தப் படிப்புலயும் கண்ணும் கருத்துமாப் படிச்சு ஆயிரத்துச் சொச்சம் மார்க் வாங்கியிருந்தா என் பொண்ணு. சரி இன்னொரு மூணு வருஷம் வாய, வயிறக் கட்டி ஒரு டிகிரியாச்சும் படிக்க வச்சா அது பொழைப்ப அது பார்த்துக்கிடட்டும்னு காலேஜ் தேடுனா, அக்கம் பக்கத்துல எந்தக் காலேஜுலயும் அந்தப் படிப்பு தட்டுப் படல. பெரிய பெரிய பணக்காரங்க படிக்கிற தனியார் காலேஜுல தான் அது இருக்காம். அவ்வளவு பணத்துக்கு நாங்க எங்கே போறது? அதான் கார்மென்ட்ஸ் கம்பெனிக்கு வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கா… எல்லாம் விதிம்மா! வேறென்ன சொல்றது? சரி தாயி, ரொம்ப நேரமாயிருச்சு, நான் கௌம்புறேன்” என்றபடி எழுந்து போனாள்.
இவாஞ்சலினுக்கு ரொம்பவும் துக்கமாக இருந்தது. அன்றைக்கு இரவே அருள்தாஸிடம் இதுபற்றி சொன்னபோது அவனும் அந்தப் பள்ளியின் மீது கோபப்பட்டான். அப்புறம் ”காலேஜுல போயி அந்தப் படிப்பப் படிச்சாலும் இந்தப் பொண்ணால அதுல கரை சேர்றது கஷ்டம்! அதுக்கெல்லாம் கத்தை கத்தையா பணமிருந்தால் தான் முடியும். வேணுமின்னா பாலிடெக்னிக்குல சேர்ந்து படிக்கச் சொல்லலாம்…” என்றான். அவள் மலர்ந்து, ”ரெண்டாவது வருஷத்துல சேர்த்துக்குவாங்களா..?” என்றாள்.
”அது சாத்தியமில்லப்பா… ப்ளஸ் டூ ல மேத்ஸ், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி படிச்சிருந்தாத்தான் இரண்டாவது வருஷத்துல சேர முடியும். இந்தப் பொண்ண எஸ்.எஸ்.எல்.சி. மார்க்க வச்சு முதல் வருஷத்துல தான் சேர்த்து விடணும்…” என்றான். ”அப்ப ரெண்டு வருஷப் ப்ளஸ் டூ படிப்பு பாழ் தானா! சரி நான் நாளைக்கு அவங்க கிட்டப் பேசிப் பார்க்குறேன்…” என்றாள்.
அடுத்த நாள் கீரைக்காரம்மாளை அழைத்து இது சம்பந்தமாகப் பேசிய போது, ”எனக்கென்னம்மா புரியுது இதெல்லாம்! நான் என் பொண்ணையே கூட்டிட்டு வாறேன்; அவள் கிட்டயே பேசு…” என்றபடி உடனே ஓடிப்போய் தன் பெண்ணை அழைத்து வந்தாள்.
”உன் பேரென்னம்மா..?” என்றாள் இவாஞ்சலின் அவளின் தலையை வாஞ்சையாய் வருடியபடி. இத்தனை நாளில் இந்தப் பெண்ணின் பேரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கவில்லையே என்று மனசுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள் அவள்.
”சுகந்தி ஆன்ட்டி…” என்று அவள் சொல்லவும், ”அழகான பேரா இருக்கே, யாரு வச்சது?” என்றாள் இவாஞ்சலின். ”அவங்க அப்பாரு வச்ச பேரு தான்; நல்ல ரசனையான மனுஷன் தான். இப்பத்தான் எதுக்கும் பிரயோசனமில்லாமப் போயிருச்சு…” என்றாள் கீரைக்காரம்மாள்.
”பாலிடெக்னிக்குல சேர்ந்து டிப்ளமோ படிக்குறியா சுகந்தி?” என்று கேட்டாள் இவாஞ்சலின். அவள் கொஞ்சம் கூட யோசிக்காமல் சந்தோஷம் பொங்க ”சரி ஆன்ட்டி…” என்று தலையை ஆட்டினாள் வேகமாக.
அடுத்து வந்த நாட்களில் கீரைக்காரம்மாளும் இவாஞ்சலினும் பாலிடெக்னிக் பாலி டெக்னிக்காக ஏறி இறங்கி விசாரித்தார்கள்.
இருவரும் சில நாட்கள் சில பொழுதுகளாவது ஒன்றாகத் திரிய நேர்ந்ததில் இவாஞ்சலின் கீரைக்காரம்மாளின் வாழ்க்கை பற்றிய நிறைய விபரங்களை விசாரித்து அறிந்து கொண்டாள்.
”எங்க ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் மதுரை மேலூர் பக்கத்துல ஒரு கிராமம். சுகந்தி அப்பா அப்பல்லாம் நல்லா நையாண்டிமேளம் வாசிக்கும். கல்யாணம், கருமாதி, ஊர்த் திருவிழான்னு அதுக்குத் தகுந்தபடி அபாரமா வாசிக்கும். அப்ப அதோட கழுத்தசைவையும் விரலோட நாட்டியத்தையும் பார்த்துப் பார்த்து நான் சொக்கிப் போவேன். ரொம்பத் தெறமையான மனுஷன்ம்மா… நான்தான் மொதல்ல அதுட்டப் போயி, ‘எனக்கு உன்மேல ரொம்ப இஷ்டம்; என்னையும் உன்கூடவே கூட்டிட்டுப் போயிரு; உன் மேள வாசிப்பக் கேட்டுக்கிட்டே இருக்கணும் போலருக்கு’ன்னு சொன்னேன். அது முதல்ல ஒண்ணுஞ் சொல்லாம சிரிச்சிட்டுப் போயிருச்சு…
நான் திரும்பத் திரும்ப அதுகிட்டப் போயி இதையே சொல்லவும், சரி வான்னு கூட்டிட்டுப் போயி ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டிருச்சு. நாங்க ஒரே ஜாதிதான். எங்களோடது ரொம்ப வறுமையான குடும்பம். அன்னாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம். இவரோடது கொஞ்சம் வசதியானது. அதனால ரெண்டு குடும்பத்திலயும் எங்கள ஏத்துக்கல. வெட்டுவோம், குத்துவோம்னு மெரட்டுனாங்க. உங்களால ஆனதப் பார்த்துக்கங்கன்னுட்டு இந்தப் பட்டணத்துக்கு ஓடி வந்துட்டோம். ஏனோ பட்டணத்துக்கு வந்ததும் மேளம் வாசிக்கிறது விட்டுருச்சு. கேட்டா உண்மையான கலைஞனுக்கு இங்க மரியாதை இல்லைன்னு சொல்லும். அதுக்குப் பதிலா சென்ட்ரிங் வேலைக்குப் போக ஆரம்பிச்சது. நல்ல வருமானம் வந்துச்சு. சொந்தமா கான்ட்ராக்ட் கூட எடுத்துப் பண்ணுச்சு.
ஆரம்பத்துல எல்லாம் என்கிட்ட ரொம்ப ஆசையா பிரியமாத்தான் இருந்துச்சு. காதலிக்கும் போது இருக்குற கரிசனமான ஆம்பளைங்க கல்யாணத்துக்கப்புறம் எப்படி காணாமப் போறாங்கன்னே தெரியல. இதுவும் அப்படியே மாறிப் போயிருச்சு. கூடவே குடிப்பழக்கம் வேற” என்றாள் கசப்பு பொங்கும் குரலில்.
பெரும்பாலான பாலிடெக்னிக்குகளில் ப்ளஸ் டூ வில் சம்பந்தமில்லாத குரூப்பைப் படித்த பெண்ணைச் சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டினார்கள். ஓரிரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளோ எஸ்.எஸ்.எல்.சி.யில் குறைந்த பட்சம் நானூறுக்கும் அதிகமான மார்க் எடுத்திருந்தால் தான் இடம் கிடைக்குமென்று சொல்லி விண்ணப்பப்பாரம் தருவதற்கே மறுத்து விட்டார்கள். சுயநிதி பாலிடெக்னிக்குகளில் டொனேஷன் அது இதென்று கட்டணம் எக்குத் தப்பாய்க் கேட்டார்கள். கடைசியில் ஒரு முஸ்லீம் மைனாரிட்டி பாலிடெக்னிக்கில் விசாரித்தபோது ஆறுதலாயும் நம்பிக்கையாயும் பேசினார்கள். ஆனால் அங்கு சேர்வதற்கும் வருஷத்திற்கு குறைந்தது இருபதாயிரம் ரூபாய்த் தேவைப்படுமென்று தெரிந்தது.
”இதெல்லாம் கதைக்கு ஆகிற காரியமில்லை தாயி. அவளுக்கு விதிச்சபடி ஆகட்டும்…” என்று சொல்லி கீரைக்காரம்மாள் விடை பெற்றுக் கொண்டாள்.
இவாஞ்சலினுக்கு மனசு ஆறவே இல்லை. எந்த வகையிலாவது அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டுமென்று
மனசு கிடந்து துடித்து. ”இப்படி பாலிடெக்னிக் படிக்கிற ஆசைய அந்தப் பொண்ணுக்கு ஊட்டிட்டு, அது இப்ப முடியாமப் போயிடும் போல இருக்குங்க…” அருள்தாஸிடம் சொல்லிப் புலம்பினாள். ”நாம வேணுமின்னா பணம் கட்டி அந்தப் பொண்ண படிக்க வைக்கலாம்ப்பா…” என்றான் அவன். ”நெசமாவா… பணம் கட்டுவீங்களா?” பரவசத்தில் அவள் குரல் பதறியது.
கீரைக்காரம்மாளையும் சுகந்தியையும் அழைத்து விவரம் சொல்லவும் அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. இரண்டு பேர்களின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர். கீரைக் கா ரம் மாள் தடா லென்று இவாஞ்சலினின் கால்களில் விழுந்து விட்டாள். இவாஞ்சலின் பதறிப்போய் ”அய்யோ என்னங்க இதெல்லாம்…” என்று அவளை எழுப்பி சோபாவில் உட்கார வைப்பதற்குள் போதும் போதென்றாகி விட்டது. அப்புறமும் பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தாள் அவள்.
காரியங்கள் சரசரவென்று நடந்தேறின. அடுத்த நாளே இருவரும் போய் விண்ணப்ப படிவம் வாங்கி வந்தார்கள். அன்றைக்கே மூவரும் உட்கார்ந்து அதை நிரப்பி, ஒரு நல்ல நாளில் போய் பணம் கட்டி பாலிடெக்னிக்கில் சேர்த்து விட்டு வந்தாள் இவாஞ்சலின். இரண்டு நாள் சென்றிருக்கும். கீரைக்காரம்மாளின் புருஷன் இவாஞ்சலினின் வீட்டிற்கு வெளியே வந்து நின்று கொண்டு சத்தம்போடத் தொடங்கினார். அப்போது அவர் நிறைந்த போதையிலிருந்தார்.
”என் பொண்ணுக்கு நீ யாருடா பணம் கட்டிப் படிக்க வைக்குறதுக்கு! அப்படிச் செஞ்சு என் பொண்டாட்டிய வளைச்சுக்கலாம்னு பார்க்குறியா? வெளிய வாடா…” என்று அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சிக்கத் தொடங்கினார்.
அருள்தாஸ் வெளியே வந்து சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார். அவர் அடங்குவதாக இல்லை. அப்புறம் போலீஸýக்குப் போன் பண்ணி, அவர்கள் வந்து ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் நாலு சாத்து சாத்தி அனுப்பவும்தான் அமைதியானார்.
கீரைக்காரம்மாள் இவாஞ்சலின் வீட்டிற்கு வந்து அழுதாள். ”அந்த மனுஷன் பேசுனத மனசுல வச்சுக்காதீங்கய்யா” என்றாள்.
”பயப்படாதீங்க… யாருக்காகவும் எதுக்காகவும் சுகந்தியப் படிக்க வைக்கிறதுலருந்து நாங்க பின் வாங்க மாட்டோம்” என்று ஆறுதலாகப் பேசி அனுப்பி வைத்தார்கள். சுமார் மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் கடந்தது. பாலிடெக்னிக்கில் சுகந்தி நன்றாகவே படித்தாள். அவ்வப்போது இவாஞ்சலினிடம் வந்து பரீட்சையில் எடுத்த மதிப்பெண்களையெல்லாம் காட்டிப் போனாள்.
திடீரென்று ஒருநாள் கீரைக்காரம்மாளின் வீட்டிலிருந்து குய்யோ முறையோ என்று அலறல் கேட்டது. இவாஞ்சலின் ஓடிப்போய் பார்த்தாள். கீரைக்காரம்மாள் மூலையில் உட்கார்ந்திருந்தாள். அவளின் கால்களைக் கட்டிக் கொண்டு பிள்ளைகள் மூன்றும் கதறிக் கொண்டிருந்தன. விசாரித்தபோது தான் விஷயத்தின் விபரீதம் புரிந்தது. கீரைக்காரம்மாள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அதற்குச் சாட்சியாக சீலிங்ஃபேனில் கீரைக்காரம்மாளின் சேலை படபடத்துக் கொண்டிருந்தது.
முதலில் எதுவும் சொல்ல மறுத்த கீரைக்காரம்மாள் பிறகு தயங்கியபடியே சொன்னாள். ”சொல்லித்தான் தீரணும்; உன்கிட்ட சொல்றதுல தப்பில்ல தாயி… என்கிட்ட வந்து ‘வாடி படுத்துக்கலாம்’னு கூப்பிட்டான். வீட்டுல இருக்கிறதே ஒரே ஒரு ரூம்தான்; வயசுக்கு வந்த பொட்டப்புள்ளையும் மத்த புள்ளைங்களும் அங்க உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்காங்க; என்ன வக்கிரமான மனுஷன்னு பார்த்தியா தாயி? நான் முறைச்சுப் பார்த்துட்டு பேசாம இருந்தேன். உடனே அந்த ஆளு என்ன செய்தான் தெரியுமா? அவனோட உடைகள் மொத்தத்தையும் அவுத்துட்டு அம்மணமா நிற்குறான் தாயி…” என்றபடி முகத்தை கைகளால் மூடியபடி பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள். ”புள்ளைங்கெல்லாம் வெளியே ஓடிருச்சுங்க; இந்த வெறிபிடிச்ச மனுஷனோட எப்படி மிச்ச காலத்தையும் கழிக்குறதுன்ற வேதனையிலதான் செத்துத் தொலையிறதுன்னு முடிவுக்குப் போயிட்டேன். இனிமே எது நடந்தாலும் அப்படிப் பண்ண மாட்டேன். மன்னிச்சுக்கோ தாயி…” என்றாள்.
இது நடந்து பத்து நாட்களுக்குள் கீரைக்காரம்மாளின் புருஷனின் மரணம் நேர்ந்துவிட்டது. அவனின் கடைசி நேரக் கிரியைகள் எல்லாம் முடிந்து மரணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலைந்து போன பின்பும் அழுது கொண்டிருந்த கீரைக்காரம்மாளிடம், இவாஞ்சலின் ஆறுதலாய்ச் சொன்னாள்: ”நடந்தது நடந்து முடிஞ்சுருச்சு; அத மறந்துட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களைக் கவனிங்க…”
”எப்படித் தாயி… என்னால தாங்கவே முடியலயே! ஆசை, ஆசையா காதலிச்சு, சொந்த பந்தங்கள ஒதுக்கி கல்யாணம் பண்ணி, ஊருவிட்டு ஊரு ஓடி வந்து, கடைசியில நானே கொல்ல வேண்டியதும் ஆயிடுச்சே!”
இவாஞ்சலினுக்குச் சிலீரென்றிருந்தது. ”என்ன சொல்றீங்க? அவரு விஷச் சாராயத்தக் குடிச்சு செத்துப் போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?”
”இல்ல தாயி, அந்த மனுஷன் சாராயம் குடிச்சு சாகல. நாலு நாளைக்கு முன்னாடி ஒரு நடு வயசுத் தாண்டிய பாதிக் கிழவன வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து அவனுக்கு சுகந்திய கல்யாணம் கட்டி வைப்போம்ன்னார். நான் சண்டைக்குப் போனேன்… அதுக்கு அது என்ன சொல்லிச்சு தெரியுமா தாயி?”
”அவ படிச்சு ஒண்ணும் கிழிக்க வேணாம்; அதிகம் படிக்காத நீயே, என்னை மயக்கி வளைச்சு பட்டணத்துக்குக் கூட்டிட்டு வந்து என் வாழ்க்கையைப் பாழாக்கிட்ட; இப்ப என்னை ஒரு துரும்புக்கும் மதிக்கிறதில்ல! இவ படிச்சு முடிச்சா உன்னை மாதிரியே தட்டழிஞ்சு, எவனையாவது இழுத்துக்கிட்டு வந்து நிப்பா! அதனால வர்ற முகூர்த்தத்துலே கல்யாணம் பண்ணியே தீர்வேன்னு ஒத்தக் கால்ல நின்னுச்சுமா..
அது பேசுனத கேட்டதும் இந்த மனுஷனப் போயி காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டமேன்னு ச்சீய்ன்னு ஆயிருச்சு… என் மேலயே எனக்கு ஆத்தாமையா வந்துச்சு; இனியும் இந்தப் பூமியில உயிர் தரிச்சு இருக்கிறதுல ஒரு அர்த்தமும் இல்லைன்னு பிள்ளைகளோட சேர்ந்து செத்துப் போகலாம்னு விஷம் வாங்கிட்டு வந்தேன்; கடைசி நேரத்துல மனசு மாறி ‘நாம் ஏன் சாகணும்? அழிச்சாட்டியம் பண்ற அந்த மனுஷன்தான் சாகணும்’னுட்டு வீட்டுல அது வாங்கி வச்சுருந்த சாராயத்துல விஷத்தக் கலந்து வச்சுட்டேன் தாயி..” என்று மீண்டும் அழத் தொடங்கினாள்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சில நேரங்களில் சில மனிதர்கள்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|