புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
9 Posts - 82%
mruthun
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
1 Post - 9%
heezulia
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
2 Posts - 1%
mruthun
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_m10குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2015 2:51 am

குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? 11921696_926220144117750_8313665874576301846_n

குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.

சுமார் 10 லட்சம் பேரை அகமதாபாதில் ஒரே நாளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வைத்ததன் பின்னணியில் இருப்பவர் ஹிர்திக் படேல் ஓர் இளைஞர்.

யார் இந்த ஹர்திக் படேல்? ஏன் போராட்டம்?

இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஹர்திக் படேலைப் பற்றி அறிந்திருந்தோர் மிகவும் குறைவே. அகமதாபாத்தில் விரம்கம் என்ற ஊரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ஹர்திக் படேல். இவருக்கு வயது 22 என்றால் ஆச்சரியமாகக் கூட இருக்கும். இவ்வளவு இளம் வயதில் ஒரு சமூகத்தையே ஒன்று திரட்டும் அளவுக்கு அவர் பிரபலமாகியுள்ளார்.

படேல் சமூகத்தினர் அரசியல், பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த ஒரு சமூகமாகும். இவரது எழுச்சி, படேல் சமூகத் தலைவர்கள் நிரம்பிய பாஜக-வுக்கே தற்போது பெரிய தலைவலியாக எழுந்துள்ளது. குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.சி.பால்டு ஆகியோர் படேல் வகுப்பைச் சேர்ந்தவர்களே.

ஜூலை மாத தொடக்கத்தில் படிதார் அனாமத் ஆந்தோலம் சமிதி என்ற அமைப்பை உருவாக்கினார். ஜூலை 6-ம் தேதி விஸ்நகர் பகுதியில் மிகப்பெரிய பேரணி ஒன்றை ஹர்திக் படேல் நடத்திக் காட்டினார். இந்தப் பேரணிக்குப் பிறகே நிறைய படேல் சமூக இளம்படையினர் இவருக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர்.

உள்ளாட்சி தேர்தல்கள் சமயத்தில் ஹர்திக் படேல் தலைமையில் படேல் சமூகத்தினர் மாபெரும் எழுச்சி கண்டது, ஆளும் கட்சிக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.

இது குறித்து அரசுத்துறை உயரதிகாரி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) இதழிடம் கூறும்போது, “உள்ளாட்சி தேர்தலுக்கு 2 மாதங்கள் முன்னதாக ஹர்திக் தனது போராட்டங்களை தொடங்கினார், இவருக்கு ஆதரவாக பெருமளவு மக்கள் திரண்டதில் மாநில அரசுகளும், கட்சிகளும் ஆடிப்போயுள்ளன” என்றார்.

22 வயது படேலுடன் இணைந்த பெரும் இளைஞர் படை, மாநிலத்தில் நிலவும் அதிகப்படியான கல்விச் செலவுகள், குறைந்த அளவிலான அரசுப் பணிகள், மற்றும் பிற காரணங்களினால் கடும் கோபமடைந்து எழுச்சி கண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை மூலம் படேல் சமூகத்தினரை ஒன்று திரட்டி திடுக்கிட வைத்தார் ஹர்திக் படேல்.

“எங்கள் சமூகத்தின் குறைகளை தீர்க்கும் தலைவர்கள் இல்லை என்பதை ஹர்திக் உணர்ந்தார். தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் அரசியல் கட்சிகளுடன் பிணைந்துள்ளனர். அவர்களால் சமூக விவகாரங்களை எழுப்ப முடியவில்லை” என்று வருண் படேல் என்ற உறுப்பினர் கூறுகிறார்.

கிராமத்திலிருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சூரியகாந்த் படேல் என்பவர் கூறும்போது, "படேல் சமூகத்தினர் கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தனர், ஆனால் ஒருவரும் போராட்டத்துக்கு முயற்சி எடுக்கவில்லை, தற்போது ஹர்திக் படேல் எடுத்துள்ளார்" என்றார்.

இந்தப் போராட்டங்கள் குறித்து பெயர் கூற விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, “மாநிலத்தின் தலைமைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது, காரணம் மாநிலத் தலைமை படேல் சமூகத்தினரின் ஆதரவை உத்தரவாதமாக எடுத்துக் கொண்டுவிட்டனர், இதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற வணிக நலன்களை பிரதானமாகக் கொண்டுள்ளனர்” என்றார்.

"நான் ஹர்திக்கை சந்தித்தது இல்லை, அதனால் அவரை எனக்கு தெரியாது. ஆனால் நான் சூரத்திலிருந்து இங்கு அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே வந்துள்ளேன். ஏனெனில் அவர் நல்லதுக்காக போராடுகிறார்" என்று சூரத்தில் டெக்ஸ்டைல் வர்த்தகம் செய்யும் மனோஜ் படேல் என்பவர் கூறினார்.

எளிமையான தோற்றத்துடன், அனைவரும் அணுகக் கூடிய விதத்தில் பழகுபவர் ஹர்திக், லட்சிய தாகமும் ஆற்றலும் உள்ளவர் கடந்த 50 நாட்களாக அவர் செல்லாத ஊர்களும் கிராமங்களும் இல்லையென்றே கூறிவிடலாம் என்று படேல் சமூகத்தைச் சேர்ந்த மற்றொருவர் தெரிவித்தார்.

செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் ஹர்திக் பேசும்போது, “மாநில அரசு நம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை எனவே ஜந்தர் மந்தருக்கு போராட்டத்தை நகர்த்திச் சென்று நமது கோரிக்கைகளை முன்வைப்போம்” என்றார்.

அவர் அந்த கூட்டத்தில் மேலும் தெரிவிக்கும் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிஹாரின் நிதிஷ் குமார், ஆகியோரும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. நாட்டின் 8 மாநிலங்களில் படேல் சமூகத்தினரின் எண்ணிக்கை 27 கோடி என்றார். அதாவது தான் நினைத்தால் போராட்டத்தை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று எச்சரிக்கும் விதமாக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

இங்கு நாம் இன்னொன்றையும் நினைவில் கொள்வது நலம், 1981 மற்றும் 1985-ம் ஆண்டுகளின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்பாட்டங்களை பெரிய அளவில் நடத்தியவர்களும் இதே படேல் சமூகத்தினரே. தலித்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடை இவர்கள் கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர்.

பொதுவாக இளம் வயதிலேயே வர்த்தகத் துறைக்கு வந்து விடும் படேல் சமூகத்தினர் தற்போது பொறியியல், மருத்துவப் படிப்புகளிலும் தங்கள் சமூகத்தின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று உணரத் தொடங்கியுள்ளனர். மேலும், அவர்களது பாரம்பரிய வர்த்தகமும் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

உதாரணமாக படேல் சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வைரக்கற்கள் தொழிற்துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் சுமார் 150 வைரக்கற்கள் யூனிட்கள் மூடப்பட்டன, சுமார் 10,000 பேர் வேலையிழந்தனர்.

குஜராத் அரசியலில் இந்த ஹர்திக் படேலின் இயக்கம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பலதரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.



குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2015 2:57 am

குஜராத்தில் படேல் சமூகத்தினர் போராட்டத்தில் வன்முறை: பலி 9 ஆக அதிகரிப்பு; 50 பஸ்களுக்கு தீ வைப்பு

படேல் சமூகத்தினர் போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, சூரத் நகரில் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. | படம்: விஜய் சோன்ஜி
படேல் சமூகத்தினர் போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, சூரத் நகரில் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. | படம்: விஜய் சோன்ஜி
இட ஒதுக்கீடு கோரி குஜராத்தில் படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 லட்சத்துக்கும் மேற்பட்ட படேல் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று (புதன்கிழமை) நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸார் தடியடி நடத்தி கும்பலை கலைக்க முயற்சித்தனர். மேலும் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. கடைகள், அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொது சொத்துக்கள் சேதம் அடைந்தன.

இதற்கிடையில் செவ்வாய்க் கிழமை நடந்த வன்முறையில் 6 பேர் பலியாயினர். இதில், 5 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த கலவரத்தில் மேலும் 3 பேர் இறந்தனர். கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவம், கலவர தடுப்பு படையுடன் கூடுதலாக மாநில ரிசர்வ் போலீஸ் படையும் குவிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலை முடக்கம்:

குஜராத் மாநிலம் முழுவதும் 2-வது நாளாக இன்றும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்கவில்லை. மொபைல் இணையசேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் ரயில் தண்டவாளத்தை தகர்த்து சேதப்படுத்தியதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

ஹர்திக் படேல் உறுதி

இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் படேல் கூறும்போது, ‘‘போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டதாக போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அரசியல் பின்புலத்தால் எங்கள் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் முயற்சிக்கின்றனர். வரும் காலங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’’ என்றார்.

'வன்முறையால் நல்லது நடக்காது'

குஜராத் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று தொலைகாட்சியில் அவர் பேசியதாவது:

"எல்லா பிரச்சினைகளுக்கும் விரிவாக ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும். குஜராத்தில் உள்ள எல்லா சகோதர, சகோதரிகளும் அமைதி காக்க வேண்டும். எல்லா மக்களின் நலனுக்காகவும் செயல்பட வேண்டும் என்றுதான் அரசு முனைப்புடன் உள்ளது. பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் வாழ்ந்த மண் குஜராத். வன்முறை யாருக்கும் நல்லது செய்துவிடாது. மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு மாநிலத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.

24 மணி நேர கண்காணிப்பில் சமூக வலைதளங்கள்

ஃபேஸ்புக், ட்விட்டர், மொபைல் ஆப் போன்ற சமூக வலைதளங்களை வன்முறையாளர்கள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க 24 மணி நேரமும் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை செய்லபாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

ஹர்திக் படேலின் பேரணிக்கு, சமூக வலைதளங்கள் மூலமே பெரிய அளவில் மக்கள் திரட்டப்பட்டதாக குஜராத அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களை வெளியுறவு அமைச்சகம் கூர்ந்து கண்காணிக்கும் மாதிரியை பின்பற்றி 24 மணி நேரமும் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பது அவசியம் என்பதால் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் சரியான தகவல்களை தெரியப்படுத்தும் வகையிலும் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2015 2:58 am

எங்கள் மீதான வன்முறை நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள மாட்டோம்: ஹர்திக் படேல் எச்சரிக்கை

குஜராத்தில் படேல் சமூகத்தினர் பந்த் நடத்தியதில் நிகழ்ந்த வன்முறைக்கு 9 பேர் பலியாகியுள்ளனர், பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அளிக்கவில்லையெனில், பால் மற்றும் காய்கறிகள் கிடைக்க விடாமல் செய்வோம் என்று ஹர்திக் படேல் எச்சரித்துள்ளார்.

படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தால் குஜராத்தின் வன்முறை வெடித்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தி வரும் ஹர்திக் படேல், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, “பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அளிக்கவில்லையெனில், விவசாயிகளை அழைத்து பால் மற்றும் காய்கறிகளை சப்ளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துவோம்.

குழந்தைகளும் பெண்களும் காயமடைந்துள்ளனர். இதற்குக் காரணமான போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் அவர்கள் பதில் அளித்தேயாக வேண்டும். எங்களது அமைதிப் போராட்டம் தொடரும், ஆனால் வன்முறையை எங்கள் மீது பிரயோகித்தால் நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்றார் ஹர்திக் படேல்.

முன்னதாக, குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது முற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்க வேண்டும் என்று படேல் சமூகத்தினர் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) குஜராத்தில் திடீரென 10 லட்சத்துக்கும் மேற்பட்ட படேல் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று (புதன்கிழமை) நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸார் தடியடி நடத்தி கும்பலை கலைக்க முயற்சித்தனர். மேலும் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஹர்திக் படேல் (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்தது. 50-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன. கடைகள், அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் ஏராளமான பொது சொத்துக்கள் சேதம் அடைந்தன.

இதற்கிடையில் செவ்வாய்க் கிழமை நடந்த வன்முறையில் 6 பேர் பலியாயினர். இதில், 5 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு நடந்த கலவரத்தில் மேலும் 3 பேர் இறந்தனர். கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.



குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 7:53 am

பதற்றதை தணிக்க கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்
-
குஜராத்தைக் கலங்கடிக்கும் ஹர்திக் படேல் யார்? 6hJ3Bk3WS52uBvy7pdUF+gujarat01

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக