புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் திருச்செங்கோடும்  Poll_c10நானும் திருச்செங்கோடும்  Poll_m10நானும் திருச்செங்கோடும்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நானும் திருச்செங்கோடும்  Poll_c10நானும் திருச்செங்கோடும்  Poll_m10நானும் திருச்செங்கோடும்  Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் திருச்செங்கோடும்  Poll_c10நானும் திருச்செங்கோடும்  Poll_m10நானும் திருச்செங்கோடும்  Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நானும் திருச்செங்கோடும்  Poll_c10நானும் திருச்செங்கோடும்  Poll_m10நானும் திருச்செங்கோடும்  Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் திருச்செங்கோடும்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Aug 23, 2015 12:52 am

நானும் திருச்செங்கோடும்  81056365

2011 மே மாதத்தில் என் மூத்த பெண் 1௦ ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதால் அவளை திருச்செங்கோட்டில் சேர்த்து விட்டால் ஒருவேளை அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்றுவிட வாய்ப்பு உண்டாகும் என்று பலர் நம்பி சில லட்சங்களை இழப்பதைப்போலவே நானும் கருதினேன் .

அதற்காக என் மைத்துனரும் மகளும் நானும் மாருதி காரில் திருசெங்கோடு சென்று இடமும் பெற்று களைப்பு காரணமாக உடனே திரும்பி விட்டோம் . இருந்தாலும் தெய்வத்திருமலை என்று குறிக்கப்படுவதை அறிந்தேன் .

எங்களுக்கு நிறைய நாளாக பிள்ளையில்லாமல் இருந்து பிறந்தவளாததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதே இல்லை . தாத்தா ; அவ்வை ; பெரியம்மா பெரியப்பா என்று அவளை கவனிப்பதற்கென்றே பலர் அவதாரமெடுத்து வந்ததுபோல செல்லமும் வேறு

இருந்தாலும் தாய் மாமனோடு படிப்பு பள்ளிகள் பற்றி உற்சாகமாக (தாய் மாமன் இயல்பாகவே ஆத்மபலம் கொடுப்பவர்) கதைத்துக்கொண்டு வந்து அங்கு வரிசையில் வந்து நிற்கும் வண்டிகளையும் இடம் கிடைக்காமல் பிள்ளைகளும் பெற்றோர்களும் அல்லாடுவதையும் கண்டு அவள் மிகுந்த உற்சாகத்தொடேயே அப்பள்ளியில் விடுதியில் தங்கி படிக்க ஆயத்தமானாள் . ஆனாலும் எங்கிருந்தேனும் பிரிவு துயரம் அவளை ஆட்கொண்டு அவள் பின்னோக்கவும் வாய்ப்பு உண்டு என்பது எனது அச்சமாக இருந்தது

அவளை விடுதியில் விட அவ்வா அம்மா பெரியம்மா அத்தை தங்கை என ஒரு பெரிய கூட்டமே கிழம்பி விட ஒரு பெரிய வண்டி வாடகைக்கு அமர்த்தி புறப்பட்டோம்

கரூரை அடுத்த கொடுமுடி சென்று தீர்த்தமாடி சிவனை வழிபட்டு விடுதியில் கொண்டு விட்டோம் . இதுவரை எல்லாம் உற்சாகமாகவே போய்க்கொண்டிருந்தது . நல்ல அறிவுரைகளும் அபிலாசைகளையும் அவள் மீது இதுவரை ஏற்றி பிரிகிற நேரம் அவ்வா அழ மகள் அழ எல்லாமே சோகத்தில் ஆழ்ந்து விட்டனர் . எனக்கும் என் மனைவிக்கும் ஏழரை சனி நடப்பு . வேலை செய்கிறது தோன்றியது

அப்படியே கணத்த மனத்தோடு புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என மலைக்கோவிலுக்கு வண்டியை விடச்சொன்னேன் . மன இருக்கத்தொடேயே அனைவரும் வந்தனர் . மலைப்பாதை ரெம்ப இடுக்கமாக இருந்தது . எங்கிருந்தோ மேகம் வந்து கவிழ்ந்து இருளாகி விட்டது . நானும் ஓட்டுனர் தவிர அனைவரும் பெண்கள் .நெருக்கடியாக உணர்ந்தேன் ஆளரவமும் இல்லை கடவுளே முருகனின் அருள் கிடைக்க செய்வீராக  பிரார்த்தனை மட்டுமே

வண்டி உச்சிக்கு சென்றதும் விளக்கு வெளிச்சத்தில் முருகனின் வேலில் ரத்தினங்கள் மின்னியது ஆசுவாசமாக இருந்தது என் மனதில் உண்டான விடுதலை உணர்வுக்கு அளவேயில்லை

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான் – அருணகிரியார் வார்த்தைகளின் ஆழம் எனக்கும் பட்டது

கோவிலை சுற்றிப்பார்த்தால் அங்கு செங்கோடன் என்ற ஆதிசேஷனுக்கு முருகனுக்கு இணையான மகிமை இருந்தது ஸ்தல வரலாறில் மலை அடிவாரத்தில் கார்க்கோடன் இருப்பதும் இம்மலை மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு பிடித்த இடம் என்பதும் தெரிந்தது மன நிறைவோடு வழிபாட்டு புறப்பட்டோம் .மலை அடிவாரம் வந்ததும் நல்ல மழை வர்சித்தது

இரண்டு வாரம் கழித்து மகளை பார்க்கபோனால் அவள் பெட்டிபடுக்கைகளை கட்டி கிழம்பி வாசலிலேயே காத்திருந்தாள் ; எவ்வளவோ சொல்லியும் எடுபடவில்லை . என் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு தாரைதாரையாக கண்ணீர் . சரி என்று கணக்கை முடித்துக்கொண்டு கிழம்பினோம் . மீண்டும் கணத்த மனது . நாமொன்று நினைக்கிறோம் தெய்வமொன்று நினைக்கிறது நடுத்தர வர்க்கமான எனக்கு இம்முயற்சி தோல்வி என்பது ஏறக்குறைய நாற்பதாயிரம் ரூபாய் போச்சு என்பதும் போனஸ் நட்டம்

இம்மலையை சுற்றிலும் எங்கும் பசுமை என்பதே இல்லை கடும் வறட்சி .. ஆனாலும் இப்போதும் மழை வர்சித்தது . குடும்பத்தாரை உணவு அருந்த விட்டு கிடைத்த நேரத்தில் மலை அடிவாரம் சென்றேன் கோட்டையை கடந்ததும் மலையில் 6௦ அடி கார்க்கோடனை செதுக்கியிருந்ததை கண்டேன் .

அவரே கணபதி என்பது புரிந்தது .

எனக்கு படிப்பில ஆர்வமிருந்தது . ஆனால் வீட்டில் வறுமை இருந்தது ஆகவே பாலிடெக்னிக்கில் படித்து அளவான வேலையில் அமர்ந்துகொண்டேன் . மதுரையில் கோடீஸ்வரன் என்பவர் அதிக காசு கேட்காமல் வைத்தியம் பார்ப்பார் . கூட்டம் அலை மோதும் . திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஐந்து ரூபாய் டாக்டர் ஒருவரிடம் கூட்டம் அலைமோதுவதை பார்த்திருக்கிறேன் . ஒருவேளை நான் மருத்துவராகியிருந்தால் இப்படி சமூகப்பணி செய்திருப்பேன் . நிறைவும் போதிய வருவாயும் இருந்திருக்கும்

என்னால் முடியாததை என் மகளை ஆக்கிப்பார்க்க தகப்பன் என்ற முறையில் ஒரு வேண்டுதலே தவிர இறைவன் வகுத்த வழியை யாரால் மாற்ற முடியும் ?

நாங்கள் புறப்பட்டு திருச்செங்கோடு கடரும்போது இனி அம்மலையை காண இயலாது என்கிற தூரத்தில் வண்டியை நிறுத்தினேன் . இறங்கி நின்று திரும்பிப்பார்த்தேன் . இருளில் அம்மலை உச்சியில் வெளிச்சம் தெரிந்தது . இப்பாடல் ஞாபகம் வர உள்ளமுருக வேண்டிக்கொண்டேன் . இவ்வளவு ஆண்டுகளில் இப்பக்கம் நான் வர எந்த ஏதுவுமில்லை ; இனியும் வாய்ப்பு இருக்குமோ தெரியாது . ஆனாலும் இந்த வாய்ப்பை அருளினிர்கள் . அருணகிரியார் அளவில் நான் தூசு ஆனாலும் அகத்தூய்மையை அடைய ஏதோ கொஞ்சம் முயற்சி உண்டு . பாவக்கடலை நானும் என் குடும்பத்தாரும் கடர வழிகாட்டுவீராக

அதன்பிறகுதான் முகநூல் அறிமுகம் . எனக்குள்ளாக இருந்து திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் எழுதும்போது பல ஆன்மீக விசயங்கள் வந்தது . நானும் அருணகிரியாரின் சமரச வேத பாராம்பரியத்தில் வந்திருக்கிறவன் என்பதே புரிந்தது . ஆஞ்சநேயர் ; மத்வாச்சாரியார் ; அருணகிரியார் வள்ளலார் காந்தி  என்று ஆங்காங்கே.இலைமறைகாயாக சமரச வேதம் வந்துகொண்டுதான் இருக்கிறது . அன்னை நாராயணி தனது கரத்தில் வைத்துள்ள அந்த சமரச வேதத்தின் குரு பாரம்பரியத்திலேயே அடியேனையும் அவளது குலத்திலேயே இப்பிறவியில் பிறக்கவும் வைத்துள்ளாள்

+2 ல் மதிப்பெண் குறைந்தாலும் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறாயா எனக்கேட்டேன் . கஷ்ட்டங்களை சகித்துக்கொண்டு படித்தால் நீ மருத்துவராகலாம் என்றேன் . தெளிந்த மனதோடு அங்கு இப்போது இரண்டாண்டுகள் படித்து முடித்து விட்டாள் . இறைவனுக்குத்தான் நன்றியும் மகிமையும் உரியது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 10:31 am

//+2 ல் மதிப்பெண் குறைந்தாலும் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறாயா எனக்கேட்டேன் . கஷ்ட்டங்களை சகித்துக்கொண்டு படித்தால் நீ மருத்துவராகலாம் என்றேன் . தெளிந்த மனதோடு அங்கு இப்போது இரண்டாண்டுகள் படித்து முடித்து விட்டாள் . இறைவனுக்குத்தான் நன்றியும் மகிமையும் உரியது //

ரொம்ப சந்தோஷம், திருச்செங்கோட்டில் படிக்கவே பயந்த பெண் இப்போ தைரியாமாய் ரஷியா போய் படிக்கிறாள் என்றால்..............அது அந்த தெய்வத்தின் கருணை இல்லது வேறு என்ன? புன்னகை...............நல்ல பகிர்வு கிருபா புன்னகை......... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக