புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
7 Posts - 5%
viyasan
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்த கனவு பலிக்கும் ! Poll_c10அந்த கனவு பலிக்கும் ! Poll_m10அந்த கனவு பலிக்கும் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த கனவு பலிக்கும் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2015 12:23 am

'52 டிகிரி வெப்ப வெயிலில், பொக்ரான் பாலைவனத்தில், அணுசக்தித் துறை நண்பர்களுடன் இருந்தேன். 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி அன்று 40,35,30,25, 15,10,9,8...1 என கவுன்ட்டவுன் முடிந்ததும் இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தியா அணுசக்தி நாடாக மாறிய அந்தக் கணம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த தருணம்தான், நான் இந்தியனாகப் பிறந்ததற்குப் பெருமைப்பட்ட தருணம்’ - இப்படி இந்தியனாகப் பூரித்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்... மறைந்துவிட்டார்!

'கனவு காணுங்கள்’ என்ற கலாமின் உற்சாக வார்த்தைகள் இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்களை, தங்கள் இலக்கை நோக்கிக் கொண்டுசெலுத்துகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாக மாற ஒரு வரைத்திட்டத்தை முன்வைத்த கலாமை, காலம் நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது. ஜுலை மாதம் 27-ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் இடையே உரையாற்றிக்கொண்டிருந்தவர் திடீர் மாரடைப்பால் நிலைக்குலைய, மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல், தனது 84-வது வயதில் மறைந்துவிட்டார்.

தமிழகக் கடலோரக் கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனால், இந்தியாவின் பாதுகாப்பு அரணைத் தீர்மானிக்கும் அளவுக்கு உயர முடியும் என்பதால் மட்டுமே, இந்தியர்கள் கலாமை நேசிக்கவில்லை. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதை தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் கடைசிவரை எளிமையாக இருந்தார் என்பதாலும்தான், இந்த அளவுக்கு இந்தியர்களின் அபிமானத்தை வென்றவர் ஆனார்.

ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், பள்ளிக்காலத்தில் அறிவியலைவிட கணிதத்திலேயே சிறந்து விளங்கினார். பள்ளிக் கல்வி முடிந்ததும், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் படித்தார். எம்.ஐ.டி-யில் ஏரோனாட்டிக்கல் துறையில் இடம் கிடைத்தபோது, கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். அப்போது அவருடைய சகோதரி தன் நகைகளைக் கொடுத்து உதவினார். கல்லூரியில் உணவுச் செலவைக் குறைக்க சைவத்துக்கு மாறிய கலாம், இறுதிவரை சைவ உணவுகளையே உட்கொண்டார். புத்தகங்கள் வாசிப்பதில் கலாமுக்கு அலாதி ஆர்வம். திருக்குறள், குர்-ஆன் எப்போதும் அவருடனே இருக்கும். மேடைப்பேச்சுகளிலும் எழுத்தாக்கங்களிலும் திருக்குறளில் இருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.

கலாம் தலைமையிலான அணி செலுத்திய ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பின்னர், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலாமைச் சந்திக்க நினைத்தார். கலாமுக்கு ஆர்வம் என்றாலும், அந்தச் சந்திப்புக்கு தன்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே எனக் கவலைகொண்டார். அப்போது உடன் இருந்த மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான், 'வெற்றி என்கிற விலைமதிப்பு இல்லாத, அழகான ஆடை உங்களிடம் இருக்கிறதே...’ என்றார். அன்று முதல் ஆடை கலாசாரம் பற்றி கவலைப்பட்டது இல்லை கலாம்.

1992-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் நடந்த பொக்ரான் மிமி அணு ஆயுதச் சோதனையில் அப்துல் கலாம் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பு ஏற்றுக்கொண்டபோது, ஒட்டுமொத்த இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற தமிழராக ஜொலித்தார். ஒருமுறை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கலாமின் உறவினர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 59 பேர். அவர்களின் உணவு, தங்கும் இடம் தொடங்கி, தேநீர் வரை ஆனச் செலவை கலாமே கொடுத்துவிட்டார்.

அப்துல் கலாம் எழுதிய 'அக்னிச் சிறகுகள்’ புத்தகம், இன்றைக்கும் எண்ணிலடங்கா இந்திய இளைஞர்களின் பொக்கிஷம். அந்த நூலில், 'என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரைச் சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை; எதையும் கட்டிவைக்கவில்லை. என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அப்துல் கலாமின் பிறந்த நாள், உலக மாணவர் தினமாக ஐக்கிய நாடுகள் அவையில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 'பத்ம பூஷண்’ மற்றும் 'பத்ம விபூஷண்’ விருது அங்கீகாரங்கள் பெற்றிருக்கிறார். அந்த அங்கீகாரங்களுக்கு எல்லாம் மணி மகுடமாக,

விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் மகத்தான பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா’ கௌரவமும் பெற்றார்.

தன் மீது மாணவர்கள் காட்டும் அன்பைப் புரிந்துகொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சரி... பின்னரும் சரி முடிந்த அளவு மாணவர்களைச் சந்திப்பதில் தீர்மானமாக இருந்தார். அதற்கு ஏற்ப வாழ்க்கையில் அவரது கடைசி நிமிடங்களும், ஒரு கல்விக் கூடத்தில் மாணவர்கள் மத்தியிலேயே கழிந்திருக்கிறது.  

'எங்கள் எல்லோரையும் கனவுகாணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?’ என்ற கேள்விக்கு, 'நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பதுதான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்’ எனச் சொல்வார் கலாம்.

அந்தக் கனவு நிச்சயம் பலிக்கும்!

விகடன்




அந்த கனவு பலிக்கும் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 31, 2015 2:27 am

நல்ல பதிவு சிவாண்ணா ... நன்றி . அப்துல் கலாம் அவர்களின் கனவு கண்டிப்பாக பலிக்க வேண்டும் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக