புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
Page 1 of 1 •
வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
#1151751- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வீட்டு தோட்டங்களில், மாடிகளில் தோட்டம் அமைக்க வேண்டும் என்றா ஆசை பலருக்கும் இருக்கும்.
ஆனால் அதற்கான வழிமுறைகளோ, செய்முறைகளோ, செடிகளின் தன்மைகள்,அவை வளரும் தட்ப வெப்பம் போன்ற விவரங்கள் தெரியாமல் இருப்பவர்கள் அதிகம். நமக்கு இருக்கும் வேலைக்கு இதற்கு எங்கே நேரம் கிடைக்கப்போகிறது என்று இருப்பவர்களும் அதிகம். இப்படிப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் ஆர்வமூட்டும் விதமாகவும், வழிகாட்டும்விதமாகவும். வீட்டுத்தோட்டம் தொடர்பான அனைத்து செய்திகளைகளையும் திரட்டி இங்கு கொடுப்பது இந்தப்பதிவின் நோக்கம். நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை வாரி வழங்கலாம் இங்கே. இணையத்தில் படித்த செய்திகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்....
என்றும் நட்புடன்
தமிழ்நேசன்
Re: வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
#1151779- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல முயற்சி . ஆரம்பித்து , குறிப்புகள் கொடுக்கவும் .
இயற்கை உரம் கொண்டு நல்ல காய்கறிகளை புசிக்கலாம் .
ரமணியன்
இயற்கை உரம் கொண்டு நல்ல காய்கறிகளை புசிக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
#1151788- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வீடுகளில் தோட்டம் அமைப்பது தொடர்பாக எழும் அடிப்படைக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சாம்பசிவம்
‘‘வீட்டுத்தோட்டம் அல்லது மொட்டைமாடித் தோட்டத்தில் எல்லா வகை யான செடிகளையும் வளர்க்கலாமா?’’
‘‘மலர்கள், காய்கறிகள், அலங்காரச் செடிகள், இங்கிலீஷ் காய்கறிகள், கீரை வகைகள் என, மரப்பயிர் அல்லாத செடிகள் அனைத்தையும் வீட்டில் அல்லது மொட்டைமாடியில் வளர்க்கலாம்.’’
‘‘தோட்டம் அமைக்கத் தேவையான செடிகள் மற்றும் விதைகளை எங்கே வாங்குவது? வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?’’
‘‘அரசு மூலமாக ஒரு சதவிகிதம்தான் விதைகள் விநியோகிக்கப்படுகின்றன. மற்றபடி தனியார் நிறுவனங்கள் தான் அதிகப்படியான விதைகள் மற்றும் நாற்றுகளை சப்ளை செய்கிறார்கள். அவர்களிடம் அதிக அளவில் விதைகள் வாங்கும்போது, விதைச்சான்று துறையின் அங்கீகாரம் பொருந்திய சீல் இருக்கிறதா என்று பார்க்கவும். வீட்டுத்தோட்டத்துக்கு 50 கிராம் அல்லது 100 கிராம் பாக்கெட்டுகள் என குறைந்த அளவில் விதைகள் வாங்கும்போது, அந்தப் பாக்கெட்டுகளில் சீல் இருக்காது என்றாலும், பேக் செய்யப்பட்ட தேதி மற்றும் எக்ஸ்பயரி தேதி பார்த்து வாங்கவும். நாற்று வாங்கும்போது அந்தச் செடி செழிப்பான, சீரான வளர்ச்சியில் இருக்கிறதா என்று கவனித்து வாங்கவும்.’’
‘‘செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற தொட்டிகள் எவை? தொட்டிகளில் என்ன மாதிரியான மண்ணைப் பயன் படுத்த வேண்டும்?’’
‘‘மண் தொட்டிகள்தான் என்றில்லை, வீடுகளில் பயனற்றுக் கிடக்கும் பிளாஸ்டிக் பக்கெட், டிரம், குடம் என்று எல்லாவற்றிலும் கீழ்ப்பகுதியில் ஒரு துளை போட்டு, மண் நிரப்பி செடி வளர்க்கலாம். மண்ணைப் பொறுத்தவரை, தோட்டங்களில் இருக்கும் வண்டல் மண் சிறந்தது. கிடைக்கவில்லை எனில், எரு, செம்மண், மணல் மூன்றையும் கலந்து தொட்டியில் நிரப்பலாம்.’’
‘‘பூச்சித்தாக்குதலை எப்படித் தடுப்பது?’’
‘‘இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துத் தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சித் தாக்குதல் ஏற்படாது.’’
‘‘செடியின் இலை, தண்டுகளில் வெள்ளையாக பூத்துவிடுகிறதே..?’’
‘‘இதனை மாவுப்பூச்சி என்பார்கள். ஆரம்ப கட்டம் என்றால், தண்ணீரை தெளித்தாலே போதும். அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது என்றால், வேப்பெண்ணெயுடன் சிறிதளவு காதி சோப்புக் கரைசலைக் கலந்து தெளித்தால் இது போய்விடும். மிகவும் அதிகமாகிவிட்டால், இஞ்சி, பூண்டு, இரண்டையும் மிக்ஸியில் அரைத்துத் தயிரில் கலந்து தெளித்தால் மட்டுப்படும்.’’
‘‘தரையில் வளரும் செடிகளைப் போல தொட்டிச் செடிகள் அத்தனை செழிப்பாக வளர்வதில்லையே... ஏன்?’’
‘‘தரையில் செடியின் வேர்ப்பகுதி நன்றாகப் பரவ இடமிருக்கும். அதுவே தொட்டியில் குறிப்பிட்ட தூரம் வரை வளரும் வேர், பின்னர் இடத்துக்கு ஏற்ப சுருங்கிக்கொள்வதால், வளர்ச்சியில் தாமதம் இருக்கத்தான் செய்யும்.’’
‘‘செடிகளை நடுவது அல்லது விதைகளை விதைப்பதற்கான முறைகள் குறித்து விளக்கம் ப்ளீஸ்...’’
‘‘விதைகளாக விதைப்பதைவிட, நாற்றுகளாக நட்டு வளர்ப்பது சிறந்தது. காரணம், பெரும்பாலும் விதைகளில் 85%தான் முளைக்கும். வெளியில் நாற்று வாங்குவதைவிட, விதைகள் வாங்கி விதைத்து, 25 முதல் 30 நாட்களில் அது நடவுக்கு ஏற்ற நாற்றானதும், வேறு தொட்டியில் மாற்றி வளர்க்கலாம். நாற்று வளர்த்த தொட்டியை, பிற நாற்றுகள் வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.’’
‘‘வெளியூர் செல்லும் நாட்களில் செடிகளை எப்படிப் பராமரிப்பது?’’
‘‘செடியின் மேற்புறத்தில் தேங்காய் நார்க் கழிவுகளை போட்டு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றால், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஈரப்பதம் இருந்து கொண்டேயிருக்கும். நன்கு வளர்ந்த செடி என்றால், நன்றாக தாங்கும்.’’
‘‘ஒரே தொட்டியில் இரண்டு செடிகள் வளர்க்கலாமா?’’
‘‘ஒரே தொட்டியில் இரண்டு வெவ்வேறு வகைச் செடிகளை வளர்க்கக் கூடாது. ஒரே செடியின் நாற்றை, தொட்டி பெரிதாக இருக்கும் பட்சத்தில் இரண்டு வீதம் வைத்து வளர்க்கலாம்.’’
‘‘மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கும் போது செடியின் வேர் தரையில் ஊடுருவுமா?’’
‘‘ஊடுருவாது. பாலித்தீன் கவர்களில் செடிகளை வைத்திருக்கிறீர்கள் என்றால் செடி வளர வளர வேர் கவரை கிழித்துக் கொண்டு வெளியே வரும். அது போன்ற சமயங்களில் வேறு பெரிய கவர் அல்லது தொட்டியில் செடியை மாற்றிக்கொள்ளலாம். என்றாலும் அவ்வப்போது கண்காணிப்பதும் நல்லது.''
‘‘வீட்டுத்தோட்டம் அல்லது மொட்டைமாடித் தோட்டத்தில் எல்லா வகை யான செடிகளையும் வளர்க்கலாமா?’’
‘‘மலர்கள், காய்கறிகள், அலங்காரச் செடிகள், இங்கிலீஷ் காய்கறிகள், கீரை வகைகள் என, மரப்பயிர் அல்லாத செடிகள் அனைத்தையும் வீட்டில் அல்லது மொட்டைமாடியில் வளர்க்கலாம்.’’
‘‘தோட்டம் அமைக்கத் தேவையான செடிகள் மற்றும் விதைகளை எங்கே வாங்குவது? வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?’’
‘‘அரசு மூலமாக ஒரு சதவிகிதம்தான் விதைகள் விநியோகிக்கப்படுகின்றன. மற்றபடி தனியார் நிறுவனங்கள் தான் அதிகப்படியான விதைகள் மற்றும் நாற்றுகளை சப்ளை செய்கிறார்கள். அவர்களிடம் அதிக அளவில் விதைகள் வாங்கும்போது, விதைச்சான்று துறையின் அங்கீகாரம் பொருந்திய சீல் இருக்கிறதா என்று பார்க்கவும். வீட்டுத்தோட்டத்துக்கு 50 கிராம் அல்லது 100 கிராம் பாக்கெட்டுகள் என குறைந்த அளவில் விதைகள் வாங்கும்போது, அந்தப் பாக்கெட்டுகளில் சீல் இருக்காது என்றாலும், பேக் செய்யப்பட்ட தேதி மற்றும் எக்ஸ்பயரி தேதி பார்த்து வாங்கவும். நாற்று வாங்கும்போது அந்தச் செடி செழிப்பான, சீரான வளர்ச்சியில் இருக்கிறதா என்று கவனித்து வாங்கவும்.’’
‘‘செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற தொட்டிகள் எவை? தொட்டிகளில் என்ன மாதிரியான மண்ணைப் பயன் படுத்த வேண்டும்?’’
‘‘மண் தொட்டிகள்தான் என்றில்லை, வீடுகளில் பயனற்றுக் கிடக்கும் பிளாஸ்டிக் பக்கெட், டிரம், குடம் என்று எல்லாவற்றிலும் கீழ்ப்பகுதியில் ஒரு துளை போட்டு, மண் நிரப்பி செடி வளர்க்கலாம். மண்ணைப் பொறுத்தவரை, தோட்டங்களில் இருக்கும் வண்டல் மண் சிறந்தது. கிடைக்கவில்லை எனில், எரு, செம்மண், மணல் மூன்றையும் கலந்து தொட்டியில் நிரப்பலாம்.’’
‘‘பூச்சித்தாக்குதலை எப்படித் தடுப்பது?’’
‘‘இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துத் தண்ணீரில் கலந்து தெளித்தால் பூச்சித் தாக்குதல் ஏற்படாது.’’
‘‘செடியின் இலை, தண்டுகளில் வெள்ளையாக பூத்துவிடுகிறதே..?’’
‘‘இதனை மாவுப்பூச்சி என்பார்கள். ஆரம்ப கட்டம் என்றால், தண்ணீரை தெளித்தாலே போதும். அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது என்றால், வேப்பெண்ணெயுடன் சிறிதளவு காதி சோப்புக் கரைசலைக் கலந்து தெளித்தால் இது போய்விடும். மிகவும் அதிகமாகிவிட்டால், இஞ்சி, பூண்டு, இரண்டையும் மிக்ஸியில் அரைத்துத் தயிரில் கலந்து தெளித்தால் மட்டுப்படும்.’’
‘‘தரையில் வளரும் செடிகளைப் போல தொட்டிச் செடிகள் அத்தனை செழிப்பாக வளர்வதில்லையே... ஏன்?’’
‘‘தரையில் செடியின் வேர்ப்பகுதி நன்றாகப் பரவ இடமிருக்கும். அதுவே தொட்டியில் குறிப்பிட்ட தூரம் வரை வளரும் வேர், பின்னர் இடத்துக்கு ஏற்ப சுருங்கிக்கொள்வதால், வளர்ச்சியில் தாமதம் இருக்கத்தான் செய்யும்.’’
‘‘செடிகளை நடுவது அல்லது விதைகளை விதைப்பதற்கான முறைகள் குறித்து விளக்கம் ப்ளீஸ்...’’
‘‘விதைகளாக விதைப்பதைவிட, நாற்றுகளாக நட்டு வளர்ப்பது சிறந்தது. காரணம், பெரும்பாலும் விதைகளில் 85%தான் முளைக்கும். வெளியில் நாற்று வாங்குவதைவிட, விதைகள் வாங்கி விதைத்து, 25 முதல் 30 நாட்களில் அது நடவுக்கு ஏற்ற நாற்றானதும், வேறு தொட்டியில் மாற்றி வளர்க்கலாம். நாற்று வளர்த்த தொட்டியை, பிற நாற்றுகள் வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.’’
‘‘வெளியூர் செல்லும் நாட்களில் செடிகளை எப்படிப் பராமரிப்பது?’’
‘‘செடியின் மேற்புறத்தில் தேங்காய் நார்க் கழிவுகளை போட்டு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றால், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஈரப்பதம் இருந்து கொண்டேயிருக்கும். நன்கு வளர்ந்த செடி என்றால், நன்றாக தாங்கும்.’’
‘‘ஒரே தொட்டியில் இரண்டு செடிகள் வளர்க்கலாமா?’’
‘‘ஒரே தொட்டியில் இரண்டு வெவ்வேறு வகைச் செடிகளை வளர்க்கக் கூடாது. ஒரே செடியின் நாற்றை, தொட்டி பெரிதாக இருக்கும் பட்சத்தில் இரண்டு வீதம் வைத்து வளர்க்கலாம்.’’
‘‘மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கும் போது செடியின் வேர் தரையில் ஊடுருவுமா?’’
‘‘ஊடுருவாது. பாலித்தீன் கவர்களில் செடிகளை வைத்திருக்கிறீர்கள் என்றால் செடி வளர வளர வேர் கவரை கிழித்துக் கொண்டு வெளியே வரும். அது போன்ற சமயங்களில் வேறு பெரிய கவர் அல்லது தொட்டியில் செடியை மாற்றிக்கொள்ளலாம். என்றாலும் அவ்வப்போது கண்காணிப்பதும் நல்லது.''
Re: வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
#1151789- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஜோதிகாவுக்குத் தோட்டம் போட்டுக் கொடுத்தேன்.
மாடித்தோட்டம் குறித்த விழிப்பு உணர்வும், மாடித்தோட்டமிடும் ஆர்வமும் பெருகி வரும் இந்தச் சூழலில், பல வருடங்களுக்கு முன்பே தங்கள் வீட்டு மாடிகளைப் பசுமையாக்கி, இன்று அதில் முன்னோடிகளாக வீறுநடை போடும் வெற்றிப் பெண்கள் சிலரைச் சந்தித்தோம்!
‘‘36 வயதினிலே படத்துல வந்த அந்த ஜோதிகா வீட்டு மாடித்தோட்டம், நான் போட்டுக் கொடுத்ததுதான். படக்குழுவினர் எனக்கு அதுக்காக மூணு மாசம் அவகாசம் கொடுத் திருந்தாங்க. அவங்க கேட்ட செடிகளை நான் என் வீட்டிலேயே வளர்த்து, மூணு லாரிகளில் கொண்டு போய் செட் பண்ணிக் கொடுத்தேன். அசத்திட்டேன்ல!’’ என்று அன்லிமிட்டட் சந்தோஷத்துடன் ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி.
‘‘கேரளாவில் எங்க அம்மா வீட்டில் செடி, கொடி, பூ, மாடுனு இயற்கையோடவே வளர்ந்துட்டேன். கல்யாணமாகி சென்னைக்கு வந்தா, இந்த கான்கிரீட் காடு கொடுமையா இருந்தது. செடிகள் இல்லாம என்னால இருக்க முடியல. அதான், மாடித்தோட்டம் போட்டேன். மண்ணில் செடிகள் வளர்த்ததுக்கும், மாடித்தோட்டத்துக்கும் வேறுபாடுகள் இருந்ததால, ஆரம்பத்தில் நிறைய தவறுகள் செய்து செடிகள், மண் எல்லாம் வீணாக்கினேன். ஆனா, இன்னிக்கு, ‘நீங்க தயார் செய்யும் மண் ரொம்ப நல்லா இருக்கு!’னு எல்லோரும் டிப்ஸ் கேட்கிறாங்க. அந்தளவுக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தெளிஞ்சுட்டேன்.
வீட்டுத் தோட்டம் போட்டா, இல்லத்தரசி களுக்குப் பொழுது போறதே தெரியாது. மேலும், உடற்பயிற்சிக்கு எல்லாம் தனியா நேரம் ஒதுக்கணும்னு அவசியம் இல்ல. செடிகளைப் பராமரிப்பதிலேயே உடலும், மனசும் ஆரோக்கியமா இருக்கும். நான் இதுவரை மாடித்தோட்டம் போட்டுக்கொடுத்த பலரும், இன்னிக்கு அதை வெற்றிகரமா செயல்படுத்திட்டு இருக்காங்க. இப்போ நான் ஏக்கர் கணக்கில் பயிர் செய்வோருக்கு தோட்டம் போட்டுக் கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கேன்!’’
‘‘என் பொண்ணு ஹாஸ்டல்ல இருந்தப்போ, வீட்டுல என்னோட தனிமையைப் போக்க செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ என் பொண்ணு, ‘உனக்கு நான் மகளா, இந்தச் செடிகள் எல்லாம் மகளா?!’னு செல்லமா கோவிச்சுக்குற அளவுக்கு, இதில் பெரும் பகுதி நேரம் செலவழிக்கிறேன்!’’
- மதுரையைச் சேர்ந்த முத்தரசி, தான் பணிக்குச் செல்லும் சூழலிலும், ஆர்வத்தோடு பராமரிக்கிறார் தன் மாடித்தோட்டத்தை.
‘‘ஆரம்பத்தில் குரோட்டன்ஸ், மணி பிளான்ட், வண்ண வண்ண ரோஜாச் செடிகள்னு வளர்த்துட்டு இருந்தேன். தொடர்ந்து மருந்துச் செடிகளான ஓமவல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரைகள வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே பெருகிப் பெருகி, இப்போ மாடியிலும் கீழேயும் 100 தொட்டிகளுக்கு மேல இருக்கு. வெயில் காலம் என்பதால் இந்த சீஸன்ல செடிகளில் அவ்வளவா மலர்ச்சி இல்ல. ஆடி மாசம் வந்ததுக்கப்புறம், எல்லாத்தையும் புதுப்பிக்கணும். சாதாரணமா வளரும் செடிகள் தவிர்த்து நம்ம சீதோஷ்ண நிலைக்கு ஒட்டாத செடிகளை தனி கவனம் செலுத்தி சிரத்தையோட கஷ்டப்பட்டு வளர்க்கிறேன். சவுக்கு மரங்களும் என் தோட்டத்தில் உண்டு.
என்னதான் என் செடிகள் செழித்து, பூத்து, காய்ச்சாலும், தோட்டத்தில் பறவைகள் வந்து கூடு கட்டினாத்தான் எனக்கு மனதிருப்தியே வரும். இப்போகூட சின்னச் சின்னக் குருவிகள் எங்க வீட்டுல கூடு கட்டி வாழுது! கீச் கீச் கேட்குதா?!’’
மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்த அர்ச்சனா, தன் வீட்டு மாடித்தோட்டத்தில் காய்கறி அறுவடையில் கலக்கி வருவதோடு, இவரின் மாடித்தோட்டப் பயிற்சிக்காக பல மாடிகள் வெயிட்டிங் எனுமளவுக்கு இதில் நிபுணர் ஆகியிருக்கிறார்!
‘‘நான் மதுரை, கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் பிரிவில் பேராசிரியர். மாடித்தோட்டம், என்னோட இன்னொரு முகம். என் வீட்டில் மட்டுமில்லாம, இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடிகளைக் காய்கறிக் களஞ்சியம் ஆக்கியிருக்கேன். எங்க தோட்டத்தில் விவசாய முயற்சி எடுத்தப்போதான், மாடித்தோட்டம் பற்றி தெரிய வந்தது. செல்லோ சோலார் கம்பெனியில் பணிபுரியும் நம்பிராஜன் அதுக்கு வழிகாட்ட, பல்வேறு வொர்க்ஷாப், பத்திரிகை செய்திகள், இணையம்னு தேடி தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.
ஒரே ஒரு விஷயம் சொல்றேன்... வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்துச் சாப்பிடணும்னு நீங்க முடிவெடுக்க! ரசாயனத்தில் முக்கின காய்கறிகள் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும். ஆனா, நாம வாங்கும் கீரைகள் எல்லாம் பல இடங்களில் சாக்கடைக் கழிவுகளில்தான் அறுவடை செய்யப்படுது. அந்தக் கீரையை சத்துனு வாங்கிச் சாப்பிடறதுக்கு, நாமே கீரை வளர்க்கலாமே?!
காய்கறிக் கீரைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதாவது, பீட்ரூட், கேரட், முள்ளங்கி இதெல்லாம் குளிர் பிரதேசங்கள்லதான் வளரும். நாம இதை மாடித் தோட்டத்துல பயிரிட்டா பீட்ரூட், கேரட், முள்ளங்கி கிடைக்குதோ இல்லையோ, அதோட இலைகள்தான் நான் சொன்ன காய்கறிக் கீரைகள். இதில் காய்களைவிட அதிக சத்துக்கள் இருக்கும். இப்படி பல பயன்கள் மாடித்தோட் டத்தில். என்ன உங்க வீட்டு மாடியில இடம் இருக்குதானே?!’’
“விருதுநகர் பொதுவாவே கொஞ்சம் வறட்சியான பகுதி என்பதால, வித்தியாசமான செடிகளை எல்லாம் வளர்க்க முடியாது. இருந்தாலும், அத்தியாவசியமான வீட்டுக் காய்கறிகளை வளர்க்கிறேன்!’’ என்று வெயிலோடு விளையாடி ஜெயித்துக் கொண்டிருக்கிறார், விருதுநகரைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின்.
‘‘அடுப்படி காய்கறிக் கழிவுகள்தான் என் உரம். விதைகளை கலப்படமில்லாம பார்த்து வாங்குறது, செடிகளைச் சுத்தி களை அகற்றுவது, எந்த ஒரு விதை, செடிக்கும் உடனே ரிசல்ட் எதிர்பார்க்காம பொறுமையோட காத்திருப்பதுனு, மாடித்தோட்டத்தில் பல நுணுக்கங்கள் இருக்கு. வீட்டுத் தோட்டம் மட்டுமில்லாம, ‘பட்ஸ் டிரஸ்ட்’ என்ற எங்க டிரஸ்ட் மூலமா இதுவரை 120-க்கும் மேற்பட்ட மரங்களை விருது நகரைச் சுற்றி நட்டிருக்கோம். மேலும் 20 வீடுகளில் புங்கை, வேம்பு மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்புல உதவிட்டு வர்றோம்.
சீமைக்கருவேல மரங்களோட வேர் பூமியின் வெகு ஆழத்துக்குச் சென்று தண்ணீரை உறிஞ்சுறதால, அந்தப் பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீர் வற்றிப்
போயிடுது. அதனால, இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25,000 சதுர அடி பரப்பளவுல வெவ்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்களை வேரோட தகர்த்துட்டு வர்றோம். நிறைய பேர் இதே முயற்சில ஈடுபட்டிருந்தாலும், யாரும் வேரோட சரியா அதை நீக்குறது கிடையாது. அதனால, அந்த முயற்சிக்குப் பலனே இல்லாம போயிடும். இதை யாரும், அவங்களோட வசிப்பிடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் செய்யலாம். சுற்றுச் சூழலுக்கு உதவுவது என்ற பொதுநலனோட, உங்களோட நிலத்தடி நீரை நீங்க பாதுகாத்துக்கலாம் என்ற சுயநலமும் இதில் அடங்கியிருக்கு!’’
நன்றி- விகடன்.காம்
மாடித்தோட்டம் குறித்த விழிப்பு உணர்வும், மாடித்தோட்டமிடும் ஆர்வமும் பெருகி வரும் இந்தச் சூழலில், பல வருடங்களுக்கு முன்பே தங்கள் வீட்டு மாடிகளைப் பசுமையாக்கி, இன்று அதில் முன்னோடிகளாக வீறுநடை போடும் வெற்றிப் பெண்கள் சிலரைச் சந்தித்தோம்!
‘‘36 வயதினிலே படத்துல வந்த அந்த ஜோதிகா வீட்டு மாடித்தோட்டம், நான் போட்டுக் கொடுத்ததுதான். படக்குழுவினர் எனக்கு அதுக்காக மூணு மாசம் அவகாசம் கொடுத் திருந்தாங்க. அவங்க கேட்ட செடிகளை நான் என் வீட்டிலேயே வளர்த்து, மூணு லாரிகளில் கொண்டு போய் செட் பண்ணிக் கொடுத்தேன். அசத்திட்டேன்ல!’’ என்று அன்லிமிட்டட் சந்தோஷத்துடன் ஆரம்பிக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி.
‘‘கேரளாவில் எங்க அம்மா வீட்டில் செடி, கொடி, பூ, மாடுனு இயற்கையோடவே வளர்ந்துட்டேன். கல்யாணமாகி சென்னைக்கு வந்தா, இந்த கான்கிரீட் காடு கொடுமையா இருந்தது. செடிகள் இல்லாம என்னால இருக்க முடியல. அதான், மாடித்தோட்டம் போட்டேன். மண்ணில் செடிகள் வளர்த்ததுக்கும், மாடித்தோட்டத்துக்கும் வேறுபாடுகள் இருந்ததால, ஆரம்பத்தில் நிறைய தவறுகள் செய்து செடிகள், மண் எல்லாம் வீணாக்கினேன். ஆனா, இன்னிக்கு, ‘நீங்க தயார் செய்யும் மண் ரொம்ப நல்லா இருக்கு!’னு எல்லோரும் டிப்ஸ் கேட்கிறாங்க. அந்தளவுக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தெளிஞ்சுட்டேன்.
வீட்டுத் தோட்டம் போட்டா, இல்லத்தரசி களுக்குப் பொழுது போறதே தெரியாது. மேலும், உடற்பயிற்சிக்கு எல்லாம் தனியா நேரம் ஒதுக்கணும்னு அவசியம் இல்ல. செடிகளைப் பராமரிப்பதிலேயே உடலும், மனசும் ஆரோக்கியமா இருக்கும். நான் இதுவரை மாடித்தோட்டம் போட்டுக்கொடுத்த பலரும், இன்னிக்கு அதை வெற்றிகரமா செயல்படுத்திட்டு இருக்காங்க. இப்போ நான் ஏக்கர் கணக்கில் பயிர் செய்வோருக்கு தோட்டம் போட்டுக் கொடுக்கும் வேலையில் இறங்கியிருக்கேன்!’’
‘‘என் பொண்ணு ஹாஸ்டல்ல இருந்தப்போ, வீட்டுல என்னோட தனிமையைப் போக்க செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ என் பொண்ணு, ‘உனக்கு நான் மகளா, இந்தச் செடிகள் எல்லாம் மகளா?!’னு செல்லமா கோவிச்சுக்குற அளவுக்கு, இதில் பெரும் பகுதி நேரம் செலவழிக்கிறேன்!’’
- மதுரையைச் சேர்ந்த முத்தரசி, தான் பணிக்குச் செல்லும் சூழலிலும், ஆர்வத்தோடு பராமரிக்கிறார் தன் மாடித்தோட்டத்தை.
‘‘ஆரம்பத்தில் குரோட்டன்ஸ், மணி பிளான்ட், வண்ண வண்ண ரோஜாச் செடிகள்னு வளர்த்துட்டு இருந்தேன். தொடர்ந்து மருந்துச் செடிகளான ஓமவல்லி, துளசி, வல்லாரை, வெந்தயக்கீரைகள வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே பெருகிப் பெருகி, இப்போ மாடியிலும் கீழேயும் 100 தொட்டிகளுக்கு மேல இருக்கு. வெயில் காலம் என்பதால் இந்த சீஸன்ல செடிகளில் அவ்வளவா மலர்ச்சி இல்ல. ஆடி மாசம் வந்ததுக்கப்புறம், எல்லாத்தையும் புதுப்பிக்கணும். சாதாரணமா வளரும் செடிகள் தவிர்த்து நம்ம சீதோஷ்ண நிலைக்கு ஒட்டாத செடிகளை தனி கவனம் செலுத்தி சிரத்தையோட கஷ்டப்பட்டு வளர்க்கிறேன். சவுக்கு மரங்களும் என் தோட்டத்தில் உண்டு.
என்னதான் என் செடிகள் செழித்து, பூத்து, காய்ச்சாலும், தோட்டத்தில் பறவைகள் வந்து கூடு கட்டினாத்தான் எனக்கு மனதிருப்தியே வரும். இப்போகூட சின்னச் சின்னக் குருவிகள் எங்க வீட்டுல கூடு கட்டி வாழுது! கீச் கீச் கேட்குதா?!’’
மதுரை, அனுப்பானடியைச் சேர்ந்த அர்ச்சனா, தன் வீட்டு மாடித்தோட்டத்தில் காய்கறி அறுவடையில் கலக்கி வருவதோடு, இவரின் மாடித்தோட்டப் பயிற்சிக்காக பல மாடிகள் வெயிட்டிங் எனுமளவுக்கு இதில் நிபுணர் ஆகியிருக்கிறார்!
‘‘நான் மதுரை, கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் பிரிவில் பேராசிரியர். மாடித்தோட்டம், என்னோட இன்னொரு முகம். என் வீட்டில் மட்டுமில்லாம, இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடிகளைக் காய்கறிக் களஞ்சியம் ஆக்கியிருக்கேன். எங்க தோட்டத்தில் விவசாய முயற்சி எடுத்தப்போதான், மாடித்தோட்டம் பற்றி தெரிய வந்தது. செல்லோ சோலார் கம்பெனியில் பணிபுரியும் நம்பிராஜன் அதுக்கு வழிகாட்ட, பல்வேறு வொர்க்ஷாப், பத்திரிகை செய்திகள், இணையம்னு தேடி தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.
ஒரே ஒரு விஷயம் சொல்றேன்... வீட்டிலேயே காய்கறிகள் வளர்த்துச் சாப்பிடணும்னு நீங்க முடிவெடுக்க! ரசாயனத்தில் முக்கின காய்கறிகள் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும். ஆனா, நாம வாங்கும் கீரைகள் எல்லாம் பல இடங்களில் சாக்கடைக் கழிவுகளில்தான் அறுவடை செய்யப்படுது. அந்தக் கீரையை சத்துனு வாங்கிச் சாப்பிடறதுக்கு, நாமே கீரை வளர்க்கலாமே?!
காய்கறிக் கீரைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதாவது, பீட்ரூட், கேரட், முள்ளங்கி இதெல்லாம் குளிர் பிரதேசங்கள்லதான் வளரும். நாம இதை மாடித் தோட்டத்துல பயிரிட்டா பீட்ரூட், கேரட், முள்ளங்கி கிடைக்குதோ இல்லையோ, அதோட இலைகள்தான் நான் சொன்ன காய்கறிக் கீரைகள். இதில் காய்களைவிட அதிக சத்துக்கள் இருக்கும். இப்படி பல பயன்கள் மாடித்தோட் டத்தில். என்ன உங்க வீட்டு மாடியில இடம் இருக்குதானே?!’’
“விருதுநகர் பொதுவாவே கொஞ்சம் வறட்சியான பகுதி என்பதால, வித்தியாசமான செடிகளை எல்லாம் வளர்க்க முடியாது. இருந்தாலும், அத்தியாவசியமான வீட்டுக் காய்கறிகளை வளர்க்கிறேன்!’’ என்று வெயிலோடு விளையாடி ஜெயித்துக் கொண்டிருக்கிறார், விருதுநகரைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின்.
‘‘அடுப்படி காய்கறிக் கழிவுகள்தான் என் உரம். விதைகளை கலப்படமில்லாம பார்த்து வாங்குறது, செடிகளைச் சுத்தி களை அகற்றுவது, எந்த ஒரு விதை, செடிக்கும் உடனே ரிசல்ட் எதிர்பார்க்காம பொறுமையோட காத்திருப்பதுனு, மாடித்தோட்டத்தில் பல நுணுக்கங்கள் இருக்கு. வீட்டுத் தோட்டம் மட்டுமில்லாம, ‘பட்ஸ் டிரஸ்ட்’ என்ற எங்க டிரஸ்ட் மூலமா இதுவரை 120-க்கும் மேற்பட்ட மரங்களை விருது நகரைச் சுற்றி நட்டிருக்கோம். மேலும் 20 வீடுகளில் புங்கை, வேம்பு மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்புல உதவிட்டு வர்றோம்.
சீமைக்கருவேல மரங்களோட வேர் பூமியின் வெகு ஆழத்துக்குச் சென்று தண்ணீரை உறிஞ்சுறதால, அந்தப் பகுதிகளில் எல்லாம் நிலத்தடி நீர் வற்றிப்
போயிடுது. அதனால, இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25,000 சதுர அடி பரப்பளவுல வெவ்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்களை வேரோட தகர்த்துட்டு வர்றோம். நிறைய பேர் இதே முயற்சில ஈடுபட்டிருந்தாலும், யாரும் வேரோட சரியா அதை நீக்குறது கிடையாது. அதனால, அந்த முயற்சிக்குப் பலனே இல்லாம போயிடும். இதை யாரும், அவங்களோட வசிப்பிடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் செய்யலாம். சுற்றுச் சூழலுக்கு உதவுவது என்ற பொதுநலனோட, உங்களோட நிலத்தடி நீரை நீங்க பாதுகாத்துக்கலாம் என்ற சுயநலமும் இதில் அடங்கியிருக்கு!’’
நன்றி- விகடன்.காம்
Re: வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
#1151793- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு நேசன் .........................
Re: வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
#1151834- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பகிர்வுக்கு நன்றி.
Re: வீட்டுத்தோட்டம்- மாடித்தோட்டம்- அமைப்பது, பராமரிப்பது, பற்றிய செய்திகள் படிக்கலாம் வாங்க...!
#1151836- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமை தமிழ் நேசன் . மிகவும் பயனுள்ள பதிவு . நன்றி .. வாழ்த்துக்கள் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|