புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
88 Posts - 39%
i6appar
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_m10மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:28 pm

மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! 11742831_888282664577379_5617296111548915732_n

தமிழக வரலாற்றில் மறைந்த நாகரீகங்களும் உண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து, கால வெள்ளத்தில் மறைந்த நகரங்களும் உண்டு. அவ்வகையில் பாண்டிய நாட்டின் பழம் பெருமையை உலகிற்கு உணர்த்திய மண்ணில் புதைந்த மாங்குடி நகரத்திற்கும் தமிழக வரலாற்றில் தனிப்பெரும் இடம் உண்டு.

மாங்குடியை அறியாதவர்கள் சங்கப்புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் என்று கூறினால் எளிதில் அறிந்து கொள்வார்கள். நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோயிலில் இருந்து 20 கி. மீ தொலைவில் ராசபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூரே மாங்குடியாகும். சங்க கால மாங்குடியானது பெருமாள்பட்டி, சோலைசேரி, அருவன்குளம் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய நகரமாகத் திகழ்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் தேவியாறு மாங்குடி வழியாகப் பாய்ந்து வளம் சேர்த்தது என்பார்கள். மாங்குடி நகரத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியருமான இல.கணபதிமுருகன் தெரிவித்தது: ”"தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 2002-03 ஆண்டுகளில் நிகழ்த்திய அகழாய்வின் வாயிலாக மாங்குடியின் பழம் பெருமை உலகிற்குத் தெரிய வந்தது. அகழாய்வில் கி.மு 4000-ஐச் சேர்ந்த எண்ணற்ற நுண் கற்காலக்கருவிகள் கண்டறியப்பட்டன. சங்க காலத்தைச் சேர்ந்த கறுப்பு, சிவப்பு மட்பாண்ட வகைகள், செம்பிலான ஊசிகள், வளையல்கள், இரும்பிலான அம்புமுனை, களிமண் பொம்மைகள், மணிகள், சுட்ட களிமண்ணால் செய்யப்பெற்ற அகல் விளக்குகள், மான்கொம்புகள், தாயக்கட்டை போன்றவை கண்டறியப்பட்டன. இவற்றின் காலம் கி.மு 300- கி.பி 300 ஆகும். மாங்குடி ஒட்டியுள்ள சோலைசேரி கிராமத்தில் தேவியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இதனையொட்டி லிங்கத்திரடு (லிங்கத்திடல்) என்றழைக்கப்படும் பகுதி அமைந்துள்ளது. இந்த இடம் ஆவுடையார் தோட்டம் என்று கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. இத்தடுப்பணையில் கரையை ஒட்டி சுமார் ஒரு சதுர கி.மீ பரப்பிற்கு எண்ணற்ற தெய்வ உருவச்சிலைகள், வயிறு பெருத்த பூத கணங்களின் சிலைகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெரிய சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் சுற்று வட்டார மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுண்ணிய வேலைப்பாடுகள் அதிகம் இல்லாத, குறுகிய முகம் கொண்ட நந்தி சிலையொன்று மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கு அண்மையில் விநாயகரின் சிலை ஒன்று முகம் சிதைந்த நிலையில் உள்ளது. விநாயகர் இருகரங்களை உடையவராகவே, அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். விநாயகரின் தும்பிக்கை நீண்டவாறு, வலமாகவும், இடமாகவும் அல்லாமல் தொங்கியவாறு வடிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திலிருந்து சற்றுத் தொலைவில் வயல் வெளிக்குள் தரையில் சாய்ந்த நிலையில் காளிதேவியின் சிலை ஒன்றும் காணப்படுகிறது.

காளிதேவியின் சிலையானது ஒரு காலினை பீடத்தில் மடக்கியவாறும், மற்றொரு காலை தரையில் ஊன்றியவாறும் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. கோவிலின் கோபுர வேலைப்பாட்டில் காணப்படும் தோள் உறுப்புகளான கர்ணகூடு, பஞ்சரம், சாலை போன்றவை தேவியாற்றுத் தடுப்பணையின் கரையை ஒட்டியே சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது. இவற்றின் வேலைப்பாடுகளையும் அமைப்பினையும் பார்க்கும் போது கி.பி 10-11ம் நூற்றாண்டு பாண்டியர்களின் கலைப்பாணியை ஒத்ததாகத் தெரிகிறது. மாங்குடி, பெருமாள்பட்டி மற்றும் சோலைசேரி பகுதிகளில் கிணறுகளை ஆழப்படுத்தும் போது, பல இடங்களில் எண்ணற்ற முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தாழியினுள் இறந்தோரின் எலும்புத்துண்டுகள், தவிடு, தானிய வகைகள் நிரம்பிய வட்டில், சிட்டிகை, போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாழியினுள் கிடைத்த நாணயங்களில் முதலாம் ராஜராஜனின் (கி.பி. 985-1013) உருவம் பொறித்த செப்பு நாணயம் குறிப்பிடத்தக்கதாகும். மாங்குடி பெருமாள்பட்டி அய்யனார் கோயில் அருகே தூணில் பொறிக்கப் பெற்ற தமிழ்-கிரந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. கிபி 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் பாண்டியர்களின் நிலைப்படையினைச் சேர்ந்த படை வீரர்களுக்கு விளைநிலமும், வீட்டு வசதியும் செய்து கொடுத்த செய்தி காணப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட தானங்கள் பரிக்கிரகம் எனப்பட்டன.

மாங்குடியின் அமைவிடம் சிறப்பு வாய்ந்ததாகும், எவ்வாறெனில் பாண்டிய நாடு- சேரநாடு பெருவழியின் இடையில் அமைந்த நகரமாக மாங்குடி திகழ்ந்தது. அரசியல் சிறப்புமிக்க, வணிக முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தினால் மாங்குடி அந்நியரின் படையெடுப்புகளுக்கு உள்ளான பகுதியாகவும் விளங்கியுள்ளது. மாங்குடி மருதனாரை ஆதரித்த பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவன் சேரன், செம்பியன் (சோழன்), திதியன், எழிநி, எருமையூரான் போன்றோரை போரில் தோற்கடித்தான். நெடுஞ்செழியனின் வெற்றியைப் பாடவே மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார்.

மாங்குடியை அழித்து சோழர்களே அதன் அருகாமையில் சோழசோரி என்ற நகரை நிர்மாணித்திருக்க வேண்டும். தற்போது சோழசேரி, சோலைசேரியாக மருவியுள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள சோழபுரமும், சோழர்களின் குடியேற்றப் பகுதியாக இருத்திருக்கலாம். பராமரிப்பின்றி சிதைந்த ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் தேவியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பயன்படுத்தப்பட்டன. கி.பி 18-19 நூற்றாண்டுகளில் தடுப்பணை கட்டப்பட்டிருக்கலாம். எனவே மாங்குடி நகரை பாண்டிய-சோழ ஆதிக்கப் போட்டியில் அழிந்த நகரமாக கருதலாம்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இல.கணபதிமுருகன்.



மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:22 am

நல்ல கட்டுரை, நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 13, 2015 5:58 am

நல்ல கட்டுரை ...நன்றி சிவா மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 13, 2015 7:09 am

மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக