புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_m10பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகுபலி - விமர்சனம் | செய்திகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 10:37 pm

First topic message reminder :

பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Baahubali%203

நாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள்.

தொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே படத்துக்குள் நம்மை இழுத்துவிடுகிறார்கள். ரம்யாவின் மறைவும் அந்த நேரத்திலும் அந்தக்குழந்தையைக் காப்பாற்றிவதோடு அது எங்கிருந்து வந்தது? என்பதை விரலசைவிலேயே சுட்டிக்காட்டி மரணிப்பதும் படத்தின் போக்கை நமக்குச் சொல்லிவிடுகிறது.

ஆதிவாசிகள் கூட்டத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகன் பிரபாஸ், மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதைச் சுட்டுகிற மாதிரியே காட்சிகள் இருக்கின்றன. அவர் எங்கிருந்து விழுந்தாலும் அவர் உடம்பில் ஒரு கீறலும் விழாது என்பது உட்பட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பினும், பிரபாஸின் உடற்கட்டும், அலட்சியப்புன்னகையுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமும் அந்தக்காட்சிகளுக்கு நியாயம் செய்கிற மாதிரி இருக்கின்றன.

சிவலிங்கத்தை அவர் தூக்கிக்கொண்டு போய் அருவியில் வைக்கும் காட்சி சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வளவு பெரிய மலையருவியை பிரபாஸ் ஏறிக்கடக்க முயன்று தோற்பதும், அதன்பின்னர் தமன்னா திரையில் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து மலையருவியைக் கடக்கும் காட்சிகள், கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம் என்கிற பாரதிதாசனின் வரிகளின் காட்சி வடிவமாக அமைந்திருக்கின்றன.

துரோகத்தால் வீழ்த்தப்பட்டதோடு திறந்தவெளிச்சிறையில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கைதியாக இருக்கும் மன்னரின் மனைவியை மீட்கும் போராளிக்கூட்டத்தில் ஒரு போராளியாய் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப்படம் நற்பெயரைத் தரும். போராளியாகத் துடிப்புடன் செய்லபடுவதோடு பிரபாஸோடு காதலில் கசிந்துருகும் காட்சிகளில் ரசிகர்களைக் கவருவார் என்பது நிச்சயம். ஓரிருகாட்சிகள்தாம் என்றாலும் பிரபாஸ், தமன்னா காதலில் இளமைப்போதை நிறைந்திருக்கிறது.

ஓரிரு காட்சிகளில் வயதான கைதியாக அனுஷ்காவைக் காட்டிப் பெரும்பாவம் செய்துவிட்டார் ராஜமௌலி. (அடுத்த பாகத்தில் அதற்குப் பிராயச்சித்தம் செய்துவிடுவார் என்று நம்பலாம்)காயங்களும் தழும்புகளும் கொண்ட ஒப்பனையோடு, என் மகன் வருவான் என்று மிகநம்பிக்கையாகச் சொல்லும் அனுஷ்காவும் வரவேற்புப் பெறுகிறார்.

பல்லாளதேவராக நடித்திருக்கும் ராணாவின் அறிமுகக்காட்சி, ஜோதாஅக்பரில் யானையோடு மோதும் ஹிருத்திக்ரோஷனை நினைவு படுத்தினாலும் அதைவிடச் சிறப்பாகக் காட்டெருமையோடு மோதுகிறார் ராணா. அவருடைய நூறடி உயரச்சிலையை நிர்மாணிக்கும் காட்சியும் அதற்குள் பிரபாஸ் வருவதும் சிலிர்ப்பு.

ராஜவிசுவாசியாக வருகிற சத்யராஜ், நன்றாக நடித்திருக்கிறார், பாகுபலீலீலீ என்று வேகமாகப் போய் மண்டியிடும் காட்சியிலும் இறுதியில் வருகிற போர்க்காட்சியிலும் சபாஷ் சொல்லவைக்கிறார் சத்யராஜ். ராணாவின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், எள்ளல் சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் இருப்பைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.

அரசியாக வருகிற ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பாவுக்குப் பிறகு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு வீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு வருகிற போர்க்காட்சிகள், இதுவரை வந்த போர்க் காட்சிகளின் உச்சம் என்று சொல்லுமளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மேலிருக்கும் பெரிய விசிறி போல தேரின் முன்னால் கத்திகளை விசிறிபோல் சுற்றவிட்டுக்கொண்டு ராணா வரும்போது நாசரோடு சேர்ந்து ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒற்றைக்குதிரையில் பிரபாஸின் சாகசங்களும் வியக்கவைக்கின்றன.

அப்பாவி மக்களைக் கேடயமாக எதிரிப்படைகள் பயன்படுத்துகிற நேரத்தில் பிரபாஸ் எடுக்கும் முடிவு உண்மையான வீரர்களுக்கான இலக்கணம். போர்க்காட்சிகள் பனைமரங்களுக்கு இடையே நடப்பது போல் காட்டியிருப்பது படத்தை தமிழுக்கு நெருக்கமாக்கிக் காட்டுகிறது.

சாகறதுக்குள்ள அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று நீயும், இன்னொருமுறை அவனைக் கொல்லவேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறோம், இரண்டுமே நிறைவேறாத ஆசைகள் என்று ராணா பேசுவது உட்பட கார்க்கியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன.

கீரவாணியின் இசையில் உருவான பாடல்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் வேகத்துக்குத் தடைபோடுகின்றன. பின்னணிஇசையில் அவர் திரைக்கதைக்கு இணையாகப் பயணித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உழைப்பும் சிறப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மலையருவி, மகிழ்மதி அரண்மனை, போர்க்களம் ஆகிய எல்லா இடங்களிலும் அவருடைய பங்கு மிகப்பெரிது.

ஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பு தெரிவதும், காதல், வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைக் காட்சியழகோடு சேர்த்துக்கொடுத்திருப்பதும் இயக்குநர் ராஜமௌலியின் பலம். மையக்கதை புதிதல்ல என்றாலும் காட்சிகள் வடிவமைப்பில் ரசிகர்களுக்குப் புதியஅனுபவங்களைக் கொடுத்திருக்கும் ராஜமௌலியைப் பாராட்டலாம்.

கடைசியில் சத்யராஜ் பேசும் வசனத்தின் மூலம், இவ்வளவு பெரியபடத்தை இது முன்னோட்டம்தான் கதை இனிமேல்தான் இருக்கு என்பது போலச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அது ராஜமௌலி குழுவினருக்கு இருக்கிறது.

விகடன்



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:33 pm

பாகுபலி-2 இன்னும் பிரமாண்டமாய் இருக்கும் - ராணா டகுபதி!

தெலுங்கு திரை உலகில் அதிக வசூல் சாதனை செய்ததாகக் கருதப்படும் மகதீரா படத்தின் வசூல் சாதனையை பாகுபலி படம் முறியடித்துள்ளது. இப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு இணையான வேடம் பெற்ற வில்லன் ரானாவின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.

நடிகர் ரானா பாகுபலி படத்தின் வெற்றி குறித்து கூறுகையில், இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். மேலும்  பாகுபலி படத்தின் முதல் பாகத்தைக் காட்டிலும் இராண்டாம் பாகத்திற்கு மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

பாகுபலி தி பிகினிங் படத்துடன் அதன் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்குலுசன் படம் மிக பிரமாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் எனவும் ரானா டகுபதி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. பாகுபலி 2 படம் 2016 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினர்  அறிவித்துள்ளனர்.





பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:36 pm

மூன்று நாட்களில் 150 கோடி வசூல்! ஆச்சர்யத்தில் பாலிவுட்!

பாகுபலி படத்தின் தயாரிப்புச் செலவு என்பது எவ்வளவு என்று இதுவரை படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமே வாய் திறந்து சொல்லாத நிலையில் 175 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவாகியுள்ளது என பலரும் சொல்லி வருகிறார்கள்.

அதேப்போல படம் வெளிவந்த முதல் நாள் வசூல் 50 கோடியிலிருந்து 75 கோடி வரை என்று சொல்லி வருகிறார்கள். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சேர்த்தால் வசூல் இன்னும் கூடும். அப்படிப்பார்க்கையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வசூல் என்று வைத்தாலும் மூன்று நாளில் பாகுபலி படம் ரூ.150 கோடி வசூலை நிச்சயம் தாண்டியிருக்கும்.

தெலுங்குத் திரையுலகின் இதுவரையிலான மிகப் பெரும் வசூல் படமாக அத்தாரின்டிக்கி தாரேதி படம்தான் இருந்து வந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 85 கோடி ரூபாய். அந்த வசூலை இரண்டே நாட்களில் பாகுபலி படம் முறிடியத்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது என்கிறார்கள்.

இந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் அதிகவசூலை குவித்து வரும். அப்படி பார்க்கையில் இந்த பாகுபலி படத்தின் வசூல் இந்தி திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு மற்றும் தமிழ் ஹீரோக்கள் மட்டுமே நடித்த பாகுபலி படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாகுபலி படத்தில் ராஜமௌலி காட்டிய பிரமாண்டமும், இந்தியில் இப்படத்தை வாங்கி வௌியிட்ட கரண் ஜோகரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.

தென்னிந்திய மொழிப் படங்களில் ரஜினிகாந்த், ஷங்கரின்ன் சாதனையை ராஜமௌலி முறிடியத்து விட்டார் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. ஆக, அடுத்த சாதனைக்கு இப்போது ரஜினியும், ஷங்கரும் தயாராக வேண்டும்.

அதுமட்டுமல்ல அமீர்கான், ஷாரூக்கான், சல்மான் கான் ஆகியோரது படங்களின் வசூல் சாதனையையும் பாகுபலி முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:39 pm

பஜ்ரங்கி பைஜான்-க்கு ஷாக் தரும் பாகுபலி

பாகுபலி படத்தின் வெற்றியால் பல தெலுங்குப் படங்களின் வெளியீட்டுத் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டன. ஒட்டு மொத்த தெலுங்குத் திரையுலகமே இந்தப் படத்தைப் பாராட்டி வருவதாலும், இந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது உலக அளவிலும் பாகுபலி படம் பாராட்டப்படுவதால் அது தெலுங்குத் திரையுலகிற்குக் கிடைத்த பெருமை என அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனால் பாகுபலி படத்தின் வெற்றியை பெருமையாக நினைத்து சிறிய தயாரிப்பாளர்கள் கூட தங்கள் படத்தைத் தள்ளி வைப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார்கள்.

ஆனால், ஹிந்தித் திரையுலகில் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ள கரண் ஜோஹரின் முயற்சியால் எதிர்பார்த்ததற்கும் மேலாக பாகுபலி வசூலைத் தருவதாகக் கூறுகிறார்கள். ரம்ஜானை முன்னிட்டு வரும் வெள்ளியான 17ம் தேதி சல்மான்கான் நடித்துள்ள பஜ்ரங்கை பைஜான் படத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படக் கூடும் என்கிறார்கள். பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பாகுபலி படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம்.

தெரிந்து கிடைக்கும் லாபத்தை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாத ஒரு படத்தை அதுவும் சல்மான் கான் படமாகவே இருந்தாலும் வெளியிட அவர்கள் தயங்குகிறார்களாம். அதனால், சல்மான் படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்கிறார்கள்.

பாகுபலி படத்திற்குக் கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவான விஜயேந்திர பிரசாத் தான் பஜ்ரங்கி பைஜான் படத்திற்கும் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:41 pm

பாகுபலியை பாராட்டிய முதல்வர் சந்திரபாபு நாயுடு

தமிழில் மிகச்சிறந்த படங்களைக் கொடுத்தால் அப்படத்தின் இயக்குநரை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களே தவிர, அரசியல்கட்சித்தலைவர்களோ... அல்லது முதலமைச்சரோ பாராட்ட மாட்டார்கள். எப்பேற்பட்ட படங்களைக் கொடுத்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆந்திராவிலும் இப்படித்தான் இருந்தது.

இந்திய சினிமாவையே தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் இந்த வழக்கத்தை மாற்றிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியானது பாகுபலி.

இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் வாரத்திற்கான அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முன்பதிவிலேயே விற்று சாதனை படைத்தது. படத்தைப் பார்த்த அனைத்துத் தர ரசிகர்களிடமிருந்தும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகளவில் முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ.50 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்டது. சில விநியோகஸ்தர்களோ 66 கோடி வசூல் என்று கணக்கு சொல்கின்றனர்.

இந்நிலையில், மூன்று நாட்களிலேயே 100 கோடியைத் தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படியாக பாகுபலி படத்துக்கு ஒருபுறம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் பாராட்டுமழையும் குவிந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் உள்ள அரசியல்தலைவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது பாகுபலி. அது மட்டுமல்ல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தலைசிறந்த படமான பாகுபலியை உருவாக்கியதற்காக எஸ்.எஸ்.ராஜமௌலியையும் அவரது குழுவையும் மனதார பாராட்டுகிறேன். உலகளவில் தெலுங்கு சினிமாவை கவனம் பெறச் செய்திருக்கிறார் ராஜமௌலி! என்று பாகுபலி படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:43 pm

பாகுபலி க்ளைமாக்ஸ் மாற்றம்

நான் ஈ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயயக்கிய பாகுபலி சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான முதல் நாளே சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது.

இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிளைமேக்ஸ் காட்சி பலருக்கும் திருப்தி தரவில்லை.

இடைவேளையோடு படம் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது! இதை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் உணர்ந்திருக்க வேண்டும்.! இதனால் இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் கிளைமேக்ஸில் மேலும் சில காட்சிகளை இணைத்துள்ளனர்.

இந்த காட்சிகள் அடுத்த பாகத்தில் வரும் முக்கியமான காட்சிகளின் முன்னோட்டமாக வருவது போல் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகளில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2016) வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:07 pm

balakarthik wrote:முதல் பாகத்துல சங்க தலைவி அனுச்க்காவை கிழவியாக்கிட்டாங்கலேன்னு கோவம் வந்தது அப்புறம் தமனாவை தன்நில பார்த்தபிறகு கோவம் போச்சு ரண்டாவது பாதில அனுச்காவை அழகா காட்டலேனா இயக்குனர் பலித்தான்


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:11 pm

//இடைவேளையோடு படம் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது! இதை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் உணர்ந்திருக்க வேண்டும்.! இதனால் இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் கிளைமேக்ஸில் மேலும் சில காட்சிகளை இணைத்துள்ளனர். //

ஒ...........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 9:21 pm

ரூ.500 கோடி வசூலை நெருங்கும் பாகுபலி

தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான பாகுபலி படம் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி வெற்றி கரமாகஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் இதற்கு முந்தைய தென் இந்திய மொழி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

இந்த படம் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை ரூ.447 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. விரைவில் இப்படம் சீன, ஜப்பானிய மொழிகளிலும் 'டப்பிங்' செய்து வெளி யிடப்படுகிறது. அப்போது படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து இதன் இரண்டாம் பாகம் படமாக உள்ளது. செப்டம்பர் 15-ந்தேதி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகம் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தில் தமன்னா அதிக காட்சிகளில் வந்தார். அனுஷ்கா குறைவான சீன்களில் தலை காட்டினார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கூடுதல் காட்சி களில் நடிக்க உள்ளார். அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

பாகுபலி படத்தின் தமிழ் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வசனம் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்கள் முன்னால் போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்த வசனம் நீக்கப்பட்டு உள்ளது.



பாகுபலி - விமர்சனம் | செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக