புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகுபலி - விமர்சனம் | செய்திகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
நாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள்.
தொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே படத்துக்குள் நம்மை இழுத்துவிடுகிறார்கள். ரம்யாவின் மறைவும் அந்த நேரத்திலும் அந்தக்குழந்தையைக் காப்பாற்றிவதோடு அது எங்கிருந்து வந்தது? என்பதை விரலசைவிலேயே சுட்டிக்காட்டி மரணிப்பதும் படத்தின் போக்கை நமக்குச் சொல்லிவிடுகிறது.
ஆதிவாசிகள் கூட்டத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகன் பிரபாஸ், மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதைச் சுட்டுகிற மாதிரியே காட்சிகள் இருக்கின்றன. அவர் எங்கிருந்து விழுந்தாலும் அவர் உடம்பில் ஒரு கீறலும் விழாது என்பது உட்பட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பினும், பிரபாஸின் உடற்கட்டும், அலட்சியப்புன்னகையுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமும் அந்தக்காட்சிகளுக்கு நியாயம் செய்கிற மாதிரி இருக்கின்றன.
சிவலிங்கத்தை அவர் தூக்கிக்கொண்டு போய் அருவியில் வைக்கும் காட்சி சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வளவு பெரிய மலையருவியை பிரபாஸ் ஏறிக்கடக்க முயன்று தோற்பதும், அதன்பின்னர் தமன்னா திரையில் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து மலையருவியைக் கடக்கும் காட்சிகள், கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம் என்கிற பாரதிதாசனின் வரிகளின் காட்சி வடிவமாக அமைந்திருக்கின்றன.
துரோகத்தால் வீழ்த்தப்பட்டதோடு திறந்தவெளிச்சிறையில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கைதியாக இருக்கும் மன்னரின் மனைவியை மீட்கும் போராளிக்கூட்டத்தில் ஒரு போராளியாய் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப்படம் நற்பெயரைத் தரும். போராளியாகத் துடிப்புடன் செய்லபடுவதோடு பிரபாஸோடு காதலில் கசிந்துருகும் காட்சிகளில் ரசிகர்களைக் கவருவார் என்பது நிச்சயம். ஓரிருகாட்சிகள்தாம் என்றாலும் பிரபாஸ், தமன்னா காதலில் இளமைப்போதை நிறைந்திருக்கிறது.
ஓரிரு காட்சிகளில் வயதான கைதியாக அனுஷ்காவைக் காட்டிப் பெரும்பாவம் செய்துவிட்டார் ராஜமௌலி. (அடுத்த பாகத்தில் அதற்குப் பிராயச்சித்தம் செய்துவிடுவார் என்று நம்பலாம்)காயங்களும் தழும்புகளும் கொண்ட ஒப்பனையோடு, என் மகன் வருவான் என்று மிகநம்பிக்கையாகச் சொல்லும் அனுஷ்காவும் வரவேற்புப் பெறுகிறார்.
பல்லாளதேவராக நடித்திருக்கும் ராணாவின் அறிமுகக்காட்சி, ஜோதாஅக்பரில் யானையோடு மோதும் ஹிருத்திக்ரோஷனை நினைவு படுத்தினாலும் அதைவிடச் சிறப்பாகக் காட்டெருமையோடு மோதுகிறார் ராணா. அவருடைய நூறடி உயரச்சிலையை நிர்மாணிக்கும் காட்சியும் அதற்குள் பிரபாஸ் வருவதும் சிலிர்ப்பு.
ராஜவிசுவாசியாக வருகிற சத்யராஜ், நன்றாக நடித்திருக்கிறார், பாகுபலீலீலீ என்று வேகமாகப் போய் மண்டியிடும் காட்சியிலும் இறுதியில் வருகிற போர்க்காட்சியிலும் சபாஷ் சொல்லவைக்கிறார் சத்யராஜ். ராணாவின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், எள்ளல் சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் இருப்பைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.
அரசியாக வருகிற ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பாவுக்குப் பிறகு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு வீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு வருகிற போர்க்காட்சிகள், இதுவரை வந்த போர்க் காட்சிகளின் உச்சம் என்று சொல்லுமளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மேலிருக்கும் பெரிய விசிறி போல தேரின் முன்னால் கத்திகளை விசிறிபோல் சுற்றவிட்டுக்கொண்டு ராணா வரும்போது நாசரோடு சேர்ந்து ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒற்றைக்குதிரையில் பிரபாஸின் சாகசங்களும் வியக்கவைக்கின்றன.
அப்பாவி மக்களைக் கேடயமாக எதிரிப்படைகள் பயன்படுத்துகிற நேரத்தில் பிரபாஸ் எடுக்கும் முடிவு உண்மையான வீரர்களுக்கான இலக்கணம். போர்க்காட்சிகள் பனைமரங்களுக்கு இடையே நடப்பது போல் காட்டியிருப்பது படத்தை தமிழுக்கு நெருக்கமாக்கிக் காட்டுகிறது.
சாகறதுக்குள்ள அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று நீயும், இன்னொருமுறை அவனைக் கொல்லவேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறோம், இரண்டுமே நிறைவேறாத ஆசைகள் என்று ராணா பேசுவது உட்பட கார்க்கியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன.
கீரவாணியின் இசையில் உருவான பாடல்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் வேகத்துக்குத் தடைபோடுகின்றன. பின்னணிஇசையில் அவர் திரைக்கதைக்கு இணையாகப் பயணித்திருக்கிறார் என்று சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உழைப்பும் சிறப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மலையருவி, மகிழ்மதி அரண்மனை, போர்க்களம் ஆகிய எல்லா இடங்களிலும் அவருடைய பங்கு மிகப்பெரிது.
ஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பு தெரிவதும், காதல், வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைக் காட்சியழகோடு சேர்த்துக்கொடுத்திருப்பதும் இயக்குநர் ராஜமௌலியின் பலம். மையக்கதை புதிதல்ல என்றாலும் காட்சிகள் வடிவமைப்பில் ரசிகர்களுக்குப் புதியஅனுபவங்களைக் கொடுத்திருக்கும் ராஜமௌலியைப் பாராட்டலாம்.
கடைசியில் சத்யராஜ் பேசும் வசனத்தின் மூலம், இவ்வளவு பெரியபடத்தை இது முன்னோட்டம்தான் கதை இனிமேல்தான் இருக்கு என்பது போலச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அது ராஜமௌலி குழுவினருக்கு இருக்கிறது.
விகடன்
நாம் பார்த்து ரசித்த மன்னர்கதைகளின் புதியவடிவமாய் வந்திருக்கிறது பாகுபலி. இதற்குமுன் பார்த்த படங்களை விடப் பிரமாண்டமாகவே இருக்கிறது என்பதுதான் இதன்பலம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் சகோதர யுத்தத்தின் காரணமாக அரண்மனையை விட்டு காட்டுக்குள் வந்துவிட்ட பிரபாஸ் மீண்டும் அரண்மனைக்குச் சென்றவுடன் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைத்தான் நெஞ்சம் அதிரச் சொல்லியிருக்கிறார்கள்.
தொடக்கத்திலேயே மிகப்பெரிய அருவியின் முன்னால், முதுகில் அம்பு தைத்தநிலையில் கைக்குழந்தையுடன் ரம்யாகிருஷ்ணன் வரும் காட்சியிலேயே படத்துக்குள் நம்மை இழுத்துவிடுகிறார்கள். ரம்யாவின் மறைவும் அந்த நேரத்திலும் அந்தக்குழந்தையைக் காப்பாற்றிவதோடு அது எங்கிருந்து வந்தது? என்பதை விரலசைவிலேயே சுட்டிக்காட்டி மரணிப்பதும் படத்தின் போக்கை நமக்குச் சொல்லிவிடுகிறது.
ஆதிவாசிகள் கூட்டத்தில் வளர்ந்திருந்தாலும் நாயகன் பிரபாஸ், மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதைச் சுட்டுகிற மாதிரியே காட்சிகள் இருக்கின்றன. அவர் எங்கிருந்து விழுந்தாலும் அவர் உடம்பில் ஒரு கீறலும் விழாது என்பது உட்பட மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருப்பினும், பிரபாஸின் உடற்கட்டும், அலட்சியப்புன்னகையுடன் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் விதமும் அந்தக்காட்சிகளுக்கு நியாயம் செய்கிற மாதிரி இருக்கின்றன.
சிவலிங்கத்தை அவர் தூக்கிக்கொண்டு போய் அருவியில் வைக்கும் காட்சி சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வளவு பெரிய மலையருவியை பிரபாஸ் ஏறிக்கடக்க முயன்று தோற்பதும், அதன்பின்னர் தமன்னா திரையில் வந்ததும் அவரைப் பின்தொடர்ந்து மலையருவியைக் கடக்கும் காட்சிகள், கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம் என்கிற பாரதிதாசனின் வரிகளின் காட்சி வடிவமாக அமைந்திருக்கின்றன.
துரோகத்தால் வீழ்த்தப்பட்டதோடு திறந்தவெளிச்சிறையில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கைதியாக இருக்கும் மன்னரின் மனைவியை மீட்கும் போராளிக்கூட்டத்தில் ஒரு போராளியாய் நடித்திருக்கும் தமன்னாவுக்கு இந்தப்படம் நற்பெயரைத் தரும். போராளியாகத் துடிப்புடன் செய்லபடுவதோடு பிரபாஸோடு காதலில் கசிந்துருகும் காட்சிகளில் ரசிகர்களைக் கவருவார் என்பது நிச்சயம். ஓரிருகாட்சிகள்தாம் என்றாலும் பிரபாஸ், தமன்னா காதலில் இளமைப்போதை நிறைந்திருக்கிறது.
ஓரிரு காட்சிகளில் வயதான கைதியாக அனுஷ்காவைக் காட்டிப் பெரும்பாவம் செய்துவிட்டார் ராஜமௌலி. (அடுத்த பாகத்தில் அதற்குப் பிராயச்சித்தம் செய்துவிடுவார் என்று நம்பலாம்)காயங்களும் தழும்புகளும் கொண்ட ஒப்பனையோடு, என் மகன் வருவான் என்று மிகநம்பிக்கையாகச் சொல்லும் அனுஷ்காவும் வரவேற்புப் பெறுகிறார்.
பல்லாளதேவராக நடித்திருக்கும் ராணாவின் அறிமுகக்காட்சி, ஜோதாஅக்பரில் யானையோடு மோதும் ஹிருத்திக்ரோஷனை நினைவு படுத்தினாலும் அதைவிடச் சிறப்பாகக் காட்டெருமையோடு மோதுகிறார் ராணா. அவருடைய நூறடி உயரச்சிலையை நிர்மாணிக்கும் காட்சியும் அதற்குள் பிரபாஸ் வருவதும் சிலிர்ப்பு.
ராஜவிசுவாசியாக வருகிற சத்யராஜ், நன்றாக நடித்திருக்கிறார், பாகுபலீலீலீ என்று வேகமாகப் போய் மண்டியிடும் காட்சியிலும் இறுதியில் வருகிற போர்க்காட்சியிலும் சபாஷ் சொல்லவைக்கிறார் சத்யராஜ். ராணாவின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர், எள்ளல் சிரிப்பிலும் கடுப்புப் பார்வையிலுமே நடித்து தன் இருப்பைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்.
அரசியாக வருகிற ரம்யாகிருஷ்ணனுக்கு படையப்பாவுக்குப் பிறகு அமைந்திருக்கும் கம்பீரமான வேடம். முகத்திலேயே கம்பீரத்தைக் காட்டுவதோடு வீரர்களை எதிர்கொண்டு கொல்லும் காட்சிகளிலும் ரசிக்கவைத்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பிறகு வருகிற போர்க்காட்சிகள், இதுவரை வந்த போர்க் காட்சிகளின் உச்சம் என்று சொல்லுமளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மேலிருக்கும் பெரிய விசிறி போல தேரின் முன்னால் கத்திகளை விசிறிபோல் சுற்றவிட்டுக்கொண்டு ராணா வரும்போது நாசரோடு சேர்ந்து ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒற்றைக்குதிரையில் பிரபாஸின் சாகசங்களும் வியக்கவைக்கின்றன.
அப்பாவி மக்களைக் கேடயமாக எதிரிப்படைகள் பயன்படுத்துகிற நேரத்தில் பிரபாஸ் எடுக்கும் முடிவு உண்மையான வீரர்களுக்கான இலக்கணம். போர்க்காட்சிகள் பனைமரங்களுக்கு இடையே நடப்பது போல் காட்டியிருப்பது படத்தை தமிழுக்கு நெருக்கமாக்கிக் காட்டுகிறது.
சாகறதுக்குள்ள அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று நீயும், இன்னொருமுறை அவனைக் கொல்லவேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறோம், இரண்டுமே நிறைவேறாத ஆசைகள் என்று ராணா பேசுவது உட்பட கார்க்கியின் வசனங்கள் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன.
கீரவாணியின் இசையில் உருவான பாடல்கள் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் படத்தின் வேகத்துக்குத் தடைபோடுகின்றன. பின்னணிஇசையில் அவர் திரைக்கதைக்கு இணையாகப் பயணித்திருக்கிறார் என்று சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரின் உழைப்பும் சிறப்பும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. மலையருவி, மகிழ்மதி அரண்மனை, போர்க்களம் ஆகிய எல்லா இடங்களிலும் அவருடைய பங்கு மிகப்பெரிது.
ஒவ்வொரு காட்சியிலும் கடும் உழைப்பு தெரிவதும், காதல், வீரம், கோபம் உள்ளிட்ட உணர்வுகளைக் காட்சியழகோடு சேர்த்துக்கொடுத்திருப்பதும் இயக்குநர் ராஜமௌலியின் பலம். மையக்கதை புதிதல்ல என்றாலும் காட்சிகள் வடிவமைப்பில் ரசிகர்களுக்குப் புதியஅனுபவங்களைக் கொடுத்திருக்கும் ராஜமௌலியைப் பாராட்டலாம்.
கடைசியில் சத்யராஜ் பேசும் வசனத்தின் மூலம், இவ்வளவு பெரியபடத்தை இது முன்னோட்டம்தான் கதை இனிமேல்தான் இருக்கு என்பது போலச் சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். அது ராஜமௌலி குழுவினருக்கு இருக்கிறது.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகுபலி-2 இன்னும் பிரமாண்டமாய் இருக்கும் - ராணா டகுபதி!
தெலுங்கு திரை உலகில் அதிக வசூல் சாதனை செய்ததாகக் கருதப்படும் மகதீரா படத்தின் வசூல் சாதனையை பாகுபலி படம் முறியடித்துள்ளது. இப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு இணையான வேடம் பெற்ற வில்லன் ரானாவின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.
நடிகர் ரானா பாகுபலி படத்தின் வெற்றி குறித்து கூறுகையில், இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். மேலும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தைக் காட்டிலும் இராண்டாம் பாகத்திற்கு மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
பாகுபலி தி பிகினிங் படத்துடன் அதன் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்குலுசன் படம் மிக பிரமாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் எனவும் ரானா டகுபதி கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. பாகுபலி 2 படம் 2016 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தெலுங்கு திரை உலகில் அதிக வசூல் சாதனை செய்ததாகக் கருதப்படும் மகதீரா படத்தின் வசூல் சாதனையை பாகுபலி படம் முறியடித்துள்ளது. இப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு இணையான வேடம் பெற்ற வில்லன் ரானாவின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.
நடிகர் ரானா பாகுபலி படத்தின் வெற்றி குறித்து கூறுகையில், இப்படத்திற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். மேலும் பாகுபலி படத்தின் முதல் பாகத்தைக் காட்டிலும் இராண்டாம் பாகத்திற்கு மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
பாகுபலி தி பிகினிங் படத்துடன் அதன் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்குலுசன் படம் மிக பிரமாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் எனவும் ரானா டகுபதி கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. பாகுபலி 2 படம் 2016 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மூன்று நாட்களில் 150 கோடி வசூல்! ஆச்சர்யத்தில் பாலிவுட்!
பாகுபலி படத்தின் தயாரிப்புச் செலவு என்பது எவ்வளவு என்று இதுவரை படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமே வாய் திறந்து சொல்லாத நிலையில் 175 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவாகியுள்ளது என பலரும் சொல்லி வருகிறார்கள்.
அதேப்போல படம் வெளிவந்த முதல் நாள் வசூல் 50 கோடியிலிருந்து 75 கோடி வரை என்று சொல்லி வருகிறார்கள். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சேர்த்தால் வசூல் இன்னும் கூடும். அப்படிப்பார்க்கையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வசூல் என்று வைத்தாலும் மூன்று நாளில் பாகுபலி படம் ரூ.150 கோடி வசூலை நிச்சயம் தாண்டியிருக்கும்.
தெலுங்குத் திரையுலகின் இதுவரையிலான மிகப் பெரும் வசூல் படமாக அத்தாரின்டிக்கி தாரேதி படம்தான் இருந்து வந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 85 கோடி ரூபாய். அந்த வசூலை இரண்டே நாட்களில் பாகுபலி படம் முறிடியத்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது என்கிறார்கள்.
இந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் அதிகவசூலை குவித்து வரும். அப்படி பார்க்கையில் இந்த பாகுபலி படத்தின் வசூல் இந்தி திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் ஹீரோக்கள் மட்டுமே நடித்த பாகுபலி படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாகுபலி படத்தில் ராஜமௌலி காட்டிய பிரமாண்டமும், இந்தியில் இப்படத்தை வாங்கி வௌியிட்ட கரண் ஜோகரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.
தென்னிந்திய மொழிப் படங்களில் ரஜினிகாந்த், ஷங்கரின்ன் சாதனையை ராஜமௌலி முறிடியத்து விட்டார் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. ஆக, அடுத்த சாதனைக்கு இப்போது ரஜினியும், ஷங்கரும் தயாராக வேண்டும்.
அதுமட்டுமல்ல அமீர்கான், ஷாரூக்கான், சல்மான் கான் ஆகியோரது படங்களின் வசூல் சாதனையையும் பாகுபலி முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தின் தயாரிப்புச் செலவு என்பது எவ்வளவு என்று இதுவரை படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமே வாய் திறந்து சொல்லாத நிலையில் 175 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவாகியுள்ளது என பலரும் சொல்லி வருகிறார்கள்.
அதேப்போல படம் வெளிவந்த முதல் நாள் வசூல் 50 கோடியிலிருந்து 75 கோடி வரை என்று சொல்லி வருகிறார்கள். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு கிழமைகளை சேர்த்தால் வசூல் இன்னும் கூடும். அப்படிப்பார்க்கையில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.50 கோடி வசூல் என்று வைத்தாலும் மூன்று நாளில் பாகுபலி படம் ரூ.150 கோடி வசூலை நிச்சயம் தாண்டியிருக்கும்.
தெலுங்குத் திரையுலகின் இதுவரையிலான மிகப் பெரும் வசூல் படமாக அத்தாரின்டிக்கி தாரேதி படம்தான் இருந்து வந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 85 கோடி ரூபாய். அந்த வசூலை இரண்டே நாட்களில் பாகுபலி படம் முறிடியத்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டது என்கிறார்கள்.
இந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் அதிகவசூலை குவித்து வரும். அப்படி பார்க்கையில் இந்த பாகுபலி படத்தின் வசூல் இந்தி திரையுலகினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் ஹீரோக்கள் மட்டுமே நடித்த பாகுபலி படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாகுபலி படத்தில் ராஜமௌலி காட்டிய பிரமாண்டமும், இந்தியில் இப்படத்தை வாங்கி வௌியிட்ட கரண் ஜோகரும் தான் என்று சொன்னால் மிகையாகாது.
தென்னிந்திய மொழிப் படங்களில் ரஜினிகாந்த், ஷங்கரின்ன் சாதனையை ராஜமௌலி முறிடியத்து விட்டார் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. ஆக, அடுத்த சாதனைக்கு இப்போது ரஜினியும், ஷங்கரும் தயாராக வேண்டும்.
அதுமட்டுமல்ல அமீர்கான், ஷாரூக்கான், சல்மான் கான் ஆகியோரது படங்களின் வசூல் சாதனையையும் பாகுபலி முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பஜ்ரங்கி பைஜான்-க்கு ஷாக் தரும் பாகுபலி
பாகுபலி படத்தின் வெற்றியால் பல தெலுங்குப் படங்களின் வெளியீட்டுத் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டன. ஒட்டு மொத்த தெலுங்குத் திரையுலகமே இந்தப் படத்தைப் பாராட்டி வருவதாலும், இந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது உலக அளவிலும் பாகுபலி படம் பாராட்டப்படுவதால் அது தெலுங்குத் திரையுலகிற்குக் கிடைத்த பெருமை என அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனால் பாகுபலி படத்தின் வெற்றியை பெருமையாக நினைத்து சிறிய தயாரிப்பாளர்கள் கூட தங்கள் படத்தைத் தள்ளி வைப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார்கள்.
ஆனால், ஹிந்தித் திரையுலகில் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ள கரண் ஜோஹரின் முயற்சியால் எதிர்பார்த்ததற்கும் மேலாக பாகுபலி வசூலைத் தருவதாகக் கூறுகிறார்கள். ரம்ஜானை முன்னிட்டு வரும் வெள்ளியான 17ம் தேதி சல்மான்கான் நடித்துள்ள பஜ்ரங்கை பைஜான் படத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படக் கூடும் என்கிறார்கள். பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பாகுபலி படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம்.
தெரிந்து கிடைக்கும் லாபத்தை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாத ஒரு படத்தை அதுவும் சல்மான் கான் படமாகவே இருந்தாலும் வெளியிட அவர்கள் தயங்குகிறார்களாம். அதனால், சல்மான் படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்கிறார்கள்.
பாகுபலி படத்திற்குக் கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவான விஜயேந்திர பிரசாத் தான் பஜ்ரங்கி பைஜான் படத்திற்கும் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தின் வெற்றியால் பல தெலுங்குப் படங்களின் வெளியீட்டுத் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டன. ஒட்டு மொத்த தெலுங்குத் திரையுலகமே இந்தப் படத்தைப் பாராட்டி வருவதாலும், இந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது உலக அளவிலும் பாகுபலி படம் பாராட்டப்படுவதால் அது தெலுங்குத் திரையுலகிற்குக் கிடைத்த பெருமை என அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனால் பாகுபலி படத்தின் வெற்றியை பெருமையாக நினைத்து சிறிய தயாரிப்பாளர்கள் கூட தங்கள் படத்தைத் தள்ளி வைப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்கிறார்கள்.
ஆனால், ஹிந்தித் திரையுலகில் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டுள்ள கரண் ஜோஹரின் முயற்சியால் எதிர்பார்த்ததற்கும் மேலாக பாகுபலி வசூலைத் தருவதாகக் கூறுகிறார்கள். ரம்ஜானை முன்னிட்டு வரும் வெள்ளியான 17ம் தேதி சல்மான்கான் நடித்துள்ள பஜ்ரங்கை பைஜான் படத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படக் கூடும் என்கிறார்கள். பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பாகுபலி படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம்.
தெரிந்து கிடைக்கும் லாபத்தை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாத ஒரு படத்தை அதுவும் சல்மான் கான் படமாகவே இருந்தாலும் வெளியிட அவர்கள் தயங்குகிறார்களாம். அதனால், சல்மான் படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைப்பது கடினம் என்கிறார்கள்.
பாகுபலி படத்திற்குக் கதை எழுதிய ராஜமெளலியின் அப்பாவான விஜயேந்திர பிரசாத் தான் பஜ்ரங்கி பைஜான் படத்திற்கும் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகுபலியை பாராட்டிய முதல்வர் சந்திரபாபு நாயுடு
தமிழில் மிகச்சிறந்த படங்களைக் கொடுத்தால் அப்படத்தின் இயக்குநரை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களே தவிர, அரசியல்கட்சித்தலைவர்களோ... அல்லது முதலமைச்சரோ பாராட்ட மாட்டார்கள். எப்பேற்பட்ட படங்களைக் கொடுத்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆந்திராவிலும் இப்படித்தான் இருந்தது.
இந்திய சினிமாவையே தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் இந்த வழக்கத்தை மாற்றிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியானது பாகுபலி.
இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் வாரத்திற்கான அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முன்பதிவிலேயே விற்று சாதனை படைத்தது. படத்தைப் பார்த்த அனைத்துத் தர ரசிகர்களிடமிருந்தும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
உலகளவில் முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ.50 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்டது. சில விநியோகஸ்தர்களோ 66 கோடி வசூல் என்று கணக்கு சொல்கின்றனர்.
இந்நிலையில், மூன்று நாட்களிலேயே 100 கோடியைத் தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படியாக பாகுபலி படத்துக்கு ஒருபுறம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் பாராட்டுமழையும் குவிந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் உள்ள அரசியல்தலைவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது பாகுபலி. அது மட்டுமல்ல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாராட்டையும் பெற்றுள்ளது.
தலைசிறந்த படமான பாகுபலியை உருவாக்கியதற்காக எஸ்.எஸ்.ராஜமௌலியையும் அவரது குழுவையும் மனதார பாராட்டுகிறேன். உலகளவில் தெலுங்கு சினிமாவை கவனம் பெறச் செய்திருக்கிறார் ராஜமௌலி! என்று பாகுபலி படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
தமிழில் மிகச்சிறந்த படங்களைக் கொடுத்தால் அப்படத்தின் இயக்குநரை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களே தவிர, அரசியல்கட்சித்தலைவர்களோ... அல்லது முதலமைச்சரோ பாராட்ட மாட்டார்கள். எப்பேற்பட்ட படங்களைக் கொடுத்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆந்திராவிலும் இப்படித்தான் இருந்தது.
இந்திய சினிமாவையே தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் இந்த வழக்கத்தை மாற்றிவிட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியானது பாகுபலி.
இப்படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பின் காரணமாக முதல் வாரத்திற்கான அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் முன்பதிவிலேயே விற்று சாதனை படைத்தது. படத்தைப் பார்த்த அனைத்துத் தர ரசிகர்களிடமிருந்தும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
உலகளவில் முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ.50 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்டது. சில விநியோகஸ்தர்களோ 66 கோடி வசூல் என்று கணக்கு சொல்கின்றனர்.
இந்நிலையில், மூன்று நாட்களிலேயே 100 கோடியைத் தாண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படியாக பாகுபலி படத்துக்கு ஒருபுறம் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் பாராட்டுமழையும் குவிந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் உள்ள அரசியல்தலைவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது பாகுபலி. அது மட்டுமல்ல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாராட்டையும் பெற்றுள்ளது.
தலைசிறந்த படமான பாகுபலியை உருவாக்கியதற்காக எஸ்.எஸ்.ராஜமௌலியையும் அவரது குழுவையும் மனதார பாராட்டுகிறேன். உலகளவில் தெலுங்கு சினிமாவை கவனம் பெறச் செய்திருக்கிறார் ராஜமௌலி! என்று பாகுபலி படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாகுபலி க்ளைமாக்ஸ் மாற்றம்
நான் ஈ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயயக்கிய பாகுபலி சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான முதல் நாளே சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிளைமேக்ஸ் காட்சி பலருக்கும் திருப்தி தரவில்லை.
இடைவேளையோடு படம் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது! இதை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் உணர்ந்திருக்க வேண்டும்.! இதனால் இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் கிளைமேக்ஸில் மேலும் சில காட்சிகளை இணைத்துள்ளனர்.
இந்த காட்சிகள் அடுத்த பாகத்தில் வரும் முக்கியமான காட்சிகளின் முன்னோட்டமாக வருவது போல் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகளில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2016) வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
நான் ஈ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயயக்கிய பாகுபலி சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான முதல் நாளே சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது.
இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிளைமேக்ஸ் காட்சி பலருக்கும் திருப்தி தரவில்லை.
இடைவேளையோடு படம் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது! இதை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் உணர்ந்திருக்க வேண்டும்.! இதனால் இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் கிளைமேக்ஸில் மேலும் சில காட்சிகளை இணைத்துள்ளனர்.
இந்த காட்சிகள் அடுத்த பாகத்தில் வரும் முக்கியமான காட்சிகளின் முன்னோட்டமாக வருவது போல் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகளில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர். இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2016) வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:முதல் பாகத்துல சங்க தலைவி அனுச்க்காவை கிழவியாக்கிட்டாங்கலேன்னு கோவம் வந்தது அப்புறம் தமனாவை தன்நில பார்த்தபிறகு கோவம் போச்சு ரண்டாவது பாதில அனுச்காவை அழகா காட்டலேனா இயக்குனர் பலித்தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இடைவேளையோடு படம் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திராவிலும் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது! இதை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் உணர்ந்திருக்க வேண்டும்.! இதனால் இப்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் கிளைமேக்ஸில் மேலும் சில காட்சிகளை இணைத்துள்ளனர். //
ஒ...........
ஒ...........
ரூ.500 கோடி வசூலை நெருங்கும் பாகுபலி
தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான பாகுபலி படம் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி வெற்றி கரமாகஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் இதற்கு முந்தைய தென் இந்திய மொழி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.
இந்த படம் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை ரூ.447 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. விரைவில் இப்படம் சீன, ஜப்பானிய மொழிகளிலும் 'டப்பிங்' செய்து வெளி யிடப்படுகிறது. அப்போது படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து இதன் இரண்டாம் பாகம் படமாக உள்ளது. செப்டம்பர் 15-ந்தேதி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகம் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தில் தமன்னா அதிக காட்சிகளில் வந்தார். அனுஷ்கா குறைவான சீன்களில் தலை காட்டினார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கூடுதல் காட்சி களில் நடிக்க உள்ளார். அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
பாகுபலி படத்தின் தமிழ் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வசனம் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்கள் முன்னால் போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்த வசனம் நீக்கப்பட்டு உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான பாகுபலி படம் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி வெற்றி கரமாகஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் இதற்கு முந்தைய தென் இந்திய மொழி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.
இந்த படம் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை ரூ.447 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. விரைவில் இப்படம் சீன, ஜப்பானிய மொழிகளிலும் 'டப்பிங்' செய்து வெளி யிடப்படுகிறது. அப்போது படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து இதன் இரண்டாம் பாகம் படமாக உள்ளது. செப்டம்பர் 15-ந்தேதி இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகம் படத்தின் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தில் தமன்னா அதிக காட்சிகளில் வந்தார். அனுஷ்கா குறைவான சீன்களில் தலை காட்டினார். இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா கூடுதல் காட்சி களில் நடிக்க உள்ளார். அடுத்த வருடம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
பாகுபலி படத்தின் தமிழ் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வசனம் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியேட்டர்கள் முன்னால் போராட்டமும் நடந்தது. இதையடுத்து அந்த வசனம் நீக்கப்பட்டு உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|