புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
6 Posts - 46%
heezulia
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:24 pm

First topic message reminder :

கடவுள் வாழ்த்து

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.


(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.

இதன் கருத்து :- விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல்,
இசை, நாடகம் என்னும் பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:46 pm

பரத்தையரால் செல்வம் பாழாம்

20. அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.


(பதவுரை) கொம்மை முலை - திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரை (இன்பங்காரணமாகக்) கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்மிக்கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப்போலும்; (அன்றியும்) மாநிதியம் போக்கி - (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் - வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று - அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது.

விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழிபாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:47 pm

வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன்

21 நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமரையாள் தான்


(பதவுரை) சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு - வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் - நீர்வளத்தையும், நிழலும் - நிழல்வளத்தையும், நிலம்பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் - பேரையும், புகழும் - கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும், ஊரும் - கிராமத்தையும், வரும் திருவும் - வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும்-நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள்.

வஞ்சனை யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:48 pm

பாவிகளின் பணம்

22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.


(பதவுரை) பணத்தைப் பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து - (உண்ணாமலும் அறஞ்செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடு விட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப் பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் - இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:48 pm

வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ்

   23.  வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
       பாதாள மூலி படருமே-மூதேவி
       சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
       மன்றோரஞ் சொன்னார் மனை.


(பதவுரை) மன்று ஓரஞ் சொன்னார் மனை-தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும்-பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள் - மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடிபுகும் - பாம்புகள் குடியிருக்கும்.

ஏ ஐந்தும் அசை.

நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம்

ஓரம் - நடுவுநிலையின்மை.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:49 pm

வாழ்க்கை மாண்பு ஐந்து

24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை.


(பதவுரை) நீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:50 pm

வரவறிந்து செலவிட வேண்டும்

25. ஆன முதலில் அதிகஞ் செலவானான்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு


(பதவுரை) ஆன முதலில் செலவு அதிகம் ஆனால்-தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், மானம் அழிந்து-பெருமை கெட்டு, மதி கெட்டு-அறிவு இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்; நாடு (இதனை) ஆராய்ந்து அறிவாயாக.

வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:51 pm

பசி வந்திடப் பத்தும் பறக்கும்

26. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.


(பதவுரை) பசி வந்திட-பசிநோய் வந்தால், மானம்-மானமும், குலம் - குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - ஈகையும், அறிவுடைமை-அறிவுடைமையும், தானம் - தானமும், தவம் - தவமும், உயர்ச்சி-உயர்வும், தாளாண்மை-தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப் பத்தும் விட்டோடிப்போம்.

மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை,

தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது;பதவியும் ஆம்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:51 pm

எல்லாம் இறை செயல்

27. ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.


(பதவுரை) ஒன்றை நினைக்கின் - ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்த கிடைத்தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும்.

இருவினைகளுக் கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:52 pm

மனவமைதி வேண்டும்

28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.


(பதவுரை) உண்பது, நாழி - உண்பது ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம் - உடுப்பது நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற. மாந்தர் குடி வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் கலம்போல - மட்கலம்போல. சாம் துணையும் - இறக்குமளவும். சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:53 pm

கொடையாளருக்கு எல்லாரும் உறவினர்

29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.


(பதவுரை) மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.

கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக