புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
69 Posts - 40%
heezulia
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
52 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
199 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_m10ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையார் அருளிய நல்வழி | ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களின் உரை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:24 pm

First topic message reminder :

கடவுள் வாழ்த்து

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.


(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.

இதன் கருத்து :- விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல்,
இசை, நாடகம் என்னும் பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:33 pm

இட்டு உண்டு இரும்

10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


(பதவுரை) மா நிலத்தீர்-பெரிய பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - வருடா வருடந் தோறும் அழுதுபுரண்டாலும், மாண்டார் வருவரோ - இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா - (ஆதலினால்) அழ வேண்டுவதில்லை; நமக்கும் அதுவழியே - நமக்கும் அம்மரணமே வழியாகும்; நாம் போம் அளவும்-நாம் இறந்துபோ மளவும், எமக்கு என் என்று-எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு இரும்-பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.

இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து வாழ்க




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:33 pm

பசி கொடியது

11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.


(பதவுரை) இடும்பைகூர் என் வயிறே-துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்-(கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.

வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:34 pm

உழவின் உயர்வு

12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உமுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு


(பதவுரை) ஆற்றங்கரையின் மரமும்-ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும், விழும் அன்றே-அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு ஓர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம், பழுது உண்டு - தவறு உண்டு.

அம் : சாரியை. கண்டீர் : முன்னிலை அசை.

உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்தர முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:35 pm

விலக்க இயலாதன

13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.


(பதவுரை) அம் புவியதன்மேல் - அழகிய பூமியின்மேலே, மெய் - உண்மையாக, ஆவாரை அழிப்பார் யார் - வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது அன்றி - அது வல்லாமல், சாவாரை தவிர்ப்பவர் யார் - இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஓவாமல் - ஒழியாமல், ஐயம் புகுவாரை - பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர் யாவர்? ஏ மூன்றும் அசை.

ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:36 pm

மானமே உயிரினும் சிறந்தது

14. பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்


(பதவுரை) பேசுங்கால்-சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கையாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்; சிச்சீ-சீ சீ (இது என்ன செய்கை), வயிறு வளர்க்கைக்கு-இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம் அழியாது - மானங் கெடாமல் உயிர் விடுகை - உயிரை விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும்.

பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:37 pm

திருவைந்தெழுந்தின் சிறப்பு

15. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்


(பதவுரை) சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு - சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒரு நாளும் அபாயம் இல்லை - ஒருபொழுதும் துன்பம்
உண்டாகாது; இதுவே-இஃதொன்றுமே, உபாயம்-(விதியைவெல்லுதற் கேற்ற) உபாயமும், மதி - இது வல்லாத எல்லா அறிவுகளும், விதியே ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும்.

சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்துகொண் டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:41 pm

வியத்தகு விழுப்பொருள்

16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி


(பதவுரை) தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:44 pm

தீவினையே வறுமைக்கு வித்து

17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்


(பதவுரை) வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து - பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கு - அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய் தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால், இரு நிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ - வெறும் பானை (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.)

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:45 pm

இடிப்பார்க்கு ஈவர்

18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம்.


(பதவுரை) பேர் உலகில் - பெரிய நிலவுலகத்திலே, பெற்றார் - (எம்மைப்) பெற்றவர், பிறந்தார் - (எமக்குப்) பிறந்தவர்,பெருநாட்டார் - (எம்முடைய) பெரிய தேசத்தார், உற்றார் - (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் - (எம்மை). நேசித்தவர், என வேண்டார் - என்று விரும்பாதவராகிய உலோபிகள், மற்றோர் - பிறர், இரணம் கொடுத்தால் - தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் - (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் - (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ தாம் இரண்டும் அசை.

உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையர் முதலாயினோருக்குக் கொடார்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 2:46 pm

பேரின்பம் நாடாப் பேதமை

19. சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்


(பதவுரை) வயிற்றின் கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், உடம்மை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றேம்.

வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக