புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறள் உலகப் பொதுமறையா ?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் "புலையர்" என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் "புண்" என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் "புலையர்" என்று திட்டுவது பொருத்தமன்று.
"புலால் மறுத்தல்" அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே "இறைச்சி உண்ணக்கூடாது" என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.
மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் "மது கூடாது" என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.
புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி
மேல்கண்ட கருத்துக்களை திரு ந. முருகேச பாண்டியன் அவர்கள், " திருக்குறள் உலகப் பொதுமறையா ? " என்ற தமது கட்டுரையில் கேட்டுள்ளார்.
திருக்குறளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருக்குறளை முழுவதும் படிக்கவேண்டும். திருக்குறளை பலமுறை படிக்கவேண்டும்; மீண்டும், மீண்டும் படிக்கவேண்டும். முதல் தடவை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள், இரண்டாம் முறை படிக்கும்போது தோன்றும். இரண்டாம்முறை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள் மூன்றாம்முறை படிக்கும்போது தோன்றும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும், புதிய கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருக்கும் அறிவுக்கேணி திருக்குறளாகும். " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்பது திருக்குறளுக்கே மிகவும் பொருந்தும்.
ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (செங்கோன்மை-550 )
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. ( கொல்லாமை- 327 )
இவ்விரண்டு குறள்களும் கருத்தால் முரண்பட்டு நிற்பதுபோல் தோன்றும். ஆனால் முரண் நம்மிடம் உள்ளதேயன்றி , வள்ளுவரிடம் அல்ல. முன்னது நாடாளும் வேந்தனுக்குச் சொல்லப்பட்ட நீதி; பின்னது பற்ற்ற துறவிக்குச் சொல்லப்பட்ட நீதி. எனவே ஒவ்வொரு குறளையும், அதன் பின்புலத்தை மனதில்கொண்டே ஆராயவேண்டும்.
திருக்குறள் உலகப்பொதுமறை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. திருக்குறளை எழுத்தெண்ணிப் படிப்பார்க்கு இவ்வுண்மை தெற்றென விளங்கும்.
"புலால் மறுத்தல்" அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே "இறைச்சி உண்ணக்கூடாது" என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.
மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் "மது கூடாது" என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.
புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது முக்கியமான கேள்வி
மேல்கண்ட கருத்துக்களை திரு ந. முருகேச பாண்டியன் அவர்கள், " திருக்குறள் உலகப் பொதுமறையா ? " என்ற தமது கட்டுரையில் கேட்டுள்ளார்.
திருக்குறளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், திருக்குறளை முழுவதும் படிக்கவேண்டும். திருக்குறளை பலமுறை படிக்கவேண்டும்; மீண்டும், மீண்டும் படிக்கவேண்டும். முதல் தடவை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள், இரண்டாம் முறை படிக்கும்போது தோன்றும். இரண்டாம்முறை படிக்கும்போது தோன்றாத கருத்துக்கள் மூன்றாம்முறை படிக்கும்போது தோன்றும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும், புதிய கருத்துக்கள் ஊறிக்கொண்டே இருக்கும் அறிவுக்கேணி திருக்குறளாகும். " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " என்பது திருக்குறளுக்கே மிகவும் பொருந்தும்.
ஒரு குறளுக்குப் பொருள் கொள்ளுங்கால் , முதலில் அக்குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது; இரண்டாவதாக எந்த இயலில் வந்துள்ளது; மூன்றாவதாக எந்தப் பாலில் வந்துள்ளது ஆகிய பின்புலங்களை மனதில்கொண்டே பொருள் காணவேண்டும். " புலால் மறுத்தல் " என்ற நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டதாகும்; இல்லறத்தானுக்கு அல்ல. இல்லறத்தான் புலால் உண்ணலாம் என்றோ அல்லது உண்ணக்கூடாது என்றோ வள்ளுவர் சொல்லவில்லை. ஆனால் துறவிகள், அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்பவர்களாக இருந்தாலும் புலால் உண்ணக்கூடாது. ஆகவேதான் துறவிகளின் அடிப்படைத் தகுதிகளான அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை ஆகிய அதிகாரங்களை துறவறவியலில் வைத்தார். புலால் உண்ணும் நெஞ்சிலே அருள் எவ்வாறு சுரக்கும் ? ஆகவே புலால் மறுத்தல் என்னும் நெறி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். (செங்கோன்மை-550 )
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. ( கொல்லாமை- 327 )
இவ்விரண்டு குறள்களும் கருத்தால் முரண்பட்டு நிற்பதுபோல் தோன்றும். ஆனால் முரண் நம்மிடம் உள்ளதேயன்றி , வள்ளுவரிடம் அல்ல. முன்னது நாடாளும் வேந்தனுக்குச் சொல்லப்பட்ட நீதி; பின்னது பற்ற்ற துறவிக்குச் சொல்லப்பட்ட நீதி. எனவே ஒவ்வொரு குறளையும், அதன் பின்புலத்தை மனதில்கொண்டே ஆராயவேண்டும்.
திருக்குறள் உலகப்பொதுமறை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. திருக்குறளை எழுத்தெண்ணிப் படிப்பார்க்கு இவ்வுண்மை தெற்றென விளங்கும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒட்டாமையும் , ஒட்டுதலும்
====================
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( துறவு- 341 )
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. ( வான்சிறப்பு-12 )
இவ்விரண்டு குறட்பாக்களுக்கும் தனிச் சிறப்பு உள்ளது.
முதல் குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டாது; ஆனால் இரண்டாவது குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டும்.
துறவு என்று வந்துவிட்டால் , எப்பொருளிடத்தும் ஓட்டோ உறவோ இருக்கக்கூடாது என்ற கருத்தில் உதடுகள் ஒட்டாத முதல் குறளை வள்ளுவர் அமைத்தாரோ ?
வான்சிறப்பு மழையைக் குறிப்பதாகும். பூமிக்கும், மழைக்கும் எப்போதும் உறவு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் நாட்டில் பசியும், பஞ்சமும் தாண்டவமாடும். பூமியும், மழையும் பிரியாது இருக்கவேண்டும் என்ற கருத்தில் சீருக்கு சீர் உதடுகள் ஒட்டும் இரண்டாவது குறளை அமைத்தாரோ ?
வள்ளுவர் அறிந்து செய்தாரோ ! அன்றி அறியாமல் செய்தாரோ ! நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விரண்டு குறட்பாக்களிலும் அமைந்துள்ள இந்த அழகை ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது !
====================
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். ( துறவு- 341 )
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. ( வான்சிறப்பு-12 )
இவ்விரண்டு குறட்பாக்களுக்கும் தனிச் சிறப்பு உள்ளது.
முதல் குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டாது; ஆனால் இரண்டாவது குறட்பாவைப் படிக்கும்போது சீருக்குசீர் உதடுகள் ஒட்டும்.
துறவு என்று வந்துவிட்டால் , எப்பொருளிடத்தும் ஓட்டோ உறவோ இருக்கக்கூடாது என்ற கருத்தில் உதடுகள் ஒட்டாத முதல் குறளை வள்ளுவர் அமைத்தாரோ ?
வான்சிறப்பு மழையைக் குறிப்பதாகும். பூமிக்கும், மழைக்கும் எப்போதும் உறவு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் நாட்டில் பசியும், பஞ்சமும் தாண்டவமாடும். பூமியும், மழையும் பிரியாது இருக்கவேண்டும் என்ற கருத்தில் சீருக்கு சீர் உதடுகள் ஒட்டும் இரண்டாவது குறளை அமைத்தாரோ ?
வள்ளுவர் அறிந்து செய்தாரோ ! அன்றி அறியாமல் செய்தாரோ ! நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விரண்டு குறட்பாக்களிலும் அமைந்துள்ள இந்த அழகை ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது !
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான விளக்கங்கள், தொடருங்கள் உங்களின் திருக்குறள் தகவல்களை....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மழலை இன்பம்
===============
இழுக்க இழுக்க விரியும் பரோட்டா மாவுபோல , சில குறட்பாக்களின் பொருளை நாம் விரித்துக் கொண்டே செல்லலாம்.
அத்தகைய குறட்பாக்களில் இதுவும் ஒன்று.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர். ( மக்கட்பேறு-66 )
பொதுவாக இக்குறளுக்கு
தம்முடைய மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்கள் , குழலிசையும், யாழிசையும் இனிமையாக இருக்கின்றன என்று சொல்வார்கள்.
என்பதுதான் பெரும்பாலான ஆசிரியர்களின் உரையாகும்.
" நாமிருவர் நமக்கிருவர் " என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை திருவள்ளுவர் காலத்திலேயே மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்ப வாழ்க்கைக்கு இரு குழந்தைகள் போதும் என்ற கருத்துப்பட குழலையும், யாழையும் குறிப்பிட்டார். அதுவும் ஆண் ஒன்று , பெண் ஒன்று இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கண்ணன் கையிலே இருக்கின்ற குழலையும், சரஸ்வதியின் கையிலே இருக்கின்ற யாழையும் குறிப்பிட்டாரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
இது திருக்குறள் அவதானி இராமையா அவர்களின் கருத்தாகும்.
===============
இழுக்க இழுக்க விரியும் பரோட்டா மாவுபோல , சில குறட்பாக்களின் பொருளை நாம் விரித்துக் கொண்டே செல்லலாம்.
அத்தகைய குறட்பாக்களில் இதுவும் ஒன்று.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர். ( மக்கட்பேறு-66 )
பொதுவாக இக்குறளுக்கு
தம்முடைய மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்கள் , குழலிசையும், யாழிசையும் இனிமையாக இருக்கின்றன என்று சொல்வார்கள்.
என்பதுதான் பெரும்பாலான ஆசிரியர்களின் உரையாகும்.
" நாமிருவர் நமக்கிருவர் " என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை திருவள்ளுவர் காலத்திலேயே மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்ப வாழ்க்கைக்கு இரு குழந்தைகள் போதும் என்ற கருத்துப்பட குழலையும், யாழையும் குறிப்பிட்டார். அதுவும் ஆண் ஒன்று , பெண் ஒன்று இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கண்ணன் கையிலே இருக்கின்ற குழலையும், சரஸ்வதியின் கையிலே இருக்கின்ற யாழையும் குறிப்பிட்டாரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
இது திருக்குறள் அவதானி இராமையா அவர்களின் கருத்தாகும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மூவர் யார்?
============
வள்ளுவர் எண்களைப் பயன்படுத்தி பல குறட்பாக்களை எழுதியுள்ளார். அவ்வாறு எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில், அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல் , நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். உதாரணமாக,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல்-35 )
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.( வான்சிறப்பு-19 )
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.( நீத்தர்பெருமை-27 )
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.( மெய்யுணர்தல் -360 )
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( இறைமாட்சி- 381 )
மேலே காட்டிய குறட்பாக்களில் இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, ஆறு ஆகிய எண்களைப் பயன்படுத்திய வள்ளுவர் , அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆனால் சில குறட்பாக்களில் எண்களை மட்டும் கூறிவிட்டு, அந்த எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைக் கூறாது விட்டுவிடுவார். நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார்.
உதாரணமாக,
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (கடவுள் வாழ்த்து-9 )
இக்குறளில் , " எண்குணத்தான் " என்று கூறிய வள்ளுவர் இறைவனின் எட்டு குணங்களைக் கூறாது விடுத்தார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.( மருந்து- 942 )
இக்குறளில் நோய்செய்யும் மூன்று எது என்பதைக் கூறாது விடுத்தார்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )
இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார். " எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.
குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.
ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.
வானப்பிரத்தன்- மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் இருப்பவன்.
============
வள்ளுவர் எண்களைப் பயன்படுத்தி பல குறட்பாக்களை எழுதியுள்ளார். அவ்வாறு எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில், அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல் , நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். உதாரணமாக,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல்-35 )
தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.( வான்சிறப்பு-19 )
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.( நீத்தர்பெருமை-27 )
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.( மெய்யுணர்தல் -360 )
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( இறைமாட்சி- 381 )
மேலே காட்டிய குறட்பாக்களில் இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, ஆறு ஆகிய எண்களைப் பயன்படுத்திய வள்ளுவர் , அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆனால் சில குறட்பாக்களில் எண்களை மட்டும் கூறிவிட்டு, அந்த எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைக் கூறாது விட்டுவிடுவார். நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார்.
உதாரணமாக,
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (கடவுள் வாழ்த்து-9 )
இக்குறளில் , " எண்குணத்தான் " என்று கூறிய வள்ளுவர் இறைவனின் எட்டு குணங்களைக் கூறாது விடுத்தார்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.( மருந்து- 942 )
இக்குறளில் நோய்செய்யும் மூன்று எது என்பதைக் கூறாது விடுத்தார்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )
இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார். " எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.
குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.
ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.
வானப்பிரத்தன்- மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் இருப்பவன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி ஜெகதீசன் .....தொடருங்கள்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எச்சம் என்பது என்ன?
================
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் கணப் படும்.
நடுவுநிலைமை என்ற அதிகாரத்தில் வந்துள்ள நான்காம் குறள் இது. இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல் பரந்த பொருளைக் கொண்டது. எச்சம் என்ற சொல்லுக்கு, மிச்சம்,பறவை மலம்,மக்கள்,குறைவு,செல்வம், முன்னோர் வைப்பு , புகழ், ஒரு வாசனைப் பண்டம் என்று பல பொருள் உண்டு. இதில் இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல் எதைக் குறிக்கிறது ? அதிகாரத் தலைப்பை வைத்துப் பார்த்தால் பறவைமலம்,குறைவு, செல்வம், முன்னோர் வைப்பு, வாசனைப் பண்டம் ஆகிய பொருள் எச்சம் என்ற சொல்லுக்கு ஒத்துவரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் எச்சம் என்ற சொல் மக்களைக் குறிக்கிறதா? அல்லது மிச்சத்தைக் குறிக்கிறதா? அல்லது புகழைக் குறிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒருவர் நடுநிலைமை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்பதை அவருக்குக் குழந்தை பிறப்பதையும் அல்லது பிறக்காமல் இருப்பதையும் வைத்துத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நடுநிலை உள்ளவர்களுக்குக் குழந்தை பிறக்கும், நடுநிலை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்காது என்று ஒரு சாரார் பொருள் கூறுவர். குழந்தைப் பிறப்பு என்பது ஒருவருடைய வினைப்பயன். நல்வினையாளருக்குக் குழந்தை பிறக்கும்; தீ வினையாளருக்குக் குழந்தை பிறக்காது என்பது அவர்தம் கருத்து.
குழந்தைகளின் குணத்தைக் கொண்டே தாய் தந்தையர் எப்படிப்பட்டவர் என்பதைக் கூறிவிடலாம். " தாயைப்போலப் பிள்ளை;நூலைப்போல சேலை " என்பது சான்றோர் வாக்கு. எனவே இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல்லுக்கு , " மக்கள் " என்பது பொருள் என்று ஒரு சிலர் கூறுவர்.
ஒருவன் விட்டுச்சென்ற மிச்சத்தை வைத்து அவன் எப்படிப் பட்டவன் என்பதைக் கூறிவிடலாம். ராஜராஜ சோழன் விட்டுச்சென்ற மிச்சம் தஞ்சைப் பெரியகோவில். அவன் கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டவன் என்றும், சிறந்த சிவபக்தன் என்பதையும் அக்கோவில் நமக்குச் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஷாஜஹான் விட்டுச்சென்ற மிச்சம் தாஜ்மஹால் ஆகும். அவன் தன் அருமை மனைவி மும்தாஜ்ஜின் மீது கொண்ட காதலை அக்கட்டிடம் நமக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. வள்ளுவர் விட்டுச்சென்ற மிச்சம் திருக்குறள் ஆகும்.அது அவர் ஒரு அறிஞர் என்பதையும், உலகத்து சான்றோர் வரிசையில் முதன்மையாக வைத்து எண்ணத் தக்கவர் என்பதையும் நமக்குச் சொல்கிறது. எனவே " எச்சம் " என்ற சொல்லுக்கு , " மிச்சம் " என்பதே தக்க பொருள் என்று ஒரு சிலர் வாதிடுவர்.
இறுதியாக ," எச்சம் " என்ற சொல்லுக்குப் " புகழ் " என்ற ஒரு பொருளும் உண்டு. பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு அழியாது. செயற்கரிய செயல்களைச் செய்தால் மட்டுமே ஒருவன் புகழைப் பெறமுடியும். ஒருவன் நல்லவனா அல்லது தீயவனா என்பதை அவனுக்குப்பின் எஞ்சியிருக்கின்ற புகழை வைத்துச் சொல்லிவிடலாம். வள்ளுவரும், " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்றே பொருள் கொள்கிறார்.
வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். ( புகழ்-238 )
இசை- புகழ்
எனவே, " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
================
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் கணப் படும்.
நடுவுநிலைமை என்ற அதிகாரத்தில் வந்துள்ள நான்காம் குறள் இது. இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல் பரந்த பொருளைக் கொண்டது. எச்சம் என்ற சொல்லுக்கு, மிச்சம்,பறவை மலம்,மக்கள்,குறைவு,செல்வம், முன்னோர் வைப்பு , புகழ், ஒரு வாசனைப் பண்டம் என்று பல பொருள் உண்டு. இதில் இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல் எதைக் குறிக்கிறது ? அதிகாரத் தலைப்பை வைத்துப் பார்த்தால் பறவைமலம்,குறைவு, செல்வம், முன்னோர் வைப்பு, வாசனைப் பண்டம் ஆகிய பொருள் எச்சம் என்ற சொல்லுக்கு ஒத்துவரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் எச்சம் என்ற சொல் மக்களைக் குறிக்கிறதா? அல்லது மிச்சத்தைக் குறிக்கிறதா? அல்லது புகழைக் குறிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
ஒருவர் நடுநிலைமை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்பதை அவருக்குக் குழந்தை பிறப்பதையும் அல்லது பிறக்காமல் இருப்பதையும் வைத்துத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நடுநிலை உள்ளவர்களுக்குக் குழந்தை பிறக்கும், நடுநிலை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்காது என்று ஒரு சாரார் பொருள் கூறுவர். குழந்தைப் பிறப்பு என்பது ஒருவருடைய வினைப்பயன். நல்வினையாளருக்குக் குழந்தை பிறக்கும்; தீ வினையாளருக்குக் குழந்தை பிறக்காது என்பது அவர்தம் கருத்து.
குழந்தைகளின் குணத்தைக் கொண்டே தாய் தந்தையர் எப்படிப்பட்டவர் என்பதைக் கூறிவிடலாம். " தாயைப்போலப் பிள்ளை;நூலைப்போல சேலை " என்பது சான்றோர் வாக்கு. எனவே இக்குறளில் வந்துள்ள " எச்சம் " என்ற சொல்லுக்கு , " மக்கள் " என்பது பொருள் என்று ஒரு சிலர் கூறுவர்.
ஒருவன் விட்டுச்சென்ற மிச்சத்தை வைத்து அவன் எப்படிப் பட்டவன் என்பதைக் கூறிவிடலாம். ராஜராஜ சோழன் விட்டுச்சென்ற மிச்சம் தஞ்சைப் பெரியகோவில். அவன் கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டவன் என்றும், சிறந்த சிவபக்தன் என்பதையும் அக்கோவில் நமக்குச் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஷாஜஹான் விட்டுச்சென்ற மிச்சம் தாஜ்மஹால் ஆகும். அவன் தன் அருமை மனைவி மும்தாஜ்ஜின் மீது கொண்ட காதலை அக்கட்டிடம் நமக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. வள்ளுவர் விட்டுச்சென்ற மிச்சம் திருக்குறள் ஆகும்.அது அவர் ஒரு அறிஞர் என்பதையும், உலகத்து சான்றோர் வரிசையில் முதன்மையாக வைத்து எண்ணத் தக்கவர் என்பதையும் நமக்குச் சொல்கிறது. எனவே " எச்சம் " என்ற சொல்லுக்கு , " மிச்சம் " என்பதே தக்க பொருள் என்று ஒரு சிலர் வாதிடுவர்.
இறுதியாக ," எச்சம் " என்ற சொல்லுக்குப் " புகழ் " என்ற ஒரு பொருளும் உண்டு. பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு அழியாது. செயற்கரிய செயல்களைச் செய்தால் மட்டுமே ஒருவன் புகழைப் பெறமுடியும். ஒருவன் நல்லவனா அல்லது தீயவனா என்பதை அவனுக்குப்பின் எஞ்சியிருக்கின்ற புகழை வைத்துச் சொல்லிவிடலாம். வள்ளுவரும், " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்றே பொருள் கொள்கிறார்.
வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். ( புகழ்-238 )
இசை- புகழ்
எனவே, " எச்சம் " என்ற சொல்லிற்குப், " புகழ் " என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அருமை ஜெகதீசன் அவர்களே
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்கள் பாராட்டுக்கு நன்றி தயாளன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
படித்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய அறிவுப் பெட்டகமாகத் திகழ்கிறது தங்களின் பதிவுகள்! தொடர்ந்து தாருங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|